Skip to main content

وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
لَهُمُ
அவர்களுக்கு
ٱتَّبِعُوا۟
பின்பற்றுங்கள்
مَآ أَنزَلَ
இறக்கியதை
ٱللَّهُ
அல்லாஹ்
قَالُوا۟
கூறுகின்றனர்
بَلْ
மாறாக
نَتَّبِعُ
பின்பற்றுவோம்
مَا وَجَدْنَا
எதை/கண்டோமோ
عَلَيْهِ
அதன் மீது
ءَابَآءَنَآۚ
எங்கள் மூதாதைகளை
أَوَلَوْ كَانَ
இருந்தாலுமா?
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
يَدْعُوهُمْ
அவர்களை அழைப்பவனாக
إِلَىٰ عَذَابِ
வேதனையின் பக்கம்
ٱلسَّعِيرِ
கொழுந்துவிட்டெரியும் நரகம்

Wa izaa qeela lahumut-tabi'oo maaa anzalal laahu qaaloo bal nattabi'u maa wajadnaa 'alaihi aabaaa'anaa; awalaw kaanash Shaitaanu yad'oohum ilaa 'azaabis sa'eer

அவர்களை நோக்கி "அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்" எனக் கூறினால், அதற்கு அவர்கள் "அன்று, எங்கள் மூதாதைகள் எதன்மீது இருக்க நாங்கள் கண்டோமோ அதனையே பின்பற்றுவோம்" என்று கூறுகின்றனர். (என்னே!) அவர்கள் மூதாதைகளை ஷைத்தான் நரக வேதனையின் பக்கம் அழைத்து (அவர்களும் சென்று) இருந்தாலுமா? (இவர்கள் அவர்களைப் பின்பற்றிச் செல்வார்கள்!)

Tafseer

وَمَن
எவர்
يُسْلِمْ
பணியவைப்பாரோ
وَجْهَهُۥٓ
தன் முகத்தை
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்
وَهُوَ
அவரோ
مُحْسِنٌ
நல்லறம் புரிகின்றவராக
فَقَدِ
திட்டமாக
ٱسْتَمْسَكَ
அவர் பற்றிப்பிடித்தார்
بِٱلْعُرْوَةِ
வளையத்தை
ٱلْوُثْقَىٰۗ
மிக உறுதியான
وَإِلَى
பக்கம்தான்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
عَٰقِبَةُ
முடிவு இருக்கின்றது
ٱلْأُمُورِ
எல்லா காரியங்களின்

Wa many yuslim wajha hooo ilal laahi wa huwa muhsinun faqadistamsaka bil'ur watil wusqaa; wa ilal laahi 'aaqibatul umoor

எவர் தன்னுடைய முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கம் திருப்பி நன்மையும் செய்து கொண்டிருக்கிறாரோ அவர் நிச்சயமாக (அறுபடாத) மிக்க பலமானதொரு கயிற்றைப் பிடித்துக் கொண்டார். எல்லா காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கின்றது.

Tafseer

وَمَن
எவர்(கள்)
كَفَرَ
நிராகரிப்பாரோ
فَلَا يَحْزُنكَ
உம்மை கவலைப்படுத்த வேண்டாம்
كُفْرُهُۥٓۚ
அவருடைய நிராகரிப்பு
إِلَيْنَا
நம் பக்கம்தான்
مَرْجِعُهُمْ
அவர்களின் மீளுமிடம்
فَنُنَبِّئُهُم
அவர்களுக்கு நாம் அறிவிப்போம்
بِمَا عَمِلُوٓا۟ۚ
அவர்கள் செய்தவற்றை
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
بِذَاتِ
உள்ளவற்றை
ٱلصُّدُورِ
நெஞ்சங்களில்

Wa man kafara falaa yahzunka kufruh; ilainaa marji'uhum fanunabbi'uhum bimaa 'amiloo; innal laaha 'aleemum bizaatis sudoor

(நபியே!) எவரேனும் உங்களை நிராகரித்து விட்டால், அவர்களுடைய நிராகரிப்பு உங்களைத் துக்கத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். அவர்கள் நம்மிடமே வரவேண்டியது இருக்கின்றது. அச்சமயம் அவர்களுடைய (இச்) செயலைப் பற்றி நாம் அவர்களுக்கு அறிவுறுத்துவோம். நிச்சயமாக அல்லாஹ் (மனிதர்களின்) உள்ளங்களில் உள்ளவைகளை நன்கறிந்தவனாக இருக்கிறான்.

Tafseer

نُمَتِّعُهُمْ
அவர்களுக்கு நாம் சுகமளிப்போம்
قَلِيلًا
கொஞ்சம்
ثُمَّ
பிறகு
نَضْطَرُّهُمْ
நிர்ப்பந்தமாக கொண்டு வருவோம் அவர்களை
إِلَىٰ
பக்கம்
عَذَابٍ
வேதனையின்
غَلِيظٍ
கடுமையான

Numatti'uhum qaleelan summa nadtarruhum ilaa 'azaabin ghaleez

அவர்களை (இச்சமயம்) சிறிது சுகமனுபவிக்கும்படி நாம் விட்டு வைப்போம். பின்னரோ கடுமையான வேதனையின் பக்கம் (செல்லும்படி) நாம் அவர்களை நிர்ப்பந்தித்து விடுவோம்.

Tafseer

وَلَئِن
سَأَلْتَهُم
அவர்களிடம் நீர் கேட்டால்
مَّنْ
எவன்
خَلَقَ
படைத்தான்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
وَٱلْأَرْضَ
பூமியையும்
لَيَقُولُنَّ
நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்
ٱللَّهُۚ
அல்லாஹ்தான்
قُلِ
கூறுவீராக!
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
لِلَّهِۚ
அல்லாஹ்விற்கே!
بَلْ
மாறாக
أَكْثَرُهُمْ
அதிகமானோர் அவர்களில்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Wa la'in sa altahum man khalaqas samaawaati wal arda la yaqoolunnal laah; qulil hamdu lillaah; bal aksaruhum laa ya'lamoon

(நபியே!) "வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்?" என்று நீங்கள் அவர்களைக் கேட்பீராயின், அதற்கவர்கள் "அல்லாஹ்தான்" என்று நிச்சயமாகக் கூறுவார்கள். (அதற்கு நீங்கள் "இவ்வளவேனும் உங்களுக்கு அறிவு இருப்பது பற்றி) அல்லாஹ்வை நான் புகழ்கிறேன்" என்று கூறுங்கள். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இறைவனை இவ்வாறு புகழ்ந்து துதி செய்ய) அறிய மாட்டார்கள்.

Tafseer

لِلَّهِ
அல்லாஹ்விற்கே
مَا فِى
வானங்களில் உள்ளவை(யும்)
وَٱلْأَرْضِۚ
இன்னும் பூமியில்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ هُوَ
அல்லாஹ்தான்
ٱلْغَنِىُّ
முற்றிலும் நிறைவானவன்
ٱلْحَمِيدُ
மிகுந்த புகழாளன்

Lilaahi ma fis samaa waati wal ard; innal laaha Huwal Ghaniyyul Hameed

வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே. எனினும், நிச்சயமாக அல்லாஹ் (இவற்றின்) தேவையற்றவனும் மிகப் புகழுடையவனாகவும் இருக்கிறான்.

Tafseer

وَلَوْ
இருந்தால்/நிச்சயமாக
أَنَّمَا فِى
இருந்தால்/நிச்சயமாக பூமியில் உள்ளவை
مِن شَجَرَةٍ
மரங்கள்
أَقْلَٰمٌ
எழுது கோல்களாக
وَٱلْبَحْرُ
இன்னும் கடல்
يَمُدُّهُۥ
அதற்கு மையாக மாறினால்
مِنۢ بَعْدِهِۦ
அதற்குப் பின்னர்
سَبْعَةُ
ஏழு
أَبْحُرٍ
கடல்களும்
مَّا نَفِدَتْ
தீர்ந்துவிடாது
كَلِمَٰتُ
ஞானங்கள்
ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
عَزِيزٌ
மிகைத்தவன்
حَكِيمٌ
மகா ஞானவான்

Wa law annamaa fil ardi min shajaratin aqlaamunw wal bahru yamudduhoo mim ba'dihee sab'atu abhurim maa nafidat Kalimaatul laah; innal laaha 'azeezun Hakeem

பூமியிலுள்ள மரங்கள் (செடிகள்) அனைத்தும் எழுது கோல்களாகவும், கடல் நீரை மையாகவும் வைத்து (அது தீர்ந்து) பின்னும் ஏழு கடல் நீரையும் மையாக வைத்து எழுதியபோதிலும் அல்லாஹ்வுடைய வசனங்கள் (எழுதி) முடிவு பெறாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான்.

Tafseer

مَّا خَلْقُكُمْ
இல்லை/உங்களைப் படைப்பது
وَلَا بَعْثُكُمْ
இன்னும் உங்களை எழுப்புவதும்
إِلَّا كَنَفْسٍ
ஆன்மாவை போன்றே தவிர
وَٰحِدَةٍۗ
ஒரே ஓர்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
سَمِيعٌۢ
நன்கு செவியுறுபவன்
بَصِيرٌ
உற்று நோக்குபவன்

Maa khalqukum wa laa ba'sukum illaa kanafsinw-waa hidah; innal laaha Samee'um Baseer

மனிதர்களே! (ஆரம்பத்தில்) உங்களை படைப்பதும், (மரணித்த பின்) உங்களுக்கு உயிர்கொடுத்து எழுப்புவதும் அவனுக்கு உங்களில் ஒருவரை (ஆரம்பத்தில்) படை(த்து உயிர் கொடு)ப்பது போலவேயன்றி வேறில்லை. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

أَلَمْ تَرَ
நீர் கவனிக்கவில்லையா?
أَنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يُولِجُ
நுழைக்கின்றான்
ٱلَّيْلَ
இரவை
فِى ٱلنَّهَارِ
பகலில்
وَيُولِجُ
இன்னும் நுழைக்கின்றான்
ٱلنَّهَارَ
பகலை
فِى ٱلَّيْلِ
இரவில்
وَسَخَّرَ
இன்னும் வசப்படுத்தினான்
ٱلشَّمْسَ
சூரியனை(யும்)
وَٱلْقَمَرَ
சந்திரனையும்
كُلٌّ
எல்லாம்
يَجْرِىٓ
ஓடுகின்றன
إِلَىٰٓ أَجَلٍ
தவணையின் பக்கம்
مُّسَمًّى
ஒரு குறிப்பிட்ட
وَأَنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை
خَبِيرٌ
ஆழ்ந்தறிபவன்

Alam tara annal laaha yoolijul laila fin nahaari wa yoolijun nahaara fil laili wa sakhkharash shamsa wal qamara kulluny yajreee ilaaa ajalim musammanw wa annal laaha bimaa ta'malona Khabeer

(நபியே!) அல்லாஹ்தான் இரவைப் பகலிலும் பகலை இரவிலும் நுழைய வைத்து சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்திற்குள்) அடக்கி வைத்திருக்கின்றான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? இவைகளில் ஒவ்வொன்றும் (அவைகளுக்கு அவன்) குறிப்பிட்ட திட்டப்படியே நடக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கிறான்.

Tafseer

ذَٰلِكَ
அது
بِأَنَّ
காரணத்தால்/ நிச்சயமாக
ٱللَّهَ هُوَ
அல்லாஹ்தான்
ٱلْحَقُّ
உண்மையானவன்
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
مَا يَدْعُونَ
அவர்கள் அழைக்கின்றவை
مِن دُونِهِ
அவனையன்றி
ٱلْبَٰطِلُ
பொய்யானவை
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
ٱللَّهَ هُوَ
அல்லாஹ்தான்
ٱلْعَلِىُّ
மிக உயர்ந்தவன்
ٱلْكَبِيرُ
மிகப் பெரியவன்

Zaalika bi annal laaha Huwal Haqqu wa anna maa yad'oona min doonihil baatilu wa annal laaha Huwal 'Aliyyul Kabeer

இவையனைத்தும் "நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையான இறைவன் என்பதற்கும், அவனையன்றி அவர்கள் (தெய்வங்களென) அழைப்பவை பொய்யானவை என்பதற்கும், அல்லாஹ்தான் மிகப் பெரியவனும் மேலானவனும் ஆவான்" என்பதற்கும் அத்தாட்சி களாக இருக்கின்றன.

Tafseer