Skip to main content

إِنَّمَا كَانَ
கூற்றாக இருப்பதெல்லாம்
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுடைய
إِذَا دُعُوٓا۟
அழைக்கப்பட்டால்
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்
وَرَسُولِهِۦ
இன்னும் அவனது தூதர்
لِيَحْكُمَ
அவர் தீர்ப்பளிப்பதற்காக
بَيْنَهُمْ
அவர்களுக்கு மத்தியில்
أَن يَقُولُوا۟
அவர்கள் கூறுவதுதான்
سَمِعْنَا
நாங்கள் செவியுற்றோம்
وَأَطَعْنَاۚ
இன்னும் கீழ்ப்படிந்தோம்
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلْمُفْلِحُونَ
வெற்றியாளர்கள்

Innamaa kaana qawlal mu'mineena izaa du'ooo ilal laahi wa Rasoolihee li yahkuma bainahum ai yaqooloo sami'naa wa ata'naa; wa ulaaa'ika humul muflihoon

எனினும், மெய்யாகவே நம்பிக்கை கொண்டவர்களோ அவர்களுக்கு இடையில் (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றித்) தீர்ப்பு பெற அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் வரும்படி அழைக்கப்பட்டால், அதற்கவர்கள் "நாங்கள் செவி சாய்த்தோம்; நாங்கள் வழிப்பட்டோம்" என்று கூறுவதைத் தவிர, வேறு ஒன்றும் கூறுவதில்லை. இத்தகையவர்கள்தாம் முற்றிலும் வெற்றி அடைந்தவர்கள்.

Tafseer

وَمَن
யார்
يُطِعِ
கீழ்ப்படிகின்றார்
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கும்
وَرَسُولَهُۥ
அவனது தூதருக்கும்
وَيَخْشَ
இன்னும் பயப்படுகிறார்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَيَتَّقْهِ
இன்னும் அவனை அஞ்சிக் கொள்கிறார்
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلْفَآئِزُونَ
நற்பாக்கியம் பெற்றவர்கள்

Wa mai yuti'il laaha wa Rasoolahoo wa yakhshal laaha wa yattaqhi fa ulaaa'ika humul faaa'izoon

எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வுக்குப் பயந்து (அவனுக்கு மாறு செய்வதை விட்டு) விலகிக் கொண்டார்களோ அத்தகையவர்தாம் நிச்சயமாக பெரும் பாக்கியம் பெற்றவர்கள்.

Tafseer

وَأَقْسَمُوا۟
சத்தியம் செய்தனர்
بِٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
جَهْدَ
கடுமையாக
أَيْمَٰنِهِمْ
அவர்களது சத்தியங்கள்
لَئِنْ أَمَرْتَهُمْ
நீங்கள் அவர்களுக்கு கட்டளையிட்டால்
لَيَخْرُجُنَّۖ
நிச்சயமாக அவர்கள் வெளியேறுவார்கள்
قُل
கூறுவீராக
لَّا تُقْسِمُوا۟ۖ
நீங்கள் சத்தியமிடாதீர்கள்
طَاعَةٌ
கீழ்ப்படிதலே
مَّعْرُوفَةٌۚ
அறியப்பட்ட
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
خَبِيرٌۢ
ஆழ்ந்தறிபவன்
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதை

Wa aqsamoo billaahi jahda aimaanihim la'in amartahum la yakhrujunna qul laa tuqsimoo taa'atum ma'roofah innal laaha khabeerum bimaa ta'maloon

(நபியே! நயவஞ்சகர்களாகிய) அவர்களுக்கு நீங்கள் கட்டளையிட்டால், அவர்களும் நிச்சயமாக (போருக்குப்) புறப்பட்டு விடுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கூறுகிறார்கள். நீங்கள் (அவர்களை நோக்கிக்) கூறுங்கள்: "(இவ்வாறு) சத்தியம் செய்யாதீர்கள்! நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதாகக் கூறுவதன் உண்மை தெரிந்த விஷயம்தான். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்."

Tafseer

قُلْ
கூறுவீராக
أَطِيعُوا۟
கீழ்ப்படியுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கு
وَأَطِيعُوا۟
இன்னும் கீழ்ப்படியுங்கள்
ٱلرَّسُولَۖ
தூதருக்கு
فَإِن تَوَلَّوْا۟
நீங்கள் விலகிச் சென்றால்
فَإِنَّمَا
எல்லாம்
عَلَيْهِ
அவர் மீது
مَا حُمِّلَ
எது/சுமத்தப்பட்டது
وَعَلَيْكُم
இன்னும் உங்கள் மீது
مَّا
எது
حُمِّلْتُمْۖ
சுமத்தப்பட்டீர்கள்
وَإِن تُطِيعُوهُ
நீங்கள் கீழ்ப்படிந்தால்/அவருக்கு
تَهْتَدُوا۟ۚ
நேர்வழி பெறுவீர்கள்
وَمَا
கடமை இல்லை
عَلَى ٱلرَّسُولِ
தூதர் மீது
إِلَّا
தவிர
ٱلْبَلَٰغُ
எடுத்துரைப்பதை
ٱلْمُبِينُ
தெளிவாக

Qul atee'ul laaha wa atee'ur Rasoola fa in tawallaw fa innamaa 'alaihi maa hummila wa 'alaikum maa hummiltum wa in tutee'oohu tahtadoo; wa maa'alar Rasooli illal balaaghul mubeen

(மேலும்) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் (உண்மையாக) கட்டுப்பட்டு நடங்கள். நீங்கள் புறக்கணித்தாலோ (நமக்கொன்றும் நஷ்டமில்லை. ஏனென்றால்) அவர் மீதுள்ள கடமை எல்லாம், அவர் (தன்) மீது சுமத்தப்பட்ட (தூதை உங்களுக்கு எடுத்துரைப்ப)துதான். உங்கள் மீதுள்ள கடமையெல்லாம் உங்கள் மீது சுமத்தப்பட்ட (அவருக்கு கட்டுப்பட்டு நடப்ப)துதான். நீங்கள் அவருக்கு கட்டுப்பட்டு நடந்தால் நீங்கள்தாம் நேரான வழியில் சென்று விடுவீர்கள். (நம் தூதைப்) பகிரங்கமாக (தெளிவாக) அறிவிப்பதைத் தவிர, வேறொன்றும் நம் தூதர் மீது கடமையில்லை.

Tafseer

وَعَدَ
வாக்களித்துள்ளான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
مِنكُمْ
உங்களில்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நற்செயல்களை
لَيَسْتَخْلِفَنَّهُمْ
இவர்களை பிரதிநிதிகளாக ஆக்குவான்
فِى ٱلْأَرْضِ
இப்பூமியில்
كَمَا
போன்று
ٱسْتَخْلَفَ
பிரதிநிதிகளாக ஆக்கியது
ٱلَّذِينَ مِن
இவர்களுக்கு முன்னுள்ளவர்களை
وَلَيُمَكِّنَنَّ
இன்னும் பலப்படுத்தித்தருவான்
لَهُمْ
இவர்களுக்கு
دِينَهُمُ
இவர்களுடைய மார்க்கத்தை
ٱلَّذِى ٱرْتَضَىٰ
எது/அவன் திருப்தி கொண்டான்
لَهُمْ
இவர்களுக்காக
وَلَيُبَدِّلَنَّهُم
இன்னும் இவர்களுக்கு மாற்றித்தருவான்
مِّنۢ بَعْدِ
பின்னர்
خَوْفِهِمْ
இவர்களது பயத்திற்கு
أَمْنًاۚ
நிம்மதியை
يَعْبُدُونَنِى
இவர்கள் என்னை வணங்குவார்கள்
لَا يُشْرِكُونَ
இணைவைக்க மாட்டார்கள்
بِى
எனக்கு
شَيْـًٔاۚ
எதையும்
وَمَن
யார்
كَفَرَ
நிராகரிப்பார்களோ
بَعْدَ
பின்னர்
ذَٰلِكَ
இதற்கு
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلْفَٰسِقُونَ
பாவிகள்

Wa'adal laahul lazeena aamanoo minkum wa 'amilus saalihaati la yastakhlifan nahum fil ardi kamastakh lafal lazeena min qablihim wa la yumakkinanna lahum deenahumul lazir tadaa lahum wa la yubaddilannahum mim ba'di khawfihim amnaa; ya'budoonanee laayushrikoona bee shai'aa; wa man kafara ba'da zaalika fa ulaaa'ika humul faasiqoon

(மனிதர்களே!) உங்களில் எவரேனும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து வந்தால், அவர்களுக்கு முன்னர் சென்றவர்களை(ப் பூமிக்கு) அதிபதிகளாக்கியது போன்றே இவர்களையும் நிச்சயமாகப் பூமிக்கு அதிபதியாக்கி வைப்பதாகவும், அவன் விரும்பிய மார்க்கத்தில் இவர்களை உறுதியாக்கி வைப்பதாகவும், அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு இவர்களுடைய பயத்தை மாற்றி விடுவதாகவும் நிச்சயமாக அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். (அன்றி) அவன் தன்னையே வணங்கும்படியாகவும், யாதொன் றையும் தனக்கு இணையாக்கக் கூடாது என்றும் அவன் கட்டளையிட்டிருக்கின்றான். இதன் பின்னர், எவரேனும் நிராகரிப்பவர்களாகி விட்டால் நிச்சயமாக அவர்கள் பெரும் பாவிகள்தாம்.

Tafseer

وَأَقِيمُوا۟
இன்னும் நிலைநிறுத்துங்கள்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَءَاتُوا۟
இன்னும் கொடுங்கள்
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
وَأَطِيعُوا۟
இன்னும் கீழ்ப்படியுங்கள்
ٱلرَّسُولَ
தூதருக்கு
لَعَلَّكُمْ تُرْحَمُونَ
நீங்கள் வெற்றி பெறுவதற்காக

Wa aqeemus Salaata wa aatuz Zakaata wa atee'ur Rasoola la'allakum turhamoon

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தொழுகையைக் கடைப்பிடித்தொழுகி, ஜகாத்தும் கொடுத்து (அவனுடைய) தூதரை (முற்றிலும்) பின்பற்றி வாருங்கள். நீங்கள் (இறைவனுடைய) அருளை அடைவீர்கள்.

Tafseer

لَا تَحْسَبَنَّ
எண்ணிவிடாதீர்கள்
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்களை
مُعْجِزِينَ فِى
பலவீனப்படுத்தி விடுபவர்களாக/இப்பூமியில்
وَمَأْوَىٰهُمُ
இன்னும் அவர்கள் தங்குமிடம்
ٱلنَّارُۖ
நரகம்தான்
وَلَبِئْسَ ٱلْمَصِيرُ
அது தங்குமிடங்களில் மிகக் கெட்டது

Laa tahsabannal lazeena kafaroo mu'jizeena fil ard; wa maawaahumun Naaru wa labi'sal maseer

(நபியே!) நிராகரிப்பவர்கள் பூமியில் (ஓடி ஒளிந்து தப்பித்துக்கொண்டு) நம்மைத் தோற்கடித்து விடுவர் என நீங்கள் எண்ணவேண்டாம். (அவர்களைத் தண்டனைக்குள்ளாக்கியே தீருவோம். மறுமையில்) அவர்கள் செல்லுமிடம் நரகம்தான். அது தங்குமிடங்களில் மிகக் கெட்டது.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
لِيَسْتَـْٔذِنكُمُ
உங்களிடம் அனுமதி கோரட்டும்
ٱلَّذِينَ
எவர்கள்
مَلَكَتْ
சொந்தமாகியவர்களும்
أَيْمَٰنُكُمْ
உங்கள் வலக்கரங்கள்
وَٱلَّذِينَ لَمْ
அடையாதவர்களும்
ٱلْحُلُمَ
பருவத்தை
مِنكُمْ
உங்களில்
ثَلَٰثَ
மூன்று
مَرَّٰتٍۚ
நேரங்களில்
مِّن قَبْلِ
முன்
صَلَوٰةِ
தொழுகைக்கு
ٱلْفَجْرِ
காலை
وَحِينَ تَضَعُونَ
மதியத்தில்
ثِيَابَكُم
உங்கள் ஆடைகளை
مِّنَ ٱلظَّهِيرَةِ
நீங்கள் களைந்துவிடும் நேரத்தில்
وَمِنۢ بَعْدِ
பின்
صَلَوٰةِ
தொழுகைக்கு
ٱلْعِشَآءِۚ
இஷா
ثَلَٰثُ
மூன்றும்
عَوْرَٰتٍ
மறைவான நேரங்கள்
لَّكُمْۚ
உங்களுக்கு
لَيْسَ
இல்லை
عَلَيْكُمْ
உங்கள் மீதும்
وَلَا عَلَيْهِمْ
அவர்கள் மீதும்
جُنَاحٌۢ
குற்றம்
بَعْدَهُنَّۚ
அவர்கள் பின்பு
طَوَّٰفُونَ
அதிகம் வந்துபோகக் கூடியவர்கள்
عَلَيْكُم
உங்களிடம்
بَعْضُكُمْ
உங்களில் சிலர்
عَلَىٰ
மீது
بَعْضٍۚ
சிலரின்
كَذَٰلِكَ
இவ்வாறு
يُبَيِّنُ
தெளிவுபடுத்துகிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَكُمُ
உங்களுக்கு
ٱلْءَايَٰتِۗ
வசனங்களை
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلِيمٌ
நன்கறிந்தவன்
حَكِيمٌ
மகா ஞானவான்

Yaaa aiyuhal lazeena aamanoo li yastaazinkumul lazeena malakat aimaanukum wallazeena lam yablughul huluma minkum salaasa marraat; min qabli Salaatil Fajri wa heena tada'oona siyaa bakum minaz zaheerati wa mim ba'di Salaatil Ishaaa'; salaasu 'awraatil lakum; laisa 'alaikum wa laa 'alaihim junaahum ba'dahunn; tawwaafoona 'alaikum ba'dukum 'alaa ba'd; kazaalika yubaiyinul laahu lakumul aayaat wallaahu 'Aleemun Hakeem

நம்பிக்கையாளர்களே! உங்களுடைய அடிமைகளும், உங்களில் பருவமடையாத (சிறிய) பிள்ளைகளும் (நீங்கள் திரைக்குள் அந்தரங்கமாக இருக்கக்கூடிய நேரங்களில்) உங்களிடம் (வருவாராயின் உங்களுடைய) அனுமதியை மூன்று தடவைகள் அவர்கள் கோரவேண்டும். (அந்த நேரங்களாவன:) "ஃபஜ்ரு" தொழுகைக்கு முன்னரும் (படுக்கைக்காக உங்கள் மேல் மிச்சமான) ஆடைகளைக் களைந்திருக்கக்கூடிய "லுஹர்" வேளையிலும், "இஷா" நேரத்தில் தொழுகைக்குப் பின்னரும் ஆகிய (இம்) மூன்று நேரங்களும் நீங்கள் திரைக்குள் அந்தரங்கமாக இருக்கக்கூடிய நேரங்கள். (இவைகளைத் தவிர மற்ற நேரங்களில் அவர்கள் உங்கள் அனுமதியின்றியே உங்களிடம் வருவது) அவர்கள் மீது குற்றமல்ல. (ஏனென்றால்,) இவர்கள் அடிக்கடி உங்களிடம் வரக்கூடியவர் களாகவும், உங்களில் ஒருவர் மற்றவரிடம் அடிக்கடி செல்ல வேண்டியவர்களாகவும் இருப்பதனாலும் (அடிக்கடி அனுமதி கோரவேண்டிய அவசியமில்லை.) இவ்வாறு அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَإِذَا بَلَغَ
அடைந்துவிட்டால்
ٱلْأَطْفَٰلُ
குழந்தைகள்
مِنكُمُ
உங்களின்
ٱلْحُلُمَ
பருவத்தை
فَلْيَسْتَـْٔذِنُوا۟
அவர்கள் அனுமதி கோரட்டும்
كَمَا ٱسْتَـْٔذَنَ
அனுமதி கோரியது போன்று
ٱلَّذِينَ مِن
அவர்களுக்கு முன்னுள்ளவர்கள்
كَذَٰلِكَ
இவ்வாறு
يُبَيِّنُ
தெளிவுபடுத்துகிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَكُمْ
உங்களுக்கு
ءَايَٰتِهِۦۗ
தனது வசனங்களை
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلِيمٌ
நன்கறிந்தவன்
حَكِيمٌ
மகா ஞானவான்

Wa izaa balaghal atfaalu minkumul huluma fal yastaazinoo kamas taazanal lazeena min qablihim; kazaalika yubaiyinul laahu lakum Aayaatih; wallaahu 'Aleemun Hakeem

உங்கள் குழந்தைகள் பருவமடைந்துவிடும் பட்சத்தில், அவர்களும் தங்களுக்கு மூத்தவர்கள் அனுமதி கோரவேண்டிய பிரகாரம் அனுமதி கோரவேண்டும். இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَٱلْقَوَٰعِدُ
வயது முதிர்ந்தவர்கள்
مِنَ ٱلنِّسَآءِ
பெண்களில்
ٱلَّٰتِى لَا
ஆசைப்படாதவர்கள்
نِكَاحًا
திருமணத்தை
فَلَيْسَ
இல்லை
عَلَيْهِنَّ
அவர்கள் மீது
جُنَاحٌ
குற்றம்
أَن يَضَعْنَ
அவர்கள் கழட்டுவதில்
ثِيَابَهُنَّ
அவர்களின் துப்பட்டாக்களை
غَيْرَ مُتَبَرِّجَٰتٍۭ
வெளியே வராமல்
بِزِينَةٍۖ
அலங்காரங்களுடன்
وَأَن يَسْتَعْفِفْنَ
அவர்கள் பேணுதலாக இருப்பது
خَيْرٌ
சிறந்தது
لَّهُنَّۗ
அவர்களுக்கு
وَٱللَّهُ
அல்லாஹ்
سَمِيعٌ
நன்கு செவியேற்பவன்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Walqawaa'idu minan nisaaa'il laatee laa yarjoona nikaahan falisa 'alaihinna junaahun ai yada'na siyaabahunna ghaira mutabar rijaatim bizeenah; wa ai yasta'fifna khairul lahunn; wallaahu Samee'un 'Aleem

திருமண விருப்பமற்ற முதிர்ந்த வயதுடைய (நடமாட முடியாது) உட்கார்ந்தே இருக்கக்கூடிய கிழவிகள், தங்கள் அழகைக் காண்பிக்க வேண்டுமென்ற நோக்கமின்றித் தங்கள் மேல் ஆடைகளைக் களைந்து விட்டிருப்பதில் அவர்கள் மீது குற்றமில்லை. இதனையும் அவர்கள் தவிர்த்துக்கொள்வதே அவர்களுக்கு மிக்க நன்று. அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer