Skip to main content

إِنَّآ
நிச்சயமாக நாம்
أَنزَلْنَا
இறக்கினோம்
عَلَيْكَ
உம்மீது
ٱلْكِتَٰبَ
இந்த வேதத்தை
لِلنَّاسِ
மக்களுக்காக
بِٱلْحَقِّۖ
சத்தியத்துடன்
فَمَنِ
யார்
ٱهْتَدَىٰ
நேர்வழி செல்கிறாரோ
فَلِنَفْسِهِۦۖ
தனது நன்மைக்காகத்தான்
وَمَن ضَلَّ
யார்/வழிகெடுகிறாரோ
فَإِنَّمَا يَضِلُّ
வழிகெடுவதெல்லாம்
عَلَيْهَاۖ
அதற்கு பாதகமாகத்தான்
وَمَآ أَنتَ
நீர் இல்லை
عَلَيْهِم
அவர்கள் மீது
بِوَكِيلٍ
கண்காணிப்பவராக

Innaa anzalnaa 'alaikal Kitaaba linnaasi bilhaqq; famanih tadaa falinafsihee wa man dalla fa innamaa yadillu 'alaihaa wa maaa anta 'alaihim biwakeel

(நபியே!) நிச்சயமாக நாம் மனிதர்களின் நன்மைக்காகவே முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை உங்கள்மீது இறக்கி வைத்தோம். ஆகவே, எவன் இதனைப் பின்பற்றி நடக்கின்றானோ, அது அவனுக்கே நன்று; எவன் (இதிலிருந்து) வழிதவறி விடுகின்றானோ அவன், வழி தவறியதன் பலன் அவனுக்கே தீங்காக முடியும். (நபியே!) நீங்கள் அவர்கள் மீது பொறுப்பாளர் அல்ல.

Tafseer

ٱللَّهُ
அல்லாஹ்தான்
يَتَوَفَّى
கைப்பற்றுகின்றான்
ٱلْأَنفُسَ
உயிர்களை
حِينَ
நேரத்தில்
مَوْتِهَا
அவை மரணிக்கும்
وَٱلَّتِى لَمْ
இன்னும் இறந்து போகாத உயிர்களையும்
فِى مَنَامِهَاۖ
அவற்றின் தூக்கத்தில்
فَيُمْسِكُ
அவன் தடுத்துக் கொள்கிறான்
ٱلَّتِى
எதை
قَضَىٰ
விதித்து விட்டான்
عَلَيْهَا
அதன் மீது
ٱلْمَوْتَ
மரணத்தை
وَيُرْسِلُ
இன்னும் விட்டு வைக்கிறான்
ٱلْأُخْرَىٰٓ
மற்றொன்றை
إِلَىٰٓ أَجَلٍ
தவணை வரை
مُّسَمًّىۚ
குறிப்பிட்ட
إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில்
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
لِّقَوْمٍ
மக்களுக்கு
يَتَفَكَّرُونَ
சிந்திக்கின்றார்கள்

Allaahu yatawaffal anfusa heena mawtihaa wallatee lam tamut fee manaamihaa fa yumsikul latee qadaa 'alaihal mawta wa yursilul ukhraaa ilaaa ajalim musammaa; inna fee zaalika la Aayaatil liqawmai yatafakkarron

மனிதர்கள் இறக்கும்பொழுதும், இறக்காமல் நித்திரையில் இருக்கும்பொழுதும் அல்லாஹ்வே அவர்களுடைய உயிரைக் கைப்பற்றுகிறான். பின்னர், எவர்கள் மீது மரணம் விதிக்கப்பட்டதோ அவர்களுடைய உயிரை(த் தன்னிடமே) நிறுத்திக் கொள்கிறான். மற்றவர்க(ளின் உயிர்க)ளை, குறிப்பிடப்பட்ட காலம் வரையில் வாழ அவன் அவர்களிடமே அனுப்பி விடுகின்றான். சிந்திக்கக் கூடிய மக்களுக்கு, நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.

Tafseer

أَمِ ٱتَّخَذُوا۟
எடுத்துக் கொண்டார்களா?
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
شُفَعَآءَۚ
பரிந்துரை செய்பவர்களாக
قُلْ
கூறுவீராக!
أَوَلَوْ كَانُوا۟
அவர்கள் இருந்தாலுமா?
لَا يَمْلِكُونَ
சக்தியற்றவர்களாக(வும்)
شَيْـًٔا
எதற்கும்
وَلَا يَعْقِلُونَ
சிந்தித்து புரியாதவர்களாகவும்

Amit takhazoo min doonillaahi shufa'aaa'; qul awalaw kaanoo laa yamlikoona shai'aw wa laa ya'qiloon

இவர்கள் அல்லாஹ் அல்லாதவைகளை(த் தங்களுக்குச்) சிபாரிசு செய்பவர்கள் என்று (எண்ணி) எடுத்துக் கொண்டிருக் கின்றனரா? "அவைகளுக்கு யாதொரு சக்தியும், யாதொன்றை அறியக்கூடிய உணர்ச்சியும் இல்லாதிருந்தாலுமா (அவைகளை நீங்கள் உங்களுக்குச் சிபாரிசு செய்பவைகள் என்று எடுத்துக் கொள்வீர்கள்)?" என்று (நபியே!) நீங்கள் அவர்களைக் கேளுங்கள்.

Tafseer

قُل
கூறுவீராக!
لِّلَّهِ
அல்லாஹ்விற்கே
ٱلشَّفَٰعَةُ
சிபாரிசுகள்
جَمِيعًاۖ
அனைத்தும்
لَّهُۥ
அவனுக்கே உரியன
مُلْكُ
ஆட்சி
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமியின்
ثُمَّ
பிறகு
إِلَيْهِ
அவன் பக்கமே
تُرْجَعُونَ
நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்

Qul lillaahish shafaa'atu jamee'aa; lahoo mulkus samaawaati wal ardi summa ilaihi turj'oon

பின்னும் (நபியே!) நீங்கள் கூறுங்கள்: சிபாரிசுகள் அனைத்துமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. (ஆகவே அவனுடைய அனுமதியின்றி, அவனிடத்தில் ஒருவரும் சிபாரிசு செய்ய முடியாது.) வானங்கள் பூமியின் ஆட்சி முழுவதும் அல்லாஹ்வுக்குரியதே. பின்னர், (மறுமையில்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்.

Tafseer

وَإِذَا ذُكِرَ
நினைவு கூரப்பட்டால்
ٱللَّهُ
அல்லாஹ்
وَحْدَهُ
ஒருவனை மட்டும்
ٱشْمَأَزَّتْ
சுருங்கி விடுகின்றன
قُلُوبُ
உள்ளங்கள்
ٱلَّذِينَ لَا
நம்பிக்கை கொள்ளாதவர்களின்
بِٱلْءَاخِرَةِۖ
மறுமையை
وَإِذَا ذُكِرَ
பிரஸ்தாபிக்கப்பட்டால்
ٱلَّذِينَ مِن
எவர்கள்/ அவனை அன்றி
إِذَا هُمْ
அப்போது அவர்கள்
يَسْتَبْشِرُونَ
மகிழ்ச்சி அடைகின்றனர்

Wa izaa zukiral laahu wahdahush ma azzat quloobul lazeena laa yu'minoona bil Aakhirati wa izaa zukiral lazeena min dooniheee izaa hum yastabshiroon

அல்லாஹ்வின் பெயரை மட்டும் தனியாகக் கூறப்பட்டால், மறுமையை நம்பாத அவர்களின் உள்ளங்கள் (கோபத்தால்) சுருங்கி விடுகின்றன. அவன் அல்லாதவை(களின் பெயர்)கள் கூறப் பட்டாலோ, சந்தோஷப்பட்டு (அவர்களுடைய உள்ளங்கள் விரிந்து மலர்ந்து) விடுகின்றன.

Tafseer

قُلِ
கூறுவீராக!
ٱللَّهُمَّ
அல்லாஹ்வே!
فَاطِرَ
படைத்தவனே!
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை(யும்)
وَٱلْأَرْضِ
பூமியையும்
عَٰلِمَ
அறிந்தவனே!
ٱلْغَيْبِ
மறைவானதை(யும்)
وَٱلشَّهَٰدَةِ
வெளிப்படை யானதையும்
أَنتَ
நீதான்
تَحْكُمُ
தீர்ப்பளிப்பாய்
بَيْنَ
மத்தியில்
عِبَادِكَ
உனது அடியார்களுக்கு
فِى مَا
அவர்கள் தர்க்கித்து வந்த விஷயங்களில்

Qulil laahumma faatiras samaawaati wal ardi 'Aalimal Ghaibi washshahaadati Anta tahkumu baina 'ibaadika fee maa kaanoo fee yakhtalifoon

(நபியே! பிரார்த்தனை செய்து) நீங்கள் கூறுங்கள்: "எங்கள் இறைவனே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிந்தவனே! உன் அடியார்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் விஷயத்தில் அவர்களுக் கிடையில் நீ தீர்ப்பளிப்பாயாக!"

Tafseer

وَلَوْ أَنَّ
இருந்தால்/நிச்சயமாக
لِلَّذِينَ ظَلَمُوا۟
அநியாயம் செய்தவர்களுக்கு
مَا فِى
பூமியில் உள்ளவை
جَمِيعًا
அனைத்தும்
وَمِثْلَهُۥ
அது போல் இன்னமும்
مَعَهُۥ
அதனுடன்
لَٱفْتَدَوْا۟
அவர்கள் பிணையாகக் கொடுத்து இருப்பார்கள்
بِهِۦ
அதை
مِن سُوٓءِ
இருந்து/கெட்ட
ٱلْعَذَابِ
வேதனையில்
يَوْمَ ٱلْقِيَٰمَةِۚ
மறுமை நாளில்
وَبَدَا
இன்னும் வெளிப்படும்
لَهُم
அவர்களுக்கு முன்
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
مَا لَمْ
அவர்கள் எண்ணிப் பார்த்திருக்காத விஷயங்கள் எல்லாம்

Wa law anna lillazeena zalamoo maa fil ardi jamee'anw wa mislahoo ma'ahoo laftadaw bihee min sooo'il azaabi Yawmal Qiyaamah; wa badaa lahum minal laahi maa lam yakkoonoo yahtasiboon

(நபியே!) அநியாயம் செய்தவர்களுக்குப் பூமியிலுள்ள அனைத்துமே சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப் போன்றதொரு பாகமும் இருந்தபோதிலும் மறுமையின் கொடிய வேதனையிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்ள அவை அனைத்தையுமே பரிகாரமாகக் கொடுத்துவிடவே நிச்சயமாக அவர்கள் விரும்புவார்கள். (எனினும், அது ஆகக்கூடியதல்ல) அன்றி, அவர்கள் எதிர்பார்க்காததெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வெளியாகும்.

Tafseer

وَبَدَا
வெளிப்படும்
لَهُمْ
அவர்களுக்கு முன்
سَيِّـَٔاتُ
தீமைகள்
مَا كَسَبُوا۟
அவர்கள் செய்தவற்றின்
وَحَاقَ
இன்னும் சூழ்ந்து கொள்ளும்
بِهِم
அவர்களை
مَّا كَانُوا۟
அவர்கள் பரிகாசம் செய்து வந்தவை

Wa badaa lahum saiyiaatu maa kasaboo wa haaqa bihim maa kaanoo bihee yastahzi'oon

அன்றி, அவர்கள் செய்துகொண்டிருந்த (கெட்ட) செயல்களின் தீய பலன் அவர்களுக்கு வெளிப்பட்டுவிடும். அன்றி, அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த வேதனையும் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும்.

Tafseer

فَإِذَا مَسَّ
ஏற்பட்டால்
ٱلْإِنسَٰنَ
மனிதனுக்கு
ضُرٌّ
ஒரு தீங்கு
دَعَانَا
நம்மிடம் பிரார்த்திக்கின்றான்
ثُمَّ إِذَا
பிறகு நாம் அவனுக்கு வழங்கினால்
نِعْمَةً
ஓர்அருட்கொடையை
مِّنَّا
நம்மிடமிருந்து
قَالَ
அவன் கூறுகிறான்
إِنَّمَآ أُوتِيتُهُۥ
இது எனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
عَلَىٰ عِلْمٍۭۚ
அறிந்ததினால்தான்
بَلْ هِىَ
மாறாக, அது
فِتْنَةٌ
ஒரு சோதனையாகும்
وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ
என்றாலும்/அவர்களில் அதிகமானவர்கள்/அறியமாட்டார்கள்

Fa izaa massal insaana durrun da'aanaa summa izaa khawwalnaahu ni'matam minna qaala innamaaa ootee tuhoo 'alaa 'ilm; bal hiya fitna tunw wa laakinna aksarahum laa ya'lamoon

மனிதனை யாதேனும் தீங்கு அணுகும் சமயத்தில், (அதனை நீக்கும்படி) நம்மிடமே அவன் பிரார்த்தனை செய்கின்றான். (அதனை நீக்கி) அவனுக்கு நாம் யாதொரு அருள் புரிந்தாலோ, "தான் அதனை அடைந்ததெல்லாம் தன்னுடைய அறிவின் சாமர்த்தியத்தால்தான்" என்று கூறுகின்றான். (அது சரி) அல்ல; அதுவும் (அவர்களுக்கு) ஒரு சோதனையாகும். ஆயினும், அவர்களில் அனேகர் இதனை அறிந்து கொள்வதில்லை.

Tafseer

قَدْ قَالَهَا
திட்டமாக இதைச் சொல்லி இருக்கின்றார்கள்
ٱلَّذِينَ مِن
இவர்களுக்கு முன்னுள்ளவர்களும்
فَمَآ أَغْنَىٰ
தடுக்கவில்லை
عَنْهُم
அவர்களை விட்டும்
مَّا كَانُوا۟
அவர்கள் செய்து வந்தவை

Qad qaalahul lazeena min qablihim famaaa aghnaa 'anhum maa kaanoo yaksiboon

இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், இவ்வாறுதான் கூறிக்கொண்டு இருந்தார்கள். எனினும், அவர்கள் சம்பாதித்ததில் ஒன்றுமே அவர்களுக்குப் பயனளிக்காமல் போய்விட்டது.

Tafseer