Skip to main content

فَوَقَىٰهُمُ
ஆகவே அவர்களை பாதுகாப்பான்
ٱللَّهُ
அல்லாஹ்
شَرَّ
தீமையில் இருந்து
ذَٰلِكَ ٱلْيَوْمِ
அந்நாளின்/இன்னும் அவர்களுக்கு கொடுப்பான்
نَضْرَةً
முக செழிப்பையும்
وَسُرُورًا
மன மகிழ்ச்சியையும்

Fa waqaahumul laahu sharra zaalikal yawmi wa laqqaahum nadratanw wa surooraa

ஆகவே, அல்லாஹ் அத்தகைய நாளின் தீங்கிலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொண்டு, அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொடுத்தான்.

Tafseer

وَجَزَىٰهُم
இன்னும் அவன் அவர்களுக்கு கூலியாகக் கொடுப்பான்
بِمَا صَبَرُوا۟
அவர்கள் பொறுமையாக இருந்ததால்
جَنَّةً
சொர்க்கத்தையும்
وَحَرِيرًا
பட்டையும்

Wa jazaahum bimaa sabaroo janatanw wa hareeraa

அன்றி, அவர்கள் இம்மையில் (கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாகச் சுவனபதியையும், (அணிவதற்குப்) பட்டாடைகளையும் அவர்களுக்குக் கூலியாகக் கொடுத்தான் (என்று கூறப்படும்).

Tafseer

مُّتَّكِـِٔينَ
சாய்ந்தவர்களாக
فِيهَا
அதில்
عَلَى ٱلْأَرَآئِكِۖ
கட்டில்களில்
لَا يَرَوْنَ
காண மாட்டார்கள்
فِيهَا
அதில்
شَمْسًا
சூரியனையோ
وَلَا زَمْهَرِيرًا
குளிரையோ

muttaki'eena feeha 'alal araaa 'iki laa yarawna feehaa shamsanw wa laa zamhareeraa

(அவர்கள்) அங்குள்ள கட்டில்களின் மீது(ள்ள பஞ்சணை களின் மேல்) சாய்ந்து கொண்டிருப்பார்கள். அதில் சூரிய வெப்பத்தையும், பனியின் கொடிய குளிர்ச்சியையும் காண மாட்டார்கள்.

Tafseer

وَدَانِيَةً
அருகில் இருக்கும்
عَلَيْهِمْ
அவர்களுக்கு
ظِلَٰلُهَا
அதன் நிழல்கள்
وَذُلِّلَتْ
மிக தாழ்வாக ஆக்கப்பட்டிருக்கும்
قُطُوفُهَا
அவற்றின் கனிகள்
تَذْلِيلًا
மிக தாழ்வாக

Wa daaniyatan 'alaihim zilaaluhaa wa zullilat qutoofu haa tazleela

அதிலுள்ள (மரங்களின்) நிழல்கள் அவர்கள் மீது தாழ்ந்து (சூழ்ந்து) கொண்டிருக்கும். அதன் கனிகள் (சுலபமாகப் பறிக்கக்கூடிய விதத்தில்) அவர்கள் முன் சாய்ந்து வரும்.

Tafseer

وَيُطَافُ عَلَيْهِم
அவர்கள் முன் சுற்றி வரப்படும்
بِـَٔانِيَةٍ
பாத்திரங்கள்
مِّن فِضَّةٍ
வெள்ளியினால்
وَأَكْوَابٍ
கெண்டிகள்
كَانَتْ
இருக்கின்ற
قَوَارِيرَا۠
கண்ணாடிகளாக

Wa yutaafu 'alaihim bi aaniyatim min fiddatinw wa akwaabin kaanat qawaareeraa

(பலவகை இன்பமான பானங்கள் நிறைந்த) பளிங்குக் கெண்டிகளும், வெள்ளிக் கிண்ணங்களும் அவர்கள் முன் சுற்றிக் கொண்டே இருக்கும்.

Tafseer

قَوَارِيرَا۟
கண்ணாடிகளாகும்
مِن فِضَّةٍ
வெள்ளிகலந்த
قَدَّرُوهَا
அவற்றை நிர்ணயிப்பார்கள்
تَقْدِيرًا
துல்லியமாக

Qawaareera min fiddatin qaddaroohaa taqdeeraa

(அவை பளிங்குகளல்ல; எனினும்,) பளிங்குகளைப் போல் வெள்ளியினால் (அவர்களின் அவசியத்திற்குத்) தக்கவாறு நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

Tafseer

وَيُسْقَوْنَ
இன்னும் அவர்களுக்கு புகட்டப்படும்
فِيهَا
அதில்
كَأْسًا
மதுக் குவளையில்
كَانَ
இருக்கும்
مِزَاجُهَا
அதன் கலவை
زَنجَبِيلًا
இஞ்சியாக

Wa yusawna feehaa kaasan kaana mizaajuhaa zanjabeelaa

(இஞ்சி கலந்த) "சன்ஜபீல்" என்னும் (மிக்க உயர்ந்ததொரு) பானமும் அங்கு அவர்களுக்குப் புகட்டப்படும்.

Tafseer

عَيْنًا
ஓர் ஊற்றாகும்
فِيهَا
அதில் உள்ள
تُسَمَّىٰ
பெயர் கூறப்படும்
سَلْسَبِيلًا
சல்சபீல்

'Aynan feeha tusammaa salsabeelaa

அது அங்குள்ள ஓர் ஊற்றின் நீர், அதற்கு "ஸல்ஸபீல்" என்றும் பெயர் கூறப்படும்.

Tafseer

وَيَطُوفُ
இன்னும் சுற்றி வருவார்(கள்)
عَلَيْهِمْ
அவர்களை
وِلْدَٰنٌ
சிறுவர்கள்
مُّخَلَّدُونَ
நிரந்தரமானவர்கள்
إِذَا رَأَيْتَهُمْ
நீர் அவர்களைப் பார்த்தால்
حَسِبْتَهُمْ
அவர்களை எண்ணுவீர்
لُؤْلُؤًا
முத்துக்களாக
مَّنثُورًا
பரப்பி வைக்கப்பட்ட

Wa yatoofu 'alaihim wildaanum mukhalladoona izaa ra aytahum hasibtahum lu'lu 'am mansoora

(என்றுமே) சிறுவர்களாக இருக்கக்கூடிய பணியாளர்கள் அவர்களைச் சுற்றிக்கொண்டே திரிவார்கள். (நபியே!) அவர்களை நீங்கள் கண்டால் சிதறிய முத்துக்களெனவே மதிப்பீர்கள்.

Tafseer

وَإِذَا رَأَيْتَ
நீர் பார்த்தாலும்
ثَمَّ
எந்த இடத்தை
رَأَيْتَ
நீர் பார்ப்பீர்
نَعِيمًا
பேரின்பத்தை(யும்)
وَمُلْكًا
ஆட்சியையும்
كَبِيرًا
பெரிய

Wa izaa ra ayta summa ra ayta na'eemanw wa mulkan kabeera

பின்னும் கவனித்துப் பார்த்தால், பெரிய அரச மாளிகையில் உள்ள சுகபோகங்களையெல்லாம் நீங்கள் (அங்குக்) காண்பீர்கள்.

Tafseer