Skip to main content

وَإِلَىٰ ثَمُودَ
இன்னும் இடம்/ஸமூது
أَخَاهُمْ
சகோதரர்/அவர்களுடைய
صَٰلِحًاۚ
ஸாலிஹை
قَالَ
கூறினார்
يَٰقَوْمِ
என் மக்களே
ٱعْبُدُوا۟
வணங்குங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்
مَا لَكُم
உங்களுக்கில்லை
مِّنْ
அறவே
إِلَٰهٍ
வணக்கத்திற்குரியவன்
غَيْرُهُۥۖ
அவனையன்றி
هُوَ
அவனே
أَنشَأَكُم
உருவாக்கினான் உங்களை
مِّنَ ٱلْأَرْضِ
பூமியிலிருந்து
وَٱسْتَعْمَرَكُمْ فِيهَا
வசிக்க வைத்தான் உங்களை/அதில்
فَٱسْتَغْفِرُوهُ
ஆகவே, மன்னிப்புக் கோருங்கள் அவனிடம்
ثُمَّ
பிறகு
تُوبُوٓا۟
திருந்தி திரும்புங்கள்
إِلَيْهِۚ
அவன் பக்கம்
إِنَّ
நிச்சயமாக
رَبِّى
என் இறைவன்
قَرِيبٌ
மிகச் சமீபமானவன்
مُّجِيبٌ
பதிலளிப்பவன்

Wa ilaa Samooda akhaahum Saalihaa; qaala yaa qawmi' budul laaha maa lakum min ilaahim ghairuhoo Huwa ansha akum minal ardi wasta' marakum feehaa fastaghfiroohu summa toobooo ilaih; inna Rabbee Qareebum Mujeeb

"ஸமூது" (என்னும் மக்)களிடம் அவர்களுடைய சகோதரர் "ஸாலிஹை" (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம். அவர் அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; உங்களுக்கு அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து படைத்தான். அதிலேயே அவன் உங்களை வசிக்கவும் செய்தான். ஆதலால், நீங்கள் அவனிடமே மன்னிப்பைக் கோரி அவன் பக்கமே திரும்புங்கள். நிச்சயமாக என்னுடைய இறைவன் (உங்களுக்கு) மிகச் சமீபமானவனாகவும் (பிரார்த்தனைகளை) அங்கீகரிப்பவனாகவும் இருக்கின்றான்" என்று கூறினார்.

Tafseer

قَالُوا۟
கூறினர்
يَٰصَٰلِحُ
ஸாலிஹே
قَدْ كُنتَ
திட்டமாகநீர்இருந்தீர்
فِينَا
எங்களில்
مَرْجُوًّا
ஆதரவுக்குரியவராக
قَبْلَ
முன்பு
هَٰذَآۖ أَتَنْهَىٰنَآ
இது/நீர் தடுக்கிறீரா?/எங்களை
أَن نَّعْبُدَ
நாங்கள் வணங்குவதை விட்டு
مَا يَعْبُدُ
எதை வணங்குவார்
ءَابَآؤُنَا
மூதாதைகள்/எங்கள்
وَإِنَّنَا
நிச்சயமாக நாங்கள்
لَفِى شَكٍّ
சந்தேகத்தில்
مِّمَّا
இருந்து/எவை
تَدْعُونَآ
அழைக்கிறீர் எங்களை
إِلَيْهِ
எதன் பக்கம்
مُرِيبٍ
மிக ஆழமான சந்தேகம்

Qaaloo yaa Saalihu qad kunta feenaa marjuwwan qabla haazaaa atanhaanaaa an na'bu da maa ya'budu aabaaa'unaa wa innanaa lafee shakkim mimmaa tad'oonaaa ilaihi mureeb

அதற்கவர்கள் (ஸாலிஹ் நபியை நோக்கி) "ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம், நீங்கள் எங்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமுடையவராக இருந்தீர்கள். எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களை நாங்கள் வணங்கக்கூடாதென்று நீங்கள் எங்களைத் தடை செய்கிறீர்களா? நீங்கள் எங்களை எதனளவில் அழைக்கிறீர்களோ அதனைப் பற்றி நிச்சயமாக நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்" என்று கூறினர்.

Tafseer

قَالَ
கூறினார்
يَٰقَوْمِ
என் மக்களே
أَرَءَيْتُمْ
அறிவியுங்கள்
إِن كُنتُ
நான் இருந்தால்
عَلَىٰ بَيِّنَةٍ
ஒரு தெளிவான அத்தாட்சியில்
مِّن
இருந்து
رَّبِّى
என் இறைவன்
وَءَاتَىٰنِى
இன்னும் தந்தான்/எனக்கு
مِنْهُ
தன்னிடமிருந்து
رَحْمَةً
அருளை
فَمَن
யார்?
يَنصُرُنِى
உதவுவார்/எனக்கு
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடத்தில்
إِنْ عَصَيْتُهُۥۖ
நான் மாறு செய்தால்/அவனுக்கு
فَمَا تَزِيدُونَنِى
அதிகமாக்க மாட்டீர்கள்/எனக்கு
غَيْرَ تَخْسِيرٍ
அன்றி/நஷ்டம் ஏற்படுத்துவது

Qaala yaa qawmi ara'aytum in kuntu 'alaa baiyinatim mir Rabbee wa aataanee minhu rahmatan famai yansurunee minal laahi in 'asaituhoo famaa tazeedoonanee ghaira takhseer

அதற்கவர் "என்னுடைய மக்களே! நான் என் இறைவனின் நேரான வழியில் இருந்துகொண்டும், அவன் என்மீது (மகத்தான) அருள் புரிந்துகொண்டும் இருக்கும் நிலைமையில் நான் அவனுக்கு மாறு செய்தால் (அவன் என்னைத் தண்டிக்க மாட்டானா? அந்நேரத்தில்) அல்லாஹ்விடத்தில் எனக்கு உதவி செய்பவர் யார்? என்பதை நீங்கள் கவனித்தீர்களா? நீங்களோ எனக்கு நஷ்டத்தை யன்றி (யாதொன்றையும்) அதிகமாக்கி விடமாட்டீர்கள்" என்று கூறினார்.

Tafseer

وَيَٰقَوْمِ
என் மக்களே
هَٰذِهِۦ
இது
نَاقَةُ
பெண் ஒட்டகம்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
لَكُمْ
உங்களுக்கு
ءَايَةً
அத்தாட்சியான
فَذَرُوهَا
ஆகவே, விட்டு விடுங்கள்/அதை
تَأْكُلْ
அது சாப்பி(டட்)டும்
فِىٓ أَرْضِ
பூமியில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَلَا تَمَسُّوهَا
அதற்கு செய்யாதீர்கள்
بِسُوٓءٍ
ஒரு கெடுதியையும்
فَيَأْخُذَكُمْ
பிடிக்கும்/உங்களை
عَذَابٌ
ஒரு வேதனை
قَرِيبٌ
அதிசீக்கிரமானது

Wa yaa qawmi haazihee naaqatul laahi lakum aayatan fazaroohaa taakul feee ardil laahi wa laa tamassoohaa bisooo'in fa yaakhuzakum azaabun qareeb

அன்றி, "என்னுடைய மக்களே! இது அல்லாஹ்வினுடைய ஒரு பெண் ஒட்டகமாகும். உங்களுக்கு இது ஓர் அத்தாட்சியாகவே அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அல்லாஹ்வினுடைய பூமியில் (அது விரும்பிய இடத்தில்) மேய அதனை விட்டுவிடுங்கள்; அதற்கு யாதொரு கெடுதலும் செய்ய(க் கருதி) அதனைத் தொடாதீர்கள். அவ்வாறு செய்தால் அதிசீக்கிரத்தில் வேதனை உங்களைப் பிடித்துக்கொள்ளும்" (என்று சொன்னார்.)

Tafseer

فَعَقَرُوهَا
வெட்டினார்கள் அதை
فَقَالَ
ஆகவே, கூறினார்
تَمَتَّعُوا۟
சுகமாக இருங்கள்
فِى
இல்லத்தில்
دَارِكُمْ
உங்கள்
ثَلَٰثَةَ
மூன்று
أَيَّامٍۖ
நாள்கள்
ذَٰلِكَ
இது
وَعْدٌ
ஒரு வாக்கு
غَيْرُ مَكْذُوبٍ
னஜிலஸீறீ©பீலிறீஜிறிலஸி

Fa 'aqaroohaa faqaala tamatta'oo fee daarikum salaasata aiyaamin zaalika wa'dun ghairu makzoob

எனினும், அவர்கள் (அவருடைய கட்டளைக்கு மாறுசெய்து) அதனை வெட்டி விட்டார்கள். ஆகவே, அவர் (அவர்களை நோக்கி, "இனி) மூன்று நாள்கள் வரையில் உங்கள் வீடுகளில் (இருந்து கொண்டு) நீங்கள் சுகமடையலாம். (அதற்குப் பின்னர் அல்லாஹ்வுடைய வேதனை உங்களை வந்தடையும்) இது தவறாத வாக்காகும்" என்று கூறினார்.

Tafseer

فَلَمَّا
போது
جَآءَ
வந்தது
أَمْرُنَا
நம் கட்டளை
نَجَّيْنَا
பாதுகாத்தோம்
صَٰلِحًا
ஸாலிஹை
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
مَعَهُۥ
அவருடன்
بِرَحْمَةٍ مِّنَّا
நமது அருளைக் கொண்டு
وَمِنْ
இன்னும் இருந்து
خِزْىِ
இழிவு
يَوْمِئِذٍۗ
அந்நாளின்
إِنَّ
நிச்சயமாக
رَبَّكَ هُوَ
உம் இறைவன்தான்
ٱلْقَوِىُّ
பலமிக்கவன்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்

Falammaa jaaa'a amrunaa najjainaa Saalihanw wal lazeena aamanoo ma'ahoo birahmatim minnaa wa min khizyi Yawmi'iz inna Rabbaka Huwal Qawiyyul 'Azeez

(வேதனையைப் பற்றிய) நம்முடைய கட்டளை(யின்படி வேதனை) வந்தபொழுது ஸாலிஹையும், அவருடன் நம்பிக்கைக் கொண்டவர்களையும் (வேதனையிலிருந்தும்) அந்நாளின் இழிவில் இருந்தும் நம்முடைய அருளைக் கொண்டு நாம் பாதுகாத்துக் கொண்டோம். (நபியே!) நிச்சயமாக உங்களுடைய இறைவன் பலமிக்கவனும் (அனைத்தையும்) மிகைத்தவனாகவும் இருக்கிறான்.

Tafseer

وَأَخَذَ
இன்னும் பிடித்தது
ٱلَّذِينَ
எவர்கள்
ظَلَمُوا۟
அநீதியிழைத்தனர்
ٱلصَّيْحَةُ
இடி முழக்கம்
فَأَصْبَحُوا۟
ஆகவே, காலையில் ஆகிவிட்டனர்
فِى دِيَٰرِهِمْ
தங்கள் இல்லங்களில்
جَٰثِمِينَ
இறந்தவர்களாக

Wa akhazal lazeena zalamus saihatu fa asbahoo fee diyaarihim jaasimeena

ஆகவே, வரம்பு மீறியவர்களை இடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்து விட்டனர்.

Tafseer

كَأَن لَّمْ
போன்று அவர்கள் வசிக்கவில்லை
فِيهَآۗ أَلَآ
அவற்றில்/அறிந்து கொள்ளுங்கள்
إِنَّ
நிச்சயமாக
ثَمُودَا۟
ஸமூது
كَفَرُوا۟
நிராகரித்தனர்
رَبَّهُمْۗ
தங்கள் இறைவனை
أَلَا
அறிந்து கொள்ளுங்கள்
بُعْدًا
சாபம் உண்டாகட்டும்
لِّثَمُودَ
ஸமூதுக்கு

Ka al lam yaghnaw feehaaa; alaaa inna Samooda kafaroo Rabbahum; alaa bu'dal li Samood.

(அதற்கு முன்னர்) அங்கு அவர்கள் ஒரு காலத்திலும் வசித்திருக்காததைப் போல் (யாதொரு அடையாளமுமின்றி அழிந்து விட்டனர். நிச்சயமாக "ஸமூது" மக்கள் தங்கள் இறைவனை நிராகரித்து விட்டார்கள்; அந்த "ஸமூது" மக்கள் மீது சாபம் ஏற்பட்டு விட்டது, (என்பதை) அறிந்து கொள்ளுங்கள்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
جَآءَتْ
வந்தனர்
رُسُلُنَآ
நம் தூதர்கள்
إِبْرَٰهِيمَ
இப்றாஹீமிடம்
بِٱلْبُشْرَىٰ
நற்செய்தியைக் கொண்டு
قَالُوا۟
கூறினர்
سَلَٰمًاۖ
ஈடேற்றம் உண்டாகுக
قَالَ
கூறினார்
سَلَٰمٌۖ
ஈடேற்றம் உண்டாகுக
فَمَا لَبِثَ
அவர் தாமதிக்கவில்லை
أَن جَآءَ
வருவதற்கு
بِعِجْلٍ
ஒரு கன்றுக் குட்டியைக் கொண்டு
حَنِيذٍ
சுடப்பட்டது

Wa laqad jaaa'at Rusulunaaa Ibraaheema bilbushraa qaaloo salaaman qaala salaamun famaa labisa an jaaa'a bi'ijin haneez

நிச்சயமாக (மலக்குகளிலுள்ள) நம்முடைய தூதர்கள் இப்ராஹீமுக்கு நற்செய்தி கொண்டு வந்து "உங்களுக்கு ஈடேற்றம் உண்டாவதாகுக" என்று கூறினர். (இப்ராஹீம் அதற்குப் பிரதியாக "உங்களுக்கும்) ஈடேற்றம் உண்டாவதாகுக!" என்று கூறி சிறிதும் தாமதிக்காது (அறுத்துச்) சுட்டதொரு கன்றுக்குட்டியைக் கொண்டு வந்(து அவர்கள் முன் வைத்)தார்கள்.

Tafseer

فَلَمَّا رَءَآ
அவர் பார்த்தபோது
أَيْدِيَهُمْ
அவர்களுடைய கரங்களை
لَا تَصِلُ
சேராது
إِلَيْهِ
அதன் பக்கம்
نَكِرَهُمْ
சந்தேகித்தார் அவர்களைப் பற்றி
وَأَوْجَسَ
இன்னும் அவர் மறைத்தார்
مِنْهُمْ
அவர்களைப் பற்றி
خِيفَةًۚ
பயத்தை
قَالُوا۟
கூறினார்கள்
لَا تَخَفْ
பயப்படாதீர்
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
أُرْسِلْنَآ
அனுப்பப்பட்டோம்
إِلَىٰ قَوْمِ
மக்களின் பக்கம்
لُوطٍ
லூத்துடைய

Falammaa ra aaa aidiyahum laa tasilu ilaihi nakirahum wa awjasa minhum kheefah; qaaloo la takhaf innaaa ursilnaaa ilaa qawmi Loot

அவர்களுடைய கைகள் அதனிடம் செல்லாததைக் கண்டதும் அவர்களைப் பற்றி சந்தேகித்தார்; அவர்களைப் பற்றிய பயமும் அவர் மனதில் ஊசலாடியது. (அப்பொழுது) அவர்கள் (இப்ராஹீமை நோக்கி) "நீங்கள் பயப்படாதீர்கள். நிச்சயமாக நாங்கள் "லூத்"துடைய மக்களிடம் (அவர்களை அழித்துவிட) அனுப்பப் பட்டுள்ளோம்" என்று கூறினார்கள்.

Tafseer