Skip to main content

أَفَمَن
எவருக்கு
وَعَدْنَٰهُ
நாம் வாக்களித்தோம்
وَعْدًا
வாக்கை
حَسَنًا
அழகிய
فَهُوَ
அவர்
لَٰقِيهِ
அதை சந்திப்பாரோ
كَمَن مَّتَّعْنَٰهُ
நாம் இன்பமளித்தவர் போன்று ஆவாரா?
مَتَٰعَ
இன்பத்தைக்கொண்டு
ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையின்
ٱلدُّنْيَا
இவ்வுலக
ثُمَّ
பிறகு
هُوَ
இவர்
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
مِنَ ٱلْمُحْضَرِينَ
ஆஜர்படுத்தப்பட்டவர்களில் இருப்பார்

Afamanw wa'adnaahu wa'dan hasanan fahuwa laaqeehi kamam matta'naahu mataa'al hayaatid dunyaa summa huwa Yawmal Qiyaamati minal muhdareen

எவனுக்கு நாம் நன்மை தருவதாக வாக்களித்து அதனை அவன் அடையக்கூடியவனாகவும் இருக்கின்றானோ அவன், எவனுக்கு நாம் இவ்வுலகத்தில் அற்ப சுகத்தை அனுபவிக்கும்படி விட்டுவைத்துப் பின்னர் மறுமையில் (அதற்குக் கணக்குக் கொடுக்கும்படி) நம்மிடம் பிடித்துக்கொண்டு வரப்படுவானோ அவனைப் போலாவானா? (இவ்விருவரும் சமமாக மாட்டார்கள்.)

Tafseer

وَيَوْمَ
இன்னும் நாளில்
يُنَادِيهِمْ
அவன் அவர்களை அழைப்பான்
فَيَقُولُ
அவன் கேட்பான்
أَيْنَ
எங்கே என்று
شُرَكَآءِىَ
எனது இணைகள்
ٱلَّذِينَ كُنتُمْ
நீங்கள் சொல்லிக்கொண்டிருந்த

Wa Yawma yunaadeehim fa-yaqoolu aina shurakaaa 'iyal lazeena kuntum taz'umoon

(இறைவன்) அவர்களை (விசாரணைக்காக) அழைக்கும் நாளில் (அவர்களை நோக்கி "பொய்யான தெய்வங்களை) எனக்கு இணையானவை என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களே! அவை எங்கே?" என்று கேட்பான்.

Tafseer

قَالَ
கூறுவார்(கள்)
ٱلَّذِينَ حَقَّ
எவர்கள்/கடமையாகிவிட்டது
عَلَيْهِمُ
அவர்கள் மீது
ٱلْقَوْلُ
வாக்கு
رَبَّنَا
எங்கள் இறைவா!
هَٰٓؤُلَآءِ
இவர்கள்தான்
ٱلَّذِينَ
எவர்கள்
أَغْوَيْنَآ
நாங்கள் வழிகெடுத்தோம்
أَغْوَيْنَٰهُمْ
அவர்களை நாங்கள் வழிகெடுத்தோம்
كَمَا
போன்றே
غَوَيْنَاۖ
நாங்கள் வழிகெட்டது
تَبَرَّأْنَآ
நாங்கள் விலகி விட்டோம்
إِلَيْكَۖ
உன் பக்கம்
مَا كَانُوٓا۟
அவர்கள் இல்லை
إِيَّانَا
எங்களை
يَعْبُدُونَ
அவர்கள் வணங்குகின்றனர்

Qaalal lazeena haqqa 'alaihimul qawlu Rabbanaa haaa'ulaaa'il lazeena aghwainaa aghwainaahu kamaa ghawainaa tabarraanaaa ilaika maa kaanoo iyyaanaa ya'budoon

(இணைவைக்கும்படி செய்து வழிகெடுத்தவர்களில்) எவர்கள் மீது நம்முடைய தண்டனை விதிக்கப்பட்டு விட்டதோ அவர்கள் (இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! நாங்கள் வழி கெடுத்தவர்கள் இவர்கள்தாம். (எனினும், எவருடைய நிர்ப்பந்தமுமின்றி) எவ்வாறு நாங்கள் வழி கெட்டோமோ அவ்வாறே இவர்களையும் (எவ்வித நிர்ப்பந்தமுமின்றியே) வழி கெடுத்தோம். ஆதலால், உன்னிடம் (அவர்களுடைய பொறுப்பிலிருந்து) நாங்கள் விலகிக் கொள்கின்றோம். அவர்கள் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவும் இல்லை" என்று கூறுவார்கள்.

Tafseer

وَقِيلَ
இன்னும் சொல்லப்படும்
ٱدْعُوا۟
அழையுங்கள்
شُرَكَآءَكُمْ
தெய்வங்களை உங்கள்
فَدَعَوْهُمْ
அவற்றை அவர்கள் அழைப்பார்கள்
فَلَمْ يَسْتَجِيبُوا۟
ஆனால், அவை பதில் தரமாட்டா
لَهُمْ
அவர்களுக்கு
وَرَأَوُا۟
இன்னும் காண்பார்கள்
ٱلْعَذَابَۚ
தண்டனையை
لَوْ أَنَّهُمْ
நிச்சயமாக தாங்கள் இருந்திருக்க வேண்டுமே!
يَهْتَدُونَ
நேர்வழி பெற்றவர்களாக

Wa qeelad 'oo shurakaaa'akum fada'awhum falam yastajeeboo lahum wa ra awul 'azaab; law annahum kaanoo yahtadoon

பின்னர், தங்கள் பொய்யான தெய்வங்களை (உதவிக்கு) அழைக்கும்படி அவர்களுக்குக் கூறப்பட்டு, அவ்வாறே அவர்கள் அவைகளையும் அழைப்பார்கள். எனினும், அவை இவர்களுக்கு (வாய் திறந்து) பதிலும் கொடுக்கா. அதற்குள்ளாக இவர்கள் தங்கள் வேதனையைக் கண்டு கொள்வார்கள். இவர்கள் நேரான வழியில் சென்றிருந்தால் (இக்கதிக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்.)

Tafseer

وَيَوْمَ
இன்னும் நாளில்
يُنَادِيهِمْ
அவன் அவர்களை அழைக்கின்றான்
فَيَقُولُ
அவன் கேட்பான்
مَاذَآ
என்ன
أَجَبْتُمُ
நீங்கள் பதிலளித்தீர்கள்
ٱلْمُرْسَلِينَ
தூதர்களுக்கு

Wa Yawma yunaadeehim fa yaqoolu maazaaa ajabtumul mursaleen

அவர்கள் (விசாரணைக்காக) அழைக்கப்படும் நாளில், (அவர்களை நோக்கி, நம்முடைய நேரான வழியில் அழைக்க உங்களிடம் வந்த) நம்முடைய தூதர்களுக்கு நீங்கள் என்ன பதில் கூறினீர்கள்?" என்று கேட்கப்படும்.

Tafseer

فَعَمِيَتْ
மறைத்து விடும்
عَلَيْهِمُ
அவர்கள் மீது
ٱلْأَنۢبَآءُ
செய்திகள்
يَوْمَئِذٍ
அந்நாளில்
فَهُمْ
ஆகவே, அவர்கள்
لَا يَتَسَآءَلُونَ
கேட்டுக்கொள்ள மாட்டார்கள்

Fa'amiyat 'alaihimul ambaaa'u Yawma'izin fahum laa yatasaaa'aloon

அந்நேரத்தில் எல்லா விஷயங்களையும் அவர்கள் மறந்து தடுமாறி (எதைப் பற்றியும்) ஒருவர் ஒருவரைக் கேட்க சக்தியற்றுப் போவார்கள்.

Tafseer

فَأَمَّا
ஆக,
مَن
யார்
تَابَ
திருந்தினார்
وَءَامَنَ
இன்னும் நம்பிக்கைகொண்டார்
وَعَمِلَ
இன்னும் செய்வார்
صَٰلِحًا
நற்செயலை
فَعَسَىٰٓ أَن
அவர் ஆகக்கூடும்
مِنَ ٱلْمُفْلِحِينَ
வெற்றியாளர்களில்

Fa ammaa man taaba wa aamana wa 'amila saalihan fa'asaaa ai yakoona minal mufliheen

எனினும், (இவர்களில்) எவர்கள் கைசேதப்பட்டு (பாவத்தில் இருந்து) விலகி, மன்னிப்புக் கோரி, நம்பிக்கை கொண்டு நற் செயல்களைச் செய்கின்றார்களோ அவர்கள் வெற்றி அடைந்தவர்களில் (சேர்ந்து) விடுவார்கள்.

Tafseer

وَرَبُّكَ
உமது இறைவன்
يَخْلُقُ
படைக்கிறான்
مَا يَشَآءُ
தான் நாடுவதை
وَيَخْتَارُۗ
இன்னும் தேர்ந்தெடுக்கிறான்
مَا كَانَ
இல்லை
لَهُمُ
அவர்களுக்கு
ٱلْخِيَرَةُۚ
விருப்பம்
سُبْحَٰنَ
மகா பரிசுத்தமானவன்
ٱللَّهِ
அல்லாஹ்
وَتَعَٰلَىٰ
மிக உயர்ந்தவன்
عَمَّا يُشْرِكُونَ
அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு

Wa Rabbuka yakhuluqu maa yashaaa'u wa yakhtaar; maa kaana lahumul khiyarah; Subhannal laahi wa Ta'aalaa 'ammmaa yushrikoon

(நபியே!) உங்களது இறைவன், தான் விரும்பியவர்களை படைத்து(த் தன்னுடைய தூதுக்காக அவர்களில்) தான் விரும்பிய வர்களைத் தேர்ந்தெடுக்கின்றான். (அவ்வாறு தூதரைத்) தேர்ந்தெடுப்பதில் இவர்களுக்கு எத்தகைய உரிமையும் இல்லை. இவர்கள் இணை வைப்பவைகளிலிருந்து அல்லாஹ் மிக்க உயர்ந்தவனும் பரிசுத்தமானவனுமாவான்.

Tafseer

وَرَبُّكَ
உமது இறைவன்
يَعْلَمُ
நன்கறிவான்
مَا تُكِنُّ
மறைக்கின்றவற்றையும்
صُدُورُهُمْ
நெஞ்சங்கள் அவர்களது
وَمَا يُعْلِنُونَ
அவர்கள் பகிரங்கப்படுத்துபவற்றையும்

Wa Rabbuka ya'lamu maa tukinnu sudooruhum wa maa yu'linoon

உங்களது இறைவன் அவர்களுடைய உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் நன்கறிவான்.

Tafseer

وَهُوَ
அவன்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَآ
அறவே இல்லை
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
إِلَّا
தவிர
هُوَۖ
அவனை
لَهُ
அவனுக்கே
ٱلْحَمْدُ
புகழ்
فِى ٱلْأُولَىٰ
இவ்வுலகிலும் மறுமையிலும்
وَلَهُ
அவனுக்கே
ٱلْحُكْمُ
தீர்ப்பளிப்பது
وَإِلَيْهِ
இன்னும் அவனிடமே
تُرْجَعُونَ
நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்

Wa Huwal laahu laaa ilaaha illaa Huwa lahul hamdu fil oolaa wal Aakhirati wa lahul hukmu wa ilaihi turja'oon

அவன்தான் அல்லாஹ்; அவனைத்தவிர வணக்கத்திற்குரிய இறைவன் (இல்லவே) இல்லை. இம்மையிலும், மறுமையிலும் புகழ் அனைத்தும் அவனுக்கு உரியனவே! (மறுமையில் தீர்ப்பு கூறும்) அதிகாரமும் அவனுக்குரியதே! ஆதலால், (மறுமையில்) நீங்கள் (அனைவரும்) அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்.

Tafseer