Skip to main content

وَإِذْ أَنجَيْنَٰكُم
சமயம்/காப்பாற்றினோம்/உங்களை
مِّنْ
இருந்து
ءَالِ
குடும்பத்தார்
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னுடைய
يَسُومُونَكُمْ
துன்புறுத்துகின்றனர்/உங்களை
سُوٓءَ ٱلْعَذَابِۖ
கொடியவேதனையால்
يُقَتِّلُونَ
கொன்றுகுவிப்பார்கள்
أَبْنَآءَكُمْ
உங்கள் மகன்களை
وَيَسْتَحْيُونَ
இன்னும் வாழவிடுவார்கள்
نِسَآءَكُمْۚ
உங்கள்பெண்களை
وَفِى ذَٰلِكُم
இதில்
بَلَآءٌ
சோதனை
مِّن رَّبِّكُمْ
உங்கள் இறைவனிடமிருந்து
عَظِيمٌ
பெரியது

Wa iz anjainaakum min Aali Fir'awna yasoomoo nakum sooo'al 'azaab, yuqattiloona abnaaa'akum wa yastahyoona nisaaa'akum; wa fee zaalikum balaaa'um mir Rabbikum 'azeem

(இஸ்ராயீலின் சந்ததிகளே!) உங்களுக்கு மிகக் கொடிய துன்பங்களை விளைவித்துக் கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிலிருந்து நாம் உங்களை பாதுகாத்துக் கொண்டதை நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவர்கள் உங்கள் ஆண் பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு உங்கள் பெண் பிள்ளைகளை (மட்டும்) உயிருடன் வாழவிட்டு வந்தார்கள். இதில் உங்களுக்கு உங்கள் இறைவனால் பெரியதொரு சோதனை ஏற்பட்டிருந்தது.

Tafseer

وَوَٰعَدْنَا
வாக்களித்தோம்
مُوسَىٰ
மூஸாவுக்கு
ثَلَٰثِينَ
முப்பது
لَيْلَةً
இரவு(களை)
وَأَتْمَمْنَٰهَا
இன்னும் முழுமைப்படுத்தினோம்/அதை
بِعَشْرٍ
பத்து இரவுகளைக் கொண்டு
فَتَمَّ
ஆகவே முழுமையடைந்தது
مِيقَٰتُ
குறிப்பிட்ட காலம்
رَبِّهِۦٓ
அவருடைய இறைவனின்
أَرْبَعِينَ
நாற்பது
لَيْلَةًۚ
இரவு(களாக)
وَقَالَ مُوسَىٰ
கூறினார்/மூஸா
لِأَخِيهِ
தன் சகோதரருக்கு
هَٰرُونَ
ஹாரூன்
ٱخْلُفْنِى
நீர் எனக்கு பிரதிநிதியாக இரு
فِى قَوْمِى
என் சமுதாயத்தில்
وَأَصْلِحْ
இன்னும் சீர்திருத்து
وَلَا تَتَّبِعْ
பின்பற்றாதே
سَبِيلَ
பாதையை
ٱلْمُفْسِدِينَ
விஷமிகளுடைய

Wa waa'adnaa Moosaa salaaseena lailatanw wa at mamnaahaa bi'ashrim fatamma meeqaatu Rabbihee arba'eena lailah; wa qaala Moosaa liakheehi Haaroonakh lufnee fee qawmee wa aslih wa laa tattabi' sabeelal mufsideen

மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். பின்னர் அத்துடன் பத்து (இரவுகளைச்) சேர்த்தோம். ஆகவே, அவருடைய இறைவனின் வாக்குறுதி நாற்பது இரவுகளாகப் பூர்த்தியாயிற்று. ஆகவே, அதுசமயம் மூஸா தன் சகோதரர் ஹாரூனை நோக்கி "நீங்கள் நம்முடைய மக்களிடையே என்னுடைய இடத்திலிருந்து அவர்களைச் சீர்திருத்துங்கள். அன்றி விஷமிகளுடைய வழியை நீங்கள் பின்பற்றாதீர்கள்" என்று கூறினார்.

Tafseer

وَلَمَّا جَآءَ
போது/வந்தார்
مُوسَىٰ
மூஸா
لِمِيقَٰتِنَا
நமது குறித்தநேரத்திற்கு
وَكَلَّمَهُۥ
இன்னும் பேசினாu/அவருடன்
رَبُّهُۥ
அவருடைய இறைவன்
قَالَ
கூறினார்
رَبِّ
என் இறைவா
أَرِنِىٓ
நீ காண்பி/எனக்கு
أَنظُرْ
பார்ப்பேன்
إِلَيْكَۚ
உன்னை
قَالَ
கூறினான்
لَن تَرَىٰنِى
என்னை நீர் அறவே பார்க்க மாட்டீர்
وَلَٰكِنِ
எனினும்
ٱنظُرْ
பார்ப்பீராக!
إِلَى ٱلْجَبَلِ
மலையை
فَإِنِ ٱسْتَقَرَّ
அது நிலைத்தால்
مَكَانَهُۥ
தன் இடத்தில்
فَسَوْفَ تَرَىٰنِىۚ
நீர் என்னைப் பார்ப்பீர்
فَلَمَّا
போது
تَجَلَّىٰ
வெளிப்பட்டான்
رَبُّهُۥ
அவருடைய இறைவன்
لِلْجَبَلِ
அம்மலை மீது
جَعَلَهُۥ
ஆக்கினான்/அதை
دَكًّا
துகளாக
وَخَرَّ
இன்னும் விழுந்தார்
مُوسَىٰ
மூஸா
صَعِقًاۚ
மூர்ச்சையானவராக
فَلَمَّآ
போது
أَفَاقَ
தெளிவுபெற்றார்
قَالَ
கூறினார்
سُبْحَٰنَكَ
நீ மிகப் பரிசுத்தமானவன்
تُبْتُ
நான் திருந்தி திரும்புகிறேன்
إِلَيْكَ
உன் பக்கம்
وَأَنَا۠ أَوَّلُ
நான்/முதலாமவன்
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கை கொள்பவர்களில்

Wa lammaa jaaa'a Moosa limeeqaatinaa wa kallamahoo Rabbuhoo qaala Rabbi arineee anzur ilaik; qaala lan taraanee wa laakininzur ilal jabali fa inistaqarra makaanahoo faswfa taraanee; falammaa tajallaa Rabbuhoo liljabali ja'alahoo dakkanw wa kharra Moosaa sa'iqaa; falammaaa afaaqa qaala Subhaanaka tubtu ilaika wa ana awwalul mu'mineen

நாம் (குறிப்பிட்ட இடத்திற்கு) குறிப்பிட்ட நேரத்தில் மூஸா வந்தபொழுது அவருடைய இறைவன் அவருடன் பேசினான். (அப்பொழுது மூஸா தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! நான் உன்னை (என் கண்ணால்) பார்க்க (விரும்புகின்றேன்.) நீ உன்னை எனக்கு காண்பி" என்று கூறினார். (அதற்கு இறைவன் "நேர்முகமாக) என்னைக் காண உங்களால் ஒருக்காலும் முடியாது. எனினும் இம்மலையை நீங்கள் நோக்குங்கள். அது தன்னுடைய இடத்தில் நிலைத்திருந்தால் பின்னர் நீங்கள் என்னைக் காண்பீர்கள்" என்று கூறினான். அவருடைய இறைவன் அம்மலை மீது தோற்றமளிக்கவே அது தவிடு பொடியாயிற்று. மூஸா திடுக்கிட்டு (மூர்ச்சையாகி) விழுந்தார். அவர் தெளிவுபெறவே (இறைவனை நோக்கி) "நீ மிகப் பரிசுத்தமானவன். நான் (உன்னைப் பார்க்கக் கோரிய குற்றத்திலிருந்து விலகி) உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றேன். அன்றி, உன்னை நம்பிக்கை கொள்பவர்களில் நான் முதன்மையானவன்" என்று கூறினார்.

Tafseer

قَالَ
கூறினான்
يَٰمُوسَىٰٓ
மூஸாவே!
إِنِّى
நிச்சயமாக நான்
ٱصْطَفَيْتُكَ
தேர்ந்தெடுத்தேன்/ உம்மை
عَلَى ٱلنَّاسِ
மக்களை விட
بِرِسَٰلَٰتِى
என் தூதுகளுக்கும்
وَبِكَلَٰمِى
இன்னும் என் பேச்சுக்கும்
فَخُذْ
ஆகவே பற்றிப்பிடிப்பீராக
مَآ ءَاتَيْتُكَ
எதை/கொடுத்தேன்/உமக்கு
وَكُن
ஆகிவிடுவீராக
مِّنَ ٱلشَّٰكِرِينَ
நன்றிசெலுத்துவோரில்

Qaala yaa Moosaaa innis tafaituka 'alan naasi bi Risaalaatee wa bi kalaamee fakhuz maaa aataituka wa kum minash shaakireen

(அதற்கு இறைவன்) "மூஸாவே! என்னுடைய தூதராக அனுப்புவதற்கும், என்னுடன் பேசுவதற்கும் (உங்களது காலத்தில் உள்ள) மனிதர்கள் அனைவரிலிருந்தும் நிச்சயமாக நான் உங்களைத் தேர்ந்தெடுத்து இருக்கின்றேன். ஆகவே, நான் உங்களுக்குக் கொடுப்பதை (பலமாக)ப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும், (அதற்காக) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராக) நீங்களும் இருங்கள்" என்று கூறினான்.

Tafseer

وَكَتَبْنَا
இன்னும் எழுதினோம்
لَهُۥ
அவருக்கு
فِى ٱلْأَلْوَاحِ
பலகைகளில்
مِن كُلِّ
எல்லாவற்றின்
مَّوْعِظَةً
(ஓர்) அறிவுரையை
وَتَفْصِيلًا
இன்னும் விளக்கத்தை
لِّكُلِّ شَىْءٍ
எல்லாவற்றுக்குரிய
فَخُذْهَا
ஆகவே இவற்றைப் பற்றிப் பிடிப்பீராக
بِقُوَّةٍ
பலமாக
وَأْمُرْ
இன்னும் ஏவுவீராக
قَوْمَكَ
உம் சமுதாயத்தை
يَأْخُذُوا۟
அவர்கள் பற்றிப் பிடிக்கட்டும்
بِأَحْسَنِهَاۚ
அவற்றில் மிக அழகியவற்றை
سَأُو۟رِيكُمْ
காண்பிப்பேன்/உங்களுக்கு
دَارَ
இல்லத்தை
ٱلْفَٰسِقِينَ
பாவிகளின்

Wa katabnaa lahoo fil alwaahi minkulli shai'immaw 'izaanw wa tafseelal likulli shai'in fakhuzhaa biquwwatinw waamur qawmaka yaakhuzoo bi ahsanihaa; wa ooreekum daaral faasiqeen

(நாம் அவருக்குக் கொடுத்த கற்)பலகைகளில் நல்லுபதேசங்கள் அனைத்தையும், ஒவ்வொரு கட்டளையின் விவரத்தையும் அவருக்காக நாம் எழுதி "நீங்கள் இதனைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்கொண்டு அதிலிருக்கும் மிக அழகியவைகளை எடுத்து நடக்கும்படி உங்களுடைய மக்களுக்கு நீங்கள் கட்டளையிடுங்கள். (உங்களுக்கு மாறு செய்யும்) பாவிகள் தங்கும் இடத்தை அதிசீக்கிரத்தில் நாம் உங்களுக்குக் காண்பிப்போம்" என்றும் (நாம் மூஸாவுக்குக் கூறினோம்.)

Tafseer

سَأَصْرِفُ
திருப்புவேன்
عَنْ
விட்டு
ءَايَٰتِىَ
என் அத்தாட்சிகள், என் வசனங்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
يَتَكَبَّرُونَ
பெருமையடிப்பார்கள்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
بِغَيْرِ ٱلْحَقِّ
நியாயமின்றி
وَإِن يَرَوْا۟
அவர்கள் பார்த்தால்
كُلَّ ءَايَةٍ
எல்லாம்/அத்தாட்சி
لَّا يُؤْمِنُوا۟
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
بِهَا
அவற்றை
وَإِن يَرَوْا۟
இன்னும் அவர்கள் பார்த்தால்
سَبِيلَ
பாதையை
ٱلرُّشْدِ
நேரிய
لَا يَتَّخِذُوهُ
எடுத்துக் கொள்ள மாட்டார்கள்/அதை
سَبِيلًا
பாதையாக
وَإِن يَرَوْا۟
அவர்கள் பார்த்தால்
سَبِيلَ
பாதையை
ٱلْغَىِّ
வழிகேட்டின்
يَتَّخِذُوهُ
எடுத்துக் கொள்வார்கள்/அதை
سَبِيلًاۚ
பாதையாக
ذَٰلِكَ
அது
بِأَنَّهُمْ
காரணம்/நிச்சயமாக அவர்கள்
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
وَكَانُوا۟
இருந்தார்கள்
عَنْهَا
அவற்றை விட்டு
غَٰفِلِينَ
கவனமற்றவர்களாக

Sa asrifu 'an Aayaatiyal lazeena yatakabbaroona fil ardi bighairil haqq; wa iny-yaraw kulla Aayatil laa yu'minoo bihaa wa iny-yaraw sabeelar rushdi laa yattakhizoohu sabeelanw wa iny-yaraw sabeelal ghaiyi yatta khizoohu sabeelaa; zaalika bi annahum kazzaboo bi Aayaatinaa wa kaanoo 'anhaa ghaafileen

நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டலைபவர்கள் நம் கட்டளைகளைப் புறக்கணிக்கும்படிச் செய்து விடுவோம். ஆகவே, அவர்கள் நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் (தங்கள் கண்ணால்) கண்டபோதிலும் அவைகளை நம்பவே மாட்டார்கள். அவ்வாறே நேரான வழியை அவர்கள் கண்டபோதிலும் அவர்கள் அதனை (தாங்கள்) செல்லும் வழியாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எனினும், தவறான வழியைக் கண்டாலோ அதனையே (தாங்கள்) செல்லும் வழியாக எடுத்துக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கி, அவைகளைப் புறக்கணித்து பராமுகமாயிருந்ததே இதற்குரிய காரணமாகும்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
وَلِقَآءِ
இன்னும் சந்திப்பை
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
حَبِطَتْ
பாழாகின
أَعْمَٰلُهُمْۚ
(நற்)செயல்கள்/அவர்களுடைய
هَلْ يُجْزَوْنَ
கூலி கொடுக்கப்படுவார்களா?
إِلَّا مَا
தவிர/எவற்றை/இருந்தனர்/செய்வார்கள்

Wallazeena kazzaboo bi Aayaatinaa wa liqaaa'il Aakhirati habitat 'amaaluhum; hal yujzawna illaa maa kaanoo ya'maloon

ஆகவே, எவர்கள் நம்முடைய வசனங்களையும், மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யாக்குகின்றார்களோ அவர்களுடைய (நற்)காரியங்கள் அனைத்தும் அழிந்துவிடும். (நம் வசனங்களைப் பொய்யாக்கி) அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களுக்குத் தவிர (வேறெதற்கும்) கூலி கொடுக்கப் படுவார்களா?

Tafseer

وَٱتَّخَذَ
எடுத்துக் கொண்டனர்
قَوْمُ
சமுதாயம்
مُوسَىٰ
மூஸாவுடைய
مِنۢ بَعْدِهِۦ
அவருக்குப் பின்னர்
مِنْ حُلِيِّهِمْ
தங்கள் நகையிலிருந்து
عِجْلًا
ஒரு காளைக் கன்றை
جَسَدًا لَّهُۥ
ஓர் உடலை/அதற்கு
خُوَارٌۚ
மாட்டின் சப்தம்
أَلَمْ يَرَوْا۟
அவர்கள் பார்க்கவில்லையா?
أَنَّهُۥ لَا
நிச்சயமாக அது/பேசுவதுமில்லை/அவர்களுடன்
وَلَا يَهْدِيهِمْ
(நேர்)வழி காட்டுவதுமில்லை/அவர்களுக்கு
سَبِيلًاۘ
பாதையை
ٱتَّخَذُوهُ
எடுத்துக் கொண்டார்கள்/அதை
وَكَانُوا۟
இன்னும் ஆகிவிட்டனர்
ظَٰلِمِينَ
அநியாயக்காரர்களாக

Wattakhaza qawmu Moosaa mim ba'dihee min huliyyihim 'ijlan jasadal lahoo khuwaar; alam yaraw annahoo laa yukallimuhum wa laa yahdeehim sabeelaa; ittakha zoohu wa kaanoo zaalimeen

(தன் இறைவனிடம் உரையாட மூஸா சென்றதற்குப்) பின்னர் மூஸாவுடைய மக்கள் தங்கள் ஆபரணங்களைக் கொண்(டு செய்யப்பட்)ட கன்றுக் குட்டியின் சிலையை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டார்கள். அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போன்ற) சப்தமிருந்தது. எனினும் (அது உயிரற்ற வெறும் சிலை.) நிச்சயமாக அது அவர்களுடன் பேசுவதுமில்லை; அவர்களுக்கு யாதொரு வழியை அறிவிப்பதுமில்லை என்பதையும் அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? எனினும், அவர்கள் அதனையே (தெய்வமாக) எடுத்துக் கொண்டு (அதனால் தங்களுக்குத்தாமே) தீங்கிழைத்துக் கொண்டவர்கள் ஆனார்கள்.

Tafseer

وَلَمَّا
போது
سُقِطَ فِىٓ
அவர்கள் கைசேதப் பட்டனர்
وَرَأَوْا۟
இன்னும் அறிந்தனர்
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
قَدْ ضَلُّوا۟
வழிதவறிவிட்டனர்
قَالُوا۟
கூறினார்கள்
لَئِن لَّمْ
கருணைபுரியவில்லையென்றால்/எங்களுக்கு
رَبُّنَا
எங்கள் இறைவன்
وَيَغْفِرْ لَنَا
இன்னும் மன்னிக்க வில்லையென்றால்/எங்களை
لَنَكُونَنَّ
நிச்சயம் நாங்கள் ஆகிவிடுவோம்
مِنَ ٱلْخَٰسِرِينَ
நஷ்டவாளிகளில்

Wa lammaa suqita feee aideehim wa ra aw annahum qad dalloo qaaloo la'il lam yarhamnaa Rabbunaa wa yaghfir lanaa lanakoonanna minal khaasireen

அவர்கள் நிச்சயமாகத் தாங்கள் வழிகெட்டு விட்டோம் என்பதைக் கண்டு கைசேதப்பட்டபொழுது "எங்கள் இறைவன் எங்களுக்கு அருள்புரிந்து எங்கள் குற்றங்களை மன்னிக்காவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள்.

Tafseer

وَلَمَّا
போது
رَجَعَ
திரும்பினார்
مُوسَىٰٓ
மூஸா
إِلَىٰ قَوْمِهِۦ
தன் சமுதாயத்திடம்
غَضْبَٰنَ
கோபித்தவராக
أَسِفًا
ஆவேசப்பட்டவராக, துக்கித்தவராக
قَالَ
கூறினார்
بِئْسَمَا
கெட்டுவிட்டது/எது
خَلَفْتُمُونِى
நான் சென்றதற்குப்பிறகு செய்தீர்கள்/எனக்கு
مِنۢ بَعْدِىٓۖ
எனக்குப் பின்னர்
أَعَجِلْتُمْ
அவசரப்பட்டீர்களா
أَمْرَ
கட்டளையை
رَبِّكُمْۖ
உங்கள் இறைவனின்
وَأَلْقَى
எறிந்தார்
ٱلْأَلْوَاحَ
பலகைகளை
وَأَخَذَ
இன்னும் பிடித்தார்
بِرَأْسِ
தலையை
أَخِيهِ
தன் சகோதரனின்
يَجُرُّهُۥٓ
இழுத்தார்/அவரை
إِلَيْهِۚ
தன் பக்கம்
قَالَ
கூறினார்
ٱبْنَ أُمَّ
என் தாயின் மகனே
إِنَّ ٱلْقَوْمَ
நிச்சயமாக/சமுதாயம்
ٱسْتَضْعَفُونِى
பலவீனப்படுத்தினர்/என்னை
وَكَادُوا۟
இன்னும் முற்பட்டனர்
يَقْتُلُونَنِى
கொல்வார்கள்/என்னை
فَلَا تُشْمِتْ
நகைக்கச் செய்யாதீர்
بِىَ
என்னைக் கொண்டு
ٱلْأَعْدَآءَ
எதிரிகளை
وَلَا تَجْعَلْنِى
ஆக்கிவிடாதீர்/ என்னை
مَعَ ٱلْقَوْمِ
மக்களுடன்
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்

Wa lammaa raja'a Moosaaa ilaa qawmihee ghadbaana asifan qaala bi'samaa khalaftumoonee mim ba'dee a-'ajiltum amra Rabbikum wa alqal alwaaha wa akhaza biraasi akheehi yajurruhoo ilaih; qaalab na umma innal qawmas tad'afoonee wa kadoo yaqtu loonanee; falaa tushmit biyal a'daaa'a wa laa taj'alnee ma'al qawmiz zaalimeen

(இதனைக் கேள்வியுற்ற) மூஸா கோபத்துடனும் துக்கத்துடனும் தன் மக்களிடம் திரும்பி வந்தபொழுது (அவர்களை நோக்கி) "நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகக் கெட்டது. உங்கள் இறைவனின் கட்டளை(யாகிய வேதனை)யை நீங்கள் அவசரப்படுத்துகிறீர்களா?" என்று கூறி (இறைவனின் கட்டளைகள் எழுதப்பட்ட கற்)பலகைகளை எறிந்துவிட்டு தன் சகோதரரின் தலை (முடி)யைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தார். அ(தற்க)வர் "என் தாயின் மகனே! இந்த மக்கள் நிச்சயமாக என்னை பலவீனப்படுத்தி என்னைக் கொலை செய்து விடவும் முற்பட்டனர். (ஆதலால் நான் ஒன்றும் செய்ய முடியாமலாகிவிட்டது. ஆகவே, என்னை அவமானப்படுத்தி) எதிரிகள் சந்தோஷப்படுமாறு நீங்கள் செய்து விடாதீர்கள். (இந்த) அநியாயக்கார மக்களுடனும் என்னை சேர்த்து விடாதீர்கள்" என்று கூறினார்.

Tafseer