Skip to main content

وَلَآ أَقُولُ
நான் கூறமாட்டேன்
لَكُمْ
உங்களுக்கு
عِندِى
என்னிடம்
خَزَآئِنُ
பொக்கிஷங்கள்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَلَآ أَعْلَمُ
இன்னும் அறியமாட்டேன்
ٱلْغَيْبَ
மறைவை
وَلَآ أَقُولُ
இன்னும் கூறமாட்டேன்
إِنِّى
நிச்சயமாக நான்
مَلَكٌ
ஒரு வானவர்
وَلَآ أَقُولُ
இன்னும் கூறமாட்டேன்
لِلَّذِينَ
எங்களுக்கு
تَزْدَرِىٓ
இழிவாகக் காண்கிறது
أَعْيُنُكُمْ
கண்கள்/உங்கள்
لَن يُؤْتِيَهُمُ
அறவே கொடுக்கவே மாட்டான்/அவர்களுக்கு/ அல்லாஹ்
خَيْرًاۖ
ஒரு நன்மை
ٱللَّهُ
அல்லாஹ்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِمَا فِىٓ
எதை/ உள்ளங்களில்/அவர்கள்
إِنِّىٓ
நிச்சயமாக நான்
إِذًا
அப்போது
لَّمِنَ ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களில்தான்

Wa laa aqoolu lakum 'indee khazaa'inul laahi wa laaa a'lamul ghaiba wa laa aqoolu inee malakunw wa laaa aqoolu lillazeena tazdareee a'yunukum lai yu'tiyahumul laahu khairan Allaahu a'lamu bimaa feee anfusihim innee izal laminaz zaalimeen

அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் (அனைத்தும்) என்னிடம் இருக்கின்றன என்றும் நான் உங்களிடம் கூறவில்லை; நான் மறைவானவற்றை அறிந்தவனும் அல்லன்; நான் ஒரு மலக்கு என்றும் கூறவில்லை. எவர்களை உங்கள் கண்கள் இழிவாகக் காண்கின்றனவோ அவர்களுக்கு அல்லாஹ் யாதொரு நன்மையும் அளிக்கமாட்டான் என்றும் நான் கூறமாட்டேன். அவர்கள் உள்ளத்தில் உள்ளதை (நம்பிக்கையை உங்களைவிட) அல்லாஹ் தான் மிகவும் அறிந்தவன். (இதற்கு மாறாக நான் கூறினால்) நிச்சயமாக நானும் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விடுவேன்" (என்றும் கூறினார்.)

Tafseer

قَالُوا۟
கூறினார்கள்
يَٰنُوحُ
நூஹே!
قَدْ جَٰدَلْتَنَا
நீர் தர்க்கித்து விட்டீர்/எங்களுடன்
فَأَكْثَرْتَ
அதிகப்படுத்தினீர்
جِدَٰلَنَا
தர்க்கத்தை/ எங்களுடன்
فَأْتِنَا
ஆகவே வருவீராக/எங்களிடம்
بِمَا تَعِدُنَآ
எதைக் கொண்டு/வாக்களித்தீர்/எங்களுக்கு
إِن كُنتَ
நீர் இருந்தால்
مِنَ ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்களில்

Qaaloo yaa Noohu qad jaadaltanaa fa aksarta jidaalanaa faatinaa bimaa ta'idunaaa in kunta minas saadiqeen

அதற்கவர்கள் "நூஹே! நிச்சயமாக நீங்கள் எங்களுடன் தர்க்கித்தீர்கள்; (அதுவும்) அதிகமாகவே தர்க்கித்து விட்டீர்கள். (ஆகவே, இனி தர்க்கத்தை விட்டொழித்து வேதனை வரும் என்று கூறுவதில்) நீங்கள் மெய்யாகவே உண்மை சொல்பவராக இருந்தால், நீங்கள் அச்சமுறுத்தும் அதனை நம்மிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالَ
கூறினார்
إِنَّمَا
எல்லாம்
يَأْتِيكُم بِهِ
அதைக் கொண்டு வருவான்/உங்களிடம்
ٱللَّهُ
அல்லாஹ்தான்
إِن شَآءَ
அவன் நாடினால்
وَمَآ أَنتُم
நீங்கள் இல்லை
بِمُعْجِزِينَ
பலவீனப்படுத்துபவர்களாக

Qaala innamaa yaateekum bihil laahu in shaaa'a wa maaa antum bimu'jizeen

அதற்கு அவர் "வேதனை கொண்டு வருபவன் நான் அல்லன்;) அல்லாஹ்தான். அவன் நாடினால் (அதிசீக்கிரத்தில்) அதனை உங்களுக்கு நிச்சயமாகக் கொண்டு வருவான். அதனைத் தடுத்துவிட உங்களால் முடியாது" என்று கூறினார்.

Tafseer

وَلَا يَنفَعُكُمْ
பலனளிக்காது/உங்களுக்கு
نُصْحِىٓ
என் நல்லுபதேசம்
إِنْ أَرَدتُّ
நான் நாடினால்
أَنْ أَنصَحَ
நான் நல்லுபதேசம்புரிய
لَكُمْ
உங்களுக்கு
إِن كَانَ
இருந்தால்/அல்லாஹ்
يُرِيدُ
நாடுகிறான்
أَن يُغْوِيَكُمْۚ
அவன் வழிகெடுக்க/உங்களை
هُوَ
அவன்
رَبُّكُمْ
உங்கள் இறைவன்
وَإِلَيْهِ
அவனிடமே
تُرْجَعُونَ
நீங்கள் திருப்பப்படுவீர்கள்

Wa laa yanfa'ukum nusheee in arattu an ansaha lakum in kaanal laahu yureedu ai yughwi yakum; Huwa Rabbukum wa ilaihi turja'oon

அன்றி "நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டுவிட வேண்டும் என்று அல்லாஹ் விரும்பியிருந்தால் என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு யாதொரு பயனுமளிக்காது. அவன்தான் உங்களைப் படைத்து காப்பவன்; (மறுமையில்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்" (என்றும் கூறினார்.)

Tafseer

أَمْ
அல்லது
يَقُولُونَ
கூறுகிறார்கள்
ٱفْتَرَىٰهُۖ
அவர் புனைந்தார்/இதை
قُلْ
கூறுவீராக
إِنِ ٱفْتَرَيْتُهُۥ
நான் புனைந்திருந்தால்/அதை
فَعَلَىَّ
என் மீதே
إِجْرَامِى
என் குற்றம்
وَأَنَا۠
இன்னும் நான்
بَرِىٓءٌ
விலகியவன்
مِّمَّا تُجْرِمُونَ
விட்டு/எவை/நீங்கள் குற்றம் புரிகிறீர்கள்

Am yaqooloonaf taraahu qul inif taraituhoo fa'alaiya ijraamee wa ana bareee'um mimmaa tujrimoon

(நபியே! இவ்வரலாற்றைப் பற்றி) "நீங்கள் இதனைப் பொய்யாகக் கற்பனை செய்து கூறுகிறீர்கள்" என்று அவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின்) நீங்கள் கூறுங்கள்: "நான் அதனைக் கற்பனை செய்து கூறினால் அக்குற்றம் என் மீதே சாரும். (நீங்கள் பொறுப்பாளிகளல்லர்; அவ்வாறே) நீங்கள் (கற்பனை) செய்யும் குற்றங்களுக்கு நான் பொறுப்பாளியல்ல.

Tafseer

وَأُوحِىَ
இன்னும் வஹீ அறிவிக்கப்பட்டது
إِلَىٰ نُوحٍ
நூஹுக்கு
أَنَّهُۥ
நிச்சயமாக செய்தி
لَن يُؤْمِنَ
அறவே நம்பிக்கை கொள்ள மாட்டார்
مِن قَوْمِكَ
உமது மக்களில்
إِلَّا
தவிர
مَن قَدْ
எவர்/நம்பிக்கை கொண்டு விட்டார்
فَلَا تَبْتَئِسْ
ஆகவே நீர் கவலைப்படாதீர்
بِمَا
காரணமாக/எவை
كَانُوا۟
இருந்தனர்
يَفْعَلُونَ
அவர்கள் செய்வார்கள்

Wa oohiya ilaa Noohin annahoo lany-yu'mina min qawmika illaa man qad aamana falaa tabta'is bimaa kaanoo yaf'aloon

(நபி) நூஹ்வுக்கு வஹீ அறிவிக்கப்பட்டது: "முன்னர் நம்பிக்கை கொண்டவர்களைத் தவிர, இனி உங்களுடைய மக்களில் ஒருவரும் நிச்சயமாக நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். ஆதலால், அவர்களுடைய செயலைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.

Tafseer

وَٱصْنَعِ
இன்னும் செய்வீராக
ٱلْفُلْكَ
கப்பலை
بِأَعْيُنِنَا
நம் கண்கள் முன்பாக
وَوَحْيِنَا
இன்னும் நம்அறிவிப்புப்படி
وَلَا تُخَٰطِبْنِى
என்னிடம் பேசாதீர்
فِى ٱلَّذِينَ
இல்/எவர்கள்
ظَلَمُوٓا۟ۚ
அநியாயம் செய்தார்கள்
إِنَّهُم
நிச்சயமாக அவர்கள்
مُّغْرَقُونَ
மூழ்கடிக்கப்படுபவர்கள்

Wasna'il fulka bi-a'yuninaa wa wahyinaa wa laa tukhaa tibnee fil lazeena zalamoo; innahum mughraqoon

நாம் அறிவிக்குமாறு நம்முடைய கண் முன்பாகவே ஒரு கப்பலை நீங்கள் செய்யுங்கள். அநியாயம் செய்தவர்களைப் பற்றி (இனி) நீங்கள் என்னுடன் (சிபாரிசு) பேசாதீர்கள். நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்" (என்றும் அறிவிக்கப்பட்டது.)

Tafseer

وَيَصْنَعُ
அவர் செய்கிறார்
ٱلْفُلْكَ
கப்பலை
وَكُلَّمَا مَرَّ
கடந்தபோதெல்லாம்
عَلَيْهِ
அவருக்கு அருகில்
مَلَأٌ
முக்கிய பிரமுகர்கள்
مِّن
இருந்து
قَوْمِهِۦ
அவருடைய மக்கள்
سَخِرُوا۟
பரிகசித்தனர்
مِنْهُۚ قَالَ
அவரை/கூறினார்
إِن تَسْخَرُوا۟
நீங்கள் பரிகசித்தால்
مِنَّا
எங்களை
فَإِنَّا
நிச்சயமாக நாங்கள்
نَسْخَرُ
பரிகசிப்போம்
مِنكُمْ
உங்களை
كَمَا تَسْخَرُونَ
நீங்கள் பரிகசிப்பது போன்று

Wa yasn'ul fulka wa kullamaa marra 'alaihi malaum min qawmihee sakhiroo minh; qaala in taskharoo minnaa fa innaa naskharu minkum kamaa taskharoon

அவர் கப்பலைச் செய்து கொண்டிருந்த சமயத்தில், அதன் சமீபமாகச் சென்ற அவருடைய மக்களின் தலைவர்கள் அவரைப் பரிகசித்தனர். அதற்கு அவர் "நீங்கள் (இப்போது) எங்களைப் பரிகசிக்கும் இவ்வாறே (அதிசீக்கிரத்தில்) நிச்சயமாக நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்" என்றும் கூறினார்.

Tafseer

فَسَوْفَ تَعْلَمُونَ
நீங்கள் அறிவீர்கள்
مَن
எவர்
يَأْتِيهِ
அவருக்கு வரும்
عَذَابٌ
ஒரு வேதனை
يُخْزِيهِ
இழிவுபடுத்தும்/அவரை
وَيَحِلُّ
இன்னும் இறங்கும்
عَلَيْهِ
அவர் மீது
عَذَابٌ
ஒரு வேதனை
مُّقِيمٌ
நிலையானது

Fasawfa ta'lamoona mai yaateehi 'azaabuny yaukhzeehi wa yahillu 'alaihi 'azaabum muqeem

அன்றி, "இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடைகிறது, நிலையான வேதனை எவர் மீது இறங்குகிறது என்பதையும் அதி சீக்கிரத்தில் நீங்கள் (சந்தேகமற) தெரிந்து கொள்வீர்கள்" (என்றும் கூறினார்.)

Tafseer

حَتَّىٰٓ
இறுதியாக
إِذَا
போது
جَآءَ
வந்தது
أَمْرُنَا
நம் கட்டளை
وَفَارَ
இன்னும் பொங்கியது
ٱلتَّنُّورُ
அடுப்பு
قُلْنَا
கூறினோம்
ٱحْمِلْ
ஏற்றுவீராக
فِيهَا
அதில்
مِن
இருந்து
كُلٍّ
எல்லாம்
زَوْجَيْنِ
இரு ஜோடியை
ٱثْنَيْنِ
இரண்டு
وَأَهْلَكَ
இன்னும் உமது குடும்பத்தை
إِلَّا مَن
தவிர/எவர்
سَبَقَ
முந்தி விட்டது
عَلَيْهِ
அவர் மீது
ٱلْقَوْلُ
வாக்கு
وَمَنْ
இன்னும் எவர்
ءَامَنَۚ
நம்பிக்கை கொண்டார்
وَمَآ ءَامَنَ
நம்பிக்கை கொள்ளவில்லை
مَعَهُۥٓ إِلَّا
அவருடன்/தவிர
قَلِيلٌ
குறைவானவர்கள்

Hattaaa izaa jaaa'a amrunaa wa faarat tannooru qulnah mil feehaa min kullin zawjainis naini wa ahlaka illaa man sabaqa 'alaihil qawlu wa man aaman; wa maaa aamana ma'ahooo illaa qaleel

ஆகவே, (நாம் விதித்திருந்த) வேதனை நெருங்கி அடுப்புப் பொங்கவே (நூஹை நோக்கி "ஒவ்வொரு உயிருள்ள பிராணியில் இருந்தும்) ஆண், பெண் இரண்டு கொண்ட ஒவ்வொரு ஜோடியை அதில் ஏற்றிக்கொள்ளுங்கள். (அழிந்து விடுவார்கள் என) நம் வாக்கு ஏற்பட்டுவிட்ட (உங்களுடைய மகன் ஆகிய)வர்களைத் தவிர, உங்களுடைய குடும்பத்தவரையும் (மற்ற) நம்பிக்கையாளர் களையும் அதில் ஏற்றிக் கொள்ளுங்கள்" என்று நாம் கூறினோம். வெகு சொற்ப மக்களைத் தவிர (மற்றவர்கள்) அவருடன் நம்பிக்கை கொள்ளவில்லை.

Tafseer