Skip to main content

هَٰذَا
இவை
خَلْقُ
படைப்புகளாகும்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
فَأَرُونِى
ஆகவே எனக்கு நீங்கள் காண்பியுங்கள்
مَاذَا
எதை?
خَلَقَ
படைத்தன
ٱلَّذِينَ مِن
அவனை அன்றி உள்ளவர்கள்
بَلِ
மாறாக
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
فِى ضَلَٰلٍ
வழிகேட்டில்தான்
مُّبِينٍ
தெளிவான

Haazaa khalqul laahi fa aroonee maazaa khalaqal lazeena min doonih; baliz zaalimoona fee dalalim Mubeen

(ஆகவே, நபியே! நீங்கள் அவர்களை நோக்கிக் கூறுங்கள்:) "இவை அனைத்தும் அல்லாஹ் படைத்தவைகளாகும். அவனை யன்றி (நீங்கள் தெய்வங்கள் என்று கூறும்) அவைகள் எதனை படைத்திருக்கின்றன என்பதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள். அவ்வாறு (ஒன்றும்) இல்லை. (அல்லாஹ்வை அன்றி மற்றவர்களை வணங்கும்) இந்த அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில் தான் இருக்கின்றனர்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
ءَاتَيْنَا
நாம் வழங்கினோம்
لُقْمَٰنَ
லுக்மானுக்கு
ٱلْحِكْمَةَ
ஞானத்தை
أَنِ ٱشْكُرْ
அதாவது நீர் நன்றி செலுத்துவீராக!
لِلَّهِۚ
அல்லாஹ்விற்கு
وَمَن
யார்
يَشْكُرْ
நன்றி செலுத்துவாரோ
فَإِنَّمَا يَشْكُرُ
அவர் நன்றி செலுத்துவதெல்லாம்
لِنَفْسِهِۦۖ
தன் நன்மைக்காகத்தான்
وَمَن كَفَرَ
எவர்/நிராகரிப்பாரோ
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
غَنِىٌّ
நிறைவானவன்
حَمِيدٌ
மிகுந்த புகழாளன்

Wa laqad aatainaa Luqmaanal hikmata anishkur lillaah; wa many yashkur fa innamaa yashkuru linafsihee wa man kafara fa innal laaha Ghaniyyun Hameed

லுக்மானுக்கு நாம் ஞானத்தைக் கொடுத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும்படி கூறினோம். ஏனென்றால், எவர் நன்றி செலுத்துகிறாரோ அவர் தன் நன்மைக்காகவே நன்றி செலுத்துகிறார். எவன் (அதனை) நிராகரிக்கிறானோ (அவன் தனக்கு தீங்கு தேடிக் கொள்கிறான். அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டமில்லை. ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவனும் புகழுடைய வனாகவும் இருக்கிறான்.

Tafseer

وَإِذْ قَالَ
கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக!
لُقْمَٰنُ
லுக்மான்
لِٱبْنِهِۦ
தனது மகனுக்கு
وَهُوَ
அவர்
يَعِظُهُۥ
அவருக்கு உபதேசித்தவராக
يَٰبُنَىَّ
என் மகனே!
لَا تُشْرِكْ
இணை வைக்காதே!
بِٱللَّهِۖ
அல்லாஹ்விற்கு
إِنَّ
நிச்சயமாக
ٱلشِّرْكَ
இணைவைத்தல்
لَظُلْمٌ
அநியாயமாகும்
عَظِيمٌ
மிகப் பெரிய

Wa iz qaala luqmaanu libnihee wa huwa ya'izuhoo ya bunaiya laa tushrik billaah; innash shirka lazulmun 'azeem

லுக்மான் தனது மகனுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதிய சமயத்தில் அவரை நோக்கி "என் அருமை மைந்தனே! நீ அல்லாஹ்வுக்கு (ஒன்றையுமே) இணையாக்காதே! ஏனென்றால், இணைவைப்பது நிச்சயமாக மிகப்பெரும் அநியாயமாகும்" என்று கூறினார்.

Tafseer

وَوَصَّيْنَا
இன்னும் நாம் உபதேசித்தோம்
ٱلْإِنسَٰنَ
மனிதனுக்கு
بِوَٰلِدَيْهِ
அவனது பெற்றோருடன் நல்லுறவு பேணும்படி
حَمَلَتْهُ
அவனை சுமந்தாள்
أُمُّهُۥ
அவனது தாய்
وَهْنًا
பலவீனத்துடன்
عَلَىٰ وَهْنٍ
பலவீனத்துக்கு மேல்
وَفِصَٰلُهُۥ
அவனுக்கு பால்குடி மறக்கவைப்பது
فِى عَامَيْنِ
இரண்டுஆண்டுகளில்
أَنِ ٱشْكُرْ
அதாவது நீ நன்றி செலுத்து
لِى
எனக்கு(ம்)
وَلِوَٰلِدَيْكَ
உன் பெற்றோருக்கும்
إِلَىَّ
என் பக்கம்தான்
ٱلْمَصِيرُ
மீளுதல் இருக்கிறது

Wa wassainal bi waalidaihi hamalat hu ummuhoo wahnan 'alaa wahninw wa fisaaluhoo fee 'aamaini anishkur lee wa liwaalidaika ilaiyal maseer

"தனது தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து(க் கர்ப்பத்தில்) அவனைச் சுமந்து கொண்டலைந்தாள். (பிறந்த) பிறகும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவனுக்குப் பால் மறக்கடித்தாள். ஆகவே, நீ எனக்கும் நன்றி செலுத்து; உன்னுடைய தாய் தந்தைக்கும் நன்றி செலுத்து. முடிவில் நீ நம்மிடமே வந்து சேர வேண்டியதிருக்கின்றது.

Tafseer

وَإِن جَٰهَدَاكَ
அவர்கள் உன்னை சிரமப்படுத்தினால்
عَلَىٰٓ أَن
நீ இணையாக்குவதற்கு
بِى
எனக்கு
مَا لَيْسَ
ஒன்றை/இல்லை
لَكَ
உனக்கு
بِهِۦ
அதற்கு
عِلْمٌ
அறிவு
فَلَا تُطِعْهُمَاۖ
அவ்விருவருக்கும் நீ கீழ்ப்படியாதே!
وَصَاحِبْهُمَا
இன்னும் அவ்விருவருடன் பழகுவாயாக!
فِى ٱلدُّنْيَا
உலகத்தில்
مَعْرُوفًاۖ
நல்லமுறையில்
وَٱتَّبِعْ
இன்னும் நீ பின்பற்று !
سَبِيلَ
பாதையை
مَنْ أَنَابَ
திரும்பியவர்களின்
إِلَىَّۚ ثُمَّ
என் பக்கம்/பிறகு
إِلَىَّ
என் பக்கம்தான்
مَرْجِعُكُمْ
உங்கள் மீளுமிடம்
فَأُنَبِّئُكُم
நான் உங்களுக்கு அறிவிப்பேன்
بِمَا كُنتُمْ
நீங்கள் செய்து கொண்டிருந்ததை

Wa in jaahadaaka 'alaaa an tushrika bee maa laisa laka bihee 'ilmun falaa tuti'humaa wa saahib humaa fid dunyaa ma'roofanw wattabi' sabeela man anaaba ilayy; summa ilaiya marji'ukum fa unabbi'ukum bimaa kuntum ta'maloon

எனினும், (இறைவன் என்று) நீ அறிந்துகொள்ளாத யாதொரு பொருளை எனக்கு இணை வைக்கும்படி அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ் விஷயத்தில்) நீ அவர்களுக்கு வழிப்பட வேண்டாம். ஆயினும், இவ்வுலக விஷயத்தில் நீ அவர்களுக்கு (நீதமாக) உதவி செய்து (அன்பாக) நேசித்துவா. எவ்விஷயத்திலும் என்னையே நோக்கி நிற்பவர்களின் வழியை நீ பின்பற்றி நட. பின்னர், நீங்கள் அனைவரும் நம்மிடமே வரவேண்டிய திருக்கின்றது. நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி அச்சமயம் நான் உங்களுக்கு அறிவுறுத்துவேன்" (என்று கூறினோம்).

Tafseer

يَٰبُنَىَّ
என் மகனே!
إِنَّهَآ
நிச்சயமாக அது
إِن تَكُ
இருந்தாலும்
مِثْقَالَ
அளவு
حَبَّةٍ
விதை
مِّنْ خَرْدَلٍ
எள்ளின்
فَتَكُن
அது இருந்தாலும்
فِى صَخْرَةٍ
ஒரு பாறையில்
أَوْ
அல்லது
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
أَوْ
அல்லது
فِى ٱلْأَرْضِ
பூமியில்
يَأْتِ
கொண்டு வருவான்
بِهَا
அதை
ٱللَّهُۚ
அல்லாஹ்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَطِيفٌ
மிக நுட்பமானவன்
خَبِيرٌ
ஆழ்ந்தறிபவன்

Ya bunaiya innahaaa in taku misqaala habbatim min khardalin fatakun fee sakhratin aw fis samaawaati aw fil ardi yaati bihal laa; innal laaha lateefun Khabeer

(பின்னும் லுக்மான் தனது மகனை நோக்கி) "என் அருமை மகனே! (நன்மையோ தீமையோ) அது ஒரு கடுகின் விதை அளவில் இருந்தாலும் சரி, அது (கரும்) பாறைகளுக்குள்ளோ அல்லது வானத்திலோ, பூமியின் ஆழத்திலோ (மறைந்து) இருந்தபோதிலும் (உங்களிடம் கணக்குக் கேட்கும்போது) நிச்சயமாக அல்லாஹ் அதையும் கொண்டு வந்து விடுவான். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வெகு நுட்பமான அறிவுடையவனும் (அனைத்தையும்) நன்கு தெரிந்து வைத்திருப்பவனாகவும் இருக்கிறான்.

Tafseer

يَٰبُنَىَّ
என் மகனே!
أَقِمِ
நிலைநிறுத்து!
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَأْمُرْ
இன்னும் ஏவு!
بِٱلْمَعْرُوفِ
நன்மையை
وَٱنْهَ
இன்னும் தடு!
عَنِ ٱلْمُنكَرِ
தீமையை விட்டும்
وَٱصْبِرْ
இன்னும் பொறுமையாக இரு!
عَلَىٰ مَآ
உனக்கு ஏற்பட்டதன் மீது
إِنَّ ذَٰلِكَ
நிச்சயமாக இவைதான்
مِنْ عَزْمِ
உறுதிமிக்க காரியங்களில்

Yaa bunaiya aqimis-Salaata waamur bilma'roofi wanha 'anil munkari wasbir 'alaa maaa asaabaka inna zaalika min 'azmil umoor

என்னருமை மகனே! "தொழுகையைக் கடைப்பிடித்தொழுகு, நன்மையான காரியங்களைக் கொண்டு ஏவி, பாவமான காரியங்களில் இருந்து (மனிதர்களை) விலக்கி வா. உனக்கேற்படும் கஷ்டங்களைப் பொறுமையுடன் நீ சகித்துக்கொள். நிச்சயமாக இது எல்லா காரியங்களிலும் வீரமிக்கச் செயலாகும்.

Tafseer

وَلَا تُصَعِّرْ
திருப்பிக்கொள்ளாதே!
خَدَّكَ
உனது கன்னத்தை
لِلنَّاسِ
மக்களை விட்டு
وَلَا تَمْشِ
இன்னும் நடக்காதே
فِى ٱلْأَرْضِ
பூமியில்
مَرَحًاۖ
பெருமை பிடித்தவனாக
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَا يُحِبُّ
விரும்ப மாட்டான்
كُلَّ
அனைவரையும்
مُخْتَالٍ
கர்வமுடையவர்(கள்)
فَخُورٍ
தற்பெருமை பேசுபவர்(கள்)

Wa laa tusa'-'ir khaddaka linnaasi wa laa tamshi fil ardi maarahan innal laaha laa yuhibbu kulla mukhtaalin fakhoor

(பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம்கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

Tafseer

وَٱقْصِدْ
இன்னும் பணிவாக இரு!
فِى مَشْيِكَ
உனது நடையில்
وَٱغْضُضْ
இன்னும் தாழ்த்திக்கொள்!
مِن صَوْتِكَۚ
உனது சப்தத்தை
إِنَّ
நிச்சயமாக
أَنكَرَ
மிக மிக அருவருப்பானது
ٱلْأَصْوَٰتِ
சப்தங்களில்
لَصَوْتُ
சப்தமாகும்
ٱلْحَمِيرِ
கழுதைகளின்

Waqsid fee mashyika waghdud min sawtik; inna ankaral aswaati lasawtul hameer

உன் நடையில் (பெருமையும் கர்வமுமின்றி) மத்திய தரத்தை விரும்பு. உன் சப்தத்தையும் தாழ்த்திக்கொள். ஏனென்றால், சப்தங்களிலெல்லாம் மிக்க வெறுக்கத்தக்கது கழுதையின் (உரத்த) சப்தமே!" (என்று கூறினார்கள்).

Tafseer

أَلَمْ تَرَوْا۟
நீங்கள் பார்க்கவில்லையா?
أَنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
سَخَّرَ
வசப்படுத்தினான்
لَكُم
உங்களுக்கு
مَّا فِى
வானங்களில் உள்ளவற்றை(யும்)
وَمَا فِى
பூமியில் உள்ளவற்றையும்
وَأَسْبَغَ
இன்னும் நிறைவாக்கினான்
عَلَيْكُمْ
உங்கள் மீது
نِعَمَهُۥ
தனது அருட்கொடைகளை
ظَٰهِرَةً
வெளிப்படையாக(வும்)
وَبَاطِنَةًۗ
மறைவாகவும்
وَمِنَ ٱلنَّاسِ
மக்களில் இருக்கின்றனர்
مَن يُجَٰدِلُ
தர்க்கம் செய்கின்றவரும்
فِى ٱللَّهِ
அல்லாஹ்வின் விஷயத்தில்
بِغَيْرِ عِلْمٍ
கல்வி இன்றி(யும்)
وَلَا هُدًى
நேர்வழி இன்றியும்
وَلَا كِتَٰبٍ
வேதமின்றியும்
مُّنِيرٍ
பிரகாசமான

Alam taraw annal laaha sakhkhara lakum maa fis sa maawaati wa maa fil ardi wa asbaha 'alaikum ni'amahoo zaahiratanw wa baatinah; wa minan naasi many yujaadilu fil laahi bighayri 'ilminw wa laa hudanw wa laa Kitaabim muneer

(மனிதர்களே!) வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகளை நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான் என்பதையும், அவன் தன் அருட்கொடைகளை மறைவாகவும் வெளிப்படையாகவும் உங்கள் மீது சொரிந்திருக்கின்றான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? (இவ்வாறெல்லாமிருந்தும்) மனிதர்களில் பலர் யாதொரு கல்வியும், யாதொரு (தர்க்கரீதியான) ஆதாரமும், யாதொரு தெளிவான வேத நூலின் ஆதாரமுமின்றி அல்லாஹ்வைப் பற்றி (வீணாகத்) தர்க்கிக்கின்றனர்.

Tafseer