Skip to main content

أَوَلَمْ يَكْفِهِمْ
அவர்களுக்கு போதுமாகாதா?
أَنَّآ
நிச்சயமாக நாம்
أَنزَلْنَا
இறக்கியது
عَلَيْكَ
உம்மீது
ٱلْكِتَٰبَ
இந்த வேதத்தை
يُتْلَىٰ
ஓதப்படுகின்ற
عَلَيْهِمْۚ
அவர்கள் மீது
إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில் இருக்கின்றன
لَرَحْمَةً
அருளும்
وَذِكْرَىٰ
அறிவுரையும்
لِقَوْمٍ
மக்களுக்கு
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கின்ற

Awa lam yakfihim annaaa anzalnaa 'alaikal kitaaba yutlaa 'alaikhim; inna fee zaalika larahmatanw wa zikraa liqawminy yu'minoon

(நபியே!) இவ்வேதத்தை மெய்யாகவே நாம் உங்கள் மீது இறக்கி வைத்திருக்கிறோம் என்பதற்கு அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படும் இவ்வேதமே போதுமான அத்தாட்சியல்லவா? ஏனென்றால், இதில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக (இறைவனுடைய) அருளும் இருக்கின்றது; (பல) நல்லுபதேசங்களும் இருக்கின்றன.

Tafseer

قُلْ
கூறுவீராக!
كَفَىٰ
போதுமானவன்
بِٱللَّهِ
அல்லாஹ்வே
بَيْنِى
எனக்கிடையில்
وَبَيْنَكُمْ
உங்களுக்குஇடையில்
شَهِيدًاۖ
சாட்சியால்
يَعْلَمُ
அவன் நன்கறிவான்
مَا
உள்ளவற்றை
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
وَٱلْأَرْضِۗ
இன்னும் பூமியில்
وَٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
بِٱلْبَٰطِلِ
பொய்யை
وَكَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
أُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلْخَٰسِرُونَ
நஷ்டவாளிகள்

Qul kafaa billaahi bainee wa bainakum shaheedaa; ya'lamu maa fis samaawaati wal ard; wallazeena aamanoo bil baatili wa kafaroo billaahi ulaaa'ika humul khaasiroon

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான். ஏனென்றால், அவன்தான் வானங்கள் பூமியிலுள்ள அனைத்தையும் நன்கறிந்தவன். ஆகவே, எவர்கள் பொய்யான விஷயங்களை நம்பி அல்லாஹ்வை நிராகரித்து விடுகின்றார்களோ இத்தகையவர்கள் முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள்தாம்."

Tafseer

وَيَسْتَعْجِلُونَكَ
அவர்கள் உம்மிடம் அவசரமாகக் கேட்கின்றனர்
بِٱلْعَذَابِۚ
தண்டனையை
وَلَوْلَآ أَجَلٌ
ஒரு தவணை இல்லை என்றால்
مُّسَمًّى
குறிப்பிடப்பட்ட
لَّجَآءَهُمُ
வந்தே இருக்கும் அவர்களுக்கு
ٱلْعَذَابُ
தண்டனை
وَلَيَأْتِيَنَّهُم
அவர்களிடம் வரும்
بَغْتَةً
திடீரென
وَهُمْ
நிச்சயமாக அவர்கள்
لَا يَشْعُرُونَ
உணராதவர்களாக இருக்க

Wa yasta'jiloonaka bil'azaab; wa law laaa ajalum musammal lajaaa'ahumul 'zaab; wa la yaatiyannahum baghta tanw wa hum laa yash'uroon

(மறுமையின்) வேதனையைப் பற்றி (அது எப்பொழுது வரும்? என்று) அவர்கள் உங்களிடம் அவசரப்படுகின்றனர். அதற்குறிய ஒரு குறிப்பிட்ட தவணை இல்லாதிருந்தால் (இதுவரையில்) அவ்வேதனை அவர்களை வந்தடைந்தே இருக்கும். எனினும், அவர்கள் அறிந்துகொள்ளாத விதத்தில் திடீரென நிச்சயமாக அவர்களிடம் (அது) வந்தே தீரும்.

Tafseer

يَسْتَعْجِلُونَكَ
அவர்கள் உம்மிடம் அவசரமாகக் கேட்கின்றனர்
بِٱلْعَذَابِ
தண்டனையை
وَإِنَّ
நிச்சயமாக
جَهَنَّمَ
நரகம்
لَمُحِيطَةٌۢ
சூழ்ந்தே உள்ளது
بِٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களை

Yasta'jiloonak bil'azaab; wa inna Jahannama lamuhee tatum bilkaafireen

நிராகரிப்பவர்களை நிச்சயமாக நரகம் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலைமையில் வேதனையைப் பற்றி அவர்கள் அவசரப்படுகின்றார்கள். (அதிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது.)

Tafseer

يَوْمَ
நாளில்
يَغْشَىٰهُمُ
அவர்களை மூடிக்கொள்கின்ற
ٱلْعَذَابُ
தண்டனை
مِن فَوْقِهِمْ
அவர்களுக்கு மேலிருந்தும்
وَمِن تَحْتِ
கீழே இருந்தும்
أَرْجُلِهِمْ
அவர்களின் கால்களுக்கு
وَيَقُولُ
கூறுவான்
ذُوقُوا۟
நீங்கள் சுவையுங்கள்
مَا كُنتُمْ
நீங்கள் செய்து கொண்டிருந்ததை

Yawma yaghshaahumul 'azaabu min fawqihim wa min tahti arjulim wa yaqoolu zooqoo maa kuntum ta'maloon

அவர்களு(டைய தலைகளு)க்கு மேலிருந்தும், அவர்களு(டைய பாதங்களு)க்குக் கீழிருந்தும் வேதனை அவர்களை மூடிக் கொள்ளும் நாளில் அவர்களை நோக்கி "நீங்கள் செய்து கொண்டிருந்த செயலின் பயனை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்" என்று (இறைவன்) கூறுவான்.

Tafseer

يَٰعِبَادِىَ
என் அடியார்களே!
ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
إِنَّ
நிச்சயமாக
أَرْضِى
எனது பூமி
وَٰسِعَةٌ
விசாலமானது
فَإِيَّٰىَ
ஆகவே, என்னையே
فَٱعْبُدُونِ
நீங்கள் வணங்குங்கள்!

Yaa 'ibaadiyal lazeena aamanooo inna ardee waasi 'atun fa iyyaaya fa'budoon

நம்பிக்கை கொண்ட என்னுடைய அடியார்களே! நிச்சயமாக என்னுடைய பூமி மிக்க விசாலமானது. அதில் நீங்கள் (எங்குச் சென்ற போதிலும்) என்னையே வணங்குங்கள். (மற்றெவரையும் வணங்காதீர்கள்.)

Tafseer

كُلُّ
எல்லா
نَفْسٍ
ஆன்மாவும்
ذَآئِقَةُ
சுவைக்கக் கூடியதே
ٱلْمَوْتِۖ
மரணத்தை
ثُمَّ
பிறகு
إِلَيْنَا
நம்மிடமே
تُرْجَعُونَ
நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்

Kullu nafsin zaaa'iqatul mawti summa ilainaa turja'oon

(உங்களில் உள்ள) ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை அனுபவிக்க வேண்டியதுதான். பின்னர் நீங்கள் (விசாரணைக்காக) நம்மிடமே கொண்டு வரப்படுவீர்கள்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
لَنُبَوِّئَنَّهُم
அவர்களுக்கு நாம் தயார்படுத்திக் கொடுப்போம்
مِّنَ ٱلْجَنَّةِ
சொர்க்கத்தில்
غُرَفًا
பல அறைகளை
تَجْرِى
ஓடும்
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
خَٰلِدِينَ
அவர்கள் நிரந்தரமானவர்கள்
فِيهَاۚ
அதில்
نِعْمَ
மிகச் சிறப்பானதே
أَجْرُ
கூலி
ٱلْعَٰمِلِينَ
அமல் செய்தவர்களின்

Wallazeena aamanoo wa 'amilus saalihaati la nubawwi 'annahum minal Jannati ghurafan tajree min tahtihal anhaaru khaalideena feehaa; ni'ma ajrul 'aamileen

எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக நாம் சுவனபதிகளிலுள்ள மேல் மாடிகளில் அமர்த்துவோம். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். நற்செயல்கள் செய்தவர்களின் கூலியும் நன்றே.

Tafseer

ٱلَّذِينَ صَبَرُوا۟
அவர்கள் பொறுமையாக இருந்தனர்
وَعَلَىٰ
இன்னும் மீதே
رَبِّهِمْ
தங்கள் இறைவன்
يَتَوَكَّلُونَ
சார்ந்து இருந்தனர்

Allazeena sabaroo wa 'alaa Rabbihim yatawakkaloon

உண்மை நம்பிக்கையாளர்கள் (தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களைப்) பொறுமையுடன் சகித்துக்கொண்டு தங்கள் இறைவனையே நம்பியிருப்பார்கள்.

Tafseer

وَكَأَيِّن
எத்தனையோ
مِّن دَآبَّةٍ
கால்நடைகள்
لَّا تَحْمِلُ
சுமப்பதில்லை
رِزْقَهَا
தனது உணவை
ٱللَّهُ
அல்லாஹ்தான்
يَرْزُقُهَا
அவற்றுக்கும் உணவளிக்கிறான்
وَإِيَّاكُمْۚ
உங்களுக்கும்
وَهُوَ
அவன்தான்
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்

Wa ka ayyim min daaabbatil laa tahmilu riqqahaa; al laahu yarzuquhaa wa iyyaakum; wa Huwas Samee'ul Aleem

உயிர்வாழும் பிராணிகளில் எத்தனையோ இருக்கின்றன. அவை தங்கள் உணவைச் சுமந்து திரிவதில்லை. அவற்றிற்கும் உங்களுக்கும் அல்லாஹ்தான் உணவளிக்கிறான். (இவ்வாறிருக்க அதற்காக நீங்கள் ஏன் அதிகக் கவலைப்பட வேண்டும்.) அவனோ (அனைத்தையும்) செவியுறுபவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer