Skip to main content

ذَٰلِكَ بِمَا
அதற்குக் காரணம்
قَدَّمَتْ
முற்படுத்தின
أَيْدِيكُمْ
உங்கள் கரங்கள்
وَأَنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَيْسَ
இல்லை
بِظَلَّٰمٍ
அநீதியிழைப்பவன்
لِّلْعَبِيدِ
அடியார்களுக்கு

Zaalika bimaa qaddamat aideekum wa anal laaha laisa bizallaamil lil 'abeed

(அன்றி மலக்குகள் அவர்களை நோக்கி) "முன்னர் உங்கள் கைகள் சம்பாதித்துக் கொண்டவைகளின் காரணமாகவே இது (இவ்வேதனை உங்களுக்கு) ஏற்பட்டது. நிச்சயமாக அல்லாஹ் (தன்) அடியார்களில் எவரையும் ஒரு சிறிதும் அநியாயம் செய்வதே யில்லை" (என்றும் கூறுவார்கள்.)

Tafseer

كَدَأْبِ ءَالِ
நிலைமையைப் போன்று/சமுதாயம்
فِرْعَوْنَۙ
ஃபிர்அவ்னுடைய
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
مِن قَبْلِهِمْۚ
அவர்களுக்கு முன்னர்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
بِـَٔايَٰتِ
வசனங்களை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
فَأَخَذَهُمُ ٱللَّهُ
ஆகவே அவர்களைத் தண்டித்தான்/அல்லாஹ்
بِذُنُوبِهِمْۗ
அவர்களுடைய பாவங்களினால்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
قَوِىٌّ
மிக வலிமையானவன்
شَدِيدُ
கடுமையானவன்
ٱلْعِقَابِ
தண்டிப்பதில்

Kadaabi Aali Fir'awna wal lazeena min qablihim; kafaroo bi Aayaatil laahi fa akhazahu mul laahu bizunoobihim; innal laaha qawiyyun shadeedul 'iqaab

ஃபிர்அவ்னுடைய மக்களின் நிலைமை, அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமை போலவே (இவர்களுடைய நிலைமையும் இருக்கிறது.) அவர்களும் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டே இருந்தனர். ஆதலால், அவர்களின் பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக வலிமையானவனும், வேதனை செய்வதில் மிகக் கடினமானவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

ذَٰلِكَ
அதற்கு
بِأَنَّ
காரணம், நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَمْ يَكُ
இருக்கவில்லை
مُغَيِّرًا
மாற்றுபவனாக
نِّعْمَةً
ஓர் அருட்கொடையை
أَنْعَمَهَا
அருள்புரிந்தான்/அதை
عَلَىٰ
மீது
قَوْمٍ
ஒரு சமுதாயம்
حَتَّىٰ
வரை
يُغَيِّرُوا۟
மாற்றுவார்கள்
مَا بِأَنفُسِهِمْۙ
எதை/தங்களிடம்
وَأَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
سَمِيعٌ
நன்கு செவியுறுபவன்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Zaalika bi annal laaha lam yaku mughaiyiran ni matan an'amahaa 'alaa qawmin hattaa yughaiyiroo maa bianfusihim wa annallaaha samee un 'Aleem

எந்த மக்களும் தங்கள் நிலைமையை மாற்றிக்கொள்ளாத வரையில் நிச்சயமாக அல்லாஹ்வும் அவர்களுக்குப் புரிந்த அருளை மாற்றி விடுவதில்லை (என்றிருந்தும், அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டதனால் அவர்களுக்கு இவ்வேதனை ஏற்பட்டது.) நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனும் மிக்க அறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

كَدَأْبِ
நிலைமையைப் போன்று
ءَالِ
சமுதாயம்
فِرْعَوْنَۙ
ஃபிர்அவ்னுடைய
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
مِن قَبْلِهِمْۚ
அவர்களுக்கு முன்னர்
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
بِـَٔايَٰتِ
வசனங்களை
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
فَأَهْلَكْنَٰهُم
அழித்தோம்/அவர்களை
بِذُنُوبِهِمْ
அவர்களுடைய பாவங்களினால்
وَأَغْرَقْنَآ
இன்னும் மூழ்கடித்தோம்
ءَالَ
சமுதாயம்
فِرْعَوْنَۚ
ஃபிர்அவ்னுடைய
وَكُلٌّ
எல்லோரும்
كَانُوا۟
இருந்தனர்
ظَٰلِمِينَ
அநியாயக்காரர்களாக

Kadaabi Aali Fir'awna wallazeena min qablihim; kazzaboo bi Aayaati Rabbihim faahlaknaahum bizunoobihim wa aghraqnaa Aala Fir'awn; wa kullun kaanoo zaalimeen

(ஆகவே, இவர்களின் நிலைமை நாம் முன்பு கூறியபடி) ஃபிர்அவ்னின் மக்களின் நிலைமையைப் போலும், அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையைப் போலுமே இருக்கின்றது. (அவர்களும் இவர்களைப் போலவே) தங்கள் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். ஆகவே, அவர்களுடைய பாவங்களின் காரணமாக நாம் (பலவகை வேதனைகளைக் கொண்டு ஃபிர்அவ்னுக்கு முன்னிருந்த) அவர்களை அழித்துவிட்டதுடன் ஃபிர்அவ்னுடைய மக்களையும் நாம் மூழ்கடித்து விட்டோம். இவர்கள் அனைவரும் அநியாயக் காரர்களாகவே இருந்தனர்.

Tafseer

إِنَّ شَرَّ
நிச்சயமாக கொடியவர்கள்
ٱلدَّوَآبِّ
மிருகங்களில்
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
فَهُمْ
ஆகவே, அவர்கள்
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Inna sharrad dawaaabbi 'indal laahil lazeena kafaroo fahum laa yu'minoon

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மிருகங்களிலெல்லாம் மிகக் கெட்ட மிருகங்கள் (எவையென்றால்) நிராகரிப்பாளர்கள்தான். ஆகவே, அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
عَٰهَدتَّ
ஒப்பந்தம் செய்தீர்
مِنْهُمْ
அவர்களிடம்
ثُمَّ
பிறகு
يَنقُضُونَ
முறிக்கின்றனர்
عَهْدَهُمْ
ஒப்பந்தத்தை தங்கள்
فِى كُلِّ
ஒவ்வொரு
مَرَّةٍ
முறையிலும்
وَهُمْ
அவர்கள்
لَا يَتَّقُونَ
அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதில்லை

Allazeena'aahatta min hum summa yanqudoona 'ahdahum fee kulli marratinw wa hum laa yattaqoon

இவர்களில் எவர்களுடன் நீங்கள் உடன்படிக்கை செய்தபோதிலும் அந்த உடன்படிக்கையை ஒவ்வொரு முறையிலும் முறித்தே வருகின்றனர். அவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுவதே யில்லை.

Tafseer

فَإِمَّا تَثْقَفَنَّهُمْ
நீர் பெற்றுக் கொண்டால்/அவர்களை
فِى ٱلْحَرْبِ
போரில்
فَشَرِّدْ
விரட்டியடிப்பீராக
بِهِم
அவர்களைக்கொண்டு
مَّنْ
எவர்கள்
خَلْفَهُمْ
அவர்களுக்குப் பின்
لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ
அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக

Fa immaa tasqafannahum fil harbi fasharrid bihim man khalfahum la'allahum yazzakkaroon

போரில் நீங்கள் அவர்களைச் சந்தித்தால் அவர்களுக்குப் பின்னிருப்பவர்களும் (திடுக்கிட்டு) பயந்தோடும்படி அவர்களை சிதறடித்து விடுங்கள். (இதனால்) அவர்கள் அறிவு பெறலாம்.

Tafseer

وَإِمَّا تَخَافَنَّ
நீர் பயந்தால்
مِن
இருந்து
قَوْمٍ
ஒரு சமுதாயம்
خِيَانَةً
மோசடியை
فَٱنۢبِذْ
எறிவீராக
إِلَيْهِمْ
அவர்களிடம்
عَلَىٰ سَوَآءٍۚ
சமமாக
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
ٱلْخَآئِنِينَ
மோசடிக்காரர்களை

Wa immaa takhaafana min qawmin khiyaanatan fambiz ilaihim 'alaa sawaaa'; innal laaha laayuhibbul khaaa'ineen

(உங்களுடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்த வகுப்பினரும் துரோகம் செய்வார்களென நீங்கள் பயந்தால், அதற்குச் சமமாகவே (அவ்வுடன்படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ், துரோகிகளை நேசிப்பதேயில்லை.

Tafseer

وَلَا يَحْسَبَنَّ
நிச்சயமாக அவர்(கள்) எண்ண வேண்டாம்
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
سَبَقُوٓا۟ۚ
முந்திவிட்டனர்
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
لَا يُعْجِزُونَ
அவர்கள் பலவீனப்படுத்த முடியாது

Wa laa yahsabannal lazeena kafaroo sabaqooo; innahum laa yu'jizoon

நிராகரிப்பவர்கள் தாங்கள் தப்பித்துக் கொண்டதாக ஒருபோதும் எண்ண வேண்டாம். நிச்சயமாக அவர்கள் (நம்மைத்) தோற்கடிக்க முடியாது.

Tafseer

وَأَعِدُّوا۟
ஏற்பாடு செய்யுங்கள்
لَهُم
அவர்களுக்கு
مَّا ٱسْتَطَعْتُم
உங்களுக்கு முடிந்ததை
مِّن
இருந்து
قُوَّةٍ
பலம்
وَمِن
இன்னும் இருந்து
رِّبَاطِ ٱلْخَيْلِ
போர்க் குதிரைகள்
تُرْهِبُونَ
நீங்கள் அச்சுறுத்த வேண்டும்
بِهِۦ
அதன் மூலம்
عَدُوَّ
எதிரிகளை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَعَدُوَّكُمْ
இன்னும் எதிரிகளை உங்கள்
وَءَاخَرِينَ
இன்னும் மற்றவர்களை
مِن دُونِهِمْ
அவர்கள் அன்றி
لَا تَعْلَمُونَهُمُ
நீங்கள் அறியமாட்டீர்கள்/அவர்களை
ٱللَّهُ
அல்லாஹ்
يَعْلَمُهُمْۚ
அறிவான்/அவர்களை
وَمَا تُنفِقُوا۟
நீங்கள் எதை தர்மம் செய்தாலும்
مِن شَىْءٍ
பொருள்களில்
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
يُوَفَّ
முழுமையாக வழங்கப்படும்
إِلَيْكُمْ
உங்களுக்கு
وَأَنتُمْ
நீங்கள்
لَا تُظْلَمُونَ
அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்

Wa a'iddoo lahum mastata'tum min quwwatinw wa mirribaatil khaili turhiboona bihee 'aduwwal laahi wa 'aduwwakum wa aakhareena min doonihim laa ta'lamoo nahum Allaahu ya'lamuhum; wa maa tunfiqoo min shai'in fee sabeelil laahi yuwaf failaikum wa antum laa tuzlamoon

அவர்களை எதிர்ப்பதற்காக (ஆயுத) பலத்தையும், லாயத்தில் (திறமையான) குதிரைகளையும், உங்களுக்கு சாத்தியமான அளவு நீங்கள் (எந்நேரமும்) தயார்படுத்தி வையுங்கள். இதனால் அல்லாஹ்வுடைய எதிரிகளையும், உங்களுடைய எதிரிகளையும் நீங்கள் பயப்படச் செய்யலாம். இவர்களன்றி (எதிரிகளில்) வேறு சிலர் இருக்கின்றனர். அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ்தான் அறிவான். (இதனால் அவர்களையும் நீங்கள் திடுக்கிடச் செய்யலாம். இதற்காக) அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் எதைச் செலவு செய்தபோதிலும் (அதன் கூலியை) உங்களுக்கு முழுமையாகவே அளிக்கப்படும்; (அதில்) ஒரு சிறிதும் (குறைவு செய்து) நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள்.

Tafseer