Skip to main content

بَلْ
மாறாக
كَذَّبُوا۟
அவர்கள் பொய்ப்பித்தனர்
بِٱلسَّاعَةِۖ
உலக முடிவை
وَأَعْتَدْنَا
இன்னும் தயார்படுத்தியுள்ளோம்
لِمَن كَذَّبَ
பொய்ப்பிப்பவருக்கு
بِٱلسَّاعَةِ
உலக முடிவை
سَعِيرًا
கொழுந்து விட்டெரியும் நெருப்பை

Bal kazzaboo bis Saa'ati wa a'tadnaa liman kazzaba bis Saa'ati sa'eeraa

உண்மையில் இவர்கள் விசாரணைக் காலத்தையே பொய்யாக்குகின்றனர். எவர்கள் விசாரணைக் காலத்தைப் பொய்யாக்குகிறார்களோ அவர்களுக்கு கடுமையாக பற்றி எரியும் நரகத்தைத்தான் நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம்.

Tafseer

إِذَا رَأَتْهُم
பார்த்தால்/அவர்களை அது
مِّن مَّكَانٍۭ
இடத்திலிருந்து
بَعِيدٍ
தூரமான
سَمِعُوا۟
செவிமடுப்பார்கள்
لَهَا
அதனுடைய
تَغَيُّظًا
சப்தத்தையும்
وَزَفِيرًا
இரைச்சலையும்

Izaa ra'at hum mim ma kaanim ba'eedin sami'oo lahaa taghaiyuzanw wa zafeeraa

அது இவர்களைக் கண்ட மாத்திரத்தில் சப்தமிட்டு ஆர்ப்பரிப்பதை இவர்கள் வெகு தூரத்திலிருந்தே செவி மடுத்துக் கொள்வார்கள்.

Tafseer

وَإِذَآ أُلْقُوا۟
அவர்கள் போடப்பட்டால்
مِنْهَا
அதில்
مَكَانًا
இடத்தில்
ضَيِّقًا
நெருக்கமான
مُّقَرَّنِينَ
கட்டப்பட்டவர்களாக
دَعَوْا۟
அழைப்பார்கள்
هُنَالِكَ
அங்கு
ثُبُورًا
கைசேதமே என்று

Wa izaaa ulqoo minhaa makaanan daiyiqam muqar raneena da'aw hunaalika subooraa

அவர்க(ளின் கை கால்க)ளைக் கட்டி, அதில் மிக்க நெருக்கடியான ஓரிடத்தில் எறியப்பட்டால் (கஷ்டத்தைத் தாங்க முடியாமல் மரணத்தைத் தரக்கூடிய) அழிவையே அவர்கள் கேட்பார்கள்.

Tafseer

لَّا تَدْعُوا۟
அழைக்காதீர்கள்
ٱلْيَوْمَ
இன்று
ثُبُورًا
கைசேதமே என்று
وَٰحِدًا
ஒரு முறை
وَٱدْعُوا۟
அழையுங்கள்
ثُبُورًا
கைசேதமே என்று
كَثِيرًا
பல முறை

Laa tad'ul yawma subooranw waahidanw wad'oo subooran kaseeraa

(ஆகவே, அந்நேரத்தில் அவர்களை நோக்கி,) "இன்றைய தினம் நீங்கள் ஓர் அழிவை மாத்திரம் அழைக்காதீர்கள். பல அழிவுகளை அழைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறப்படும்.

Tafseer

قُلْ
நீர் கேட்பீராக!
أَذَٰلِكَ
அது?
خَيْرٌ
சிறந்ததா
أَمْ
அல்லது
جَنَّةُ ٱلْخُلْدِ
ஜன்னதுல் குல்து
ٱلَّتِى
எது
وُعِدَ
வாக்களிக்கப்பட்டனர்
ٱلْمُتَّقُونَۚ
இறையச்சமுள்ளவர்கள்
كَانَتْ
அது இருக்கும்
لَهُمْ
அவர்களுக்கு
جَزَآءً
கூலியாகவும்
وَمَصِيرًا
மீளுமிடமாகவும்

Qul azaalika khairun am Jannatul khuldil latee wu'idal muttaqoon; kaanat lahum jazaaa'anw wa maseeraa

(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கேளுங்கள்: "அந்த நரகம் மேலா? அல்லது பரிசுத்தவான்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலையான சுவனபதி மேலா? அது அவர்களுக்கு (நற்) கூலியாகவும், அவர்கள் சேருமிடமாகவும் இருக்கின்றது.

Tafseer

لَّهُمْ
அவர்களுக்கு
فِيهَا
அதில்
مَا يَشَآءُونَ
அவர்கள் நாடுவார்கள்/எது
خَٰلِدِينَۚ
நிரந்தரமாக இருப்பார்கள்
كَانَ
இருக்கிறது
عَلَىٰ
மீது
رَبِّكَ
உமது இறைவன்
وَعْدًا
வாக்காக
مَّسْـُٔولًا
வேண்டப்பட்ட

Lahum feehaa maa yashaaa'oona khaalideen; kaana 'alaa Rabbika wa'dam mas'oolaa

"அதில் அவர்கள் விரும்பியதெல்லாம் அவர்களுக்குக் கிடைக்கும். (அதில்) அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்." (நபியே!) இது உங்களது இறைவன் மீது (அவனால்) வாக்களிக் கப்பட்ட கடமையாக இருக்கிறது.

Tafseer

وَيَوْمَ
நாளின்போது
يَحْشُرُهُمْ
அவன் எழுப்புவான் அவர்களையும்
وَمَا يَعْبُدُونَ
அவர்கள் வணங்கியவர்களையும்
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
فَيَقُولُ
கேட்பான்
ءَأَنتُمْ أَضْلَلْتُمْ
நீங்கள் வழிகெடுத்தீர்களா?
عِبَادِى
எனது அடியார்களை
هَٰٓؤُلَآءِ
நீங்கள்தான்
أَمْ
அல்லது
هُمْ
அவர்கள்
ضَلُّوا۟
தாமாகதவறவிட்டனரா
ٱلسَّبِيلَ
பாதையை

Wa Yawma yahshuruhum wa maa ya'budoona min doonil lahi fa yaqoolu 'a-antum adlaltum 'ibaadee haaa'ulaaa'i am hum dallus sabeel

(இணைவைத்து வணங்கிய) அவர்களையும், அல்லாஹ்வை யன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் (விசாரணைக்காக) ஒன்று சேர்க்கும் நாளில் (இறைவன்) "என்னுடைய இவ்வடியார்களை நீங்கள் வழி கெடுத்தீர்களா? அல்லது அவர்கள் தாமாகவே இத்தவறான வழியில் சென்று விட்டனரா" என்று கேட்பான்.

Tafseer

قَالُوا۟
அவர்கள் கூறுவர்
سُبْحَٰنَكَ
நீ மிகப் பரிசுத்தமானவன்
مَا كَانَ
இல்லை
يَنۢبَغِى
தகுதியானதாக
لَنَآ
எங்களுக்கு
أَن نَّتَّخِذَ
எடுத்துக் கொள்வது
مِن دُونِكَ
உன்னை அன்றி
مِنْ أَوْلِيَآءَ
பாதுகாவலர்களை
وَلَٰكِن
எனினும்
مَّتَّعْتَهُمْ
நீ அவர்களுக்கு சுகமளித்தாய்
وَءَابَآءَهُمْ
மூதாதைகளுக்கும் அவர்களுடைய
حَتَّىٰ
இறுதியாக
نَسُوا۟
அவர்கள் மறந்தனர்
ٱلذِّكْرَ
அறிவுரையை
وَكَانُوا۟
இன்னும் ஆகிவிட்டனர்
قَوْمًۢا
மக்களாக
بُورًا
அழிந்து போகும்

Qaaloo Subhaanaka maa kaana yambaghee lanaaa an nattakhiza min doonika min awliyaaa'a wa laakim matta'tahum wa aabaaa'ahum hattaa nasuz zikra wa kaanoo qawmam booraa

அதற்கு அவை (இறைவனை நோக்கி) "நீ மிகப் பரிசுத்தமானவன். உன்னை அன்றி (மற்றெவரையும்) நாங்கள் எங்களுக்கு காப்பவனாக எடுத்துக்கொள்வது எங்களுக்குத் தகுதியன்று. எனினும், நீதான் அவர்களுக்கும் அவர்களுடைய மூதாதைகளுக்கும் சுகபோகத்தைக் கொடுத்தாய். அதனால் அவர்கள் (உன்னை) நினைப்பதையே மறந்து (தாங்களாகவே பாவம் செய்து) அழிந்துபோகும் மக்களாகி விட்டார்கள்" என்று கூறும்.

Tafseer

فَقَدْ
ஆகவே, திட்டமாக
كَذَّبُوكُم
பொய்ப்பித்துவிட்டனர் உங்களை
بِمَا تَقُولُونَ
நீங்கள் கூறியதில்
فَمَا تَسْتَطِيعُونَ
ஆகவே, நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்
صَرْفًا
திருப்பி விடுவதற்கோ
وَلَا نَصْرًاۚ
உதவுவதற்கோ
وَمَن
யார்
يَظْلِم
அநீதி இழைத்துக் கொண்டாரோ
مِّنكُمْ
உங்களில்
نُذِقْهُ
அவருக்கு சுவைக்க வைப்போம்
عَذَابًا
தண்டனையை
كَبِيرًا
பெரிய

Faqad kazzabookum bimaa taqooloona famaa tastatee'oona sarfanw wa laa nasraa; wa mai yazlim minkum nuziqhu 'azaaban kabeeraa

(ஆகவே, அந்த நிராகரிப்பவர்களை நோக்கி "உங்களை வழி கெடுத்தவை இவைதான் என்று) நீங்கள் கூறியதை இவைகளே பொய்யாக்கி விட்டன. ஆதலால், (நம்முடைய வேதனையைத்) தட்டிக் கழிக்கவும் உங்களால் முடியாது. (இவைகளின்) உதவியைப் பெற்றுக் கொள்ளவும் உங்களால் முடியாது.. ஆகவே, உங்களில் எவன் அநியாயம் செய்து கொண்டிருந்தானோ அவன் பெரும் வேதனையைச் சுவைக்கும்படி நிச்சயமாக நாம் செய்வோம்" (என்று கூறுவோம்).

Tafseer

وَمَآ أَرْسَلْنَا
நாம் அனுப்பவில்லை
قَبْلَكَ
உமக்கு முன்னர்
مِنَ ٱلْمُرْسَلِينَ
தூதர்களில் எவரையும்
إِلَّآ
தவிர
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
لَيَأْكُلُونَ
உண்பவர்களாக
ٱلطَّعَامَ
உணவு
وَيَمْشُونَ
இன்னும் நடந்து செல்பவர்களாக
فِى ٱلْأَسْوَاقِۗ
கடைத் தெருக்களில்
وَجَعَلْنَا
ஆக்கினோம்
بَعْضَكُمْ
உங்களில் சிலரை
لِبَعْضٍ
சிலருக்கு
فِتْنَةً
சோதனையாக
أَتَصْبِرُونَۗ
நீங்கள் பொறுப்பீர்களா?
وَكَانَ
இருக்கிறான்
رَبُّكَ
உமது இறைவன்
بَصِيرًا
உற்று நோக்குபவனாக

Wa maaa arsalnaa qablaka minal mursaleena illaaa innahum la yaakuloonat ta'aama wa yamshoona fil aswaaq; wa ja'alnaa ba'dakum liba'din fitnatan atasbiroon; wa kaana Rabbuka Baseera

(நபியே!) உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த நம்முடைய தூதர்களெல்லாம் நிச்சயமாக (உங்களைப் போல்) உணவு உண்பவர்களாகவும், கடைகளுக்குச் செல்பவர்களாகவும் இருந்தார்கள். எனினும், உங்களில் சிலரை சிலருக்குச் சோதனையாக ஆக்கி வைத்தோம். ஆகவே, (நம்பிக்கையாளர்களே! இந்நிராகரிப்பவர்கள் துன்புறுத்துவதை) நீங்களும் சகித்துக் கொண்டிருங்கள். (நபியே!) உங்களது இறைவன் (அனைத்தையும்) உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.

Tafseer