Skip to main content

وَلَقَدْ
திட்டவட்டமாக
وَصَّلْنَا
நாம் சேர்ப்பித்தோம்
لَهُمُ
அவர்களுக்கு
ٱلْقَوْلَ
செய்தியை
لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக

Wa laqad wassalnaa lahumul qawla la'allahum yatazakkaroon

அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு நம்முடைய வசனத்தை மென்மேலும் அவர்களுக்கு (இறக்கி)ச் சேர்ப்பித்தே வந்தோம்.

Tafseer

ٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ
நாம் கொடுத்தவர்கள்
ٱلْكِتَٰبَ
வேதத்தை
مِن قَبْلِهِۦ
இதற்கு முன்னர்
هُم
அவர்கள்
بِهِۦ
இதையும்
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்வார்கள்

Allazeena aatainaahu mul Kitaaba min qablihee hum bihee yu'minoon

ஆகவே, இதற்கு முன்னர் எவர்களுக்கு நாம் நம்முடைய வேதத்தைக் கொடுத்து, அவர்களும் அதனை உண்மையாகவே நம்பிக்கை கொள்கின்றார்களோ,

Tafseer

وَإِذَا يُتْلَىٰ
ஓதப்பட்டால்
عَلَيْهِمْ
அவர்கள் முன்
قَالُوٓا۟
அவர்கள் கூறுவார்கள்
ءَامَنَّا
நாங்கள் நம்பிக்கை கொண்டோம்
بِهِۦٓ
இதை
إِنَّهُ
நிச்சயமாக இது
ٱلْحَقُّ
உண்மையான வேதம்
مِن رَّبِّنَآ
எங்கள் இறைவனிடமிருந்து
إِنَّا كُنَّا
நிச்சயமாக நாங்கள் இருந்தோம்
مِن قَبْلِهِۦ
இதற்கு முன்னரும்
مُسْلِمِينَ
முஸ்லிம்களாகவே இருந்தோம்

Wa izaa yutlaa 'alaihim qaaloo aamannaa biheee innahul haqqu mir rabbinaaa innaa kunnaa min qablihee muslimeen

அவர்கள் மீது (இவ்வேதம்) ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதற்கவர்கள் "இதனையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். நிச்சயமாக இதுவும் எங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மை(யான வேதம்)தான். இதற்கு முன்னதாகவே நிச்சயமாக நாங்கள் இதனை (எங்கள் வேதத்தின் மூலம் அறிந்து) ஏற்றுக் கொண்டிருக்கின்றோம்" என்று கூறுவார்கள்.

Tafseer

أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
يُؤْتَوْنَ
வழங்கப்படுவார்கள்
أَجْرَهُم
தங்கள் கூலியை
مَّرَّتَيْنِ
இருமுறை
بِمَا صَبَرُوا۟
அவர்கள் பொறுமையாக இருந்ததால்
وَيَدْرَءُونَ
இன்னும் அவர்கள் தடுப்பார்கள்
بِٱلْحَسَنَةِ
நன்மையைக்கொண்டு
ٱلسَّيِّئَةَ
தீமையை
وَمِمَّا رَزَقْنَٰهُمْ
இன்னும் நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து
يُنفِقُونَ
தர்மம் செய்வார்கள்

Ulaaa'ika yu'tawna ajrahum marratayni bimaa sabaroo wa yadra'oona bil hasanatis saiyi'ata wa mimmmaa razaq naahum yunfiqoon

இத்தகையவர் உறுதியாக இருந்ததன் காரணத்தால், இரண்டு தடவைகள் அவர்களுக்கு (நற்) கூலி கொடுக்கப்படும். இத்தகைய வர்கள், தீய காரியங்களை நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வார்கள். நாம் அவர்களுக்கு அளித்தவைகளில் இருந்து அவர்கள் தானமும் செய்வார்கள்.

Tafseer

وَإِذَا سَمِعُوا۟
அவர்கள் செவிமடுத்தால்
ٱللَّغْوَ
வீணானவற்றை
أَعْرَضُوا۟
புறக்கணித்து விடுவார்கள்
عَنْهُ
அதை
وَقَالُوا۟
இன்னும் கூறுவார்கள்
لَنَآ
எங்களுக்கு
أَعْمَٰلُنَا
எங்கள் செயல்கள்
وَلَكُمْ
இன்னும் உங்களுக்கு
أَعْمَٰلُكُمْ
உங்கள் செயல்கள்
سَلَٰمٌ
ஸலாம் உண்டாகட்டும்
عَلَيْكُمْ
உங்கள் மீது
لَا نَبْتَغِى
நாங்கள் விரும்ப மாட்டோம்
ٱلْجَٰهِلِينَ
அறியாதவர்களிடம்

Wa izaa sami'ul laghwa a'radoo 'anhu wa qaaloo lanaaa a'maalunaa wa lakum a'maalukum salaamun 'alaikum laa nabtaghil jaahileen

அன்றி, அவர்கள் வீணான வார்த்தைகளைக் கேள்வி யுற்றால் (அதில் சம்பந்தப்படாது) அதனைப் புறக்கணித்து விட்டு "எங்களுடைய காரியங்கள் எங்களுக்கும் உங்களுடைய காரியங்கள் உங்களுக்கும் (பெரியது) உங்களுக்கு ஸலாம்! அறியாதவர்களிடம் நாங்கள் (தர்க்கிக்க) விரும்புவதில்லை" என்று கூறுவார்கள்.

Tafseer

إِنَّكَ
நிச்சயமாக நீர்
لَا تَهْدِى
நீர் நேர்வழி செலுத்த மாட்டீர்
مَنْ أَحْبَبْتَ
நீர் விரும்பியவரை
وَلَٰكِنَّ
என்றாலும்
ٱللَّهَ
அல்லாஹ்
يَهْدِى
நேர்வழி செலுத்துகின்றான்
مَن يَشَآءُۚ
தான் நாடியவரை
وَهُوَ
அவன்தான்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِٱلْمُهْتَدِينَ
நேர்வழி செல்பவர்களை

Innaka laa tahdee man ahbata wa laakinna laaha yahdee mai yashaaa'; wa Huwaa'lamu bilmuhtadeen

(நபியே!) நிச்சயமாக நீங்கள் இவர்களில் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்த உங்களால் முடியாது. எனினும், தான் விரும்பியவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகின்றான். நேரான வழியில் செல்லத் தகுதியுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்.

Tafseer

وَقَالُوٓا۟
அவர்கள் கூறினர்
إِن نَّتَّبِعِ
நாம் பின்பற்றினால்
ٱلْهُدَىٰ
நேர்வழியை
مَعَكَ
உம்முடன்
نُتَخَطَّفْ
நாங்கள் வெளியேற்றப்பட்டிருப்போம்
مِنْ أَرْضِنَآۚ
எங்கள் பூமியிலிருந்து
أَوَلَمْ نُمَكِّن
நாம் ஸ்திரப்படுத்தித் தரவில்லையா?
لَّهُمْ
அவர்களுக்கு
حَرَمًا
புனித தலத்தை
ءَامِنًا
பாதுகாப்பான
يُجْبَىٰٓ
கொண்டு வரப்படுகின்றன
إِلَيْهِ
அங்கு
ثَمَرَٰتُ
கனிகளும்
كُلِّ
எல்லா
شَىْءٍ
வகையான
رِّزْقًا
உணவாக
مِّن لَّدُنَّا
நம் புறத்திலிருந்து
وَلَٰكِنَّ
என்றாலும்
أَكْثَرَهُمْ
அதிகமானவர்கள் அவர்களில்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Wa qaalooo in nattabi'il hudaa ma'aka nutakhattaf min ardinaa; awalam numakkkil lahum haraman aaminany yujbaaa ilaihi samaraatu kulli shai'ir rizqam mil ladunnaa wa laakinna aksarahum laa ya'lamoon

(நபியே! மக்காவாசிகளான) இவர்கள் (உங்களை நோக்கி) "நாங்கள் உங்களுடன் குர்ஆனைப் பின்பற்றினால், எங்கள் ஊரில் இருந்த நாங்கள் (இறாய்ஞ்சித்) தூக்கிச் செல்லப்பட்டு விடுவோம்" என்று கூறுகின்றனர். (இவர்கள் சிந்திக்க வேண்டாமா?) அபயமளிக்கும் மிக்க கண்ணியமான இடத்தில் (இவர்கள் வசித்திருக்க) இவர்களுக்கு நாம் வசதி அளிக்கவில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் உணவாக நம்மிடமிருந்து அங்கு வந்து குவிந்துகொண்டே இருக்கின்றது. எனினும், இவர்களில் பெரும்பாலானவர்கள் (இதன் நன்றியை) அறியமாட்டார்கள்.

Tafseer

وَكَمْ
எத்தனையோ
أَهْلَكْنَا
நாம் அழித்தோம்
مِن قَرْيَةٍۭ
ஊர்களை
بَطِرَتْ
வரம்பு மீறி நிராகரித்தனர்
مَعِيشَتَهَاۖ
தங்களது வாழ்க்கை (வசதியால்)
فَتِلْكَ
இதோ
مَسَٰكِنُهُمْ
அவர்களது இல்லங்கள்
لَمْ تُسْكَن
வசிக்கப்படவில்லை
مِّنۢ
பின்னர்
بَعْدِهِمْ
பின்னர் அவர்களுக்கு
إِلَّا
தவிர
قَلِيلًاۖ
குறைவாகவே
وَكُنَّا
இருக்கின்றோம்
نَحْنُ
நாமே
ٱلْوَٰرِثِينَ
வாரிசுகளாக

Wa kam ahlaknaa min qaryatim batirat ma'eeshatahaa fatilka masaainuhum lam tuskam mim ba'dihim illaa qaleelaa; wa kunnaa Nahnul waariseen

(இவர்களைப் போன்று) தன் வாழ்க்கைத் தரத்தால் கொழுத்துத் திமிர் பிடித்த எத்தனையோ ஊரார்களை நாம் அழித்திருக்கின்றோம். இதோ! (பாருங்கள்.) இவை யாவும் அவர்கள் வசித்திருந்த இடங்கள்தாம். (எனினும், அங்கே மூலை முடுக்குகளில் உள்ள) சொற்ப சிலரைத் தவிர நாம்தான் அதற்கு வாரிசுகளாக இருக்கிறோம்.

Tafseer

وَمَا كَانَ
இல்லை
رَبُّكَ
உமது இறைவன்
مُهْلِكَ
அழிப்பவனாக
ٱلْقُرَىٰ
ஊர்களை
حَتَّىٰ يَبْعَثَ
அனுப்புகின்ற வரை
فِىٓ أُمِّهَا
அதனுடைய தலைநகரில்
رَسُولًا
ஒரு தூதரை
يَتْلُوا۟
அவர் ஓதுவார்
عَلَيْهِمْ
அவர்கள் முன்
ءَايَٰتِنَاۚ
நமது வசனங்களை
وَمَا كُنَّا
நாம் இல்லை
مُهْلِكِى
அழிப்பவர்களாக
ٱلْقُرَىٰٓ
ஊர்களை
إِلَّا
தவிர
وَأَهْلُهَا
அதன் வாசிகள் இருந்தே
ظَٰلِمُونَ
அநியாயக்காரர்களாக

Wa maa kaana Rabbuka muhlikal quraa hattaa yab'asa feee ummihaa Rasoolany yatloo 'alaihim aayaatina; wa maa kunnaa muhlikil quraaa illaa wa ahluhaa zaalimoon

(நபியே!) உங்களது இறைவன் (தன்னுடைய) தூதரை (மக்களின்) தலை நகரங்களுக்கு அனுப்பி, அவர்களுக்கு நம்முடைய வசனங்களை அவர் ஓதிக் காண்பிக்காத வரையில் எவ்வூராரையும் அழிப்பதில்லை. அன்றி, எந்த ஊராரையும் அவர்கள் அநியாயம் செய்து கொண்டிருக்கும் நிலைமையிலேயே தவிர நாம் அழிக்கவில்லை.

Tafseer

وَمَآ أُوتِيتُم
நீங்கள் எது கொடுக்கப்பட்டீர்களோ
مِّن شَىْءٍ
பொருளில்
فَمَتَٰعُ
இன்பமும்
ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا
உலக வாழ்க்கையின்
وَزِينَتُهَاۚ
அதன் அலங்காரமும்
وَمَا عِندَ
அல்லாஹ்விடம் உள்ளதுதான்
خَيْرٌ
சிறந்ததும்
وَأَبْقَىٰٓۚ
நிலையானதும்
أَفَلَا تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?

Wa maaa ooteetum min shai'in famataa'ul hayaatid dunyaa wa zeenatuhaa; wa maa 'indal laahi khairunw wa abqaa; afalaa ta'qiloon

(நபியே! நீங்கள் கூறுங்கள்:) உங்களுக்குக் கொடுக்கப் பட்டிருப்பவைகள் எல்லாம் இவ்வுலக வாழ்க்கையிலுள்ள அற்ப சுகமும், அதனுடைய அலங்காரமும்தான். (எனினும்,) அல்லாஹ்விடத்தில் இருப்பவைகளோ மிக்க மேலானவையும் நிலையானவையும் ஆகும். இதனை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?

Tafseer