Skip to main content

أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
خَسِرُوٓا۟
நட்டமடைந்தார்கள்
أَنفُسَهُمْ
தமக்குத் தாமே
وَضَلَّ
இன்னும் மறைந்துவிடும்
عَنْهُم
அவர்களை விட்டு
مَّا كَانُوا۟
எவை/இருந்தனர்
يَفْتَرُونَ
அவர்கள் புனைவார்கள்

Ulaaa'ikal lazeena khasirooo anfusahum wa dalla 'anhum maa kaanoo yaftaroon

இத்தகையவர்கள் தாம் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டு பண்ணிக்கொண்டவர்கள். இவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்த (தெய்வங்கள்) அனைத்தும் (அந்நாளில்) இவர்களை விட்டு மறைந்துவிடும்.

Tafseer

لَا جَرَمَ
சந்தேகமின்றி
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
هُمُ ٱلْأَخْسَرُونَ
மகா நஷ்டவாளிகள்

Laa jarama annahum fil Aakhirati humul akhsaroon

மறுமையில் நிச்சயமாக இவர்கள் முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.

Tafseer

إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தனர்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
وَأَخْبَتُوٓا۟
இன்னும் பயத்துடனும் மிக்க பணிவுடனும் திரும்பினார்கள்
إِلَىٰ
பக்கம்
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
أَصْحَٰبُ ٱلْجَنَّةِۖ
சொர்க்கவாசிகள்
هُمْ فِيهَا
அவர்கள்/அதில்
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்

Innal lazeena aamanoo wa 'amilus saalihaati wa akhbatooo ilaa Rabbihim ulaaa'ika Ashaabul Jannati hum feehaa khaalidoon

எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து தங்கள் இறைவனுக்கு மிக்க பணிவுடன் அடிபணிகின்றனரோ, அவர்கள் சுவனவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் நிலைத்து விடுவார்கள்.

Tafseer

مَثَلُ
உதாரணம்
ٱلْفَرِيقَيْنِ
இரு பிரிவினரின்
كَٱلْأَعْمَىٰ
குருடனைப் போன்று
وَٱلْأَصَمِّ
இன்னும் செவிடன்
وَٱلْبَصِيرِ
இன்னும் பார்ப்பவன்
وَٱلسَّمِيعِۚ
இன்னும் கேட்பவன்
هَلْ يَسْتَوِيَانِ
இருவரும் சமமாவார்களா?
مَثَلًاۚ
உதாரணத்தால்
أَفَلَا تَذَكَّرُونَ
நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?

Masalul fareeqini kal a'maa wal asammi walbaseeri wassamee'; hal yastawiyaani masalaa; afalaa tazakkaroon

இவ்விரு (பிரிவினரில் ஒரு) பிரிவினர் குருடனையும், செவிடனையும் (போலிருக்கின்றனர். மற்றொரு பிரிவினர்) பார்வையுடையவனையும் கேட்கும் சக்தியுடையவனையும் ஒத்திருக்கின்றனர். இவ்விரு பிரிவினரும் சமமாவார்களா? (இந்த உதாரணத்தைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சி பெற வேண்டாமா?

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
أَرْسَلْنَا
அனுப்பினோம்
نُوحًا إِلَىٰ
நூஹை/அவருடைய மக்களிடம்
إِنِّى
நிச்சயமாக நான்
لَكُمْ
உங்களுக்கு
نَذِيرٌ
ஓர் எச்சரிப்பாளன்
مُّبِينٌ
பகிரங்கமான

Wa laqad arsalnaa Noohan ilaa qawmihee innee lakum nazeerum mubeen

மெய்யாகவே நாம் "நூஹை" அவருடைய மக்களிடம் (நம்முடைய தூதராக) அனுப்பி வைத்தோம். (அவர், அவர்களை நோக்கி) "நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.

Tafseer

أَن لَّا
நீங்கள் வணங்காதீர்கள்
إِلَّا
தவிர
ٱللَّهَۖ
அல்லாஹ்
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَخَافُ
பயப்படுகிறேன்
عَلَيْكُمْ
உங்கள் மீது
عَذَابَ يَوْمٍ
வேதனையை/நாளின்
أَلِيمٍ
துன்புறுத்தக் கூடியது

Al laa ta'budooo illal laaha inneee akhaafu 'alaikum 'azaaba Yawmin aleem

அல்லாஹ்வையன்றி (மற்றெதையும்) நீங்கள் வணங்கக் கூடாது. (வணங்கினால்) துன்புறுத்தும் நாளின் வேதனை (நிச்சயமாக) உங்களுக்கு (வருமென்று) நான் அஞ்சுகிறேன்" (என்று கூறினார்.)

Tafseer

فَقَالَ
கூறினார்(கள்)
ٱلْمَلَأُ
தலைவர்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
مِن قَوْمِهِۦ
அவருடைய சமுதாயத்தில்
مَا نَرَىٰكَ
நாம் பார்க்கவில்லை/ உம்மை
إِلَّا
தவிர
بَشَرًا
ஒரு மனிதராக
مِّثْلَنَا
எங்களைப் போன்ற
وَمَا نَرَىٰكَ
நாம் பார்க்கவில்லை/ உம்மை
ٱتَّبَعَكَ
பின்பற்றினார்/உம்மை
إِلَّا ٱلَّذِينَ
தவிர/எவர்கள்
هُمْ
அவர்கள்
أَرَاذِلُنَا
எங்களில் மிக இழிவானவர்கள்
بَادِىَ ٱلرَّأْىِ
வெளிப் பார்வையில்
وَمَا نَرَىٰ
நாங்கள்பார்க்கவில்லை
لَكُمْ
உங்களுக்கு
عَلَيْنَا
எங்களைவிட
مِن فَضْلٍۭ
எந்த ஒரு மேன்மையையும்
بَلْ نَظُنُّكُمْ
மாறாக/கருதுகிறோம்/உங்களை
كَٰذِبِينَ
பொய்யர்களாக

Faqaalal mala ul lazeena kafaroo min qawmihee ma naraaka illaa basharam mislanaa wa maa naraakat taba'aka illal lazeena hum araazilunaa baadiyar raayi wa maa naraa lakum 'alainaa min fadlim bal nazunnukum kaazibeen

அதற்கு, அவரை நிராகரித்த அவருடைய மக்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) "நாம் உங்களை நம்மைப் போன்ற ஒரு மனிதனாகவே காண்கிறோம். அன்றி, வெளித்தோற்றத்தில் நம்மில் மிக்க இழிவானவர்களே அன்றி (கண்ணியமானவர்கள்) உங்களைப் பின்பற்றவில்லை என்பதையும் நாங்கள் அறிவோம். எங்களைவிட உங்களிடம் யாதொரு மேன்மை இருப்பதாகவும் நாங்கள் காணவில்லை. அன்றி, நீங்கள் (அனைவரும்) பொய்ய ரெனவே நாங்கள் எண்ணுகிறோம்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالَ
கூறினார்
يَٰقَوْمِ
என் மக்களே
أَرَءَيْتُمْ
நீங்கள் கவனித்தீர்களா?
إِن كُنتُ
நான் இருந்து
عَلَىٰ بَيِّنَةٍ
மீது/ஒரு தெளிவான அத்தாட்சி
مِّن
இருந்து
رَّبِّى
என் இறைவன்
وَءَاتَىٰنِى
இன்னும் அளித்தான் எனக்கு
رَحْمَةً
அருளை
مِّنْ عِندِهِۦ
தன்னிடம்/இருந்து
فَعُمِّيَتْ
அவை மறைக்கப்பட்டன
عَلَيْكُمْ
உங்களுக்கு
أَنُلْزِمُكُمُوهَا
நாம் நிர்ப்பந்திப்போமா?/உங்களை/அவற்றை
وَأَنتُمْ
நீங்களும்
لَهَا
அவற்றை
كَٰرِهُونَ
வெறுப்பவர்களாக

Qaala yaa qawmi ara'aitum in kuntu 'alaa baiyinatim mir Rabbee wa aataanee rahmatam min 'indihee fa'um miyat 'alaikum anulzimuku moohaa wa antum lahaa kaarihoon

(அதற்கு) அவர் (அவர்களை நோக்கிக்) கூறினார்: "என்னுடைய மக்களே! நீங்கள் கவனித்தீர்களா? என் இறைவனுடைய அத்தாட்சியின் மீது நான் நிலையாக இருந்தும் அவன் தன்னுடைய அருளைக்கொண்டு (நபித்துவத்தை) எனக்கு அளித்திருந்தும், அது உங்கள் கண்களுக்குப் புலப்படா(மல் அதனை நீங்கள் வெறுத்து) விட்டால், அதனைப் பின்பற்றும்படி நான் உங்களை நிர்ப்பந்திக்க முடியுமா?.

Tafseer

وَيَٰقَوْمِ
என் மக்களே
لَآ أَسْـَٔلُكُمْ
நான் கேட்கவில்லை/உங்களிடம்
عَلَيْهِ
இதன் மீது
مَالًاۖ
ஒரு செல்வத்தை
إِنْ أَجْرِىَ
என் கூலி இல்லை
إِلَّا
தவிர
عَلَى ٱللَّهِۚ
அல்லாஹ் மீது
وَمَآ أَنَا۠
இல்லை / நான்
بِطَارِدِ
விரட்டுபவனாக
ٱلَّذِينَ
எவர்களை
ءَامَنُوٓا۟ۚ
நம்பிக்கை கொண்டார்கள்
إِنَّهُم
நிச்சயமாக அவர்கள்
مُّلَٰقُوا۟
சந்திப்பவர்கள்
رَبِّهِمْ
தங்கள் இறைவனை
وَلَٰكِنِّىٓ
என்றாலும் நிச்சயமாக நான்
أَرَىٰكُمْ
காண்கிறேன்/ உங்களை
قَوْمًا
மக்களாக
تَجْهَلُونَ
நீங்கள் அறிய மாட்டீர்கள்

Wa yaa qawmi laaa as'alukum 'alaihi maalan in ajriya illaa 'alal laah; wa maaa ana bitaaridil lazeena aamanoo; innahum mulaaqoo Rabbihim wa laakinneee araakum qawman tajhaloon

"அன்றி, என்னுடைய மக்களே! இதற்காக நான் உங்களிடம் யாதொரு பொருளையும் (கூலியாகக்) கேட்கவில்லை. என்னுடைய கூலி அல்லாஹ்விடமே அன்றி (உங்களிடம்) இல்லை. (உங்களில் மிகத் தாழ்ந்தவர்களாயினும் சரி) நம்பிக்கை கொண்டவர்களை நான் விரட்டிவிட முடியாது. நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை (கண்ணியத்துடன்) சந்திப்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், நிச்சயமாக உங்களை(த்தான் மிகத் தாழ்ந்த) மூடர்களாகக் காண்கிறேன்.

Tafseer

وَيَٰقَوْمِ
என் மக்களே
مَن
யார்?
يَنصُرُنِى
உதவுவார்/எனக்கு
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடத்தில்
إِن طَرَدتُّهُمْۚ
நான் விரட்டினால்/அவர்களை
أَفَلَا تَذَكَّرُونَ
நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?

Wa yaa qawmi mai yansurunee minal laahi in tarattuhum; afalaa tazak karoon

அன்றி, என்னுடைய மக்களே! நான் அவர்களை விரட்டி விட்டால் (அல்லாஹ் என்னைத் தண்டிக்க மாட்டானா? அச்சமயம்) அல்லாஹ்விடத்தில் எனக்கு உதவி செய்பவர் யார்? இவ்வளவு கூட நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டாமா?

Tafseer