Skip to main content

وَقَالَ
கூறினார்கள்
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
لِلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி
لَوْ كَانَ
இது சிறந்ததாக இருந்தால்
مَّا سَبَقُونَآ
இவர்கள் நம்மை முந்தியிருக்க மாட்டார்கள்
إِلَيْهِۚ
இதனளவில்
وَإِذْ لَمْ
அவர்கள் நேர்வழி பெறாமல் போனபோது
بِهِۦ
இதன் மூலம்
فَسَيَقُولُونَ
கூறுகின்றனர்
هَٰذَآ
இது
إِفْكٌ
பொய்யாகும்
قَدِيمٌ
பழைய(து)

Wa qaalal lazeena kafaroo lillazeena aamanoo law kaana khairam maa sabaqoonaaa ilyh; wa iz lam yahtadoo bihee fasa yaqooloona haazaaa ifkun qadeem

நிராகரிப்பவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி "இவ்வேதம் நன்மையானதாக இருந்தால் (அதனை நம்பிக்கை கொள்ள இப்பாமர மக்கள்) எங்களைவிட முந்திக்கொள்ள மாட்டார்கள். (இதில் யாதொரு நன்மையுமே இல்லை. ஆதலால்தான், அதனை நாங்கள் நிராகரித்து விட்டோம்)" என்றும் கூறுகின்றனர். அவர்கள் இ(வ்வுண்மையான வேதத்)தைப் பின்பற்றாத நிலைமையில், இது பழங்காலத்துப் பொய்யான கட்டுக்கதைகள்தாம் என்றும் அவர்கள் கூறுவார்கள்.

Tafseer

وَمِن قَبْلِهِۦ
இதற்கு முன்னர்
كِتَٰبُ مُوسَىٰٓ
மூஸாவின் வேதம்
إِمَامًا
ஒரு முன்னோடியாக(வும்)
وَرَحْمَةًۚ
அருளாகவும்
وَهَٰذَا
இதுவோ
كِتَٰبٌ
ஒரு வேதமாகும்
مُّصَدِّقٌ
மெய்ப்பிக்கக்கூடிய(து)
لِّسَانًا عَرَبِيًّا
அரபி மொழியில்
لِّيُنذِرَ
எச்சரிப்பதற்காக(வும்)
ٱلَّذِينَ ظَلَمُوا۟
அநியாயக்காரர்களை
وَبُشْرَىٰ
நற்செய்தியாகவும்
لِلْمُحْسِنِينَ
நல்லவர்களுக்கு

Wa min qablihee kitaabu Moosaaa imaamanw-wa rahmah; wa haazaa Kitaabum musad diqul lisaanan 'Arabiyyal liyunziral lazeena zalamoo wa bushraa lilmuhsineen

இதற்கு முன்னர், மூஸாவுடைய வேதம் (மக்களுக்கு) வழிகாட்டியாகவும், அருளாகவும் இருந்தது. இதுவோ, (அதனை) உண்மைப்படுத்தும் வேதமாகத் தெளிவான அரபி மொழியில் இருக்கின்றது. அன்றி, அநியாயக்காரர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்துகொண்டும், நன்மை செய்பவர்களுக்கு நற்செய்தி கூறிக்கொண்டும் இருக்கின்றது.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
قَالُوا۟
கூறினார்கள்
رَبُّنَا
எங்கள் இறைவன்
ٱللَّهُ
அல்லாஹ்தான்
ثُمَّ
பிறகு
ٱسْتَقَٰمُوا۟
உறுதியாக இருந்தார்களோ
فَلَا خَوْفٌ
பயமில்லை
عَلَيْهِمْ
அவர்கள் மீது
وَلَا هُمْ
இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்

Innal lazeena qaaloo Rabbunal laahu summas taqaamoo falaa khawfun 'alaihim wa laahum yahzanoon

எவர்கள், எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி (அவன் அருள் புரிந்த இவ்வேதத்தை நம்பிக்கை கொண்டு,) அதில் உறுதியாகவும் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

Tafseer

أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
أَصْحَٰبُ ٱلْجَنَّةِ
சொர்க்கவாசிகள்
خَٰلِدِينَ
நிரந்தரமாக இருப்பார்கள்
فِيهَا
அதில்
جَزَآءًۢ
கூலியாக
بِمَا كَانُوا۟
அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கு

Ulaaa'ika Ashabul Jannati khaalideena feehaa jazaaa'am bimaa kaano ya'maloon

இவர்கள்தாம் சுவனவாசிகள். அவர்கள் செய்யும் நன்மைக்குக் கூலியாக என்றென்றுமே அதில் அவர்கள் தங்கி விடுவார்கள்.

Tafseer

وَوَصَّيْنَا
நாம் உபதேசித்தோம்
ٱلْإِنسَٰنَ
மனிதனுக்கு
بِوَٰلِدَيْهِ
தன் பெற்றோருக்கு
إِحْسَٰنًاۖ
நன்மை செய்வதற்கு
حَمَلَتْهُ
அவனை சுமந்தாள்
أُمُّهُۥ
அவனது தாய்
كُرْهًا
சிரமத்துடன்
وَوَضَعَتْهُ
இன்னும் அவனை ஈன்றெடுத்தாள்
كُرْهًاۖ
சிரமத்துடன்
وَحَمْلُهُۥ
அவனை சுமந்ததும்
وَفِصَٰلُهُۥ
இன்னும் அவனுக்கு பால்குடி மறக்கச் செய்ததும்
ثَلَٰثُونَ
முப்பது
شَهْرًاۚ
மாதங்களாகும்
حَتَّىٰٓ
இறுதியாக
إِذَا بَلَغَ
அவன் அடைந்து (விட்டால்)
أَشُدَّهُۥ
தனது வாலிபத்தை
وَبَلَغَ
இன்னும் அடைந்து(விட்டால்)
أَرْبَعِينَ
நாற்பது
سَنَةً
வயதை
قَالَ
அவன் கூறுகிறான்
رَبِّ
என் இறைவா
أَوْزِعْنِىٓ
என்னை தூண்டுவாயாக
أَنْ أَشْكُرَ
நான் நன்றி செலுத்துவதற்கு(ம்)
نِعْمَتَكَ
உனது அருளுக்கு
ٱلَّتِىٓ
எது
أَنْعَمْتَ
நீ அருள் புரிந்தாய்
عَلَىَّ
என்மீது(ம்)
وَعَلَىٰ
மீதும்
وَٰلِدَىَّ
என் பெற்றோர்
وَأَنْ أَعْمَلَ
நான் செய்வதற்கும்
صَٰلِحًا
நல்ல அமலை
تَرْضَىٰهُ
அதை நீ திருப்திபடுகின்றாய்
وَأَصْلِحْ
இன்னும் சீர்திருத்தம் செய்
لِى
எனக்கு
فِى ذُرِّيَّتِىٓۖ
என் சந்ததியில்
إِنِّى
நிச்சயமாக நான்
تُبْتُ
திரும்பி விட்டேன்
إِلَيْكَ
உன் பக்கம்
وَإِنِّى
இன்னும் நிச்சயமாக நான்
مِنَ ٱلْمُسْلِمِينَ
முஸ்லிம்களில் ஒருவனாவேன்

Wa wassainal insaana biwaalidaihi ihsaanan hamalathu ummuhoo kurhanw-wa wada'athu kurhanw wa hamluhoo wa fisaaluhoo salaasoona shahraa; hattaaa izaa balagha ashuddahoo wa balagho arba'eena sanatan qaala Rabbi aqzi'neee an ashkura ni'matakal lateee an'amta 'alaiya wa 'alaa waalidaiya wa an a'mala saalihan tardaahu wa aslih lee fee zurriyyatee innee tubtu ilaika wa innee minal muslimeen

மனிதன் தன்னுடைய தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படி நாம் அவனுக்கு நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், கஷ்டத்துடனேயே அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்து கஷ்டத்துடனேயே பிரசவிக்கின்றாள். அவள் கர்ப்பமானதிலிருந்து, இவன் பால்குடி மறக்கும் வரையில், முப்பது மாதங்கள் (மிக்க கஷ்டத்துடன்) செல்கின்றன. இவன் வாலிபமாகி நாற்பது வயதையடைந்தால் "என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய நற்செயல்களைச் செய்யும்படி(யான நல்லறிவை) நீ எனக்குத் தந்தருள்வாயாக! எனக்கு உதவியாக இருக்கும்படி என்னுடைய குடும்பத்தை சீர்திருத்திவை. நிச்சயமாக நான் உன்னையே நோக்கினேன். (உனக்கு) முற்றிலும் வழிபட்டவர்களில் நானும் ஒருவன்" என்று கூறுவான்.

Tafseer

أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
ٱلَّذِينَ
எப்படிப்பட்டவர்கள்
نَتَقَبَّلُ
ஏற்றுக் கொள்வோம்
عَنْهُمْ
இவர்களிடமிருந்து
أَحْسَنَ
மிக அழகானதை
مَا عَمِلُوا۟
இவர்கள் செய்தவற்றில்
وَنَتَجَاوَزُ
இன்னும் மன்னித்து விடுவோம்
عَن سَيِّـَٔاتِهِمْ
இவர்களின் பாவங்களை
فِىٓ أَصْحَٰبِ
சொர்க்க வாசிகளில்
وَعْدَ ٱلصِّدْقِ
உண்மையான வாக்காகும்
ٱلَّذِى كَانُوا۟
எது/வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்

Ulaaa'ikal lazeena nata qabbalu 'anhum ahsana maa 'amiloo wa natajaawazu 'an saiyiaatihim feee Ashaabil jannati Wa'das sidqil lazee kaanoo yoo'adoon

இத்தகையவர்கள் செய்த நன்மைகள் அனைத்தையும் நாம் அங்கீகரித்துக் கொண்டு, சுவனவாசிகளான இவர்களின் பாவங்களையும் புறக்கணித்து விடுவோம். இவர்களுக்கு அளிக்கப்பட்ட இவ்வாக்கு உண்மையான வாக்குறுதியாகும்.

Tafseer

وَٱلَّذِى قَالَ
எவர்/கூறினார்
لِوَٰلِدَيْهِ
தனது பெற்றோரை நோக்கி
أُفٍّ
“சீ”
لَّكُمَآ
உங்கள் இருவருக்கும்
أَتَعِدَانِنِىٓ
என்னை எச்சரிக்கிறீர்களா?
أَنْ أُخْرَجَ
நான் வெளியேற்றப்படுவேன்
وَقَدْ
திட்டமாக
خَلَتِ
சென்றுள்ளனர்
ٱلْقُرُونُ
பல தலைமுறைகள்
مِن قَبْلِى
எனக்கு முன்னர்
وَهُمَا
அவ்விருவரும்
يَسْتَغِيثَانِ
உதவி தேடுகின்றனர்
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
وَيْلَكَ
உனக்கு என்ன கேடு!
ءَامِنْ
நீ நம்பிக்கை கொள்!
إِنَّ وَعْدَ
நிச்சயமாக வாக்கு
ٱللَّهِ
அல்லாஹ்வின்
حَقٌّ
உண்மையானதே!
فَيَقُولُ
அவன் கூறுகிறான்
مَا هَٰذَآ
இது இல்லை
إِلَّآ أَسَٰطِيرُ
கதைகளே தவிர
ٱلْأَوَّلِينَ
முன்னோரின்

Wallazee qaala liwaali daihi uffil lakumaaa ata'idanineee an ukhraja wa qad khalatil quroonu min qablee wa humaa yastagheesaanil laaha wailaka aamin inna wa'dal laahi haqq, fa yaqoolu maa haazaaa illaaa asaateerul awwaleen

எவன் தன் தாய் தந்தையை நோக்கி (அவர்கள் மறுமையைப் பற்றிக் கூறிய நல்மொழிகளை மறுத்து) "சீச்சீ! உங்களுக்கென்ன நேர்ந்தது! (நான் இறந்தபின்) உயிர்ப்பிக்கப்படுவேன் என்று நீங்கள் என்னைப் பயமுறுத்துகிறீர்களா? எனக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தார் சென்று விட்டனர். (அவர்களில் ஒருவருமே வராது இருக்க நான் மட்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவேனா?) என்று அவன் கூறுகின்றான். அதற்கு அவ்விருவரும் (அவனை) பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து (பின்னர் அவனை நோக்கி) "உனக்கென்ன கேடு! நீ அல்லாஹ்வை நம்பு. நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி மெய்யானது" என்று கூறுகின்றார்கள். அதற்கவன், "இவைகளெல்லாம் முன்னுள்ளோரின் கட்டுக் கதையே தவிர வேறில்லை. (இதனை நான் நம்பவே மாட்டேன்)" என்று கூறுகின்றான்.

Tafseer

أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
حَقَّ
உறுதியாகிவிட்டது
عَلَيْهِمُ
இவர்கள் மீதும்
ٱلْقَوْلُ
வாக்கு
فِىٓ أُمَمٍ
சமுதாயங்களுடன்
قَدْ
திட்டமாக
خَلَتْ
சென்றுவிட்ட(னர்)
مِن قَبْلِهِم
இவர்களுக்கு முன்னர்
مِّنَ ٱلْجِنِّ
ஜின்களில்
وَٱلْإِنسِۖ
மற்றும் மனித(ர்கள்)
إِنَّهُمْ
நிச்சயமாக இவர்கள்
كَانُوا۟
இருக்கின்றனர்
خَٰسِرِينَ
நஷ்டவாளிகளாகவே

Ulaaa'ikal lazeena haqqa 'alaihimul qawlu feee umamin qad khalat min qablihim minal jinni wal insi innahum kaanoo khaasireen

இத்தகையவர்களின் கதியோ, இவர்களுக்கு முன் சென்றுபோன (பாவிகளான) மனித, ஜின்களிலுள்ள கூட்டத்தார் களைப் போல் (இவர்களும் அழிந்து) இவர்களின் மீதும் (அல்லாஹ் வுடைய வேதனை வந்திறங்கியே தீருமென்ற) வாக்குறுதி உண்மையாகிவிட்டது. நிச்சயமாக இத்தகையவர்கள் நஷ்டமடைந்து விட்டார்கள்.

Tafseer

وَلِكُلٍّ
எல்லோருக்கும்
دَرَجَٰتٌ
தகுதிகள் உண்டு
مِّمَّا عَمِلُوا۟ۖ
அவர்கள் செய்தவற்றின் அடிப்படையில்
وَلِيُوَفِّيَهُمْ
இன்னும் இறுதியாக அவன் அவர்களுக்கு முழு கூலி கொடுப்பான்
أَعْمَٰلَهُمْ
அவர்களுடைய செயல்களுக்கு
وَهُمْ
இன்னும் அவர்கள்
لَا يُظْلَمُونَ
அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்

Wa likullin darajaatum mimmaa 'amiloo wa liyuwaf fiyahum a'maalahum wa hum laa yuzlamoon

இவர்களில் ஒவ்வொருவருக்கும் (நன்மையோ தீமையோ) அவர்கள் செயலுக்குத் தக்க பதவிகள் இருக்கின்றன. ஆகவே, அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியை முழுமையாகவே கொடுக்கப்படுவார்கள். (நன்மையைக் குறைத்தோ, பாவத்தை அதிகரித்தோ) இவர்களில் ஒருவருக்கும் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டாது.

Tafseer

وَيَوْمَ يُعْرَضُ
சமர்ப்பிக்கப்படுகின்ற நாளில்
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்கள்
عَلَى ٱلنَّارِ
நரகத்தின் முன்
أَذْهَبْتُمْ
நீங்கள் போக்கிக் கொண்டீர்கள்
طَيِّبَٰتِكُمْ
உங்கள் நன்மைகளை
فِى حَيَاتِكُمُ
உங்கள் வாழ்க்கையிலே
ٱلدُّنْيَا
உலக
وَٱسْتَمْتَعْتُم
இன்னும் இன்பம் அடைந்தீர்கள்
بِهَا
அவற்றின் மூலம்
فَٱلْيَوْمَ
ஆகவே இன்றைய தினம்
تُجْزَوْنَ
கூலியாக கொடுக்கப்படுவீர்கள்
عَذَابَ
தண்டனையை
ٱلْهُونِ
கேவலமான
بِمَا كُنتُمْ
நீங்கள் இருந்த காரணத்தாலும்
تَسْتَكْبِرُونَ
நீங்கள் பெருமையடிப்பவர்களாக
فِى ٱلْأَرْضِ
பூமியில்
بِغَيْرِ ٱلْحَقِّ
அநியாயமாக
وَبِمَا كُنتُمْ
நீங்கள் இருந்த காரணத்தாலும்
تَفْسُقُونَ
நீங்கள் பாவம் செய்பவர்களாக

Wa Yawma yu'radul lazeena kafaroo 'alan Naai azhabtum taiyibaatikum fee hayaatikumud dunyaa wastam ta'tum bihaa fal Yawma tujzawna 'azaabal hooni bimaa kuntum tastakbiroona fil ardi bighairil haqqi wa bimaa kuntum tafsuqoon

நிராகரிப்பவர்களை நரகத்தின் முன்கொண்டு வரப்படும் நாளில் (அவர்களை நோக்கி) "நீங்கள் உலகத்தில் வாழ்ந்திருந்த காலத்தில், நீங்கள் பெற்றிருந்த நல்லவைகளை எல்லாம், (நன்மையான காரியங்களில் உபயோகிக்காது) உங்களுடைய சுகபோகங்களிலேயே உபயோகித்து இன்பமனுபவித்து விட்டீர்கள். ஆகவே, நீங்கள் பூமியில் நியாயமின்றிப் பெருமையடித்துக் கொண்டும், பாவம் செய்துகொண்டும் இருந்ததன் காரணமாக, இழிவு தரும் வேதனையே இன்றைய தினம் உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும்" (என்று கூறப்படும்).

Tafseer