Skip to main content

إِلَّا ٱلَّذِينَ
தவிர/எவர்கள்
صَبَرُوا۟
சகித்தார்கள்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
لَهُم
அவர்களுக்கு
مَّغْفِرَةٌ
மன்னிப்பு
وَأَجْرٌ كَبِيرٌ
இன்னும் கூலி/பெரிய(து)

Illal lazeena sabaroo wa 'amilus saalihaati ulaaa'ika lahum maghfiratunw wa ajrun kabeer

ஆயினும், எவர்கள் (துன்பங்களைப்) பொறுத்து சகித்துக் கொண்டு நன்மையான காரியங்களைச் செய்து வருகிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; பெரும் கூலியும் உண்டு.

Tafseer

فَلَعَلَّكَ
நீர் ஆகலாம்
تَارِكٌۢ بَعْضَ
விட்டுவிடக்கூடிய வராக/சிலவற்றை
مَا يُوحَىٰٓ
எவை/வஹீ அறிவிக்கப்படுகிறது
إِلَيْكَ
உமக்கு
وَضَآئِقٌۢ
இன்னும் நெருக்கடியாக
بِهِۦ
அதன் மூலம்
صَدْرُكَ
நெஞ்சம்/உம்
أَن يَقُولُوا۟
அவர்கள் கூறுவது
لَوْلَآ أُنزِلَ
இறக்கப்பட வேண்டாமா?
عَلَيْهِ
அவருக்கு
كَنزٌ
ஒரு பொக்கிஷம்
أَوْ
அல்லது
جَآءَ
வரவேண்டாமா
مَعَهُۥ
அவருடன்
مَلَكٌۚ
ஒரு வானவர்
إِنَّمَآ أَنتَ
நீரெல்லாம்
نَذِيرٌۚ
ஓர் எச்சரிப்பாளர்தான்
وَٱللَّهُ
அல்லாஹ்தான்
عَلَىٰ
மீது
كُلِّ شَىْءٍ
எல்லாப் பொருள்
وَكِيلٌ
பொறுப்பாளன்

Fala'allaka taarikum ba'da maa yoohaaa ilaika wa daaa'iqum bihee sadruka ai yaqooloo law laaa unzila 'alaihi kanzun aw jaaa'a ma'ahoo malak; innamaa anta nazeer; wallaahu 'alaa kulli shai'inw wakeel

(நபியே! இவ்வேதத்தை அவர்கள் சரிவரக் கேட்பதில்லை என நீங்கள் சடைந்து) உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப் பட்டவற்றில் சிலவற்றை விட்டு விடுவீர்களோ? (அன்று) "உங்களுக்கு ஒரு பொக்கிஷம் அருளப்பட வேண்டாமா? அல்லது உங்களுடன் ஒரு மலக்கு வரவேண்டாமா?" என்று அவர்கள் கூறுவது உங்களுடைய உள்ளத்தில் வருத்தத்தை உண்டு பண்ணலாம். (அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.) நிச்சயமாக நீங்கள் (அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒரு தூதரே(யன்றி வேறில்லை.) அனைத்தையும் நிர்வகிப்பவன் அல்லாஹ்தான்!

Tafseer

أَمْ
அல்லது
يَقُولُونَ
அவர்கள் கூறுகிறார்கள்
ٱفْتَرَىٰهُۖ
அவர் புனைந்தார்/இதை
قُلْ
கூறுவீராக
فَأْتُوا۟
வாருங்கள்
بِعَشْرِ
கொண்டு/பத்து
سُوَرٍ
அத்தியாயங்கள்
مِّثْلِهِۦ
இது போன்ற
مُفْتَرَيَٰتٍ
புனையப்பட்டவை
وَٱدْعُوا۟
இன்னும் நீங்கள் அழையுங்கள்
مَنِ
எவர்
ٱسْتَطَعْتُم
சாத்தியப்பட்டீர்கள்
مِّن دُونِ
அன்றி
ٱللَّهِ
அல்லாஹ்
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Am yaqooloonaf taraahu qul faatoo bi'ashri Suwarim mislihee muftarayaatinw wad'oo manis tata'tum min doonil laahi in kuntum saadiqeen

(நம்முடைய தூதர்) இதனைப் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றனரா? அவ்வாறாயின் (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: இதைப்போன்ற பத்து அத்தியாயங்களையேனும் நீங்கள் கற்பனை செய்து கொண்டு வாருங்கள். அல்லாஹ்வையன்றி உங்களுக்குச் சாத்தியமான அனைத்தையும் இதற்காக அழைத்து (உங்களுக்குத் துணையாக)க் கொள்ளுங்கள். மெய்யாகவே (இது கற்பனை என்று) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (இவ்வாறு செய்யலாமே!)

Tafseer

فَإِلَّمْ يَسْتَجِيبُوا۟
அவர்கள் பதில் அளிக்கவில்லையெனில்
لَكُمْ
உங்களுக்கு
فَٱعْلَمُوٓا۟ أَنَّمَآ
அறியுங்கள்/எல்லாம்
أُنزِلَ
இறக்கப்பட்டது
بِعِلْمِ
அறிவைக் கொண்டே
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَأَن لَّآ
இன்னும் நிச்சயமாக இல்லை
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
إِلَّا هُوَۖ
தவிர/அவன்
فَهَلْ
ஆகவே
أَنتُم مُّسْلِمُونَ
நீங்கள் முஸ்லிம்கள்

Fa il lam yastajeeboo lakum fa'lamooo annamaaa unzilla bi'ilmil laahi wa al laaa ilaaha illaa Huwa fahal antum muslimoon

"நீங்கள் (உதவிக்கு) அழைத்த அவர்களாலும் அவ்வாறு செய்ய முடியாவிடில், (இது மனித அறிவால் சொல்லப்பட்டதல்ல;) நிச்சயமாக அல்லாஹ்வின் அறிவைக் கொண்டே (அமைக்கப்பட்டு) அருளப்பட்டதுதான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை என்பதையும் நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள். (இனியேனும்) நீங்கள் (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவீர்களா?

Tafseer

مَن كَانَ
எவர்(கள்)/ இருந்தார்(கள்)
يُرِيدُ
நாடுவார்(கள்)
ٱلْحَيَوٰةَ
வாழ்க்கையை
ٱلدُّنْيَا
உலக(ம்)
وَزِينَتَهَا
இன்னும் அதன் அலங்காரத்தை
نُوَفِّ
முழுமையாக கூலி தருவோம்
إِلَيْهِمْ
அவர்களுக்கு
أَعْمَٰلَهُمْ
அவர்களின் செயல்களை
فِيهَا
அதில்
وَهُمْ
அவர்கள்
فِيهَا
அதில்
لَا يُبْخَسُونَ
குறைக்கப்பட மாட்டார்கள்

Man kaana yureedul hayaatad dunyaa zeenatahaa nuwaffi ilaihim a'maa lahum feehaa wa hum feehaa laa yubkhasoon

எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டும்) விரும்பினால், அவர்கள் செயலுக்குரிய பலனை இவ்வுலகத்திலேயே நாம் முழுமையாகக் கொடுத்து விடுவோம். அதில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்.

Tafseer

أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
لَيْسَ
இல்லை
لَهُمْ
அவர்களுக்கு
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
إِلَّا ٱلنَّارُۖ
தவிர/நெருப்பு
وَحَبِطَ
இன்னும் அழிந்தன
مَا صَنَعُوا۟
எவை/அவர்கள் செய்தனர்
فِيهَا
அதில்
وَبَٰطِلٌ
இன்னும் வீணானவையே
مَّا كَانُوا۟
எவை/இருந்தனர்
يَعْمَلُونَ
செய்வார்கள்

Ulaaa'ikal lazeena laisa lahum fil Aakhirati illan Naaru wa habita maa sana'oo feehaa wa baatilum maa kaanoo ya'maloon

எனினும், மறுமையிலோ இத்தகையவர்களுக்கு (நரக) நெருப்பைத் தவிர வேறொன்றுமில்லை; அவர்கள் செய்தவை யாவும் இங்கு அழிந்துவிட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே.

Tafseer

أَفَمَن
எவர்(கள்)?
كَانَ عَلَىٰ
இருக்கின்றார்(கள்)/மீது
بَيِّنَةٍ
தெளிவான அத்தாட்சி
مِّن
இருந்து
رَّبِّهِۦ
தன் இறைவன்
وَيَتْلُوهُ
இன்னும் ஓதுகிறார்/அதை
شَاهِدٌ
சாட்சியாளர்
مِّنْهُ
அவன் புறத்திலிருந்து
وَمِن قَبْلِهِۦ
இன்னும் அதற்கு முன்னர்
كِتَٰبُ
வேதம்
مُوسَىٰٓ
மூஸாவின்
إِمَامًا
வழிகாட்டியாக
وَرَحْمَةًۚ
இன்னும் அருளாக
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்வார்கள்
بِهِۦۚ
இதை
وَمَن
எவர்
يَكْفُرْ
நிராகரிப்பார்
بِهِۦ
இதை
مِنَ ٱلْأَحْزَابِ
கூட்டங்களில்
فَٱلنَّارُ
நரகம்
مَوْعِدُهُۥۚ
அவருடைய வாக்களிக்கப்பட்ட இடமாகும்
فَلَا تَكُ
இருக்காதீர்
فِى مِرْيَةٍ
சந்தேகத்தில்
مِّنْهُۚ
இதில்
إِنَّهُ
நிச்சயமாக இது
ٱلْحَقُّ
உண்மைதான்
مِن
இருந்து
رَّبِّكَ
உம் இறைவன்
وَلَٰكِنَّ
எனினும்
أَكْثَرَ
பலர்
ٱلنَّاسِ
மக்களில்
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Afaman kaana 'alas baiyinatim mir Rabbihee wa yatloohu shaahidum minhu wa min qablihee Kitaabu Moosaaa imaamanw wa rahmah; ulaaa 'ika yu'minoona bih; wa mai yakfur bihee minal Ahzaabi fan Naaru maw'iduh; falaa taku fee miryatim minh; innahul haqqu mir Rabbika wa laakinna aksaran naasi laa yu'minoon

எவர்கள் தங்கள் இறைவனின் (திருக்குர்ஆன் என்னும்) தெளிவான அறிவைப் பெற்றிருக்கிறார்களோ அவர்களும், எவர்களுக்கு இறைவனால் ("ஈஸா"வுக்கு) அருளப்பட்டது (இன்ஜீல்) ஒரு சாட்சியாக இருக்கிறதோ அவர்களும், இன்னும் எவர்களுக்கு இதற்கு முன்னர் அருளப்பட்ட மூஸாவுடைய வேதம் ஒரு வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்கிறதோ அவர்களும், அவசியம் இவ்வேதத்தையும் நம்பிக்கைக் கொள்வார்கள். (அவர்களுக்குரிய கூலி சுவனபதிதான்.) இந்த (மூ)வகுப்பாரில் எவர்கள் இதனை நிராகரித்தபோதிலும் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடம் நரகம்தான். ஆதலால், (நபியே!) நீங்கள் இதில் சிறிதும் சந்தேகிக்க வேண்டாம். நிச்சயமாக இது உங்கள் இறைவனால் அருளப்பட்ட சத்திய (வேத)மே! எனினும், மனிதர்களில் பலர் (இதனை) நம்புவதில்லை.

Tafseer

وَمَنْ
யார்?
أَظْلَمُ
மகா அநியாயக்காரன்
مِمَّنِ
எவரைவிட
ٱفْتَرَىٰ
புனைந்தார்
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
كَذِبًاۚ
பொய்யை
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
يُعْرَضُونَ
அவர்கள் சமர்ப்பிக்கப்படுவார்கள்
عَلَىٰ
முன்
رَبِّهِمْ
தங்கள் இறைவன்
وَيَقُولُ
கூறுவார்(கள்)
ٱلْأَشْهَٰدُ
சாட்சியாளர்கள்
هَٰٓؤُلَآءِ
இவர்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
كَذَبُوا۟
பொய்யுரைத்தார்கள்
عَلَىٰ
மீது
رَبِّهِمْۚ
தங்கள் இறைவன்
أَلَا
அறிந்துகொள்ளுங்கள்!
لَعْنَةُ
சாபம்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
عَلَى
மீது
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்

Wa man azlamu mimmanif taraa 'alal laahi kazibaa; ulaaa'ika yu'radoona 'alaa Rabbihim wa yaqoolul ashhaa duhaaa'ulaaa'il lazeena kazaboo 'alaa Rabbihim; alaa la'natul laahi alaz zaalimeen

அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவர்களை விட அநியாயக்காரர் யார்? அத்தகையவர்கள் (மறுமையில்) தங்கள் இறைவன் முன் நிறுத்தப்பட்டு "இவர்கள்தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்" என்று சாட்சிகள் (சாட்சியம்) கூறுவார்கள். இந்த அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
يَصُدُّونَ
தடுப்பார்கள்
عَن
விட்டு
سَبِيلِ
பாதை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَيَبْغُونَهَا
இன்னும் தேடுவார்கள்/அதில்
عِوَجًا
கோணலை
وَهُم
அவர்கள்
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
هُمْ
அவர்கள்
كَٰفِرُونَ
நிராகரிப்பவர்கள்

Allazeena yasuddoona 'an sabeelil laahi wa yabghoonahaa 'iwajanw wa hum bil Aakhiratihum kaafiroon

எவர்கள் அல்லாஹ்வின் வழியைத் தடுத்து, அதில் கோணலை(யும் சந்தேகத்தையும்) உண்டுபண்ண விரும்புகிறார் களோ அவர்கள் மறுமையையும் நிராகரிப்பவர்கள்தாம்

Tafseer

أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
لَمْ يَكُونُوا۟
அவர்கள் இருக்கவில்லை
مُعْجِزِينَ
பலவீனப்படுத்து பவர்களாக
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَمَا كَانَ
இன்னும் இல்லை
لَهُم
அவர்களுக்கு
مِّن دُونِ
அல்லாஹ்வையன்றி
مِنْ أَوْلِيَآءَۘ
உதவியாளர்கள்எவரும்
يُضَٰعَفُ
பன்மடங்காக்கப்படும்
لَهُمُ
அவர்களுக்கு
ٱلْعَذَابُۚ
வேதனை
مَا كَانُوا۟
அவர்கள் இருக்கவில்லை
يَسْتَطِيعُونَ
சக்தி பெறுகிறார்கள்
ٱلسَّمْعَ
செவியேற்க
وَمَا كَانُوا۟
இன்னும் அவர்கள் இருக்கவில்லை
يُبْصِرُونَ
பார்ப்பவர்களாக

Ulaaa'ika lam yakoonoo mu'jizeena fil ardi wa maa kaana lahum min doonil laahi min awliyaaa'; yudaa'afu lahumul 'azaab; maa kaanoo yastatee'oonas sam'a wa maa kaanoo yubsiroon

இவர்கள் பூமியில் (ஓடி தப்பித்து அல்லாஹ்வை) தோற்கடிக்க முடியாது. அல்லாஹ்வையன்றி, இவர்களுக்கு உதவி செய்பவர்களும் இல்லை. (மறுமையிலோ) இவர்களுடைய வேதனை இரட்டிக்கப்படும். (இவர்களின் பொறாமையின் காரணமாக நல்வார்த்தைகளைச்) செவியுற இவர்கள் சக்தியற்றவர்கள்; (நேரான வழியைக்) காணவும் மாட்டார்கள்.

Tafseer