Skip to main content
bismillah

سَبَّحَ
துதிக்கின்றார்கள்
لِلَّهِ
அல்லாஹ்வை
مَا فِى
வானங்களில் உள்ளவர்களும்
وَمَا فِى
பூமியில் உள்ளவர்களும்
وَهُوَ
அவன்தான்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்

Sabbaha lillaahi maa fisamaawaati wa maa fil ardi wa huwal 'Azeezul Hakeem

வானங்களில் உள்ளவைகளும், பூமியில் உள்ளவைகளும் அல்லாஹ்வைத் துதி செய்து கொண்டிருக்கின்றன. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
لِمَ تَقُولُونَ
ஏன் கூறுகிறீர்கள்?
مَا لَا
நீங்கள் செய்யாதவற்றை

Yaa ayyuhal lazeena aamanoo lima taqooloona maa laa taf'aloon

நம்பிக்கையாளர்களே! நீங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்வேன் என்று அல்லது செய்ததாக) ஏன் கூறுகின்றீர்கள்?

Tafseer

كَبُرَ مَقْتًا
பெரும் கோபத்திற்குரியது
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
أَن تَقُولُوا۟
நீங்கள் கூறுவது
مَا لَا
நீங்கள் செய்யாதவற்றை

Kabura maqtan 'indal laahi an taqooloo maa laa taf'aloon

நீங்கள் செய்யாத காரியங்களைச் (செய்வேன் என்று அல்லது) செய்ததாகக் கூறுவது அல்லாஹ்விடத்தில் பெரும் பாவமாக இருக்கின்றது.

Tafseer

إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
يُحِبُّ
விரும்புகின்றான்
ٱلَّذِينَ يُقَٰتِلُونَ
போர் புரிபவர்களை
فِى سَبِيلِهِۦ
அவனுடைய பாதையில்
صَفًّا
வரிசையாக நின்று
كَأَنَّهُم بُنْيَٰنٌ
அவர்களோ கட்டிடத்தைப் போல்
مَّرْصُوصٌ
உறுதியான(து)

Innal laaha yuhibbul lazeena yuqaatiloona fee sabeelihee saffan kaannahum bunyaanum marsoos

(நம்பிக்கையாளர்களே!) எவர்கள் ஈயத்தால் உருக்கி வார்க்கப்பட்ட பலமான அரணைப்போல அணியில் (இருந்து பின்வாங்காது) நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கின்றான்.

Tafseer

وَإِذْ قَالَ
கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
مُوسَىٰ
மூஸா
لِقَوْمِهِۦ
தனது மக்களுக்கு
يَٰقَوْمِ
என் மக்களே!
لِمَ تُؤْذُونَنِى
எனக்கு ஏன் தொந்தரவு தருகிறீர்கள்?
وَقَد
திட்டமாக
تَّعْلَمُونَ
நீங்கள் அறிவீர்கள்
أَنِّى
நிச்சயமாக நான்
رَسُولُ
தூதர்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
إِلَيْكُمْۖ
உங்களுக்கு
فَلَمَّا زَاغُوٓا۟
அவர்கள் சருகிய போது
أَزَاغَ
திருப்பிவிட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்(வும்)
قُلُوبَهُمْۚ
அவர்களின் உள்ளங்களை
وَٱللَّهُ
அல்லாஹ்
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
ٱلْقَوْمَ
மக்களை
ٱلْفَٰسِقِينَ
பாவிகளான

Wa iz qaala Moosa liqawmihee yaa qawmi lima tu'zoonanee wa qat ta'lamoona annee Rasoolul laahi ilaikum falammaa zaaghooo azaaghal laahu quloobahum; wallaahu laa yahdil qawmal faasiqeen

மூஸா தன் மக்களை நோக்கி "என்னுடைய மக்களே! என்னை ஏன் நீங்கள் துன்புறுத்துகின்றீர்கள். மெய்யாகவே நான் உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வுடைய தூதர் என்பதை நிச்சயமாக நீங்கள் நன்கறிவீர்களே" என்று கூறியதை (நபியே! நீங்கள்) நினைத்துப் பாருங்கள். (நேரான பாதையிலிருந்து) அவர்கள் விலகவே, அல்லாஹ்வும் அவர்களுடைய உள்ளங்களை (நேரான பாதையிலிருந்து) திருப்பிவிட்டான். பாவம் செய்யும் மக்களை அல்லாஹ் நேரான பாதையில் செலுத்துவதில்லை.

Tafseer

وَإِذْ قَالَ
கூறியதை நினைவு கூர்வீராக!
عِيسَى
ஈஸா
ٱبْنُ مَرْيَمَ
மர்யமுடைய மகன்
يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களே!
إِنِّى
நிச்சயமாக நான்
رَسُولُ
தூதர்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
إِلَيْكُم
உங்களுக்கு
مُّصَدِّقًا
நான் உண்மைப்படுத்துகின்றேன்
لِّمَا بَيْنَ
எனக்கு முன்னுள்ளதை
مِنَ ٱلتَّوْرَىٰةِ
தவ்றாத்தை
وَمُبَشِّرًۢا
இன்னும் நற்செய்தி கூறுகின்றேன்
بِرَسُولٍ
ஒரு தூதரை
يَأْتِى
வருகின்றார்
مِنۢ بَعْدِى
எனக்குப் பின்
ٱسْمُهُۥٓ
அவரது பெயர்
أَحْمَدُۖ
அஹ்மத்
فَلَمَّا
அவர் வந்த போது
جَآءَهُم
அவர்களிடம்
بِٱلْبَيِّنَٰتِ
அத்தாட்சிகளுடன்
قَالُوا۟
கூறினார்கள்
هَٰذَا
இது
سِحْرٌ
சூனியமாகும்
مُّبِينٌ
தெளிவான

Wa iz qaala 'Eesab-nu-Mayama yaa Banee Israaa'eela innee Rasoolul laahi ilaikum musaddiqal limaa baina yadayya minat Tawraati wa mubashshiram bi Rasooliny yaatee mim ba'dis muhooo Ahmad; falammaa jaaa'ahum bil baiyinaati qaaloo haazaa sihrum mubeen

மர்யமுடைய மகன் ஈஸா (இஸ்ராயீலின் சந்ததிகளை நோக்கி) "இஸ்ராயீலின் சந்ததிகளே! மெய்யாகவே நான் உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வுடைய ஒரு தூதர். நான் எனக்கு முன்னுள்ள தவ்றாத்தையும் உண்மைப்படுத்துகின்றேன். எனக்குப் பின்னர் "அஹ்மது" என்னும் பெயர் கொண்ட ஒரு தூதர் வருவதைப் பற்றியும் நான் உங்களுக்கு நற்செய்தி கூறுகின்றேன்" என்று கூறியதை (நபியே! நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். (அவர் அறிவித்தவாறு அத்தூதர்) தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்த (இச்)சமயத்தில் (அவரை நம்பிக்கை கொள்ளாது,) இது தெளிவான சூனியமென்று அவர்கள் கூறுகின்றனர்.

Tafseer

وَمَنْ أَظْلَمُ
யார்?/அநியாயக்காரர்
مِمَّنِ ٱفْتَرَىٰ
இட்டுக் கட்டுபவரை விட
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
ٱلْكَذِبَ
பொய்யை
وَهُوَ
அவரோ
يُدْعَىٰٓ
அழைக்கப்படுகிறார்
إِلَى ٱلْإِسْلَٰمِۚ
அல்லாஹ்வின் பக்கம்
وَٱللَّهُ
அல்லாஹ்
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
ٱلْقَوْمَ
மக்களை
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்கார(ர்கள்)

Wa man azlamu mimma nif taraa 'alal laahil kaziba wa huwa yad'aaa ilal Islaam; wallaahu laa yahdil qawmaz zaalimeen

அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் சொல்பவனைவிட அநியாயக்காரன் யார்? அவன் (நபி இப்ராஹீமின் மார்க்கமாகிய) இஸ்லாமின் பக்கம் அழைக்கப்ப(ட்)டு(ம் அவன் அதனை நிராகரிக்)கின்றான். இத்தகைய அநியாயக்கார மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்தமாட்டான்.

Tafseer

يُرِيدُونَ
அவர்கள் நாடுகின்றனர்
لِيُطْفِـُٔوا۟
அவர்கள் அணைத்துவிட
نُورَ
ஒளியை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
بِأَفْوَٰهِهِمْ
தங்களது வாய்களினால்
وَٱللَّهُ
அல்லாஹ்
مُتِمُّ
முழுமைப்படுத்துவான்
نُورِهِۦ
தனது ஒளியை
وَلَوْ كَرِهَ
வெறுத்தாலும் சரியே!
ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்கள்

Yureedoona liyutfi'oo nooral laahi bi afwaahimim wallaahu mutimmu noorihee wa law karihal kaafiroon

அல்லாஹ்வுடைய பிரகாசத்தைத் தன் வாயினால் ஊதி அணைத்து விடலாமென்று இவர்கள் கருதுகின்றனர். இந் நிராகரிப்பவர்கள் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை (உலகமெங்கும் ஜொலிக்கும்படி) முழுமையாகவே ஆக்கிவைப்பான்.

Tafseer

هُوَ ٱلَّذِىٓ
அவன்தான்
أَرْسَلَ
அனுப்பினான்
رَسُولَهُۥ
தனது தூதரை
بِٱلْهُدَىٰ
நேர்வழியைக் கொண்டும்
وَدِينِ ٱلْحَقِّ
இன்னும் சத்திய மார்க்கத்தை
لِيُظْهِرَهُۥ
அதை மேலோங்க வைப்பதற்காக
عَلَى ٱلدِّينِ
எல்லா மார்க்கங்களை விட
وَلَوْ كَرِهَ
வெறுத்தாலும் சரியே!
ٱلْمُشْرِكُونَ
இணைவைப்பவர்கள்

Huwal lazee arsala Rasoolahoo bilhudaa wa deenil haqqi liyuzhirahoo 'alad deeni kullihee wa law karihal mushrikoon

அவன்தான் தன்னுடைய (இத்)தூதரை நேரான வழியைக் கொண்டும், உண்மையான மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். (ஈஸாவை அல்லாஹ்வுடைய மகனென்று, அவனுக்கு) இணைவைத்து வணங்கும் இவர்கள் வெறுத்தபோதிலும், எல்லா மார்க்கங்களையும் அது வென்றே தீரும்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
هَلْ أَدُلُّكُمْ
உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?
عَلَىٰ تِجَٰرَةٍ
ஒரு வியாபாரத்தை
تُنجِيكُم
அது உங்களை பாதுகாக்கும்
مِّنْ عَذَابٍ
தண்டனையை விட்டும்
أَلِيمٍ
வலி தரக்கூடிய(து)

Yaaa ayyuhal lazeena aammano hal adullukum 'alaa tijaaratin tunjeekum min 'azaabin aleem

நம்பிக்கையாளர்களே! ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கவா? அது துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களை காப்பாற்றும்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துஸ் ஸஃப்ஃபு
القرآن الكريم:الصف
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):As-Saff
ஸூரா:61
வசனம்:14
Total Words:221
Total Characters:900
Number of Rukūʿs:2
Classification
(Revelation Location):
மதனீ
Revelation Order:109
Starting from verse:5163