Skip to main content

مَثَلُ
உதாரணம்
ٱلَّذِينَ
எவர்கள்
ٱتَّخَذُوا۟
ஆக்கிக் கொண்டனர்
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
أَوْلِيَآءَ
பாதுகாவலர்களாக
كَمَثَلِ
உதாரணத்தைப் போல
ٱلْعَنكَبُوتِ
சிலந்தியின்
ٱتَّخَذَتْ
அது ஆக்கிக் கொண்டது
بَيْتًاۖ
ஒரு வீட்டை
وَإِنَّ
நிச்சயமாக
أَوْهَنَ
மிக பலவீனமானது
ٱلْبُيُوتِ
வீடுகளில்
لَبَيْتُ
வீடே
ٱلْعَنكَبُوتِۖ
சிலந்தியின்
لَوْ كَانُوا۟
அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!

Masalul lazeenat takhazoo min doonil laahi awliyaaa'a kamasalil 'ankaboot, ittakhazat baitaa; wa inna awhanal buyooti la baitul 'ankaboot; law kaanoo ya'lamoon

அல்லாஹ்வையன்றி (மற்றவைகளைத் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டவர்களின் உதாரணம்: நூலாம் பூச்சி கட்டிய வீட்டை(த் தாங்கள் வசிக்க எடுத்துக் கொண்டவர்களின் உதாரணத்தை) ஒத்திருக்கின்றது. வீடுகளில் எல்லாம் மிக்க பலவீனமானது நிச்சயமாக நூலாம் பூச்சியின் வீடுதான். (நூலாம் பூச்சியின் வீடு இவர்களை எவ்வாறு பாதுகாக்க முடியாதோ அவ்வாறே இவர்கள் தங்களுக்கு பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்ட தெய்வங்களாலும் இவர்களை பாதுகாக்க முடியாது. இதை) அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே!

Tafseer

إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
يَعْلَمُ
அறிகின்றான்
مَا يَدْعُونَ
அவர்கள் அழைக்கின்றவற்றை
مِن دُونِهِۦ
அவனையன்றி
مِن شَىْءٍۚ
எதுவாக இருந்தாலும்
وَهُوَ
அவன்தான்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்

Innal laaha ya'lamu maa yad'oona min doonihee min shai'; wa Huwal 'Azeezul Hakeem

அல்லாஹ்வையன்றி அவர்கள் எவைகளை (இறைவனென) அழைக்கின்றார்களோ, அவைகளை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (அவைகளுக்கு யாதொரு சக்தியுமில்லை; அறிவும் இல்லை.) அவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَتِلْكَ
இந்த
ٱلْأَمْثَٰلُ
உதாரணங்கள்
نَضْرِبُهَا
அவற்றை நாம் விவரிக்கிறோம்
لِلنَّاسِۖ
மக்களுக்கு
وَمَا يَعْقِلُهَآ
இவற்றை சிந்தித்து புரியமாட்டார்கள்
إِلَّا
தவிர
ٱلْعَٰلِمُونَ
அறிஞர்களை

Wa tilkal amsaalu nadribuhaa linnaasi wa maa ya'qiluhaaa illal 'aalimoon

மனிதர்களுக்காகவே இவ்வுதாரணங்களை நாம் கூறுகிறோம். (சிந்தித்து அறியக்கூடிய) ஞானமுடையவர்களைத் தவிர (மற்றெவரும்) இதனை உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.

Tafseer

خَلَقَ
படைத்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
وَٱلْأَرْضَ
பூமியையும்
بِٱلْحَقِّۚ
உண்மையான காரணத்திற்கே
إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில்
لَءَايَةً
ஓர் அத்தாட்சி இருக்கிறது
لِّلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு

Khalaqal laahus samaawaati wal arda bilhaqq; inna fee zaalika la aayatal lilmu mineen

வானங்களையும் பூமியையும் படைத்தவன் மெய்யாகவே அல்லாஹ்தான். (வேறொருவருமன்று.) நம்பிக்கை கொண்டவர் களுக்கு நிச்சயமாக இவைகளிலும் (பல) அத்தாட்சி(கள்) இருக்கின்றன.

Tafseer

ٱتْلُ
ஓதுவீராக!
مَآ أُوحِىَ
வஹீ அறிவிக்கப்பட்டதை
إِلَيْكَ
உமக்கு
مِنَ ٱلْكِتَٰبِ
வேதத்தில்
وَأَقِمِ
இன்னும் நிலைநிறுத்துவீராக
ٱلصَّلَوٰةَۖ
தொழுகையை
إِنَّ
நிச்சயமாக
ٱلصَّلَوٰةَ
தொழுகை
تَنْهَىٰ
தடுக்கிறது
عَنِ ٱلْفَحْشَآءِ
மானக்கேடானவற்றை விட்டும்
وَٱلْمُنكَرِۗ
தீயகாரியங்களை விட்டும்
وَلَذِكْرُ
நினைவு கூர்வது
ٱللَّهِ
அல்லாஹ்
أَكْبَرُۗ
மிகப் பெரியது
وَٱللَّهُ
அல்லாஹ்
يَعْلَمُ
நன்கறிகின்றான்
مَا تَصْنَعُونَ
நீங்கள் செய்பவற்றை

Utlu maaa oohiya ilaika mional Kitaabi wa aqimis Salaata innas Salaata tanhaa 'anil fahshaaa'i wal munkar; wa lazikrul laahi akbar; wal laahu ya'lamu maa tasna'oon

(நபியே!) வஹீ மூலம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட இவ்வேதத்தை (மக்களுக்கு) நீங்கள் ஓதிக் காண்பித்து தொழுகையைக் கடைப்பிடித்து வாருங்கள். ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும். பாவங்களிலிருந்தும் (மனிதனை) விலக்கிவிடும். அல்லாஹ்வை (மறக்காது நினைவில் வைத்து, அவனை) திக்ரு செய்து வருவது மிகமிகப் பெரிய காரியம். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிவான். (ஆதலால், இவைகளுக்குரிய கூலியை நீங்கள் அடைந்தே தீருவீர்கள்).

Tafseer

وَلَا تُجَٰدِلُوٓا۟
தர்க்கம் செய்யாதீர்கள்
أَهْلَ ٱلْكِتَٰبِ
வேதமுடையவர்களிடம்
إِلَّا
அன்றி
بِٱلَّتِى هِىَ
முறையில்/அது
أَحْسَنُ
மிக அழகியது
إِلَّا
தவிர
ٱلَّذِينَ ظَلَمُوا۟
அநியாயக்காரர்களை
مِنْهُمْۖ
அவர்களில் இருக்கின்ற
وَقُولُوٓا۟
இன்னும் நீங்கள் கூறுங்கள்
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
بِٱلَّذِىٓ أُنزِلَ
இறக்கப்பட்டதையும்
إِلَيْنَا
எங்களுக்கு
وَأُنزِلَ
இறக்கப்பட்டதையும்
إِلَيْكُمْ
உங்களுக்கு
وَإِلَٰهُنَا
எங்கள் கடவுளும்
وَإِلَٰهُكُمْ
உங்கள் கடவுளும்
وَٰحِدٌ
ஒருவன்தான்
وَنَحْنُ
நாங்கள்
لَهُۥ
அவனுக்குத்தான்
مُسْلِمُونَ
கீழ்ப்பணிந்தவர்கள்

Wa laa tujaadilooo Ahlal Kitaabi illaa billatee hiya ahsanu illal lazeena zalamoo minhum wa qoolooo aamannaa billazeee unzila ilainaa wa unzila ilaikum wa illaahunna wa illahukum waahidunw-wa nahnu lahoo muslimoon

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் வேதத்தை உடையவர் களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) அழகான முறையிலன்றி அவர்களுடன் தர்க்கிக்க வேண்டாம். ஆயினும், அவர்களில் எவரேனும் வரம்பு மீறிவிட்டால் (அதற்குத் தக்கவாறு நீங்கள் பதில் கூறுவது உங்கள் மீது குற்றமாகாது. அவர்களுடன் தர்க்கித்தால்) "எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தை நம்பிக்கை கொள்கின்ற படியே உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும் நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம். எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே. நாங்கள் அவனுக்குத்தான் முற்றிலும் வழிப்பட்டு நடக்கின்றோம்" என்றும் கூறுங்கள்!

Tafseer

وَكَذَٰلِكَ
இவ்வாறுதான்
أَنزَلْنَآ
நாம் இறக்கினோம்
إِلَيْكَ
உமக்கு
ٱلْكِتَٰبَۚ
இவ்வேதத்தை
فَٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ
எவர்கள்/கொடுத்தோம்/அவர்களுக்கு
ٱلْكِتَٰبَ
வேதத்தை
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்வார்கள்
بِهِۦۖ
இதை
وَمِنْ هَٰٓؤُلَآءِ
இன்னும் இவர்களில்
مَن يُؤْمِنُ
நம்பிக்கை கொள்கின்றவர்களும்/இதை
وَمَا يَجْحَدُ
மறுக்க மாட்டார்கள்
بِـَٔايَٰتِنَآ
நமது வசனங்களை
إِلَّا
தவிர
ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்களை

Wa kazaalika anzalnaaa ilaikal Kitaab; fallazeena aatainaahumul kitaaba yu'minoona bihee wa min haaa'ulaaa'i many yu'minu bih; wa maa yajhadu bi'Aayaatinaa illal kaafiroon

(நபியே! அவர்களுக்கு வேதத்தை இறக்கிய) அவ்வாறே நாம் உங்களுக்கு இவ்வேதத்தை அருளியிருக்கின்றோம். ஆகவே, நாம் எவர்களுக்கு (முன்னர்) வேதம் கொடுத்திருக்கின்றோமோ அவர்க(ளில் உள்ள சத்தியவான்க) ள் இ(வ்வேதத்)தையும் (அவசியம்) நம்பிக்கை கொள்வார்கள். அன்றி, (அரபிகளாகிய) இவர்களில் உள்ள (நியாயவாதிகளில்) பலரும் இதனை நம்பிக்கை கொள்கின்றனர். (மனமுரண்டாக நிராகரிக்கும்) காஃபிர்களைத் தவிர (மற்ற எவரும்) நம்முடைய வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.

Tafseer

وَمَا كُنتَ
நீர் இல்லை
تَتْلُوا۟
ஓதுபவராக
مِن قَبْلِهِۦ
இதற்கு முன்
مِن كِتَٰبٍ
ஒரு வேதத்தை
وَلَا تَخُطُّهُۥ
இன்னும் அதை எழுதுபவராகவும் இல்லை
بِيَمِينِكَۖ
உமது வலக்கரத்தால்
إِذًا
அப்படி இருந்திருந்தால்
لَّٱرْتَابَ
நிச்சயமாக சந்தேகம் கொண்டிருப்பார்கள்
ٱلْمُبْطِلُونَ
வீணர்கள்

Wa maa kunta tatloo min qablihee min kitaabinw wa laa takhuttubhoo bi yameenika izal lartaabal mubtiloon

(நபியே!) நீங்கள் இதற்கு முன்னர் யாதொரு வேதத்தை ஓதி அறிந்தவருமல்ல; உங்களுடைய கையால் நீங்கள் அதனை எழுதி(ப் பழகி)யவருமல்ல. அவ்வாறு இருந்திருக்குமாயின், நிராகரிப்பவர்கள் (இதனை நீங்கள் தாமாகவே கற்பனை செய்து கொண்டீரே தவிர இறைவனால் அருளப்பட்டதல்ல என்று) சந்தேகம் கொள்ளலாம்.

Tafseer

بَلْ
மாறாக,
هُوَ
இது
ءَايَٰتٌۢ
அத்தாட்சிகளாகும்
بَيِّنَٰتٌ
தெளிவான
فِى صُدُورِ
நெஞ்சங்களில்
ٱلَّذِينَ أُوتُوا۟
கொடுக்கப்பட்டவர்களின்
ٱلْعِلْمَۚ
கல்வி
وَمَا يَجْحَدُ
மறுக்க மாட்டார்கள்
بِـَٔايَٰتِنَآ
நமது வசனங்களை
إِلَّا
தவிர
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்களை

Bal huwa aayaatum baiyinaatun fee sudooril lazeena ootul 'ilm; wa maa yajhadu bi aayaatinaa illaz zaalimoon

அவ்வாறன்று. இது (இறைவனால்தான் அருளப்பட்ட) தெளிவான வசனங்களாக இருக்கின்றன. ஆகவே மெய்யான ஞானம் கொடுக்கப்பட்டவர்களின் உள்ளங்களில் இது பதிந்துவிடும். ஆகவே, அநியாயக்காரர்களைத் தவிர (மற்றெவரும்) நம்முடைய இவ்வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.

Tafseer

وَقَالُوا۟
அவர்கள் கூறினர்
لَوْلَآ أُنزِلَ
இறக்கப்பட வேண்டாமா?
عَلَيْهِ
இவர் மீது
ءَايَٰتٌ
அத்தாட்சிகள்
مِّن رَّبِّهِۦۖ
அவரது இறைவனிடமிருந்து
قُلْ
கூறுவீராக!
إِنَّمَا
எல்லாம்
ٱلْءَايَٰتُ
அத்தாட்சிகள்
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
وَإِنَّمَآ
எல்லாம்
أَنَا۠
நான்
نَذِيرٌ
எச்சரிப்பாளர்தான்
مُّبِينٌ
தெளிவான

Wa qaaloo law laaa unzila 'alaihi aayaatum mir Rabbihee qul innamal aayaatu 'indal laahi wa innamaaa ana nazeerum mubeen

அன்றி ("தாங்கள் விரும்புகிறபடி) சில அத்தாட்சிகள் அவருடைய இறைவனால் அவருக்கு அளிக்கப்பட வேண்டாமா?" என்று இவ்வக்கிரமக்காரர்கள் கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடத்தில்தான் இருக்கின்றன. (என்னிடமில்லை.) நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன் மட்டும்தான்."

Tafseer