Skip to main content

يَٰقَوْمِ
என் மக்களே
لَآ أَسْـَٔلُكُمْ
நான் கேட்கவில்லை/உங்களிடம்
عَلَيْهِ
அதற்காக
أَجْرًاۖ
ஒரு கூலியை
إِنْ أَجْرِىَ
என் கூலி இல்லை
إِلَّا عَلَى
தவிர/மீது
ٱلَّذِى
எத்தகையவன்
فَطَرَنِىٓۚ
படைத்தான்/என்னை
أَفَلَا تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?

Yaa qawmi laaa as'alukum 'alaihi ajran in ajriya illaa 'alal lazee fataranee; afalaa ta'qiloon

என்னுடைய மக்களே! இதற்காக நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்கவில்லை. என்னுடைய கூலி என்னை படைத்தவனிடமேயன்றி (வேறு யாரிடமும்) இல்லை. (இவ்வளவு கூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?

Tafseer

وَيَٰقَوْمِ
என் மக்களே
ٱسْتَغْفِرُوا۟
மன்னிப்புக் கோருங்கள்
رَبَّكُمْ
உங்கள் இறைவனிடம்
ثُمَّ
பிறகு
تُوبُوٓا۟
திருந்தி திரும்புங்கள்
إِلَيْهِ
அவன் பக்கம்
يُرْسِلِ
அனுப்புவான்
ٱلسَّمَآءَ
மழையை
عَلَيْكُم
உங்களுக்கு
مِّدْرَارًا
தாரை தாரையாக
وَيَزِدْكُمْ
இன்னும் அதிகப்படுத்துவான்/உங்களுக்கு
قُوَّةً
பலத்தை
إِلَىٰ قُوَّتِكُمْ
உங்கள் பலத்துடன்
وَلَا تَتَوَلَّوْا۟
திரும்பி விடாதீர்கள்
مُجْرِمِينَ
குற்றவாளிகளாக

Wa yaa qawmis taghfiroo Rabbakum summa toobooo ilaihi yursilis samaaa'a 'alaikum midraaranw wa yazidkum quwwatan ilaa quwwatikum wa laa tatawallaw mujrimeen

என்னுடைய மக்களே! நீங்கள் உங்கள் இறைவனிடம் பாவ மன்னிப்பைக் கோரி (மனம் வருந்தி) அவன் பக்கமே திரும்புங்கள். (அவன் தடுத்திருக்கும்) மழையை உங்கள் மீது ஏராளமாகப் பொழியச் செய்வான். உங்களுடைய பலத்தைப் பின்னும் (பின்னும்) அதிகரிக்கச் செய்வான். ஆகவே, நீங்கள் அவனைப் புறக்கணித்துக் குற்றமிழைத்து விடாதீர்கள்" (என்றும் கூறினார்.)

Tafseer

قَالُوا۟ يَٰهُودُ
கூறினர்/ஹூதே!
مَا جِئْتَنَا
நீர் வரவில்லை/நம்மிடம்
بِبَيِّنَةٍ
ஓர் அத்தாட்சியைக் கொண்டு
وَمَا نَحْنُ
இன்னும் இல்லை/நாங்கள்
بِتَارِكِىٓ
விடுபவர்களாக
ءَالِهَتِنَا
தெய்வங்களை/எங்கள்
عَن قَوْلِكَ
உம் சொல்லுக்காக
وَمَا نَحْنُ
இன்னும் இல்லை/நாங்கள்
لَكَ
உம்மை
بِمُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்டவர்களாக

Qaaloo yaa Hoodu maa ji'tanaa bibaiyinatinw wa maa nahnu bitaarikeee aalihatinaa 'an qawlika wa maa nahnu laka bimu'mineen

அதற்கவர்கள், "ஹூதே! நீங்கள் (நாம் விரும்பியவாறு) யாதொரு அத்தாட்சியும் நம்மிடம் கொண்டு வரவில்லை. உங்களுடைய சொல்லுக்காக நாங்கள் எங்களுடைய தெய்வங்களை விட்டுவிட மாட்டோம். உங்களை நாங்கள் நம்பவும் மாட்டோம்" என்று கூறினார்கள்.

Tafseer

إِن نَّقُولُ
கூறமாட்டோம்
إِلَّا
தவிர
ٱعْتَرَىٰكَ بَعْضُ
தீண்டி விட்டன/உம்மை/சில
ءَالِهَتِنَا
எங்கள் தெய்வங்களில்
بِسُوٓءٍۗ
ஒரு தீமையைக் கொண்டு
قَالَ
கூறினார்
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أُشْهِدُ
சாட்சியாக்குகிறேன்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَٱشْهَدُوٓا۟
நீங்கள் சாட்சி கூறுங்கள்
أَنِّى
நிச்சயமாக நான்
بَرِىٓءٌ
விலகியவன்
مِّمَّا تُشْرِكُونَ
நீங்கள் இணைவைத்து வணங்குபவற்றிலிருந்து

In naqoolu illa' taraaka ba'du aalihatinaa bisooo'; qaala inneee ushhidul laaha wash hadooo annee bareee'um mimmaa tushrikoon

அன்றி, "எங்களுடைய சில தெய்வங்கள் உங்களுக்குக் கேடு உண்டுபண்ணி விட்டன. (ஆதலால், நீங்கள் மதியிழந்து விட்டீர்கள்!) என்றும் கூறினார்கள். அதற்கவர், "நிச்சயமாக நான் அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன்; நிச்சயமாக நான் அவனையன்றி நீங்கள் இணைவைத்து வணங்குபவைகளிலிருந்து விலகிக் கொண்டேன். (இதற்கு) நீங்களும் சாட்சியாக இருங்கள்" என்று கூறினார்.

Tafseer

مِن دُونِهِۦۖ
அவனையன்றி
فَكِيدُونِى
ஆகவே, சூழ்ச்சி செய்யுங்கள் எனக்கு
جَمِيعًا
அனைவரும்
ثُمَّ
பிறகு
لَا تُنظِرُونِ
அவகாசமளிக்காதீர்கள்/எனக்கு

Min doonihee fakeedoonee jamee'an summa laa tunziroon

"ஆகவே, நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்கு(ச் செய்யக்கூடிய) சூழ்ச்சியைச் செய்து பாருங்கள். (இதில்) நீங்கள் எனக்குச் சிறிதும் அவகாசம் அளிக்க வேண்டாம்" (என்றும்,)

Tafseer

إِنِّى
நிச்சயமாக நான்
تَوَكَّلْتُ
நம்பிக்கை வைத்து விட்டேன்
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
رَبِّى
என் இறைவன்
وَرَبِّكُمۚ
இன்னும் உங்கள் இறைவன்
مَّا مِن
இல்லை/எதுவும்
دَآبَّةٍ
உயிரினம்
إِلَّا
தவிர
هُوَ
அவன்
ءَاخِذٌۢ
பிடித்தே
بِنَاصِيَتِهَآۚ
அதன் உச்சி முடியை
إِنَّ
நிச்சயமாக
رَبِّى
என் இறைவன்
عَلَىٰ صِرَٰطٍ
வழியில்
مُّسْتَقِيمٍ
நேரானது

Innee tawakkaltu 'alallaahi Rabbee wa Rabbikum; maa min daaabbatin illaa Huwa aakhizum binaasiyatihaa; inna Rabbee 'alaa Siraatim mustaqeem

"நிச்சயமாக நான் என்னுடைய காரியங்கள் அனைத்தையும் என்னையும் உங்களையும் படைத்துப் பாதுகாப்பவனாகிய அல்லாஹ்விடமே ஒப்படைத்து விட்டேன். ஒவ்வொரு உயிருள்ள வைகளின் முன் உச்சிக் குடுமியையும் அவனே பிடித்துக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக என் இறைவன் (நீதியின்) நேரான வழியில் இருக்கிறான் (என்றும்,)

Tafseer

فَإِن تَوَلَّوْا۟
நீங்கள் விலகினால்
فَقَدْ
திட்டமாக
أَبْلَغْتُكُم
எடுத்துரைத்து விட்டேன்/உங்களுக்கு
مَّآ
எதை
أُرْسِلْتُ
அனுப்பப்பட்டேன்
بِهِۦٓ
அதைக் கொண்டு
إِلَيْكُمْۚ
உங்களிடம்
وَيَسْتَخْلِفُ
இன்னும் தோன்றச் செய்வான்
رَبِّى
என் இறைவன்
قَوْمًا
மக்களை
غَيْرَكُمْ
அல்லாத(வர்கள்) நீங்கள்
وَلَا تَضُرُّونَهُۥ
நீங்கள் தீங்கிழைக்க முடியாது/அவனுக்கு
شَيْـًٔاۚ إِنَّ
எதையும்
رَبِّى
நிச்சயமாக என் இறைவன்
عَلَىٰ كُلِّ
எல்லாவற்றின் மீது
حَفِيظٌ
பாதுகாவலன்

Fa in tawallaw faqad ablaghtukum maaa ursiltu biheee ilaikum; wa yastakhlifu Rabbee qawman ghairakum wa laa tadur roonahoo shai'aa; inna Rabbee 'alaa kulli shai'in Hafeez

நீங்கள் (என்னைப்) புறக்கணிப்பீர்களாயின் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) நான் உங்களிடம் எதற்காக அனுப்பப்பட்டேனோ அதனை நிச்சயமாக நான் உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். (உங்களை அழித்து) உங்களை அல்லாத வேறு மக்களை என் இறைவன் உங்கள் இடத்தில் வைத்து விடுவான்; (இதற்காக) நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. நிச்சயமாக என் இறைவன் அனைத்தையும் பாதுகாப்பவனாக இருக்கிறான். (ஆகவே, அவன் என்னையும் பாதுகாத்துக் கொள்வான்" என்றும் கூறினார்.)

Tafseer

وَلَمَّا جَآءَ
வந்த போது
أَمْرُنَا
நம் உத்தரவு
نَجَّيْنَا
பாதுகாத்தோம்
هُودًا
ஹூதை
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
مَعَهُۥ
அவருடன்
بِرَحْمَةٍ مِّنَّا
நமது அருளால்
وَنَجَّيْنَٰهُم
இன்னும் பாதுகாத்தோம்/அவர்களை
مِّنْ عَذَابٍ
வேதனையிலிருந்து
غَلِيظٍ
கடுமையானது

Wa lammaa jaaa'a amrunaa najainaa Hoodanw wallazeena aamanoo ma'ahoo birahmatim minnaa wa najainaahum min 'azaabin ghaleez

(இதன் பின்னும் அவர்கள் அவரை நிராகரித்து விட்டனர். ஆகவே,) நம்முடைய (வேதனையின்) உத்தரவு வந்தபொழுது ஹூதையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம்முடைய அருளால் பாதுகாத்துக்கொண்டு, கடுமையான வேதனையில் இருந்தும் நாம் அவர்களைத் தப்ப வைத்தோம்.

Tafseer

وَتِلْكَ
இவர்கள்
عَادٌۖ جَحَدُوا۟
ஆது/மறுத்தனர்
بِـَٔايَٰتِ
அத்தாட்சிகளை
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
وَعَصَوْا۟
இன்னும் மாறு செய்தனர்
رُسُلَهُۥ
தூதர்களுக்கு/அவனுடைய
وَٱتَّبَعُوٓا۟
இன்னும் பின்பற்றினர்
أَمْرَ
கட்டளை
كُلِّ
எல்லோருடைய
جَبَّارٍ
பிடிவாதக்காரர்கள்
عَنِيدٍ
முரடர்கள்

Wa tilka 'aad, jahadoo bi Aayaati Rabbihim wa 'asaw Rusulahoo wattaba'ooo amra kulli jabbaarin 'aneed

(நபியே!) இது "ஆது" மக்களின் (சரித்திரமாகும்.) அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளைகளை நிராகரித்து (அவர்களிடம் அனுப்பப்பட்ட) இறைவனின் தூதர்களுக்கு மாறு செய்தார்கள். அன்றி, பிடிவாதக்கார முரடர்கள் அனைவருடைய தீய வழிகாட்டல்களையும் அவர்கள் பின்பற்றினார்கள்.

Tafseer

وَأُتْبِعُوا۟
இன்னும் சேர்ப்பிக்கப் பட்டார்கள்
فِى هَٰذِهِ
இந்த உலகத்தில்
لَعْنَةً
சாபத்தை
وَيَوْمَ ٱلْقِيَٰمَةِۗ
இன்னும் மறுமையில்
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
إِنَّ عَادًا
நிச்சயமாக/ஆது
كَفَرُوا۟
நிராகரித்தனர்
رَبَّهُمْۗ
தங்கள் இறைவனுக்கு
أَلَا
அறிந்துகொள்ளுங்கள்!
بُعْدًا
கேடுதான்
لِّعَادٍ
ஆதுக்கு
قَوْمِ
மக்கள்
هُودٍ
ஹூதுடைய

Wa utbi'oo fee haazihid dunyaa la'natanw wa Yawmal Qiyaamah; alaaa inna 'Aadan kafaroo Rabbahum; alaa bu'dal li 'Aadin qawmin Hood

இவ்வுலகில் (அல்லாஹ்வுடைய) சாபம் அவர்களைத் தொடர்ந்தது, மறுமை நாளிலும் (அவ்வாறே!) நிச்சயமாக "ஆது" மக்கள் தங்கள் இறைவனுக்கு மாறு செய்தார்கள் என்பதையும் (நபி) ஹூதுடைய "ஆது" (சமுதாயத்தவர்)களுக்குக் கேடுதான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Tafseer