Skip to main content

إِنَّمَا يُرِيدُ
எல்லாம்/நாடுகிறான்
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
أَن يُوقِعَ
அவன் உண்டுபண்ணுவது
بَيْنَكُمُ
உங்களுக்குமத்தியில்
ٱلْعَدَٰوَةَ
பகைமை
وَٱلْبَغْضَآءَ
இன்னும் வெறுப்பை
فِى ٱلْخَمْرِ
மதுவினால்
وَٱلْمَيْسِرِ
இன்னும் சூதாட்டத்தினால்
وَيَصُدَّكُمْ
இன்னும் அவன் தடுப்பது/உங்களை
عَن ذِكْرِ
ஞாபகத்திலிருந்து
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَعَنِ ٱلصَّلَوٰةِۖ
இன்னும் தொழுகையிலிருந்து
فَهَلْ أَنتُم
ஆகவே ?/நீங்கள்
مُّنتَهُونَ
விலகுபவர்கள்

Innamaa yureedush Shaitaanu ai yooqi'a bainakumul 'adaawata wal baghdaaa'a fil khamri wal maisiri wa yasuddakum 'an zikril laahi wa 'anis Salaati fahal antum muntahoon

மதுவாலும் சூதாட்டத்தாலும் உங்களுக்கிடையில் பகைமையையும் பொறாமையையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே, அவைகளிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்வீர்களா? (மாட்டீர்களா?)

Tafseer

وَأَطِيعُوا۟
இன்னும் கீழ்ப்படியுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கு
وَأَطِيعُوا۟
இன்னும் கீழ்ப்படியுங்கள்
ٱلرَّسُولَ
தூதருக்கு
وَٱحْذَرُوا۟ۚ
இன்னும் எச்சரிக்கையாக இருங்கள்
فَإِن تَوَلَّيْتُمْ
நீங்கள்திரும்பினால்
فَٱعْلَمُوٓا۟
அறிந்து கொள்ளுங்கள்
أَنَّمَا
நிச்சயமாக
عَلَىٰ رَسُولِنَا
நம் தூதர் மீது
ٱلْبَلَٰغُ
எடுத்துரைப்பது
ٱلْمُبِينُ
தெளிவாக

Wa atee'ul laaha wa atee'ur Rasoola wahzaroo; fa in tawal laitum fa'lamooo annamaa 'alaa Rasoolinal balaaghul mubeen

அல்லாஹ்வுக்கும் வழிப்படுங்கள்; (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் கட்டுப்படுங்கள். (அவர்களுக்கு மாறு செய்யாது) எச்சரிக்கையாக இருங்கள். (இதனை) நீங்கள் புறக்கணித்து விட்டால் (நம்முடைய கட்டளைகளை, உங்களுக்குத்) தெளிவாக எடுத்துரைப்பது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

Tafseer

لَيْسَ
இல்லை
عَلَى ٱلَّذِينَ
மீது/எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
جُنَاحٌ
குற்றம்
فِيمَا
எதில்
طَعِمُوٓا۟
புசித்தார்கள்
إِذَا مَا
தவிர்ந்து கொண்டால்
وَّءَامَنُوا۟
இன்னும் நம்பிக்கை கொண்டார்கள்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
ثُمَّ
பிறகு
ٱتَّقَوا۟
அஞ்சினார்கள்
وَّءَامَنُوا۟
இன்னும் நம்பிக்கை கொண்டார்கள்
ثُمَّ
பிறகு
ٱتَّقَوا۟
அஞ்சினார்கள்
وَّأَحْسَنُوا۟ۗ
இன்னும் நல்லறம் செய்தார்கள்
وَٱللَّهُ
அல்லாஹ்
يُحِبُّ
நேசிக்கிறான்
ٱلْمُحْسِنِينَ
நல்லறம்புரிவோரை

Laisa 'alal lazeena aamanoo wa 'amilus saalihaati junaahun feemaa ta'imooo izaa mat taqaw wa aamanoo wa 'amilus saalihaati summat taqaw wa aamanoo summat taqaw wa ahsanoo; wallaahu yuhibbul muhsineen

நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றவர்கள் (தடுக்கப்பட்ட உணவில்) எதையும் (அது தடை செய்யப்படுவதற்கு முன்னர்) புசித்திருந்தால் (அது) அவர்களின் மீது குற்றமாகாது. அவர்கள் (தடுக்கப்பட்டபின் அவைகளிலிருந்து) விலகி நம்பிக்கையின் மீதே உறுதியாக இருந்து, நற்செயல்களையும் செய்து, (மற்ற பாவங்களிலிருந்தும்) விலகி, நம்பிக்கையை உறுதிப்படுத்தி, (அல்லாஹ்வுக்குப்) பயந்து, (பிறருக்கு) நன்மையும் செய்து கொண்டிருந்தால் (போதுமானது. ஆகவே தடுக்கப்பட்டவற்றை முன்னர் புசித்துவிட்டது பற்றிக் குற்றம் பிடிக்கப்பட மாட்டாது.) அல்லாஹ் (இத்தகைய) நல்லவர்களையே நேசிக்கின்றான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
لَيَبْلُوَنَّكُمُ
நிச்சயமாக சோதிப்பான் / உங்களை
ٱللَّهُ
அல்லாஹ்
بِشَىْءٍ
சிலதைக் கொண்டு
مِّنَ ٱلصَّيْدِ
வேட்டைகளில்
تَنَالُهُۥٓ
அடைந்து விடுகின்றன/அதை
أَيْدِيكُمْ
உங்கள் கரங்கள்
وَرِمَاحُكُمْ
இன்னும் ஈட்டிகள்/உங்கள்
لِيَعْلَمَ
அறிவதற்காக
ٱللَّهُ مَن
அல்லாஹ்/எவர்
يَخَافُهُۥ
பயப்படுகிறார்/தன்னை
بِٱلْغَيْبِۚ
மறைவில்
فَمَنِ ٱعْتَدَىٰ
எவர்/மீறினார்
بَعْدَ ذَٰلِكَ
இதற்குப் பின்பு
فَلَهُۥ
அவருக்கு
عَذَابٌ
வேதனை
أَلِيمٌ
துன்புறுத்தக்கூடியது

Yaaa aiyuhal lazeena aamanoo la yabluwannnakumul laahu bishai'im minas saidi tanaaluhooo aideekum wa rimaahukum liya'lamal laahu mai yakhaafuhoo bilghaib; famani' tadaa ba'da zaalika falahoo 'azaabun aleem

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வைப் பார்க்காமலே அவனை அஞ்சுபவர் யார் என்பதை அவன் அறிவித்து விடு)வதற்காக (நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில்) உங்களுடைய கைகளும், அம்புகளும் (எளிதில்) அடையக்கூடிய யாதொரு வேட்டைப் பொருளைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். இதற்குப் பின்னர் எவரேனும் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறினால் அவருக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
لَا تَقْتُلُوا۟
கொல்லாதீர்கள்
ٱلصَّيْدَ
வேட்டையை
وَأَنتُمْ
நீங்கள்
حُرُمٌۚ
இஹ்ராமுடையவர்கள்
وَمَن
எவர்
قَتَلَهُۥ
கொன்றார்/அதை
مِنكُم
உங்களில்
مُّتَعَمِّدًا
வேண்டுமென்றே (நாடியவராக)
فَجَزَآءٌ
தண்டனை
مِّثْلُ
ஒப்பானது
مَا قَتَلَ
எது/கொன்றார்
مِنَ ٱلنَّعَمِ
இருந்து/கால்நடைகள்
يَحْكُمُ
தீர்ப்பளிப்பர்
بِهِۦ
அதற்கு
ذَوَا عَدْلٍ
நேர்மையான இருவர்
مِّنكُمْ
உங்களில்
هَدْيًۢا
பலியாக
بَٰلِغَ
அடையக் கூடியது
ٱلْكَعْبَةِ
கஅபா
أَوْ
அல்லது
كَفَّٰرَةٌ
பரிகாரம்
طَعَامُ
உணவளிப்பது
مَسَٰكِينَ
ஏழைகள்
أَوْ
அல்லது
عَدْلُ
சமமானது
ذَٰلِكَ
அது
صِيَامًا
நோன்பால்
لِّيَذُوقَ
அவன் அனுபவிப்பதற்காக
وَبَالَ
கெட்ட முடிவை
أَمْرِهِۦۗ
செயல்/தனது
عَفَا
மன்னித்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَمَّا سَلَفَۚ
முன் நடந்தவற்றை
وَمَنْ
எவன்
عَادَ
மீண்டான்
فَيَنتَقِمُ
தண்டிப்பான்
ٱللَّهُ
அல்லாஹ்
مِنْهُۗ
அவனை
وَٱللَّهُ
அல்லாஹ்
عَزِيزٌ
மிகைத்தவன்
ذُو ٱنتِقَامٍ
தண்டிப்பவன்

Yaaa aiyuhal lazeena aamanoo laa taqtuslus saida wa antum hurum; wa man qatalahoo minkum mut'am midan fajazaaa'um mislu maa qatala minanna'ami yahkumu bihee zawaa 'adlim minkum hadyam baalighal Ka'bati aw kaffaaratun ta'aamu masaakeena aw 'adlu zaalika Siyaamal liyazooqa wabaala amrih; 'afal laahu 'ammaa salaf; wa man 'aada fayanta qimul laahu minh; wallaahu 'azeezun zuntiqaam

நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் வேட்டையாடி மிருகங்களைக் கொல்லாதீர்கள். உங்களில் எவரேனும், அதனை வேண்டுமென்றே கொன்றுவிட்டால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவைகளில் அதற்குச் சமமானதை (பரிகாரமாக) ஈடுகொடுக்க வேண்டும். உங்களில் நேர்மையான இருவர் நீங்கள் (ஈடாகக்) கொடுக்கும் பொருள் அதற்குச் சமமெனத் தீர்ப்பளிக்க வேண்டும். இதனைக் காணிக்கையாக கஅபாவுக்கு அனுப்பிவிட வேண்டும். அல்லது (அதன் மதிப்புக்கு) ஏழைகளுக்கு உணவு அளிப்பது கொண்டு பரிகாரம் செய்ய வேண்டும். (பரிகாரமளிக்கப் பொருள் இல்லாதவன்) தான் செய்த குற்றத்தின் பலனை அனுபவிப்பதற்காக (எண்ணிக்கையில்) அதற்குச் சமமான நோன்புகள் நோற்க வேண்டும். (இதற்கு) முன் நடந்தவைகளை அல்லாஹ் மன்னித்துவிட்டான். (இத்தகைய குற்றம் செய்ய) எவரேனும் பின்னும் மீண்டால் அல்லாஹ் அவனை தண்டிப்பான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன், (குற்றவாளிகளை) தண்டிப்பவன்.

Tafseer

أُحِلَّ
அனுமதிக்கப்பட்டுள்ளது
لَكُمْ
உங்களுக்கு
صَيْدُ
வேட்டையாடுவது
ٱلْبَحْرِ
கடலில்
وَطَعَامُهُۥ
இன்னும் அதை புசிப்பது
مَتَٰعًا
பயனளிப்பதற்காக
لَّكُمْ
உங்களுக்கு
وَلِلسَّيَّارَةِۖ
இன்னும் பயணிகளுக்கு
وَحُرِّمَ
விலக்கப்பட்டுள்ளது
عَلَيْكُمْ
உங்களுக்கு
صَيْدُ
வேட்டையாடுவது
ٱلْبَرِّ
தரையில்
مَا دُمْتُمْ
இருக்கும்போதெல்லாம்
حُرُمًاۗ
இஹ்ராமுடைய வர்களாக
وَٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
ٱلَّذِىٓ
எவன்
إِلَيْهِ
அவன் பக்கம்
تُحْشَرُونَ
நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்

Uhilla lakum saidul bahri wa ta'aamuhoo mataa'al lakum wa lissaiyaarati wa hurrima 'alaikum saidul barri maa dumtum hurumaa; wattaqul laahal lazeee ilaihi tuhsharoon

(நம்பிக்கையாளர்களே!) நீரில் வேட்டையாடுவதும், அதனை இன்பமாக புசிப்பதும் (இஹ்ராம் அணிந்துள்ள) உங்களுக்கும் (மற்ற) பிரயாணிகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளன. எனினும், நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் வரை (நீர் நிலையில்லாமல்) தரையில் வேட்டையாடுவது உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. ஆகவே, அல்லாஹ்வுக்குப் பயந்து நட(ந்து கொள்ளு)ங்கள். அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்.

Tafseer

جَعَلَ
ஆக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْكَعْبَةَ
கஅபாவை
ٱلْبَيْتَ
வீடு
ٱلْحَرَامَ
புனிதமானது
قِيَٰمًا
அபயமளிக்கக்கூடியது,
لِّلنَّاسِ
மக்களுக்கு
وَٱلشَّهْرَ
இன்னும் மாதத்தை
ٱلْحَرَامَ
புனிதமானது
وَٱلْهَدْىَ
இன்னும் பலியை
وَٱلْقَلَٰٓئِدَۚ
இன்னும் மாலைகளை
ذَٰلِكَ
அது
لِتَعْلَمُوٓا۟
நீங்கள் அறிந்து கொள்வதற்காக
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
يَعْلَمُ
அறிகிறான்
مَا فِى
எவை/வானங்களில்
وَمَا
இன்னும் எது
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Ja'alal laahul Ka'batal Baital Haraama qiyaamal linnaasi wash Shahral Haraama walhadya walqalaaa'id; zaalika lita'lamooo annal laaha ya'lamu maa fis samaawaati wa maa fil ardi wa annal laaha bikulli shai'in 'Aleem

சிறப்புற்ற வீடாகிய கஅபாவை மனிதர்களுக்கு அபயம் அளிக்கக்கூடிய இடமாக அல்லாஹ் ஆக்கியிருக்கின்றான். (அவ்வாறே துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இந்நான்கு) சிறப்புற்ற மாதங்களையும், (ஹஜ்ஜின்) குர்பானிகளையும், (அல்லாஹ்வுடைய காணிக்கை என்பதற்காக) அடையாளம் இடப்பட்ட மிருகங்களையும் (அபயம் பெற்றவைகளாக ஆக்கியிருக்கின்றான்.) வானங்களிலும், பூமியிலுமுள்ள யாவையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகின்றான் என்பதை நீங்கள் அறிவதற்காகவே (இவ்வாறு செய்தான்.) நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்து கொள்கின்றான்.

Tafseer

ٱعْلَمُوٓا۟
அறிந்து கொள்ளுங்கள்
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
شَدِيدُ
கடுமையானவன்
ٱلْعِقَابِ
தண்டனை
وَأَنَّ ٱللَّهَ
இன்னும் நிச்சயமாக அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்

I'lamooo annal laaha shadeedul 'iqaabi wa annal laaha Ghafoorur Raheem

நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவனாக இருப்பதுடன் நிச்சயமாக அல்லாஹ் மிக்க பிழை பொறுத்துக் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.

Tafseer

مَّا
கடமை இல்லை
عَلَى
மீது
ٱلرَّسُولِ
தூதர்
إِلَّا
தவிர
ٱلْبَلَٰغُۗ
எடுத்துரைப்பது
وَٱللَّهُ
அல்லாஹ்
يَعْلَمُ
நன்கறிவான்
مَا
எதை
تُبْدُونَ
வெளிப்படுத்துகிறீர்கள்
وَمَا
இன்னும் எதை
تَكْتُمُونَ
மறைக்கிறீர்கள்

Maa 'alar Rasooli illal balaagh; wallaahu ya'lamu maa tubdoona wa maa taktumoon

நம் தூதருடைய கடமை (நம்முடைய) தூதை எடுத்துரைப்பதே தவிர (அவ்வாறே நடக்கும்படி உங்களை நிர்ப்பந்திப்பது) அல்ல. நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்.

Tafseer

قُل
கூறுவீராக
لَّا يَسْتَوِى
சமமாகாது
ٱلْخَبِيثُ
தீயது
وَٱلطَّيِّبُ
இன்னும் நல்லது
وَلَوْ أَعْجَبَكَ
உம்மை ஆச்சரியப்படுத்தினாலும்
كَثْرَةُ
அதிகமாக இருப்பது
ٱلْخَبِيثِۚ فَٱتَّقُوا۟
தீயது/ஆகவேஅஞ்சுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
يَٰٓأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
அறிவாளிகளே
لَعَلَّكُمْ تُفْلِحُونَ
நீங்கள் வெற்றி பெறுவதற்காக

Qul laa yastawil khabeesu wattaiyibu wa law a'jabaka kasratul khabees; fattaqul laaha yaaa ulil albaabi la'allakum tuflihoon

(நபியே! நீங்கள் அவர்களை நோக்கி "எங்கும்) தீயவைகளே அதிகரித்திருப்பது உங்களை ஆச்சரியப்படுத்தியபோதிலும், நல்லதும் தீயதும் சமமாகாது. ஆகவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்குப் பயந்து (தீயவற்றிலிருந்து விலகிக்) கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி அடைவீர்கள்" என்று கூறுங்கள்.

Tafseer