Skip to main content

وَإِذَا تُتْلَىٰ
ஓதப்பட்டால்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
ءَايَٰتُنَا
நம் வசனங்கள்
قَالُوا۟
கூறுகின்றனர்
قَدْ سَمِعْنَا
செவியேற்று விட்டோம்
لَوْ نَشَآءُ
நாம் நாடியிருந்தால்
لَقُلْنَا
கூறியிருப்போம்
مِثْلَ هَٰذَآۙ
இது போன்று
إِنْ هَٰذَآ
இவை இல்லை/தவிர
أَسَٰطِيرُ
கட்டுக் கதைகளே
ٱلْأَوَّلِينَ
முன்னோரின்

Wa izaa tutlaa 'alaihim Aayaatunaa qaaloo qad sami'naa law nashaaa'u laqulnaa misla haazaaa in haazaaa illaaa asaateerul awwaleen

நம்முடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப் படுமானால் அதற்கவர்கள், "நிச்சயமாக நாம் (இதனை முன்னரே) செவியுற்றுள்ளோம்; நாம் விரும்பினால் இம்மாதிரியான வசனங்களை நாமும் கூறுவோம். இவை முன்னோரின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை" என்று கூறுகின்றனர்.

Tafseer

وَإِذْ
சமயம்
قَالُوا۟
கூறினர்
ٱللَّهُمَّ
அல்லாஹ்வே
إِن كَانَ
இருக்குமேயானால்
هَٰذَا هُوَ
இதுதான்
ٱلْحَقَّ
உண்மையாக
مِنْ عِندِكَ
உன்னிடமிருந்து
فَأَمْطِرْ
பொழி
عَلَيْنَا
எங்கள் மீது
حِجَارَةً
கல்லை
مِّنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
أَوِ
அல்லது
ٱئْتِنَا
எங்களிடம் வா
بِعَذَابٍ
வேதனையைக் கொண்டு
أَلِيمٍ
துன்புறுத்தும்

Wa iz qaalul laahumma in kaana haazaa huwal haqqa min 'indika fa amtir 'alainaa hijaaratam minas samaaa'i awi'tinaa bi 'azaabin alaeem

அன்றி (அந்நிராகரிப்பவர்கள்) "எங்கள் அல்லாஹ்வே! இவ்வேதம் உன்னிடமிருந்து வந்தது உண்மையானால் எங்கள்மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டு வா!" என்று அவர்கள் கூறியதையும் (நபியே!) நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

Tafseer

وَمَا كَانَ
இல்லை
ٱللَّهُ
அல்லாஹ்
لِيُعَذِّبَهُمْ
அவர்களை வேதனை செய்பவனாக
وَأَنتَ
நீர் இருக்க
فِيهِمْۚ
அவர்களுடன்
وَمَا كَانَ
இல்லை
ٱللَّهُ
அல்லாஹ்
مُعَذِّبَهُمْ
வேதனை செய்பவனாக/அவர்களை
وَهُمْ
அவர்கள் இருக்க
يَسْتَغْفِرُونَ
மன்னிப்புத் தேடுபவர்களாக

Wa maa kanal laahu liyu'az zibahum wa anta feehim; wa maa kaanal laahu mu'az zibahum wa hum yastaghfiroon

ஆனால், நீங்கள் அவர்களுக்கிடையில் இருக்கும் வரையில் அல்லாஹ் அவர்களை வேதனை செய்யமாட்டான். அன்றி, அவர்கள் மன்னிப்பைக் கோரிக்கொண்டிருக்கும் வரையிலும் அல்லாஹ் வேதனை செய்யமாட்டான்.

Tafseer

وَمَا
என்ன?
لَهُمْ
அவர்களுக்கு
أَلَّا يُعَذِّبَهُمُ
(அவன்) வேதனை செய்யாமலிருக்க/அவர்களை
ٱللَّهُ
அல்லாஹ்
وَهُمْ
அவர்களோ
يَصُدُّونَ
தடுக்கின்றனர்
عَنِ ٱلْمَسْجِدِ
மஸ்ஜிதை விட்டு
ٱلْحَرَامِ
புனிதமானது
وَمَا كَانُوٓا۟
அவர்கள் இல்லை
أَوْلِيَآءَهُۥٓۚ
அதன் பொறுப்பாளர்களாக
إِنْ أَوْلِيَآؤُهُۥٓ
இல்லை/அதன் பொறுப்பாளர்கள்
إِلَّا ٱلْمُتَّقُونَ
தவிர/இறை அச்சமுள்ளவர்கள்
وَلَٰكِنَّ
எனினும் நிச்சயமாக
أَكْثَرَهُمْ
அதிகமானோர் அவர்களில்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Wa maa lahum allaa yu'az zibahumul laahu wa hum yasuddoona 'anil Masjidil-Haraami wa maa kaanooo awliyaaa'ah; in awliyaaa' uhooo illal muttaqoona wa laakinna aksarahum laa ya'lamoon

(இவ்விரு காரணங்களும் இல்லாதிருப்பின்) அல்லாஹ் அவர்களை வேதனை செய்யாமலிருப்பதற்கு என்ன (தடை)? ஏனென்றால், அவர்களோ (மக்கள்) சிறப்புற்ற (ஹரம் ஷரீஃப்) மஸ்ஜிதுக்குச் செல்வதைத் தடுக்கின்றனர். அவர்கள் அதற்கு பொறுப்பாளர்களன்று. இறை அச்சமுடையவர்களையே தவிர வேறு எவரும் அதன் பொறுப்பாளர்களாக இருக்கமுடியாது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறியமாட்டார்கள்.

Tafseer

وَمَا كَانَ
இருக்கவில்லை
صَلَاتُهُمْ
வழிபாடு/அவர்களுடைய
عِندَ
அருகில்
ٱلْبَيْتِ
இறை ஆலயம்
إِلَّا مُكَآءً
தவிர/சீட்டியடிப்பது
وَتَصْدِيَةًۚ
இன்னும் கை தட்டுவது
فَذُوقُوا۟
சுவையுங்கள்
ٱلْعَذَابَ
வேதனையை
بِمَا
எதன் காரணமாக
كُنتُمْ
இருந்தீர்கள்
تَكْفُرُونَ
நிராகரிக்கிறீர்கள்

Wa maa kaana Salaatuhum 'indal Baiti illa mukaaa anw-wa tasdiyah; fazooqul 'azaaba bimaa kuntum takfuroon

அப்பள்ளியில் அவர்கள் புரியும் வணக்கமெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர வேறில்லை! (ஆகவே மறுமையில் அவர்களை நோக்கி) "உங்கள் நிராகரிப்பின் காரணமாக (இன்றைய தினம்) வேதனையை சுவைத்துப் பாருங்கள்" (என்றே கூறப்படும்.)

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
يُنفِقُونَ
செலவு செய்கின்றனர்
أَمْوَٰلَهُمْ
தங்கள் செல்வங்களை
لِيَصُدُّوا۟
அவர்கள் தடுப்பதற்கு
عَن سَبِيلِ
பாதையை விட்டு
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
فَسَيُنفِقُونَهَا
செலவு செய்வார்கள்/அவற்றை
ثُمَّ تَكُونُ
பிறகு/அவை ஆகும்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
حَسْرَةً ثُمَّ
துக்கமாக/பிறகு
يُغْلَبُونَۗ
வெற்றி கொள்ளப்படுவார்கள்
وَٱلَّذِينَ كَفَرُوٓا۟
நிராகரிப்பாளர்கள்
إِلَىٰ جَهَنَّمَ
நரகத்தின் பக்கமே
يُحْشَرُونَ
ஒன்று திரட்டப்படுவார்கள்

Innal lazeena kafaroo yunfiqoona amwaalahum liyasuddoo 'an sabeelil laah; fasayunfiqoonahaa summa takoonu 'alaihim hasratan summa yughlaboon; wal lazeena kafarooo ilaa Jahannnama yuhsharoona

நிச்சயமாக, நிராகரிப்பவர்களில் எவர்கள் தங்கள் பொருள்களை (மக்கள்) அல்லாஹ்வுடைய வழியில் செல்வதைத் தடை செய்ய செலவு செய்கின்றனரோ அவர்கள் (பின்னும்) பின்னும் இவ்வாறே செலவு செய்யும்படி நேர்ந்து, முடிவில் அது அவர்களுக்கே துக்கமாக ஏற்பட்டுவிடும்! பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள். (இத்தகைய) நிராகரிப்பவர்கள் (மறுமையில்) நரகத்தின் பக்கமே ஓட்டிச் செல்லப்படுவார்கள்.

Tafseer

لِيَمِيزَ
பிரிப்பதற்காக
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْخَبِيثَ
கெட்டவர்களை
مِنَ
இருந்து
ٱلطَّيِّبِ
நல்லவர்கள்
وَيَجْعَلَ
இன்னும் ஆக்குவதற்கு
ٱلْخَبِيثَ
கெட்டவர்களை
بَعْضَهُۥ
அவர்களில் சிலரை
عَلَىٰ بَعْضٍ
சிலர் மீது
فَيَرْكُمَهُۥ
அவன் ஒன்றிணைத்து/அவர்கள்
جَمِيعًا
அனைவரையும்
فَيَجْعَلَهُۥ
அவர்களை ஆக்குவதற்காகவும்
فِى جَهَنَّمَۚ
நரகத்தில்
أُو۟لَٰٓئِكَ هُمُ
இவர்கள்தான்
ٱلْخَٰسِرُونَ
நஷ்டவாளிகள்

Liyameezal laahul khabeesa minat taiyibi wa yaj'alal khabeesa ba'dahoo 'ala ba'din fayarkumahoo jamee'an fayaj'alahoo fee Jahannnam; ulaaa'ika humul khaasiroon

அல்லாஹ் நல்லவர்களிலிருந்து கெட்டவர்களைப் பிரித்தெடுப்பதற்காகவும்; கெட்டவர்கள் ஒருவர் மீது ஒருவராக அடுக்கப்பட்டு ஒன்றாகக் குவிக்கப்பட்ட பின்னர் நரகத்தில் தூக்கி எறியப்படுவதற்காகவும் (இவ்வாறு செய்கிறான்.) இத்தகையவர்கள் தான் முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள்.

Tafseer

قُل
கூறுவீராக
لِّلَّذِينَ كَفَرُوٓا۟
நிராகரிப்பவர்களுக்கு
إِن يَنتَهُوا۟
அவர்கள் விலகிக் கொண்டால்
يُغْفَرْ
மன்னிக்கப்படும்
لَهُم
அவர்களுக்கு
مَّا قَدْ
எவை/முன் சென்றன
وَإِن يَعُودُوا۟
அவர்கள் திரும்பினால்
فَقَدْ مَضَتْ
சென்றுவிட்டது
سُنَّتُ
வழிமுறை
ٱلْأَوَّلِينَ
முன்னோரின்

Qul lillazeena kafarooo iny yantahoo yughfar lahum maa qad salafa wa iny ya'oodoo faqad madat sunnatul awwaleen

(நபியே!) நிராகரிப்பவர்களுக்கு நீங்கள் கூறுங்கள்: இனியேனும் அவர்கள் (விஷமம் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களுடைய) முந்திய குற்றங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படும். (அவ்வாறின்றி விஷமம் செய்யவே) முன் வருவார்களாயின் முன் சென்(ற இவர்கள் போன்)றவர்களின் வழி ஏற்பட்டே இருக்கின்றது. (அவர்களுக்கு ஏற்பட்ட கதிதான் இவர்களுக்கும் ஏற்படும்.)

Tafseer

وَقَٰتِلُوهُمْ
போரிடுங்கள் இவர்களிடம்
حَتَّىٰ
வரை
لَا تَكُونَ
இல்லாமல் ஆகும்
فِتْنَةٌ
குழப்பம்
وَيَكُونَ
இன்னும் ஆகும்
ٱلدِّينُ
வழிபாடு
كُلُّهُۥ
எல்லாம்
لِلَّهِۚ
அல்லாஹ்வுக்கு
فَإِنِ ٱنتَهَوْا۟
அவர்கள் விலகிக் கொண்டால்
فَإِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
بِمَا
எதை
يَعْمَلُونَ
அவர்கள் செய்கிறார்கள்
بَصِيرٌ
உற்று நோக்குபவன்

Wa qaatiloohum hattaa laa takoona fitnatunw wa yakoonaddeenu kulluhoo lillaah; fainin tahaw fa innallaaha bimaa ya'maloona Baseer

(நம்பிக்கையாளர்களே! இந்நிராகரிப்பவர்களின்) விஷமத்தனம் முற்றிலும் நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் நிலைபெறும் வரையில் (மக்காவாசிகளாகிய நிராகரிக்கும்) இவர்களுடன் போர் புரியுங்கள். (விஷமம் செய்வதிலிருந்து) அவர்கள் விலகிக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான்.

Tafseer

وَإِن تَوَلَّوْا۟
அவர்கள் விலகினால்
فَٱعْلَمُوٓا۟
அறிந்து கொள்ளுங்கள்
أَنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
مَوْلَىٰكُمْۚ
உங்கள் எஜமானன்
نِعْمَ
சிறந்தவன்
ٱلْمَوْلَىٰ
எஜமானன்
وَنِعْمَ
சிறந்தவன்
ٱلنَّصِيرُ
உதவியாளன்

Wa in tawallaw fa'lamooo annal laaha mawlaakum; ni'mal mawlaa wa ni'man naseer

(இதற்கு) அவர்கள் மாறு செய்தால் நிச்சயமாக அல்லாஹ் உங்கள் பாதுகாவலன் (பொறுப்பாளன்) என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். அவன் சிறந்த பாதுகாவலன்; அவன் சிறந்த உதவியாளன்.

Tafseer