Skip to main content

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
لَا
கேள்வி கேட்காதீர்கள்
تَسْـَٔلُوا۟
பல விஷயங்கள் பற்றி
عَنْ أَشْيَآءَ
அவை வெளியாக்கப்பட்டால்/உங்களுக்கு
تُبْدَ
வருத்தமளிக்கும்/உங்களுக்கு
لَكُمْ تَسُؤْكُمْ
நீங்கள் கேள்வி கேட்டால்
وَإِن
அவற்றைப் பற்றி
تَسْـَٔلُوا۟
நேரத்தில்
عَنْهَا
இறக்கப்படும்
حِينَ
குர்ஆன்
يُنَزَّلُ
வெளியாக்கப்படும்/உங்களுக்கு
ٱلْقُرْءَانُ
மன்னித்தான்
تُبْدَ لَكُمْ
அல்லாஹ்/அவற்றை
عَفَا
அல்லாஹ்
ٱللَّهُ
மகா மன்னிப்பாளன்
عَنْهَاۗ
பெரும் சகிப்பாளன்
وَٱللَّهُ
Err
غَفُورٌ
Err
حَلِيمٌ
Err

yaaa aiyuhal lazeena aamanoo laa tas'aloo 'an ashyaaa'a in tubda lakum tasu'kum wa in tas'aloo 'anhaa heena yunazzalul Qur'aanu tubda lakum; 'afallaahu 'anhaa; wallaahu Ghafoorun Haleem

நம்பிக்கையாளர்களே! (நபியிடம் அவசியமின்றி) ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் (துருவித்துருவிக்) கேட்டுக்கொண்டிருக் காதீர்கள். (பல விஷயங்கள்) உங்களுக்கு அறிவிக்கப்பட்டால் (அவை) உங்களுக்கு வருத்தம் தரக்கூடும். அதிலும் இந்தக் குர்ஆன் அருளப்பெறும் சமயத்தில், அத்தகைய விஷயங்களைப் பற்றி நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தால் அவை உங்களுக்கு தெளிவாக்கப்பட்டு (கடமையாகி)விடும். (அதனால் நீங்கள் கஷ்டத்திற்குள்ளாகி விடலாம். எனினும், இதுசமயம்) அதனைப் பற்றி அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான். ஏனென்றால், அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், சகித்துக்கொள்பவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

قَدْ سَأَلَهَا
திட்டமாக/கேட்டார்(கள்)/அவற்றைப் பற்றி
قَوْمٌ
சில மக்கள்
مِّن قَبْلِكُمْ
உங்களுக்கு முன்பு
ثُمَّ
பிறகு
أَصْبَحُوا۟ بِهَا
மாறிவிட்டனர்/அவற்றை
كَٰفِرِينَ
நிராகரிப்பவர்களாக

Qad sa alahaa qawmum min qablikum summa asbahoo bihaa kaafireen

உங்களுக்கு முன்னிருந்த மக்களும் (அவர்களுடைய நபியிடம் இத்தகைய) கேள்விகளையே கேட்டுக் கொண்டிருந்தனர். (அவை அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட) பின்னர் அவர்கள் அவற்றை நிராகரிப்பவர்களாக(த்தான்) மாறி விட்டார்கள்.

Tafseer

مَا جَعَلَ
ஏற்படுத்தவில்லை
ٱللَّهُ
அல்லாஹ்
مِنۢ
எதையும்
بَحِيرَةٍ
பஹீரா
وَلَا سَآئِبَةٍ
ஸாயிபா
وَلَا وَصِيلَةٍ
வஸீலா
وَلَا حَامٍۙ
ஹறாம்
وَلَٰكِنَّ ٱلَّذِينَ
எனினும்/எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
يَفْتَرُونَ
கற்பனை செய்கின்றனர்
عَلَى ٱللَّهِ
அல்லாஹ் மீது
ٱلْكَذِبَۖ
பொய்யை
وَأَكْثَرُهُمْ
அவர்களில் அதிகமானவர்கள்
لَا يَعْقِلُونَ
புரிய மாட்டார்கள்

Maa ja'alal laahu mim baheeratinw wa laa saaa'ibatinw wa laa waseelatinw wa laa haaminw wa laakinnal lazeena kafaroo yaftaroona 'alallaahil kazib; wa aksaruhum laa ya'qiloon

பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் (போன்ற) இவைகளெல்லாம் அல்லாஹ் ஏற்படுத்தியவைகளல்ல. எனினும், நிராகரிப்பவர்கள்தான் (இவைகள் அல்லாஹ் ஏற்படுத்தியவைகள் என) அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்(து கூறு) கின்றனர். அவர்களில் பலர் (உண்மையை) விளங்காதவர்களாகவே இருக்கின்றனர்.

Tafseer

وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
لَهُمْ
அவர்களுக்கு
تَعَالَوْا۟
வாருங்கள்
إِلَىٰ
பக்கம்
مَآ أَنزَلَ
எது/இறக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
وَإِلَى
இன்னும் பக்கம்
ٱلرَّسُولِ
தூதர்
قَالُوا۟
கூறினர்
حَسْبُنَا
எங்களுக்குப் போதும்
مَا وَجَدْنَا
எது/கண்டோம்
عَلَيْهِ
அதன் மீது
ءَابَآءَنَآۚ
எங்கள் மூதாதைகளை
أَوَلَوْ كَانَ
இருந்தாலுமா?
ءَابَآؤُهُمْ
மூதாதைகள் அவர்களுடைய
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
شَيْـًٔا
எதையும்
وَلَا يَهْتَدُونَ
இன்னும் நேர்வழி பெறமாட்டார்கள்

Wa izaa qeela lahum ta'aalaw ilaa maaa anzalallaahu wa ilar Rasooli qaaloo hasbunaa maa wajadnaa 'alaihi aabaaa'anaa; awa law kaana aabaaa'uhum laa ya'lamoona shai'anw wa laa yahtadoon

"அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய தூதரின் பக்கமும் வாருங்கள்" என அவர்களுக்குக் கூறப்பட்டால், "எங்களுடைய மூதாதைகள் எதன் மீதிருக்க நாங்கள் கண்டோமோ அதுவே (நாங்கள் பின்பற்ற) எங்களுக்கு போதும்" எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் யாதொன்றையும் அறிந்து கொள்ளாமலும், நேரான வழியில் இல்லாமலும் இருந்தாலுமா (அவர்கள் தங்கள் மூதாதைகளைப் பின்பற்றுவார்கள்!)

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
عَلَيْكُمْ
காத்துக்கொள்ளுங்கள்
أَنفُسَكُمْۖ
உங்களை
لَا يَضُرُّكُم
தீங்கிழைக்க மாட்டார்/உங்களுக்கு
مَّن
எவர்
ضَلَّ
வழிகெட்டார்
إِذَا ٱهْتَدَيْتُمْۚ
நீங்கள் நேர்வழி சென்றால்
إِلَى
பக்கம்
ٱللَّهِ
அல்லாஹ்
مَرْجِعُكُمْ
உங்கள் மீளுமிடம்
جَمِيعًا
அனைவரும்
فَيُنَبِّئُكُم
ஆகவே அறிவிப்பான்/உங்களுக்கு
بِمَا
எதை
كُنتُمْ
இருந்தீர்கள்
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்

Yaaa aiyuhal lazeena aamanoo 'alaikum anfusakum laa yadurrukum man dalla izah tadaitum; ilal laahi marji'ukum jamee'an fayunabbi'ukum bimaa kuntum ta'maloon

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேரான வழியில் சென்றால் வழி தப்பிய எவனுடைய தீங்கும் உங்களை பாதிக்காது. நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே செல்ல வேண்டியிருக்கின்றது. நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருப்பவைகளைப் பற்றி (அது சமயம்) அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
شَهَٰدَةُ
சாட்சியாக இருக்க வேண்டும்
بَيْنِكُمْ
உங்கள் மத்தியில்
إِذَا حَضَرَ
சமீபித்தால்
أَحَدَكُمُ
உங்களில் ஒருவருக்கு
ٱلْمَوْتُ
மரணம்
حِينَ
நேரத்தில்
ٱلْوَصِيَّةِ
மரண சாஸனம்
ٱثْنَانِ
இருவர்
ذَوَا عَدْلٍ
நீதமான இருவர்
مِّنكُمْ
உங்களில்
أَوْ
அல்லது
ءَاخَرَانِ
வேறிருவர்
مِنْ
சேர்ந்த
غَيْرِكُمْ
நீங்கள் அல்லாத
إِنْ أَنتُمْ
நீங்கள் பயணித்தால்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
فَأَصَٰبَتْكُم
அடைந்தால்/உங்களை
مُّصِيبَةُ
சோதனை
ٱلْمَوْتِۚ
மரணம்
تَحْبِسُونَهُمَا
தடுத்து வையுங்கள்/அவ்விருவரை
مِنۢ بَعْدِ
பின்னர்
ٱلصَّلَوٰةِ
தொழுகை
فَيُقْسِمَانِ
அவ்விருவரும் சத்தியம் செய்யவேண்டும்
بِٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
إِنِ ٱرْتَبْتُمْ
நீங்கள் சந்தேகித்தால்
لَا نَشْتَرِى
வாங்கமாட்டோம்
بِهِۦ
அதற்குப் பகரமாக
ثَمَنًا
ஓர் ஆதாயத்தை
وَلَوْ كَانَ
அவர் இருந்தாலும்
ذَا قُرْبَىٰۙ
உறவினராக
وَلَا نَكْتُمُ
இன்னும் மறைக்க மாட்டோம்
شَهَٰدَةَ
சாட்சி கூறியதில்
ٱللَّهِ
அல்லாஹ்விற்காக
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
إِذًا
அப்போது
لَّمِنَ ٱلْءَاثِمِينَ
பாவிகளில்

Yaaa aiyuhal lazeena aamanoo shahaadatu bainikum izaa hadara ahadakumul mawtu heenal wasiyyatis naani zawaa 'adlim minkum aw aakharaani min ghairikum in antum darabtum fil ardi fa asaabatkum museebatul mawt; tahbi soonahumaa mim ba'dis Salaati fa yuqsimaani billaahi inirtabtum laa nashtaree bihee samananw wa law kaana zaa qurbaa wa laa naktumu shahaadatal laahi innaaa izal laminal aasimeen

நம்பிக்கையாளர்களே! உங்களில் எவருக்கும் மரணம் சமீபித்து (அவர் மரண சாஸனம் கூற விரும்பினால்) அவர் மரண சாஸனம் (வஸீயத்) கூறும் சமயத்தில் உங்களில் நம்பிக்கைக்குரிய (நேர்மையான) இருவர் சாட்சியாக இருக்கவேண்டும். அல்லது உங்களில் எவரும் பூமியில் பயணம் செய்து கொண்டு இருக்கும் பொழுது மரணம் சமீபித்தால் (அது சமயம் சாஸனத்தின் சாட்சிக்காக முஸ்லிமாகிய இருவர் கிடைக்காவிடில்) உங்களை அல்லாத வேறிருவர் (சாட்சியாக) இருக்கவும். (இந்தச் சாட்சிகள் கூறும் விஷயத்தில் உங்களுக்குச் சந்தேகமேற்பட்டால் அவ்விருவரையும் (அஸர்) தொழுகைக்குப் பின் தடுத்து வைத்துக் கொள்ளவும். அவ்விருவரும் "நாங்கள் கூறிய (சாட்சியத்)தைக் கொண்டு யாதொரு பொருளையும் அதற்காக நாங்கள் அடைய விரும்பவில்லை. அவர்கள் எங்கள் உறவினர்களாக இருந்தபோதிலும் நாங்கள் அல்லாஹ்வுக்காக சாட்சி கூறியதில் யாதொன்றையும் மறைக்கவே இல்லை. அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாகி விடுவோம்" என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்.

Tafseer

فَإِنْ عُثِرَ
கண்டுபிடிக்கப்பட்டால்
عَلَىٰٓ
மீது
أَنَّهُمَا
நிச்சயமாக அவ்விருவரும்
ٱسْتَحَقَّآ
உரியவர்களாகி விட்டனர்
إِثْمًا
பாவத்திற்கு
فَـَٔاخَرَانِ
வேறு இருவர்
يَقُومَانِ
நிற்பார்கள்
مَقَامَهُمَا
அவ்விருவருடைய இடத்தில்
مِنَ
இருந்து
ٱلَّذِينَ
எவர்கள்
ٱسْتَحَقَّ
உரிமை ஏற்பட்டது
عَلَيْهِمُ
அவர்களுக்கு
ٱلْأَوْلَيَٰنِ
நெருங்கிய இரு வாரிசுகள்
فَيُقْسِمَانِ
அவ்விருவரும் சத்தியம் செய்யவேண்டும்
بِٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
لَشَهَٰدَتُنَآ
நிச்சயமாக எங்கள்சாட்சியம்
أَحَقُّ
மிக உண்மையானது
مِن شَهَٰدَتِهِمَا
அவ்விருவரின் சாட்சியத்தைவிட
وَمَا ٱعْتَدَيْنَآ
நாங்கள்வரம்புமீறவில்லை
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
إِذًا
அப்போது
لَّمِنَ ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களில்தான்

Fa in 'usira 'alaaa annahumas tahaqqaaa isman fa aakharaani yaqoomaani maqaamahumaa minal lazeenas tahaqqa 'alaihimul awlayaani fa yuqsimaani billaahi lashahaadatunaaa ahaqqu min shahaadatihimaaa wa ma'tadainaaa innaaa izal laminaz zaalimeen

(இவ்வாறு அவர்கள் சத்தியம் செய்து கூறியதிலும்) அவர்கள் பொய்யே கூறினார்கள் என்று நிச்சயமாக தெரியவந்தால் (இந்தப் பொய் சாட்சியத்தினால்) எவருக்கு நஷ்டமேற்பட்டதோ அவர் சார்பில் வேறு இருவர் (சத்தியம் செய்த) அவர்களுடைய இடத்தில் நின்று கொண்டு "அவர்களுடைய சாட்சியத்தைவிட எங்களுடைய சாட்சியம்தான் உண்மையானது (என உறுதி கூறுகிறோம்.) நாங்கள் தவறாக ஏதும் கூறவில்லை. அவ்வாறு கூறினால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்" என்று அவ்விருவரும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூற வேண்டும்.

Tafseer

ذَٰلِكَ أَدْنَىٰٓ
அது/மிக்கசுலபமானது
أَن يَأْتُوا۟
அவர்கள் வருவதற்கு
بِٱلشَّهَٰدَةِ
சாட்சியத்தைக் கொண்டு
عَلَىٰ وَجْهِهَآ
அதற்குரிய முறையில்
أَوْ
அல்லது
يَخَافُوٓا۟
அவர்கள் பயப்படுவது
أَن تُرَدَّ
மறுக்கப்படும்
أَيْمَٰنٌۢ بَعْدَ
சத்தியங்கள்/பின்னர்
أَيْمَٰنِهِمْۗ
அவர்களுடைய சத்தியங்கள்
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَٱسْمَعُوا۟ۗ
செவிசாயுங்கள்
وَٱللَّهُ
அல்லாஹ்
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
ٱلْقَوْمَ
கூட்டத்தை
ٱلْفَٰسِقِينَ
பாவிகளான

Zaalika adnaaa ai yaatoo bishshahaadati 'alaa wajhihaaa aw yakhaafooo an turadda aimaanum ba'da aimaanihim; wattaqul laaha wasma'oo; wallaahu laa yahdil qawmal faasiqeen

உள்ளதை உள்ளவாறு அவர்கள் சாட்சியம் கூறும்படி செய்வதற்கு இது மிக்க சுலபமான வழி. அன்றி, அவர்கள் (பொய்) சத்தியம் செய்தாலும், மற்றவரின் சத்தியம் அதனைத் தடுத்துவிடும் என்று அவர்கள் பயப்படுவதற்கும் (இது மிக்க சுலபமான வழி.) ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (அவன் கட்டளைக்கே) நீங்கள் செவிசாயுங்கள். (இதற்கு மாறு செய்யும்) பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்தமாட்டான்.

Tafseer

يَوْمَ
நாளில்
يَجْمَعُ
ஒன்று சேர்ப்பான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلرُّسُلَ
தூதர்களை
فَيَقُولُ
கூறுவான்
مَاذَآ
என்ன?
أُجِبْتُمْۖ
பதில் கூறப்பட்டீர்கள்
قَالُوا۟
கூறுவார்கள்
لَا عِلْمَ
அறவே ஞானமில்லை
لَنَآۖ
எங்களுக்கு
إِنَّكَ أَنتَ
நிச்சயமாக நீதான்
عَلَّٰمُ
மிக மிக அறிந்தவன்
ٱلْغُيُوبِ
மறைவானவற்றை

yawma yajma'ul laahur Rusula fa yaqoolu maazaaa ujibtum qaaloo laa 'ilma lanaa innaka Anta 'Allaamul Ghuyoob

(நபியே!) ஒரு நாளில் அல்லாஹ் (தன்னுடைய) தூதர்களை ஒன்று சேர்த்து "நீங்கள் எனது தூதை மக்களிடம் எடுத்துரைத்த சமயத்தில்) அவர்கள் உங்களுக்கு என்ன பதில் கூறினார்கள்?" என்று கேட்பான். அதற்கவர்கள் ("நாங்கள் உயிருடன் இருந்த வரையில் அவர்களுடைய வெளிக்கோலத்தையே நாங்கள் அறிவோம். அதற்கு மாறாக உள்ளத்தில் உள்ளதையோ, நாங்கள் இறந்தபின் அவர்கள் செய்ததையோ) நாங்கள் அறியமாட்டோம். நிச்சயமாக நீதான் மறைவான யாவையும் நன்கறிந்தவன்" என்று கூறுவார்கள்.

Tafseer

إِذْ قَالَ
சமயம்/கூறினான்
ٱللَّهُ
அல்லாஹ்
يَٰعِيسَى
ஈஸாவே
ٱبْنَ
மகன்
مَرْيَمَ
மர்யமுடைய
ٱذْكُرْ
நினைவு கூர்வீராக
نِعْمَتِى
என் அருளை
عَلَيْكَ
உம்மீது
وَعَلَىٰ وَٰلِدَتِكَ
இன்னும் மீது/உம் தாய்
إِذْ
சமயம்
أَيَّدتُّكَ
பலப்படுத்தினேன்/உம்மை
بِرُوحِ
ஆத்மாவைக்கொண்டு
ٱلْقُدُسِ
பரிசுத்தமான
تُكَلِّمُ
பேசுவீர்
ٱلنَّاسَ
மக்களிடம்
فِى ٱلْمَهْدِ
தொட்டிலில்
وَكَهْلًاۖ
இன்னும் வாலிபராக
وَإِذْ
இன்னும் சமயம்
عَلَّمْتُكَ
கற்பித்தேன்/உமக்கு
ٱلْكِتَٰبَ
எழுதுவதை
وَٱلْحِكْمَةَ
இன்னும் ஞானத்தை
وَٱلتَّوْرَىٰةَ
இன்னும் தவ்றாத்தை
وَٱلْإِنجِيلَۖ
இன்னும் இன்ஜீலை
وَإِذْ تَخْلُقُ
இன்னும் சமயம்/படைப்பீர்
مِنَ
இருந்து
ٱلطِّينِ
களிமண்
كَهَيْـَٔةِ
உருவத்தைப் போல்
ٱلطَّيْرِ
பறவையின்
بِإِذْنِى
என் அனுமதியினால்
فَتَنفُخُ
ஊதுவீர்
فِيهَا
அதில்
فَتَكُونُ
அது/ஆகிவிடும்
طَيْرًۢا
பறவையாக
بِإِذْنِىۖ
என் அனுமதியினால்
وَتُبْرِئُ
இன்னும் சுகமளிப்பீர்
ٱلْأَكْمَهَ
பிறவிக் குருடரை
وَٱلْأَبْرَصَ
இன்னும் வெண்குஷ்டரை
بِإِذْنِىۖ
என் அனுமதியினால்
وَإِذْ
இன்னும் சமயம்
تُخْرِجُ
வெளியாக்குவீர்
ٱلْمَوْتَىٰ
மரணித்தவர்களை
بِإِذْنِىۖ
என் அனுமதியினால்
وَإِذْ كَفَفْتُ
இன்னும் சமயம்/தடுத்தேன்
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களை
عَنكَ
உம்மைவிட்டு
إِذْ
போது
جِئْتَهُم
வந்தீர்/அவர்களிடம்
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு
فَقَالَ
கூறினார்(கள்)
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
مِنْهُمْ
அவர்களில்
إِنْ هَٰذَآ
இல்லை/இது/தவிர
سِحْرٌ مُّبِينٌ
சூனியம்/தெளிவானது

Iz qaalal laahu yaa 'Eesab-na-Maryamaz kur ni'matee 'alaika wa 'alaa waalidatik; iz aiyattuka bi Roohil Qudusi tukallimun naasa fil mahdi wa kahlanw wa iz 'allamtukal kitaaba wal Hikmata wa Tawraata wal Injeela wa iz Takhluqu minat teeni kahai 'atit tairi bi iznee fatanfukhu feeha fatakoonu tairam bi iznee wa tubri'ul akmaha wal abrasa bi iznee wa iz tukhrijul mawtaa bi iznee wa iz kafaftu Baneee Israaa'eela 'anka iz ji'tahum bil baiyinaati fa qaalal lazeena kafaroo minhum in haazaaa illaa sihrum mubeen

பிறகு அல்லாஹ் (ஈஸாவை நோக்கிக்) கூறுவான்: "மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள்மீதும், உங்கள் தாய் மீது (நான் புரிந்து)ள்ள என்னுடைய அருளை நீங்கள் நினைத்துப் பாருங்கள். பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு உங்களுக்கு உதவி புரிந்து (உங்கள் தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றி) நீங்கள் தொட்டிற்குழந்தையாக இருந்த சமயத்திலும் (உங்கள் தீர்க்க தரிசனத்தைப் பற்றி) வாலிபத்திலும் உங்களைப் பேசச் செய்ததையும் (நினைத்துப் பாருங்கள்.) வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் நான் உங்களுக்குக் கற்பித்ததையும் (நினைத்துப் பாருங்கள்.) அன்றி, நீங்கள் என் கட்டளைப்படி களிமண்ணால் பறவையின் உருவத்தைப் போல் செய்து அதில் நீங்கள் ஊதிய சமயத்தில், அது என் கட்டளையைக் கொண்டு பறவையானதையும், பிறவிக் குருடனையும், வெண் குஷ்டரோகி யையும் என் உதவியினால் நீங்கள் சுகமாக்கியதையும் (நினைத்துப் பாருங்கள்.) நீங்கள் என் அருளைக் கொண்டு மரணித்தவர்களை (கல்லறையிலிருந்து உயிர்கொடுத்து) புறப்படச் செய்ததையும் (நினைத்துப் பாருங்கள்.) அன்றி, இஸ்ராயீலின் சந்ததிகளிடம் நீங்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது அவர்களில் நிராகரித்தவர்கள் நிச்சயமாக இது சந்தேகமற்ற சூனியத்தைத் தவிர வேறல்ல என்று கூறிய(துடன் உங்களுக்குத் தீங்கிழைக்க முயற்சித்த) சமயத்தில் அவர்(களுடைய தீங்கு)களிலிருந்து நான் உங்களை தடுத்துக் கொண்டதையும் நினைத்துப் பாருங்கள்.

Tafseer