Skip to main content

وَإِن جَنَحُوا۟
அவர்கள் இணங்கினால்
لِلسَّلْمِ
சமாதானத்திற்கு
فَٱجْنَحْ
நீர் இணங்குவீராக
لَهَا
அதற்கு
وَتَوَكَّلْ
நம்பிக்கை வைப்பீராக
عَلَى
மீது
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்

Wa in janahoo lissalmi fajnah lahaa wa tawakkal 'alal laah; innahoo Huwas Samee'ul 'Aleem

அவர்கள் சமாதானத்திற்கு இணங்கிவந்தால், நீங்களும் அதன் பக்கம் இணங்கி வாருங்கள். அல்லாஹ்விடமே பொறுப்பு சாட்டுங்கள்; நிச்சயமாக அவன் செவியுறுபவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَإِن يُرِيدُوٓا۟
அவர்கள் நாடினால்
أَن
அவர்கள் வஞ்சிக்க
يَخْدَعُوكَ
அவர்கள் வஞ்சிக்க உம்மை
فَإِنَّ
நிச்சயமாக
حَسْبَكَ
உமக்குப் போதுமானவன்
ٱللَّهُۚ
அல்லாஹ்தான்
هُوَ
அவன்
ٱلَّذِىٓ
எவன்
أَيَّدَكَ
பலப்படுத்தினான் உம்மை
بِنَصْرِهِۦ
தன் உதவியைக் கொண்டு
وَبِٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களைக் கொண்டு

Wa iny yureedooo any-yakhda'ooka fainna hasbakal laah; Huwal lazeee aiyadaka binasrihee wa bilmu'mineen

(நபியே!) அவர்கள் உங்களுக்கு சதி செய்யக் கருதினால் (உங்களை பாதுகாக்க) நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் போதுமானவனாக இருக்கின்றான். அவன்தான் உங்களை தன் உதவியைக் கொண்டும் நம்பிக்கையாளர்களைக் கொண்டும் பலப்படுத்தினான்.

Tafseer

وَأَلَّفَ
ஒன்றிணைத்தான்
بَيْنَ
இடையில்
قُلُوبِهِمْۚ
அவர்களுடைய உள்ளங்கள்
لَوْ أَنفَقْتَ
நீர் செலவு செய்தால்
مَا فِى
பூமியிலுள்ளவை
جَمِيعًا
அனைத்தையும்
مَّآ أَلَّفْتَ
ஒன்றிணைத்திருக்க மாட்டீர்/மத்தியில்
قُلُوبِهِمْ
அவர்களுடைய உள்ளங்கள்
وَلَٰكِنَّ
என்றாலும் நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
أَلَّفَ
ஒன்றிணைத்தான்
بَيْنَهُمْۚ
அவர்களுக்கு மத்தியில்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
عَزِيزٌ
மிகைத்தவன்
حَكِيمٌ
ஞானவான்

Wa allafa baina quloobihim; law anfaqta maa fil ardi jamee'am maaa allafta baina quloobihim wa laakinnallaaha allafa bainahum; innaahoo 'Azeezun Hakeem

அந்த நம்பிக்கையாளர்களுடைய உள்ளங்களில் (இஸ்லாமின் மூலம்) அன்பையூட்டி (சிதறிக்கிடந்த அவர்களை) ஒன்று சேர்த்தான். பூமியிலுள்ள அனைத்தையும் நீங்கள் செலவு செய்தபோதிலும் அவர்களுடைய உள்ளங்களில் அன்பையூட்ட உங்களால் முடியாது. எனினும், அல்லாஹ்தான் அவர்களை அன்பின் மூலம் ஒன்று சேர்த்தான். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
நபியே!
حَسْبُكَ
உமக்குப் போதுமானவன்
ٱللَّهُ
அல்லாஹ்தான்
وَمَنِ
இன்னும் எவருக்கு
ٱتَّبَعَكَ
உம்மைப் பின்பற்றினார்
مِنَ
இருந்து
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்கள்

Yaaa aiyuhan Nabiyyu hasbukal laahu wa manittaba 'aka minal mu'mineen

நபியே! அல்லாஹ்வும், நம்பிக்கையாளர்களில் உங்களைப் பின்பற்றியவர்களுமே உங்களுக்குப் போதுமானவர்கள்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
நபியே!
حَرِّضِ
தூண்டுவீராக
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களை
عَلَى ٱلْقِتَالِۚ
போருக்கு
إِن يَكُن
இருந்தால்
مِّنكُمْ
உங்களில்
عِشْرُونَ
இருபது (நபர்கள்)
صَٰبِرُونَ
பொறுமையாளர்கள்
يَغْلِبُوا۟
வெல்வார்கள்
مِا۟ئَتَيْنِۚ
இரு நூறு(நபர்களை)
وَإِن يَكُن
இருந்தால்/உங்களில்
مِّا۟ئَةٌ
நூறு (நபர்கள்)
يَغْلِبُوٓا۟
வெல்வார்கள்
أَلْفًا
ஆயிரம் (நபர்களை)
مِّنَ
இருந்து
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
بِأَنَّهُمْ
காரணம்/நிச்சயமாக அவர்கள்
قَوْمٌ
மக்கள்
لَّا يَفْقَهُونَ
சிந்தித்து விளங்க மாட்டார்கள்

Yaaa aiyuhan Nabiyyu harridil mu'mineena 'alal qitaal; iny-yakum minkum 'ishroona saabiroona yaghliboo mi'atayn; wa iny-yakum minkum min'atuny yaghlibooo alfam minal lazeena kafaroo bi anahum qawmul laa yafqahoon

(அன்றி) நபியே! நீங்கள் நம்பிக்கையாளர்களை போருக்குத் (தயாராகும் படித்) தூண்டுங்கள். உங்களில் பொறுமையும், சகிப்புத்தன்மையும் உடைய இருபது பேர்கள் இருந்தால் இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். உங்களில் (அத்தகைய) நூறு பேர்கள் இருந்தால் நிராகரிப்பவர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள். (நீங்கள் மிகக் குறைவாக இருந்தும் அவர்களை துணிவுடன் எதிர்க்கலாம் என்று கூறியது, உங்களுக்கு அல்லாஹ் புரியும் உதவியை). நிச்சயமாக அவர்கள் அறியாத மக்களாக இருப்பதுதான் இதற்குக் காரணமாகும்.

Tafseer

ٱلْـَٰٔنَ
இப்போது
خَفَّفَ
இலகுவாக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَنكُمْ
உங்களுக்கு
وَعَلِمَ
இன்னும் அறிந்தான்
أَنَّ فِيكُمْ
நிச்சயமாக/உங்களில்
ضَعْفًاۚ
பலவீனம்
فَإِن يَكُن
இருந்தால்
مِّنكُم
உங்களில்
مِّا۟ئَةٌ
நூறு (நபர்கள்)
صَابِرَةٌ
பொறுமையாளர்கள்
يَغْلِبُوا۟
வெல்வார்கள்
مِا۟ئَتَيْنِۚ
இரு நூறு(நபர்களை)
وَإِن يَكُن
இருந்தால்
مِّنكُمْ
உங்களில்
أَلْفٌ
ஆயிரம் (நபர்கள்)
يَغْلِبُوٓا۟
வெல்வார்கள்
أَلْفَيْنِ
இரண்டாயிரம் (நபர்களை)
بِإِذْنِ
அனுமதி கொண்டு
ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
وَٱللَّهُ
அல்லாஹ்
مَعَ
உடன்
ٱلصَّٰبِرِينَ
பொறுமையாளர்கள்

Al'aana khaffafal laahu 'ankum wa 'alima anna feekum da'faa; fa-iny yakum minkum mi'atun saabiratuny yaghliboo mi'atayn; wa iny-yakum minkum alfuny yaghlibooo alfaini bi iznil laah; wallaahu ma'as saabireen

எனினும், நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றதுஎன்பதை அல்லாஹ் நன்கறிந்து கொண்டு தற்சமயம் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான். ஆகவே, உங்களில் பொறுமையும், சகிப்புத் தன்மையும் உடைய நூறு பேர்களிருந்தால் (மற்ற) இருநூறு பேர்களை வென்றுவிடுவார்கள். (இத்தகைய) ஆயிரம் பேர் உங்களில் இருந்தால் அல்லாஹ்வின் உதவி கொண்டு (மற்ற) இரண்டாயிரம் பேர்களை வென்று விடுவார்கள். அல்லாஹ் சகிப்பும், பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.

Tafseer

مَا كَانَ
ஆகுமானதல்ல
لِنَبِىٍّ
ஒரு நபிக்கு
أَن يَكُونَ
இருப்பது
لَهُۥٓ
அவருக்கு
أَسْرَىٰ حَتَّىٰ
கைதிகள்/வரை
يُثْخِنَ
கொன்று குவிப்பார்
فِى ٱلْأَرْضِۚ
பூமியில்
تُرِيدُونَ
நாடுகிறீர்கள்
عَرَضَ
பொருளை
ٱلدُّنْيَا
உலகத்தின்
وَٱللَّهُ
அல்லாஹ்
يُرِيدُ
நாடுகிறான்
ٱلْءَاخِرَةَۗ
மறுமையை
وَٱللَّهُ
அல்லாஹ்
عَزِيزٌ
மிகைத்தவன்
حَكِيمٌ
ஞானவான்

Maa kaana li Nabiyyin ai yakoona lahooo asraa hatta yuskhina fil ard; tureedoona aradad dunyaa wallaahu yureedul Aakhirah; wallaahu 'Azeezun Hakeem

(இஸ்லாமையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க வந்த) எதிரிகளை கொன்று குவிக்கும் வரை அவர்களை கைதியாக்குவது இறைத்தூதருக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இவ்வுலகப் பொருளை விரும்புகின்றீர்கள். அல்லாஹ்வோ (உங்களுக்கு) மறுமை வாழ்க்கையை விரும்புகின்றான். அல்லாஹ் மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

لَّوْلَا كِتَٰبٌ
விதி இல்லையெனில்
مِّنَ
இருந்து
ٱللَّهِ
அல்லாஹ்
سَبَقَ
முந்தியது
لَمَسَّكُمْ
பிடித்தே இருக்கும்/உங்களை
فِيمَآ أَخَذْتُمْ
எதில்/வாங்கினீர்கள்
عَذَابٌ عَظِيمٌ
மகத்தான வேதனை

Law laa Kitaabum minal laahi sabaqa lamassakum fee maaa akhaztum 'azaabun 'azeem

அல்லாஹ்விடம் (உங்களுக்கு மன்னிப்பு) ஏற்கனவே உறுதி செய்யப்படாமலிருப்பின் நீங்கள் (பத்ரு போரில் கைதிகளிடமிருந்து பிணைத் தொகையை) வாங்கியதில் மகத்தானதொரு வேதனை உங்களைப் பிடித்திருக்கும்.

Tafseer

فَكُلُوا۟
ஆகவே, புசியுங்கள்
مِمَّا
எதில்
غَنِمْتُمْ
வென்றீர்கள்
حَلَٰلًا
ஆகுமானதை
طَيِّبًاۚ
நல்ல
وَٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
ٱللَّهَۚ
அல்லாஹ்வை
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்

Fakuloo mimaa ghanimtum halaalan taiyibaa; watta qullaah; innal laaha Ghafoorur Raheem

ஆகவே, (எதிரிகளிடமிருந்து) உங்களுக்குக் கிடைத்த வைகளை, நல்ல ஆகுமான பொருள்களாகவே (கருதிப்) புசியுங்கள். (இனி இத்தகைய விஷயங்களில்) அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் மிக மன்னிப்பவனும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
நபியே!
قُل
கூறுவீராக
لِّمَن
எவருக்கு
فِىٓ أَيْدِيكُم
உங்கள் கரங்களில்
مِّنَ ٱلْأَسْرَىٰٓ
கைதிகளில்
إِن يَعْلَمِ
அறிந்தால்
ٱللَّهُ
அல்லாஹ்
فِى قُلُوبِكُمْ
உங்கள் உள்ளங்களில்
خَيْرًا
நல்லதை
يُؤْتِكُمْ
கொடுப்பான்/உங்களுக்கு
خَيْرًا
சிறந்ததை
مِّمَّآ
எதைவிட
أُخِذَ
எடுக்கப்பட்டது
مِنكُمْ
உங்களிடமிருந்து
وَيَغْفِرْ لَكُمْۗ
மன்னிப்பான்/உங்களை
وَٱللَّهُ
அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்

Yaaa aiyuhan Nabiyyu qul liman feee aideekum minal asraaa iny-ya lamillaahu fee quloobikum khairany yu'tikum khayram mimmaaa ukhiza minkum wa yaghfir lakum; wallaahu Ghafoorur Raheem

நபியே! உங்களிடம் சிறைப்பட்டிருப்பவர்களை நோக்கிக் கூறுங்கள்: "உங்களுடைய உள்ளங்களில் நல்லெண்ணம் இருப்பதை அல்லாஹ் அறிந்தால் உங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளப் பட்டவைகளைவிட மிக்க மேலானவைகளை உங்களுக்குக் கொடுத்து உங்களுடைய குற்றங்களை (அவன்) மன்னித்து விடுவான். ஏனென்றால், அல்லாஹ் மிக மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்."

Tafseer