Skip to main content

وَلَا تَكُونُوا۟
ஆகிவிடாதீர்கள்
كَٱلَّذِينَ
எவர்களைப் போல்
قَالُوا۟
கூறினர்
سَمِعْنَا
செவியுற்றோம்
وَهُمْ
அவர்கள் இருக்க
لَا يَسْمَعُونَ
செவியேற்காதவர்களாக

Wa laa takoonoo kallazeena qaaloo sami'naa wa hum laa yasma'oon

(நம்பிக்கையாளர்களே! மனமாற) செவியுறாது "செவியுற்றோம்" என்று (வாயால் மட்டும்) கூறியவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
شَرَّ
மிகக் கொடூரமானவர்(கள்)
ٱلدَّوَآبِّ
ஊர்வனவற்றில்
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
ٱلصُّمُّ
செவிடர்கள்
ٱلْبُكْمُ
ஊமைகளான
ٱلَّذِينَ لَا
எவர்கள்/சிந்தித்து புரியமாட்டார்கள்

Inna sharrad dawaaabbi 'indal laahis summul bukmul lazeena laa ya'qiloon

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் கால்நடைகளில் மிகக் கேவலமானவை (எவையென்றால் சத்தியத்தை) அறிந்துகொள்ள முடியாத செவிடர்களும், ஊமையர்களும்தான்.

Tafseer

وَلَوْ عَلِمَ
அறிந்திருந்தால்
ٱللَّهُ
அல்லாஹ்
فِيهِمْ
அவர்களிடம்
خَيْرًا
ஒரு நன்மையை
لَّأَسْمَعَهُمْۖ
செவியுறச் செய்திருப்பான்/அவர்களை
وَلَوْ أَسْمَعَهُمْ
அவன் அவர்களை செவியுறச் செய்தாலும்
لَتَوَلَّوا۟
விலகி இருப்பார்கள்
وَّهُم
அவர்கள் இருக்க
مُّعْرِضُونَ
புறக்கணிப்பவர்களாக

Wa law 'alimal laahu feehim khairal la asma'ahum; wa law asma'ahum latawallaw wa hum mu'ridoon

அவர்களிடம் யாதொரு நன்மை இருக்கிறதென்று அல்லாஹ் அறிந்திருந்தால் அவன் அவர்களை செவியுறச் செய்திருப்பான். (அவர்களிடம் யாதொரு நன்மையும் இல்லாததனால் அல்லாஹ்) அவர்களைச் செவியுறச் செய்தபோதிலும் அவர்கள் புறக்கணித்து மாறிவிடுவார்கள்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
ٱسْتَجِيبُوا۟
பதிலளியுங்கள்
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
وَلِلرَّسُولِ
இன்னும் தூதருக்கு
إِذَا
அழைத்தால்
دَعَاكُمْ لِمَا
உங்களை/எதற்கு
يُحْيِيكُمْۖ
வாழவைக்கும்/உங்களை
وَٱعْلَمُوٓا۟
அறிந்து கொள்ளுங்கள்
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
يَحُولُ
தடையாகிறான்
بَيْنَ
நடுவில்
ٱلْمَرْءِ
மனிதனுக்கு
وَقَلْبِهِۦ
இன்னும் அவனுடைய உள்ளத்திற்கு
وَأَنَّهُۥٓ
இன்னும் நிச்சயமாக நீங்கள்
إِلَيْهِ
அவனிடமே
تُحْشَرُونَ
ஒன்று திரட்டப்படுவீர்கள்

Yaaa aiyuhal lazeena aamanus tajeeboo lillaahi wa lir Rasooli izaa da'aakum limaa yuhyeekum wa'lamooo annal laaha yahoolu bainal mar'i wa qalbihee wa anahooo ilaihi tuhsharoon

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வும், (அவனுடைய) தூதரும் உங்களுக்குப் புத்துயிர் அளிக்க உங்களை அழைத்தால் (அவர்களுடைய அழைப்புக்குப்) பதில் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மனிதனுக்கும் அவனுடைய உள்ளங்களில் உள்ளதற்கும் இடையில் தடையேற்படுத்தி விடுகிறான் என்பதையும், நிச்சயமாக நீங்கள் அவனிடமே (கொண்டு வரப்பட்டு) ஒன்று சேர்க்கப் படுவீர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.

Tafseer

وَٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
فِتْنَةً
ஒரு வேதனையை
لَّا تُصِيبَنَّ
அடையாது
ٱلَّذِينَ ظَلَمُوا۟
அநியாயக்காரர்களை
مِنكُمْ
உங்களில்
خَآصَّةًۖ
மட்டுமே
وَٱعْلَمُوٓا۟
அறிந்து கொள்ளுங்கள்
أَنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
شَدِيدُ
கடுமையானவன்
ٱلْعِقَابِ
தண்டிப்பதில்

Wattaqoo fitnatal laa tuseebannal lazeena zalamoo minkum khaaaassatanw wa'lamooo annal laaha shadeedul 'iqaab

நீங்கள் வேதனைக்குப் பயந்துகொள்ளுங்கள். அது அநியாயக்காரர்களை மட்டுமே பிடிக்குமென்பதல்ல; (முடிவில் அது உங்களையும் சூழ்ந்துகொள்ளலாம்.) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடுமையானவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.

Tafseer

وَٱذْكُرُوٓا۟
நினைவு கூருங்கள்
إِذْ
(இருந்த) சமயத்தை
أَنتُمْ
நீங்கள்
قَلِيلٌ
குறைவானவர்களாக
مُّسْتَضْعَفُونَ
பலவீனர்களாக
فِى ٱلْأَرْضِ
பூமியில்
تَخَافُونَ
பயந்தவர்களாக
أَن يَتَخَطَّفَكُمُ
தாக்கிவிடுவதை/உங்களை
ٱلنَّاسُ
மக்கள்
فَـَٔاوَىٰكُمْ
அவன் இடமளித்தான்/உங்களுக்கு
وَأَيَّدَكُم
பலப்படுத்தினான்/உங்களை
بِنَصْرِهِۦ
தன் உதவியைக் கொண்டு
وَرَزَقَكُم
உணவளித்தான்/உங்களுக்கு
مِّنَ ٱلطَّيِّبَٰتِ
நல்ல உணவுகளில்
لَعَلَّكُمْ تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்துவதற்காக

Wazkurooo iz antum qaleelum mustad 'afoona filardi takhaafoona ai yatakhat tafakumun naasu fa aawaakum wa aiyadakum binasrihee wa razaqakum minat taiyibaati la'allakum tashkuroon

நீங்கள் பூமியில் (மக்காவில்) வலுவிழந்த வெகு குறைந்த தொகையினராக இருந்து உங்களை எம்மனிதரும் (எந்நேரத்திலும் பலவந்தமாக) திடீரென தாக்கிவிடுவார்களோ என்று நீங்கள் அஞ்சி (நடுங்கி)க் கொண்டிருந்த சமயத்தில் அவன் உங்களுக்கு (மதீனாவில்) இடமளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களைப் பலப்படுத்தி நல்ல உணவுகளை உங்களுக்கு அளித்ததையும் நினைத்துப் பாருங்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
لَا تَخُونُوا۟
மோசம்செய்யாதீர்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கு
وَٱلرَّسُولَ
இன்னும் தூதருக்கு
وَتَخُونُوٓا۟
இன்னும் மோசம் செய்யாதீர்கள்
أَمَٰنَٰتِكُمْ
அமானிதங்களுக்கு/உங்கள்
وَأَنتُمْ
நீங்கள் இருக்க
تَعْلَمُونَ
அறிந்தவர்களாக

Yaaa aiyuhal lazeena aamanoo laa takhoonal laaha war Rasoola wa takhoonooo amaanaatikum wa antum ta'lamoon

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள். தவிர, நீங்கள் (செய்வது அநியாயம் என) அறிந்துகொண்டே உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களுக்கு மோசம் செய்யாதீர்கள்.

Tafseer

وَٱعْلَمُوٓا۟
அறிந்து கொள்ளுங்கள்
أَنَّمَآ
எல்லாம்
أَمْوَٰلُكُمْ
செல்வங்கள்/உங்கள்
وَأَوْلَٰدُكُمْ
இன்னும் சந்ததிகள்/உங்கள்
فِتْنَةٌ
ஒரு சோதனை
وَأَنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
عِندَهُۥٓ
அவனிடம்தான்
أَجْرٌ
கூலி
عَظِيمٌ
மகத்தானது

Wa'lamooo annamaaa amwaalukum wa awlaadukum fitnatunw wa annal laaha 'indahooo ajrun azeem

அன்றி, உங்களுடைய பொருள்களும், உங்களுடைய சந்ததிகளும் (உங்களுக்குப்) பெரும் சோதனையாக இருக்கின்றன என்பதையும், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்தான் (உங்களுக்கு) மகத்தான வெகுமதி உண்டு என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
إِن تَتَّقُوا۟
அஞ்சினால்
ٱللَّهَ
அல்லாஹ்வை
يَجْعَل
ஏற்படுத்துவான்
لَّكُمْ
உங்களுக்கு
فُرْقَانًا
ஒரு வித்தியாசத்தை
وَيُكَفِّرْ
இன்னும் அகற்றி விடுவான்
عَنكُمْ
உங்களை விட்டு
سَيِّـَٔاتِكُمْ
உங்கள் பாவங்களை
وَيَغْفِرْ
இன்னும் மன்னிப்பான்
لَكُمْۗ
உங்களை
وَٱللَّهُ
அல்லாஹ்
ذُو ٱلْفَضْلِ
அருளுடையவன்
ٱلْعَظِيمِ
மகத்தானது

Yaaa aiyuhal lazeena aamanooo in tattaqul laaha yaj'al lakum furqaananw wa yukaffir 'ankum saiyi aatikum wa yaghfir lakum; wallaahu zul fadlil 'azeem

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயப்படுவீர்களாயின், அவன் உங்களுக்குக் கண்ணியத்தை அளிப்பான். மேலும், உங்கள் பாவங்களை போக்கி உங்களை மன்னித்து விடுவான். ஏனென்றால், அல்லாஹ் மிக மகத்தான அருளுடையவன்.

Tafseer

وَإِذْ
சமயம்
يَمْكُرُ
சூழ்ச்சி செய்வார்(கள்)
بِكَ
உமக்கு
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
لِيُثْبِتُوكَ
அவர்கள் சிறைப்படுத்த/உம்மை
أَوْ
அல்லது
يَقْتُلُوكَ
உம்மை அவர்கள் கொல்ல
أَوْ
அல்லது
يُخْرِجُوكَۚ
அவர்கள் வெளியேற்ற/உம்மை
وَيَمْكُرُونَ
இன்னும் சூழ்ச்சி செய்கின்றனர்
وَيَمْكُرُ
இன்னும் சூழ்ச்சி செய்கிறான்
ٱللَّهُۖ وَٱللَّهُ
அல்லாஹ்/அல்லாஹ்
خَيْرُ
மிகச் சிறந்தவன்
ٱلْمَٰكِرِينَ
சூழ்ச்சி செய்பவர்களில்

Wa iz yamkuru bikal lazeena kafaroo liyusbitooka aw yaqtulooka aw yukhrijook; wa yamkuroona wa yamkurul laahu wallaahu khairul maakireen

(நபியே!) உங்களைச் சிறைப்படுத்தவோ அல்லது உங்களைக் கொலை செய்யவோ அல்லது உங்களை (ஊரைவிட்டு) அப்புறப்படுத்தவோ நிராகரிப்பவர்கள் சூழ்ச்சி செய்துகொண்டிருந்த (நேரத்)தை நினைத்துப் பாருங்கள். அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; (அவர்களுக்கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். ஆனால், சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் அல்லாஹ் மிக மேலானவன்.

Tafseer