Skip to main content
bismillah

الٓرۚ
அலிஃப்; லாம்; றா.
كِتَٰبٌ
ஒரு வேத நூல்
أُحْكِمَتْ
உறுதியாக்கப்பட்டன
ءَايَٰتُهُۥ
இதன் வசனங்கள்
ثُمَّ
பிறகு
فُصِّلَتْ
தெளிவாக்கப்பட்டன
مِن
இருந்து
لَّدُنْ
இடம், புறம்
حَكِيمٍ
மகா ஞானவான்
خَبِيرٍ
ஆழ்ந்தறிபவன்

Alif-Laaam-Raa; Kitaabun uhkimat Aayaatuhoo summa fussilat mil ladun Hakeemin Khabeer

அலிஃப்; லாம்; றா. (இது) வேத நூல். அனைத்தையும் நன்கறிந்த ஞானவானால் இதன் வசனங்கள் (பல அத்தாட்சிகளைக் கொண்டு) உறுதி செய்யப்பட்ட பின்னர் (தெளிவாக) விவரிக்கப் பட்டுள்ளன.

Tafseer

أَلَّا تَعْبُدُوٓا۟
வணங்காதீர்கள் என்று
إِلَّا ٱللَّهَۚ
அல்லாஹ்வைத் தவிர
إِنَّنِى
நிச்சயமாக நான்
لَكُم
உங்களுக்கு
مِّنْهُ
அவனிடமிருந்து
نَذِيرٌ
எச்சரிப்பாளன்
وَبَشِيرٌ
இன்னும் நற்செய்தியாளன்

Allaa ta'budooo illal laah; innanee lakum minhu nazeerunw wa basheer

(நபியே! மனிதர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்:) "நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறு யாரையும்) வணங்காதிருக்க (உங்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவுமே நிச்சயமாக நான் அவனால் உங்களிடம் அனுப்பப் பட்டுள்ளேன்.

Tafseer

وَأَنِ ٱسْتَغْفِرُوا۟
இன்னும் பாவமன்னிப்புக் கோருங்கள் என்று
رَبَّكُمْ
உங்கள் இறைவனிடம்
ثُمَّ تُوبُوٓا۟
பிறகு/திரும்புங்கள்
إِلَيْهِ
அவன் பக்கம்
يُمَتِّعْكُم
சுகமளிப்பான்/உங்களை
مَّتَٰعًا
ஒரு சுகம்
حَسَنًا
அழகியது
إِلَىٰٓ أَجَلٍ
வரை/ஒரு காலம்
مُّسَمًّى
குறிப்பிடப்பட்டது
وَيُؤْتِ
இன்னும் கொடுப்பான்
كُلَّ
ஒவ்வொரு
ذِى فَضْلٍ
அதிகமுடையவருக்கு
فَضْلَهُۥۖ
அதிகத்தை/அவருடைய
وَإِن تَوَلَّوْا۟
நீங்கள் புறக்கணித்தால்
فَإِنِّىٓ
நிச்சயமாக நான்
أَخَافُ
பயப்படுகிறேன்
عَلَيْكُمْ
உங்கள் மீது
عَذَابَ
வேதனையை
يَوْمٍ
ஒரு நாளின்
كَبِيرٍ
மாபெரும்

Wa anis taghfiroo Rabbakum summa toobooo ilaihi yumatti'kum mataa'an hasanan ilaaa ajalim musammanw wa yu'ti kulla zee fadlin fadlahoo wa in tawallaw fa inneee akhaafu 'alaikum 'azaaba Yawmin Kabeer

நீங்கள் உங்கள் இறைவனிடத்தில் பாவ மன்னிப்பைக் கோரி (பாவங்களை விட்டு) அவன் பக்கம் திரும்புங்கள். (அவ்வாறு செய்தால்) ஒரு குறிப்பிட்ட (நீண்ட) காலம் வரையில் உங்களை இன்பமடையச் செய்வான். (தன் கடமைக்கு) அதிகமாக நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) அதிகமாகவே கொடுப்பான். நீங்கள் (அவனைப்) புறக்கணித்தால் மாபெரும் நாளின் வேதனை நிச்சயமாக உங்களை அணுகுமென்று நான் பயப்படுகிறேன்.

Tafseer

إِلَى
பக்கமே
ٱللَّهِ
அல்லாஹ்வின்
مَرْجِعُكُمْۖ
உங்கள் மீளுமிடம்
وَهُوَ
அவன்
عَلَىٰ
மீது
كُلِّ شَىْءٍ
எல்லாப் பொருள்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Ilal laahi marji'ukum wa Huwa 'alaa kulli shai'in Qadeer

நீங்கள் அல்லாஹ்விடமே வரவேண்டியதிருக்கிறது. அவன் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்."

Tafseer

أَلَآ
அறிவீராக
إِنَّهُمْ
நிச்சயமாக இவர்கள்
يَثْنُونَ
திருப்புகின்றனர்
صُدُورَهُمْ
நெஞ்சங்களை/தங்கள்
لِيَسْتَخْفُوا۟
அவர்கள் மறைப்பதற்காக
مِنْهُۚ
அவனிடமிருந்து
أَلَا
அறிவீராக
حِينَ
நேரம், சமயம்
يَسْتَغْشُونَ
மறைத்துக் கொள்கிறார்கள்
ثِيَابَهُمْ
தங்கள் ஆடைகளால்
يَعْلَمُ
அறிகின்றான்
مَا يُسِرُّونَ
எதை/மறைக்கிறார்கள்
وَمَا يُعْلِنُونَۚ
இன்னும் எதை/பகிரங்கப்படுத்துகிறார்கள்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
عَلِيمٌۢ
நன்கறிபவன்
بِذَاتِ ٱلصُّدُورِ
நெஞ்சங்களில் உள்ளவற்றை

Alaa innahum yasnoona sudoorahum liyastakhfoo minh; alaa heena yastaghshoona siyaabahum ya'lamu maa yusiroona wa maa yu'linoon; innahoo 'aleemum bizaatis sudoor

(இந்தப் பாவிகள் தங்கள் தீய எண்ணங்களை) அல்லாஹ்வுக்கு மறைப்பதற்காக (அவற்றைத்) தங்கள் உள்ளங்களில் (வைத்து) மடித்து மறைக்கக் கருதுகின்றனர் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்து கொள்ளுங்கள். (நித்திரைக்குச் செல்லும்போது) அவர்கள் தங்கள் போர்வையைக் கொண்டு தங்களை மறைத்துக்கொள்ளும் சமயத்தில் (தங்கள் உள்ளங்களில்) அவர்கள் மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் அவன் அறிகிறான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ள (ரகசியங்கள்) அனைத்தையும் நன்கறிந்தவன்.

Tafseer

وَمَا
இல்லை
مِن دَآبَّةٍ
எந்த/ஓர் உயிரினம்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
إِلَّا
தவிர
عَلَى
மீது
ٱللَّهِ
அல்லாஹ்வின்
رِزْقُهَا
அதற்கு உணவளிப்பது
وَيَعْلَمُ
இன்னும் அறிகின்றான்
مُسْتَقَرَّهَا
அவற்றின் தங்குமிடத்தை
وَمُسْتَوْدَعَهَاۚ
இன்னும் அவற்றின் அடங்குமிடத்தை
كُلٌّ
எல்லாம்
فِى كِتَٰبٍ
பதிவேட்டில்
مُّبِينٍ
தெளிவான(து)

Wa maa min daaabbatin fil ardi illaa 'alal laahi rizquhaa wa ya'lamu mustaqarrahaa wa mustawda'ahaa; kullun fee Kitaabim Mubeen

உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத யாதொரு உயிரினமும் பூமியில் இல்லை. அவை (வாழ்ந்து) இருக்குமிடத்தையும், அவை (இறந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிந்தே இருக்கிறான். இவை அனைத்தும் (லவ்ஹுல் மஹ்பூல் என்னும்) தெளிவான (அவனுடைய) பதிவுப் புத்தகத்தில் பதிவாகி இருக்கின்றன.

Tafseer

وَهُوَ
அவன்
ٱلَّذِى
எத்தகையவன்
خَلَقَ
படைத்தான்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
وَٱلْأَرْضَ
இன்னும் பூமியை
فِى سِتَّةِ
இல்/ஆறு
أَيَّامٍ
நாள்கள்
وَكَانَ
இன்னும் இருந்தது
عَرْشُهُۥ
அவனுடைய அர்ஷு
عَلَى ٱلْمَآءِ
மீது/நீர்
لِيَبْلُوَكُمْ
அவன் உங்களை சோதிப்பதற்காக
أَيُّكُمْ
உங்களில் யார்
أَحْسَنُ
மிக அழகியவர்
عَمَلًاۗ
செயலால்
وَلَئِن قُلْتَ
நீர் கூறினால்
إِنَّكُم
நிச்சயமாக நீங்கள்
مَّبْعُوثُونَ
எழுப்பப்படுவீர்கள்
مِنۢ بَعْدِ
பின்னர்
ٱلْمَوْتِ
இறப்பு
لَيَقُولَنَّ
நிச்சயம் கூறுவார்(கள்)
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوٓا۟
நிராகரித்தார்கள்
إِنْ
இல்லை
هَٰذَآ
இது
إِلَّا
தவிர
سِحْرٌ
சூனியமே
مُّبِينٌ
பகிரங்கமான(து)

Wa Huwal lazee khalaqas samaawaati wal alrda fee sittati aiyaaminw wa kaana 'Arshuhoo alal maaa'i liyablu wakum aiyukum ahsanu 'amalaa; wa la'in qulta innakum mab'oosoona mim ba'dil mawti la yaqoolanal lazeena kafaroo in haazaaa illaa sihrum mubeen

அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். (அச்சமயம்) அவனுடைய "அர்ஷு" நீரின் மீதிருந்தது. உங்களில் நற்செயல்களைச் செய்பவர்கள் யார் என்று உங்களைப் பரிசோதிப்பதற்காக (உங்களையும், இவற்றையும் அவன் படைத்தான். நபியே! நீங்கள் மனிதர்களை நோக்கி) "நீங்கள் இறந்த பின்னர் நிச்சயமாக (உயிர்கொடுத்து) எழுப்பப்படுவீர்கள்" என்று கூறினால், அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள் "இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை" என்று கூறுகின்றனர்.

Tafseer

وَلَئِنْ
أَخَّرْنَا
நாம் பிற்படுத்தினால்
عَنْهُمُ
அவர்களை விட்டு
ٱلْعَذَابَ
வேதனையை
إِلَىٰٓ أُمَّةٍ
வரை/ஒரு காலம்
مَّعْدُودَةٍ
எண்ணப்பட்டது
لَّيَقُولُنَّ
நிச்சயம் கூறுவார்கள்
مَا
எது?
يَحْبِسُهُۥٓۗ
தடுக்கின்றது/அதை
أَلَا
அறிந்துகொள்ளுங்கள்!
يَوْمَ
நாளில்
يَأْتِيهِمْ
அது வரும்/அவர்களிடம்
لَيْسَ مَصْرُوفًا
அறவே திருப்பப்படாது
عَنْهُمْ
அவர்களை விட்டு
وَحَاقَ بِهِم
இன்னும் சூழும்/அவர்களை
مَّا
எது
كَانُوا۟
இருந்தனர்
بِهِۦ
அதை
يَسْتَهْزِءُونَ
பரிகாசம்செய்கின்றனர்

Wala'in akhkharnaa 'anhumul 'azaaba ilaaa ummatim ma'doodatil la yaqoolunna maa yahbisuh; alaa yawma yaateehim laisa masroofan 'anhum wa haaqa bihim maa kaanoo bihee yastahzi'oon

(நிராகரிப்பின் காரணமாக) அவர்களுக்கு (வரவேண்டிய) வேதனையை ஒரு சொற்ப காலம் நாம் பிற்படுத்தியபோதிலும் "அதனைத் தடுத்துக்கொண்டது எது?" எனப் பரிகாசமாகக் கேட்கிறார்கள். அவர்களிடம் அது வரும் நாளில், அவர்களை விட்டு அதைத் தடுத்துவிட முடியாது என்பதையும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த வேதனை அவர்கள் அனைவரையும் சூழ்ந்து கொள்ளும் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?

Tafseer

وَلَئِنْ
أَذَقْنَا
நாம் சுவைக்க வைத்தால்
ٱلْإِنسَٰنَ
மனிதனுக்கு
مِنَّا
நம்மிடமிருந்து
رَحْمَةً
ஓர் அருளை
ثُمَّ
பிறகு
نَزَعْنَٰهَا
நீக்கினோம்/அதை
مِنْهُ
அவனிடமிருந்து
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
لَيَـُٔوسٌ
நிராசையாளனாக
كَفُورٌ
நன்றி கெட்டவனாக

Wa la'in azaqnal insaana minnaa rahmatan summa naza'naahaa minhu, innahoo laya'oosun kafoor

நம்முடைய அருளை மனிதன் அனுபவிக்கும்படி நாம் செய்து, பின்னர் அதனை அவனிடமிருந்து நாம் நீக்கிவிட்டால், நிச்சயமாக அவன் நம்பிக்கை இழந்து பெரும் நன்றி கெட்டவனாகி விடுகிறான்.

Tafseer

وَلَئِنْ
أَذَقْنَٰهُ
நாம் அவனுக்கு சுவைக்க வைத்தால்
نَعْمَآءَ
இன்பத்தை
بَعْدَ ضَرَّآءَ
பின்னர்/துன்பம்
مَسَّتْهُ
அவனுக்கு ஏற்பட்ட(து)
لَيَقُولَنَّ
நிச்சயம் கூறுவான்
ذَهَبَ
சென்றன
ٱلسَّيِّـَٔاتُ
தீமைகள்
عَنِّىٓۚ
என்னை விட்டு
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
لَفَرِحٌ
மகிழ்பவனாக
فَخُورٌ
தற்பெருமையாளனாக

Wala'in azaqnaahu na'maaa'a ba'da darraaa'a massat hu la yaqoolanna zahabas saiyiaatu 'anneee; innahoo lafarihun fakhoor

அவனுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி அவன் இன்பம் அனுபவிக்கும்படி நாம் செய்தால், அதற்கவன் "நிச்சயமாக என்னுடைய துன்பங்கள் அனைத்தும் தொலைந்து விட்டன. (இனி திரும்ப வாராது)" என்று கூறத் தலைப்படுகிறான். ஏனென்றால், நிச்சயமாக மனிதன் (அதிவிரைவில்) மகிழ்ச்சியடையக் கூடியவனாகவும், பெருமையடிப்பவனாகவும் இருக்கிறான்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்து ஹூது
القرآن الكريم:هود
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Hud
ஸூரா:11
வசனம்:123
Total Words:1600
Total Characters:9567
Number of Rukūʿs:10
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:52
Starting from verse:1473