Skip to main content

قَالَ
கூறினார்
رَبِّ
என் இறைவா
ٱغْفِرْ لِى
மன்னிப்பு வழங்கு/எனக்கு
وَلِأَخِى
இன்னும் என் சகோதரருக்கு
وَأَدْخِلْنَا
இன்னும் சேர்த்துக்கொள்/எங்களை
فِى رَحْمَتِكَۖ
உன் கருணையில்
وَأَنتَ أَرْحَمُ
நீ மகா கருணையாளன்
ٱلرَّٰحِمِينَ
கருணையாளர்களில்

Qaala Rabbigh fir lee wa li akhee wa adkhilnaa fee rahmatika wa Anta arhamur raahimeen

(பிறகு மூஸா இறைவனை நோக்கி) "என் இறைவனே! எனக்கும் என் சகோதரருக்கும் நீ பிழை பொருத்தருள்வாயாக! உன்னுடைய அன்பிலும் எங்களை சேர்த்துக் கொள்வாயாக! நீ கிருபை செய்பவர்களிலெல்லாம் மிக்க கிருபையாளன்" என்று (பிரார்த்தனை செய்து) கூறினார்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
ٱتَّخَذُوا۟
எடுத்துக் கொண்டனர்
ٱلْعِجْلَ
காளைக் கன்றை
سَيَنَالُهُمْ
அடையும்/அவர்களை
غَضَبٌ
கோபம்
مِّن
இருந்து
رَّبِّهِمْ
அவர்களின் இறைவன்
وَذِلَّةٌ
இன்னும் இழிவு
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையில்
ٱلدُّنْيَاۚ
உலகம்
وَكَذَٰلِكَ
இவ்வாறே
نَجْزِى
கூலி கொடுப்போம்
ٱلْمُفْتَرِينَ
இட்டுக்கட்டுபவர்களுக்கு

Innal lazeenat takhazul 'ijla-sa yanaaluhum ghadabum mir Rabbihim wa zillatun fil hayaatid dunyaa; wa kazaalika najzil muftareen

(பின்னர் இறைவன் மூஸாவை நோக்கிக் கூறினான்:) "எவர்கள் காளைக்கன்றை (தெய்வமாக) எடுத்துக் கொண்டார்களோ அவர்களை நிச்சயமாக இறைவனின் கோபமும் இழிவும் இவ்வுலக வாழ்க்கையிலேயே அதிசீக்கிரத்தில் வந்தடையும். பொய்யைக் கற்பனை செய்பவர்களுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்.

Tafseer

وَٱلَّذِينَ عَمِلُوا۟
எவர்கள்/செய்தனர்
ٱلسَّيِّـَٔاتِ
தீமைகளை
ثُمَّ
பிறகு
تَابُوا۟
திருந்தி திரும்பினர்
مِنۢ بَعْدِهَا
அவற்றுக்குப் பின்னர்
وَءَامَنُوٓا۟
இன்னும் நம்பிக்கை கொண்டார்கள்
إِنَّ رَبَّكَ
நிச்சயமாக உம் இறைவன்
مِنۢ بَعْدِهَا
அதற்குப் பின்னர்
لَغَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்

Wallazeena 'amilus saiyiaati summa taaboo mim ba'dihaa wa aamanooo inna Rabbaka mim ba'dihaa la Ghafoorur Raheem

(எனினும் இத்தகைய) பாவங்கள் செய்து கொண்டிருந்தவர் களிலும் எவர்கள் கைசேதப்பட்டு அதிலிருந்து விலகி உண்மையாகவே நம்பிக்கை கொள்கின்றார்களோ (அவர்களின் பாவத்தை,) அதற்குப் பின்னர் நிச்சயமாக உங்கள் இறைவன் மன்னித்துக் கிருபை செய்பவனாக இருக்கின்றான்.

Tafseer

وَلَمَّا
போது
سَكَتَ
தனிந்தது, அடங்கியது, அமைதியானது
عَن مُّوسَى
மூஸாவிற்கு
ٱلْغَضَبُ
கோபம்
أَخَذَ ٱلْأَلْوَاحَۖ
எடுத்தார்/பலகைகளை
وَفِى نُسْخَتِهَا
அவற்றில் எழுதப்பட்டதில்
هُدًى
நேர்வழி
وَرَحْمَةٌ
இன்னும் கருணை
لِّلَّذِينَ
எவர்களுக்கு
هُمْ
அவர்கள்
لِرَبِّهِمْ
தங்கள் இறைவனை
يَرْهَبُونَ
பயப்படுகிறார்கள்

Wa lammaa sakata 'am Moosal ghadabu akhazal al waaha wa fee nnuskhatihaa hudanw wa rahmatul lillazeena hum li Rabbihim yarhaboon

மூஸாவுடைய கோபம் தணிந்த பின்னர் அவர் (அக்கற்) பலகைகளை எடுத்துக் கொண்டார். அதில் தங்கள் இறைவனுக்கு அஞ்சுபவர்களுக்கு நேரான வழியும் அருளும் இருந்தன.

Tafseer

وَٱخْتَارَ
தேர்ந்தெடுத்தார்
مُوسَىٰ
மூஸா
قَوْمَهُۥ
தன் சமுதாயத்தில்
سَبْعِينَ
எழுபது
رَجُلًا
ஆண்களை
لِّمِيقَٰتِنَاۖ
நம் குறிப்பிட்ட நேரத்திற்கு
فَلَمَّآ
போது
أَخَذَتْهُمُ
பிடித்தது/அவர்களை
ٱلرَّجْفَةُ
இடிமுழக்கம்
قَالَ
கூறினார்
رَبِّ
என் இறைவா
لَوْ شِئْتَ
நீ நாடியிருந்தால்
أَهْلَكْتَهُم
அழித்திருப்பாய்/அவர்களை
مِّن قَبْلُ
(இதற்கு) முன்னரே
وَإِيَّٰىَۖ
இன்னும் என்னை
أَتُهْلِكُنَا
அழிப்பாயா/எங்களை
بِمَا فَعَلَ
செய்ததற்காக
ٱلسُّفَهَآءُ
அறிவீனர்கள்
مِنَّآۖ
எங்களில்
إِنْ هِىَ
இல்லை/இது
إِلَّا
தவிர
فِتْنَتُكَ
உன் சோதனையே
تُضِلُّ
வழிகெடுக்கிறாய்
بِهَا
இதைக் கொண்டு
مَن
எவரை
تَشَآءُ
நாடுகிறாய்
وَتَهْدِى
இன்னும் நேர்வழி செலுத்துகிறாய்
مَن
எவரை
تَشَآءُۖ
நாடுகிறாய்
أَنتَ
நீ
وَلِيُّنَا
எங்கள் பாதுகாவலன்
فَٱغْفِرْ لَنَا
ஆகவே மன்னிப்பு வழங்கு/எங்களுக்கு
وَٱرْحَمْنَاۖ
கருணைபுரி/எங்களுக்கு
وَأَنتَ خَيْرُ
நீ மிகச் சிறந்தவன்
ٱلْغَٰفِرِينَ
மன்னிப்பவர்களில்

Wakhtaara Moosaa qawmahoo sab'eena rajjulal limeeqaatinaa falammaa akhazat humur rajfatu qaala Rabbi law shi'ta ahlaktahum min qablu wa iyyaaya atuhlikunna bimaa fa'alas sufahaaa'u minnaa in hiya illaa fitnatuka tudillu bihaa man tashaaa'u wa tahdee man tashaaa'u Anta waliyyunaa faghfir lanaa warhammnnaa wa Anta khairul ghaafireen

மூஸா, நாம் குறித்த நேரத்தி(ல் "தூர்" என்னும் மலைக்குத் தம்முடன் வருவத)ற்காக தம் மக்களில் எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்களை பூகம்பம் பிடித்(து மூர்ச்சையாகி விழுந்)ததும் அவர் (தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! (எங்களை அழித்துவிட வேண்டுமென்று) நீ கருதியிருந்தால் இதற்கு முன்னதாகவே என்னையும் இவர்களையும் நீ அழித்திருக்கலாமே. எங்களிலுள்ள சில அறிவீனர்கள் செய்த (குற்றத்)திற்காக எங்கள் அனைவரையும் நீ அழித்து விடுகிறாயா? இது உன்னுடைய சோதனையே அன்றி வேறில்லை. இதனைக் கொண்டு நீ நாடியவர்களை வழி தவற விடுகிறாய்; நீ நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகிறாய். நீதான் எங்களுடைய இறைவன். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு நீ அருள் புரிவாயாக! மன்னிப்பவர்கள் அனைவரிலும் நீ மிக்க மேலானவன்" என்று(ம் பிரார்த்தித்துக்) கூறினார்.

Tafseer

وَٱكْتُبْ
எழுதுவாயாக, விதிப்பாயாக
لَنَا
எங்களுக்கு
فِى هَٰذِهِ
இம்மையில்
حَسَنَةً
அழகியதை, நல்ல வாழ்வை
وَفِى ٱلْءَاخِرَةِ
இன்னும் மறுமையில்
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
هُدْنَآ
திரும்பினோம்
إِلَيْكَۚ
உன் பக்கம்
قَالَ
கூறினான்
عَذَابِىٓ
என் வேதனை
أُصِيبُ
அடைவேன்
بِهِۦ
அதைக் கொண்டு
مَنْ أَشَآءُۖ
எவரை/நாடுவேன்
وَرَحْمَتِى
என் கருணை
وَسِعَتْ
விசாலமாக்கி விட்டது
كُلَّ شَىْءٍۚ
எல்லாவற்றையும்
فَسَأَكْتُبُهَا
விதிப்பேன்/அதை
لِلَّذِينَ
எவர்களுக்கு
يَتَّقُونَ
அஞ்சுவார்கள்
وَيُؤْتُونَ
இன்னும் கொடுப்பார்கள்
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
هُم
அவர்கள்
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்வார்கள்

Waktub lanaa fee haazi hid dunyaa hasanatanw wa fil Aakhirati innnaa hudnaaa ilaik; qaala 'azaabee useebu bihee man ashaaa'u wa rahmatee wasi'at kulla shai'; fasa aktubuhaa lillazeena yattaqoona wa yu'toonaz Zakaata wallazeena hum bi Aayaatinaa yu'minoon

அன்றி "(இறைவனே!) இம்மையில் நீ எங்களுக்கு நன்மையை முடிவு செய்வாயாக! (அவ்வாறே) மறுமையிலும் (செய்வாயாக!) நிச்சயமாக நாங்கள் உன் பக்கமே முன்னோக்கினோம்" (என்றும் பிரார்த்தித்தார்.) அ(தற்கு இறை)வன் "நான் நாடியவர்களை என்னுடைய வேதனை வந்தடையும். எனினும், என்னுடைய அருட்கொடை அனைத்தையும் விட மிக விரிவானது. ஆகவே, எவர்கள் (எனக்குப்) பயந்து ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுக்கும் (என்னுடைய அருளை) நான் முடிவு செய்வேன்" என்று கூறினான்.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
يَتَّبِعُونَ
பின்பற்றுவார்கள்
ٱلرَّسُولَ
இத்தூதரை
ٱلنَّبِىَّ
நபியான
ٱلْأُمِّىَّ
எழுதப் படிக்கத் தெரியாதவர்
ٱلَّذِى
எவர்
يَجِدُونَهُۥ
காண்கின்றனர்/அவரை
مَكْتُوبًا
குறிப்பிடப்பட்டவராக
عِندَهُمْ
அவர்களிடம்
فِى ٱلتَّوْرَىٰةِ
தவ்றாத்தில்
وَٱلْإِنجِيلِ
இன்னும் இன்ஜீலில்
يَأْمُرُهُم
ஏவுவார் அவர்களுக்கு
بِٱلْمَعْرُوفِ
நன்மையை
وَيَنْهَىٰهُمْ
இன்னும் தடுப்பார்/அவர்களை
عَنِ ٱلْمُنكَرِ
தீமையைவிட்டு
وَيُحِلُّ
இன்னும் ஆகுமாக்குவார்
لَهُمُ
அவர்களுக்கு
ٱلطَّيِّبَٰتِ
நல்ல,சுத்தமானவற்றை
وَيُحَرِّمُ
இன்னும் தடை செய்வார்
عَلَيْهِمُ
அவர்களுக்கு
ٱلْخَبَٰٓئِثَ
கெட்டவற்றை, கெடுதி செய்பவற்றை
وَيَضَعُ
இன்னும் அகற்றுவார்
عَنْهُمْ
அவர்களை விட்டு
إِصْرَهُمْ
கடின சுமையை/அவர்களுடைய
وَٱلْأَغْلَٰلَ
இன்னும் விலங்குகளை
ٱلَّتِى كَانَتْ
எவை/இருந்தன
عَلَيْهِمْۚ
அவர்கள் மீது
فَٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
بِهِۦ
அவரை
وَعَزَّرُوهُ
இன்னும் பாதுகாத்தனர்/அவரை
وَنَصَرُوهُ
இன்னும் உதவினர்/அவருக்கு
وَٱتَّبَعُوا۟
இன்னும் பின்பற்றினர்
ٱلنُّورَ
ஒளியை
ٱلَّذِىٓ أُنزِلَ
எது/இறக்கப்பட்டது
مَعَهُۥٓۙ
அவருடன்
أُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلْمُفْلِحُونَ
வெற்றியாளர்கள்

Allazeena yattabi'oonar Rasoolan Nabiyyal ummiyyal lazee yajidoonahoo maktooban 'indahum fit Tawraati wal Injeeli yaa muruhum bilma'roofi wa yanhaahum 'anil munkari wa yuhillu lahumul taiyibaati wa yuharrimu 'alaihimul khabaaa'isa wa yada'u 'anhum israhum wal aghlaalal latee kaanat 'alaihim; fallazeena aamanoo bihee wa 'azzaroohu wa nnasaroohu wattaba'un nooral lazeee unzila ma'ahooo ulaaa'ika humul muflihoon

(ஆகவே, அவர்களில்) எவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத (நம்) தூதராகிய இந்த நபியைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் தங்களிடமுள்ள தவ்றாத்திலும், இன்ஜீலிலும் இவருடைய பெயர் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். (இத்தூதரோ) அவர்களை நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார். நல்லவைகளையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார். அன்றி, அவர்களது சுமையையும் அவர்கள் மீதிருந்த (கடினமான சட்ட) விலங்குகளையும் (இறைவனின் அனுமதி கொண்டு) நீக்கிவிடுவார். ஆகவே, எவர்கள் அவரை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, அவரை பலப்படுத்தி அவருக்கு உதவி செய்து, அவருக்கு இறக்கப்பட்ட பிரகாசமான (இவ்வேதத்)தைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்.

Tafseer

قُلْ
கூறுவீராக
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மனிதர்களே
إِنِّى
நிச்சயமாக நான்
رَسُولُ
தூதர்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
إِلَيْكُمْ جَمِيعًا
உங்கள் அனைவருக்கும்
ٱلَّذِى
எவன்
لَهُۥ
அவனுக்குரியதே
مُلْكُ
ஆட்சி
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களின்
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமியின்
لَآ إِلَٰهَ
அறவே இல்லை
إِلَّا
வணங்கப்படும் இறைவன்
هُوَ
அவனைத்தவிர
يُحْىِۦ
உயிர்ப்பிக்கிறான்
وَيُمِيتُۖ
இன்னும் மரணிக்கச் செய்கிறான்
فَـَٔامِنُوا۟
ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்வைக் கொண்டு
وَرَسُولِهِ
இன்னும் அவனுடைய தூதரை
ٱلنَّبِىِّ
நபி
ٱلْأُمِّىِّ
எழுதப்படிக்கத் தெரியாதவர்
ٱلَّذِى
எவர்
يُؤْمِنُ
நம்பிக்கைகொள்கிறார்
بِٱللَّهِ
அல்லாஹ்வைக் கொண்டு
وَكَلِمَٰتِهِۦ
இன்னும் அவனுடைய வாக்குகளை
وَٱتَّبِعُوهُ
பின்பற்றுங்கள்/அவரை
لَعَلَّكُمْ تَهْتَدُونَ
நீங்கள் நேர்வழிபெறுவதற்காக

Qul yaaa aiyuhan naasu innee Rasoohul laahi ilaikum jamee'anil lazee lahoo mulkus samaawaati wal ardi laaa ilaaha illaa Huwa yuhyee wa yumeetu fa aaminoo billaahi wa Rasoolihin Nabiyyil ummiy yil lazee yu'minu billaahi wa Kalimaatihee wattabi'oohu la'allakum tahtadoon

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மனிதர்களே! (நீங்கள் எந்த நாட்டவர் ஆயினும் எவ்வகுப்பாராயினும்) நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ஒரு தூதர். வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குடையதே! (வணக்கத்திற்குரிய) இறைவன் அவனைத்தவிர வேறு ஒருவருமில்லை. அவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கும்படி செய்கிறான். ஆகவே, அந்த அல்லாஹ்வையும், எழுதப் படிக்க அறியாத அவனுடைய இத்தூதரையும் நீங்கள் நம்பிக்கை கொள்வீர்களாக! அவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வசனங்களையும் நம்பிக்கை கொள்கிறார். ஆகவே, நீங்கள் நேரான வழியை அடைய அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்.

Tafseer

وَمِن قَوْمِ
சமுதாயத்தில்
مُوسَىٰٓ
மூஸாவுடைய
أُمَّةٌ
ஒரு கூட்டம்
يَهْدُونَ
வழி காட்டுகிறார்கள்
بِٱلْحَقِّ
சத்தியத்தின்படி
وَبِهِۦ
இன்னும் அதைக்கொண்டு
يَعْدِلُونَ
நீதியாக நடக்கின்றனர்

Wa min qawmi Moosaaa ummatuny yahdoona bilhaqqi wa bihee ya'diloon

மூஸாவுடைய மக்களில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (தாங்கள் சத்திய வழியில் செல்வதுடன், மக்களுக்கும்) சத்திய வழியை அறிவித்து, அதன்படி நீதமாகவும் நடக்கின்றனர்.

Tafseer

وَقَطَّعْنَٰهُمُ
பிரித்தோம்/அவர்களை
ٱثْنَتَىْ عَشْرَةَ
பன்னிரெண்டு
أَسْبَاطًا
சந்ததிகளாக
أُمَمًاۚ
கூட்டங்களாக
وَأَوْحَيْنَآ
இன்னும் வஹீ அறிவித்தோம்
إِلَىٰ مُوسَىٰٓ
மூஸாவிற்கு
إِذِ ٱسْتَسْقَىٰهُ
போது/தண்ணீர் கேட்டார்(கள்)/அவரிடம்
قَوْمُهُۥٓ
அவருடைய சமுதாயம்
أَنِ ٱضْرِب
அடிப்பீராக! என்று
بِّعَصَاكَ
உமது தடியால்
ٱلْحَجَرَۖ
கல்லை
فَٱنۢبَجَسَتْ
பீறிட்டன
مِنْهُ
அதிலிருந்து
ٱثْنَتَا عَشْرَةَ
பன்னிரெண்டு
عَيْنًاۖ
ஊற்று(கள்)
قَدْ عَلِمَ
அறிந்து கொண்டார்(கள்)
كُلُّ
எல்லாம்
أُنَاسٍ
மக்கள்
مَّشْرَبَهُمْۚ
தங்கள் அருந்துமிடத்தை
وَظَلَّلْنَا
இன்னும் நிழலிடச் செய்தோம்
عَلَيْهِمُ
அவர்கள் மீது
ٱلْغَمَٰمَ
மேகத்தை
وَأَنزَلْنَا
இன்னும் இறக்கினோம்
عَلَيْهِمُ
அவர்கள் மீது
ٱلْمَنَّ
‘மன்னு’ஐ
وَٱلسَّلْوَىٰۖ
இன்னும் ஸல்வாவை
كُلُوا۟
உண்ணுங்கள்
مِن طَيِّبَٰتِ
நல்லவற்றை
مَا رَزَقْنَٰكُمْۚ
எவை/(உணவு) அளித்தோம்/உங்களுக்கு
وَمَا ظَلَمُونَا
அவர்கள் அநீதியிழைக்கவில்லை/நமக்கு
وَلَٰكِن كَانُوٓا۟
எனினும்/இருந்தனர்
أَنفُسَهُمْ
தங்களுக்கே
يَظْلِمُونَ
அநீதியிழைப்பவர்களாக

Wa qatta' naahumus natai 'ashrata asbaatan umamaa; wa awhainaa ilaa Moosaaa izis tasqaahu qawmuhooo anid rib bi'asaakal hajara fambajasat minhus nata 'ashrata 'ainan qad 'alima kullu unaasim mashrabahm; wa zallalnaa 'alaihimul ghammaamma wa anzalnaa 'alaihimul MManna was Salwaa kuloo min taiyibaati maa razaqnaakum; wa maa zalamoonaa wa laakin kaanooo anfusahum yazlimoon

மூஸாவின் மக்களைப் பன்னிரெண்டு கூட்டங்களாகப் பிரித்தோம். மூஸாவிடம் அவர்கள் குடிதண்ணீர் கேட்டபோது (நாம் அவரை நோக்கி) "உங்களுடைய (கைத்) தடியைக் கொண்டு இக்கல்லை அடியுங்கள்!" என்று அவருக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அவர் அடிக்கவே) அதிலிருந்து பன்னிரெண்டு ஊற்றுக்கள் பீறிட்டோடின. (பன்னிரெண்டு வகுப்பினரில்) ஒவ்வொரு வகுப்பினரும் (அவற்றில்) தாங்கள் அருந்தும் ஊற்றை (குறிப்பாக) அறிந்து கொண்டனர். அன்றி, அவர்கள் மீது மேகம் நிழலிடும்படிச் செய்தோம். அவர்களுக்காக "மன்னு ஸல்வா"வையும் இறக்கி வைத்து "உங்களுக்குக் கொடுக்கும் இந்த நல்ல உணவுகளை (அன்றாடம்) புசித்து வாருங்கள். (அதில் எதையும் நாளைக்கென்று சேகரித்து வைக்காதீர்கள்" என்றும் கூறினோம். அவ்வாறிருந்தும் அவர்கள் நமக்கு மாறுசெய்தனர். இதனால்) அவர்கள் நமக்கொன்றும் தீங்கிழைத்து விடவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.

Tafseer