Skip to main content

وَأَنْ أَلْقِ
இன்னும் எறிவீராக!
عَصَاكَۖ
உமது கைத்தடியை
فَلَمَّا رَءَاهَا
ஆக, அவர் பார்த்தபோது/அதை
تَهْتَزُّ
நெளிவதாக
كَأَنَّهَا
ஒரு போன்று/அது
جَآنٌّ
பாம்பை
وَلَّىٰ
திரும்பி ஓடினார்
مُدْبِرًا
புறமுதுகிட்டவராக
وَلَمْ يُعَقِّبْۚ
அவர் பார்க்கவில்லை
يَٰمُوسَىٰٓ
மூஸாவே!
أَقْبِلْ
முன்னே வருவீராக!
وَلَا تَخَفْۖ
பயப்படாதீர்!
إِنَّكَ
நிச்சயமாக நீர்
مِنَ ٱلْءَامِنِينَ
பாதுகாப்பு பெற்றவர்களில் உள்ளவர்

Wa an alqi 'asaaka falam maa ra aahaa tahtazzu ka annnahaa jaaannunw wallaa mudbiranw wa lam yu'aqqib; yaa Moosaa aqbil wa laa takhaf innaka minal aamineen

(அன்றி) "நீங்கள் உங்களுடைய தடியை எறியுங்கள்" (என்றும் அவருக்குக் கூறப்பட்டது. அவ்வாறே அதனை அவர் எறியவே) அது பெரியதொரு பாம்பாகி நெளிவதைக் கண்ட அவர் (பயந்து) அதனைப் பின்தொடராது திரும்பி ஓடினார். (அச்சமயத்தில் அவரை நோக்கி) "மூஸாவே! பயப்படாது நீங்கள் முன் வாருங்கள்! நிச்சயமாக நீங்கள் அச்சமற்றவர்.

Tafseer

ٱسْلُكْ
நுழைப்பீராக!
يَدَكَ
உமது கையை
فِى جَيْبِكَ
உமது சட்டைப் பையில்
تَخْرُجْ
அது வெளிவரும்
بَيْضَآءَ
வெண்மையாக
مِنْ غَيْرِ
இன்றி
سُوٓءٍ
குறை
وَٱضْمُمْ
அணைப்பீராக!
إِلَيْكَ
உம்முடன்
جَنَاحَكَ
உமது கையை
مِنَ ٱلرَّهْبِۖ
பயந்துவிட்டதால்
فَذَٰنِكَ
ஆக,இவைஇரண்டும்
بُرْهَٰنَانِ
இரண்டு அத்தாட்சிகளாகும்
مِن
புறத்திலிருந்து
رَّبِّكَ
உமது இறைவன்
إِلَىٰ
பக்கம்
فِرْعَوْنَ
ஃபிர்அவ்ன்
وَمَلَإِي۟هِۦٓۚ
இன்னும் அவனது பிரமுகர்கள்
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
كَانُوا۟
இருக்கின்றனர்
قَوْمًا
மக்களாக
فَٰسِقِينَ
பாவிகளான

Usluk yadaka fee jaibika takhruj baidaaa'a min ghairi sooo'inw wadmum ilaika janaahaka minar rahbi fazaanika burhaanaani mir Rabbika ilaa Fiw'awna wa mala'ih; innahum kaanoo qawman faasiqeen

உங்களுடைய சட்டைப் பையில் உங்களுடைய கையைப் புகுத்துங்கள். அது மாசற்ற பிரகாசமுள்ள வெண்மையாக வெளிப்படும். நீங்கள் பயப்படாதிருக்கும் பொருட்டு உங்களுடைய கைகளை உங்களுடைய விலாவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஃபிர்அவ்னிடமும் அவனுடைய தலைவர்களிடமும் நீங்கள் செல்லும் பொருட்டு இவ்விரண்டும் உங்கள் இறைவனால் உங்களுக்கு அளிக்கப்பட்ட இரு அத்தாட்சிகளாகும். நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் மக்களாக இருக்கிறார்கள்" (என்று அவருக்குக் கூறப்பட்டது).

Tafseer

قَالَ
அவர் கூறினார்:
رَبِّ
என் இறைவா!
إِنِّى
நிச்சயமாக நான்
قَتَلْتُ
கொன்றுள்ளேன்
مِنْهُمْ
அவர்களில்
نَفْسًا
ஓர் உயிரை
فَأَخَافُ
ஆகவே, நான் பயப்படுகிறேன்
أَن يَقْتُلُونِ
அவர்கள் என்னை கொல்வதை

Qaala Rabbi innee qataltu minhum nafsan fa akhaafu ai yaqtuloon

அதற்கவர் "என் இறைவனே! மெய்யாகவே நான் அவர்களில் ஒருவரைக் கொலை செய்திருக்கிறேன். அதற்கு(ப் பழியாக) என்னை அவர்கள் வெட்டி விடுவார்கள் என்று நான் பயப்படுகிறேன். (அன்றி, என் நாவிலுள்ள கொன்னலின் காரணமாக என்னால் தெளிவாகப் பேசவும் முடிவதில்லை.)

Tafseer

وَأَخِى
எனது சகோதரர்
هَٰرُونُ
ஹாரூன்
هُوَ
அவர்
أَفْصَحُ
தெளிவான
مِنِّى
என்னைவிட
لِسَانًا
நாவன்மைஉடையவர்
فَأَرْسِلْهُ
ஆகவே, அவரைஅனுப்பு!
مَعِىَ رِدْءًا
என்னுடன் உதவியாக
يُصَدِّقُنِىٓۖ
அவர் என்னை உண்மைப்படுத்துவார்
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَخَافُ
நான் பயப்படுகிறேன்
أَن يُكَذِّبُونِ
அவர்கள் என்னை பொய்ப்பிப்பதை

Wa akhee Haaroonu huwa afsahu minnee lisaanan fa arsilhu ma'iya rid ai yusaddiquneee innee akhaafu ai yukazziboon

என்னுடைய சகோதரர் ஹாரூனோ என்னைவிட தெளிவாகப் பேசக்கூடியவர். அவரை நீ எனக்கு உதவியாக என்னுடன் அனுப்பிவை. அவர் என்னை உண்மைப்படுத்தி வைப்பார். (நான் தனியே சென்றால்) அவர்கள் என்னைப் பொய்யாக்கி விடுவார்கள் என்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன்" என்று கூறினார்.

Tafseer

قَالَ
அவன் கூறினான்
سَنَشُدُّ
பலப்படுத்துவோம்
عَضُدَكَ
உமது புஜத்தை
بِأَخِيكَ
உமது சகோதரரைக் கொண்டு
وَنَجْعَلُ
இன்னும் ஆக்குவோம்
لَكُمَا
உம் இருவருக்கும்
سُلْطَٰنًا
ஓர் அத்தாட்சியை
فَلَا يَصِلُونَ
ஆகவே அவர்கள் வரமுடியாது
إِلَيْكُمَاۚ
உங்கள் இருவர் பக்கம்
بِـَٔايَٰتِنَآ
நமது அத்தாட்சிகளைக் கொண்டு
أَنتُمَا
நீங்கள் இருவரும்
وَمَنِ ٱتَّبَعَكُمَا
உங்கள் இருவரை பின்பற்றினார்(கள்)/எவர்கள்
ٱلْغَٰلِبُونَ
மிகைத்தவர்கள்

Qaala sanashuddu 'adudaka bi akheeka wa naj'alu lakumaa sultaanan falaa yasiloona ilaikumaa; bi Aayaatinaa antumaa wa manit taba'akumal ghaaliboon

அதற்கு இறைவன் "உங்கள் சகோதரரைக் கொண்டு உங்கள் தோள்களை நாம் வலுப்படுத்துவோம். நாம் உங்களுக்கு வெற்றியையும் தருவோம். அவர்கள் உங்களை நெருங்கவும் முடியாது. நீங்கள் நம்முடைய (இந்த) அத்தாட்சிகளுடன் (தயக்கமின்றிச் செல்லுங்கள்.) நீங்களும் உங்கள் இருவரைப் பின்பற்றியவர்களும்தான் வெற்றி பெருவீர்கள்" என்று கூறினான்.

Tafseer

فَلَمَّا
ஆகவே, வந்தபோது
جَآءَهُم
அவர்களிடம்
مُّوسَىٰ
மூசா
بِـَٔايَٰتِنَا
நமது அத்தாட்சிகளுடன்
بَيِّنَٰتٍ
தெளிவான
قَالُوا۟
அவர்கள் கூறினர்
مَا
இல்லை
هَٰذَآ
இது
إِلَّا
தவிர
سِحْرٌ
சூனியமே
مُّفْتَرًى
இட்டுக்கட்டப்பட்ட
وَمَا سَمِعْنَا
நாங்கள் கேள்விப்பட்டதில்லை
بِهَٰذَا
இதைப் பற்றி
فِىٓ ءَابَآئِنَا
எங்கள் மூதாதைகளில்
ٱلْأَوَّلِينَ
முந்திய(வர்கள்)

Falammaa jaaa'ahum Moosaa bi Aayaatinaa baiyinaatin qaaloo maa haazaaa illaa sihrum muftaranw wa maa sami'naa bihaazaa feee aabaaa'inal awwaleen

நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் மூஸா அவர்களிடம் வந்தபொழுது அவர்கள் "இது சூனியத்தைத் தவிர வேறில்லை. முன்னிருந்த எங்கள் மூதாதைகளிடத்திலும் இத்தகைய விஷயத்தை நாம் கேள்விப்படவில்லை" என்று கூறினார்கள்.

Tafseer

وَقَالَ
கூறினார்
مُوسَىٰ
மூசா
رَبِّىٓ
என் இறைவன்
أَعْلَمُ
நன்கறிந்தவன்
بِمَن جَآءَ
வந்தவரை(யும்)
بِٱلْهُدَىٰ
நேர்வழியுடன்
مِنْ عِندِهِۦ
அவனிடமிருந்து
وَمَن
இன்னும் எவர்
تَكُونُ
இருக்கும்
لَهُۥ عَٰقِبَةُ
அவருக்கு முடிவு
ٱلدَّارِۖ
மறுமையின்
إِنَّهُۥ
நிச்சயமாக
لَا يُفْلِحُ
வெற்றி பெறமாட்டார்கள்
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்

Wa qaala Moosaa Rabbeee a'alamu biman jaaa'a bilhudaa min 'indihee wa man takoonu lahoo 'aaqibatud daari innahoo laa yuflihuz zaalimoon

அதற்கு மூஸா "தன் இறைவனிடமிருந்து நேரான வழியைக் கொண்டு வந்தவன் யார் என்பதையும், நல்ல முடிவு யாருக்குக் கிடைக்கும் என்பதையும் என் இறைவனே நன்கறிவான். நிச்சயமாக (சூனியம் செய்யும்) அநியாயக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள்" என்று கூறினார்.

Tafseer

وَقَالَ
கூறினான்
فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன்
يَٰٓأَيُّهَا ٱلْمَلَأُ
பிரமுகர்களே!
مَا عَلِمْتُ
நான் அறியமாட்டேன்
لَكُم
உங்களுக்கு (இருப்பதை)
مِّنْ إِلَٰهٍ
ஒரு கடவுள்
غَيْرِى
என்னை அன்றி
فَأَوْقِدْ لِى
ஆகவே, நெருப்பூட்டு/எனக்காக
يَٰهَٰمَٰنُ
ஹாமானே!
عَلَى ٱلطِّينِ
குழைத்தகளிமண்ணை
فَٱجْعَل
உருவாக்கு
لِّى
எனக்காக
صَرْحًا
முகடுள்ள ஓர் உயரமான கோபுரத்தை
لَّعَلِّىٓ أَطَّلِعُ
நான் தேடிப்பார்க்க வேண்டும்
إِلَىٰٓ إِلَٰهِ
கடவுளை
مُوسَىٰ
மூஸாவின்
وَإِنِّى
இன்னும் நிச்சயமாக நான்
لَأَظُنُّهُۥ
அவரை கருதுகிறேன்
مِنَ ٱلْكَٰذِبِينَ
பொய்யர்களில் (ஒருவராக)

Wa qaala Fir'awnu yaaa aiyuhal mala-u maa 'alimtu lakum min ilaahin ghairee fa awqid lee yaa Haamaanu 'alatteeni faj'al lee sarhal la'alleee attali'u ilaaa ilaahi Moosaa wa innee la azunnuhoo minal kaazibeen

அதற்கு ஃபிர்அவ்ன் (தன் மக்களில் உள்ள தலைவர்களை நோக்கி) "தலைவர்களே! என்னைத் தவிர வேறொரு இறைவன் உங்களுக்கு இருப்பதாக நான் அறியவில்லை. ஹாமானே! களிமண்(ணால் செய்த செங்கல்) சூளைக்கு நெருப்பு வை. (அச் செங்கற்களைக் கொண்டு வானளாவ) மாளிகையை நீ கட்டு. (அதில் ஏறி) மூஸாவினுடைய இறைவனை நான் பார்க்க வேண்டும். (அவர் தனக்கு வேறு இறைவன் இருப்பதாகக் கூறுகிறாரே!) இவ் விஷயத்தில் நிச்சயமாக அவர் பொய் சொல்வதாகவே நான் எண்ணுகிறேன்" என்று கூறினான்.

Tafseer

وَٱسْتَكْبَرَ
பெருமையடித்தனர்
هُوَ
அவனும்
وَجُنُودُهُۥ
அவனுடைய ராணுவங்களும்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
بِغَيْرِ ٱلْحَقِّ
நியாயமின்றி
وَظَنُّوٓا۟
இன்னும் நினைத்தனர்
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
إِلَيْنَا
நம்மிடம்
لَا يُرْجَعُونَ
திரும்பக் கொண்டு வரப்பட மாட்டார்கள்

Wastakbara huwa wa junooduhoo fil ardi bighairil haqqi wa zannooo annahum ilainaa laa yurja'oon

அவனும் அவனுடைய இராணுவங்களும் நியாயமின்றிப் பூமியில் பெருமை அடித்துக்கொண்டு நிச்சயமாக அவர்கள் நம்மிடம் (விசாரணைக்காக) கொண்டு வரப்பட மாட்டார்கள் என்றும் எண்ணிக்கொண்டார்கள்.

Tafseer

فَأَخَذْنَٰهُ
ஆகவே, அவனை(யும்) ஒன்றிணைத்தோம்
وَجُنُودَهُۥ
அவனுடைய ராணுவங்களையும்
فَنَبَذْنَٰهُمْ
அவர்களை நாம் எறிந்தோம்
فِى ٱلْيَمِّۖ
கடலில்
فَٱنظُرْ
ஆக, பார்ப்பீராக!
كَيْفَ
எப்படி
كَانَ
இருந்தது
عَٰقِبَةُ
முடிவு
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களின்

Fa akhaznaahu wa junoo dahoo fanabaznaahum fil yammi fanzur kaifa kaana 'aaqibatuz zaalimeen

ஆதலால், நாம் அவனையும் அவனுடைய இராணுவங்களையும் பிடித்து அவர்களை கடலில் எறிந்து (மூழ்கடித்து) விட்டோம். (நபியே!) இவ்வக்கிரமக்காரர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை நீங்கள் கவனியுங்கள்.

Tafseer