Skip to main content

وَكَذَٰلِكَ
அவ்வாறே
أَعْثَرْنَا
காண்பித்தோம்
عَلَيْهِمْ
அவர்களை
لِيَعْلَمُوٓا۟
அவர்கள் அறிவதற்காக
أَنَّ
நிச்சயம்
وَعْدَ
வாக்கு
ٱللَّهِ
அல்லாஹ்வின்
حَقٌّ
உண்மை
وَأَنَّ
இன்னும் நிச்சயம்
ٱلسَّاعَةَ
மறுமை
لَا رَيْبَ
அறவே சந்தேகம் இல்லை
فِيهَآ
அதில்
إِذْ يَتَنَٰزَعُونَ
போது/தர்க்கிப்பார்கள்
بَيْنَهُمْ
தங்களுக்கிடையில்
أَمْرَهُمْۖ
தங்கள் விஷயத்தில்
فَقَالُوا۟
கூறினர்
ٱبْنُوا۟
எழுப்புங்கள், கட்டுங்கள்
عَلَيْهِم
அவர்களுக்கருகில்
بُنْيَٰنًاۖ
ஒரு கட்டடத்தை
رَّبُّهُمْ
அவர்களின் இறைவன்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِهِمْۚ
அவர்களை
قَالَ
கூறினார்(கள்)
ٱلَّذِينَ
எவர்கள்
غَلَبُوا۟
மிகைத்தனர்
عَلَىٰٓ أَمْرِهِمْ
அவர்களின் விஷயத்தில்
لَنَتَّخِذَنَّ
நிச்சயம்ஆக்குவோம்
عَلَيْهِم
அவர்களுக்கருகில்
مَّسْجِدًا
ஒரு தொழுமிடத்தை

Wa kazaalika a'sarnaa 'alaihim liya'lamooo anna wa'dal laahi haqqunw wa annas Saa'ata laa raiba feehaa iz yatanaaza'oona bainahum amrahum faqaalub noo 'alaihim bunyaanaa; Rabbuhum a'lamu bihim; qaalal lazeena ghalaboo 'alaaa amrihim lanat takhizanna 'alaihim masjidaa

(மரணித்தவர்களை உயிர்ப்பிப்பவனாகிய) அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது என்றும், மறுமை வருவதில் யாதொரு சந்தேகமுமில்லை என்றும், (இதன் மூலம் அப்பட்டினவாசிகளான) அவர்கள் உறுதியாக அறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (உணவு தேடி அங்கு செல்லும்படி செய்து) அவர்களுக்கு (இவர்களைக்) காட்டிக் கொடுத்தோம். (அந்நகரவாசிகள் இவர்கள் இருந்த குகைக்கு வந்து) "இவர்கள் யார் என்பதைப் பற்றித் (தங்களுக்குள்) தர்க்கித்துக் கொண்டு, இவர்களை இறைவன்தான் நன்கறிவான் என்றும், இவர்கள் இருக்கும் இடத்தில் (உயர்ந்த) ஒரு கோபுரத்தை (ஞாபகார்த்தமாக) எழுப்புங்கள்" என்றும் கூறினார்கள். (இந்தத் தர்க்கத்தில்) எவர்களுடைய அபிப்பிராயம் மேலோங்கியதோ அவர்கள் "இவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு பள்ளியை நிச்சயமாக நாம் அமைத்து விடுவோம்" என்றார்கள்.

Tafseer

سَيَقُولُونَ
கூறுகின்றனர்
ثَلَٰثَةٌ
மூவர்
رَّابِعُهُمْ
அவர்களில் நான்காவதாக
كَلْبُهُمْ
அவர்களின் நாய்
وَيَقُولُونَ
இன்னும் கூறுவர்
خَمْسَةٌ
ஐவர்
سَادِسُهُمْ
அவர்களில் ஆறாவதாக
كَلْبُهُمْ
அவர்களின் நாய்
رَجْمًۢا بِٱلْغَيْبِۖ
கண்மூடித்தனமாக
وَيَقُولُونَ
இன்னும் கூறுவர்
سَبْعَةٌ
ஏழு நபர்கள்
وَثَامِنُهُمْ
இன்னும் அவர்களில் எட்டாவதாக
كَلْبُهُمْۚ
அவர்களின் நாய்
قُل
கூறுவீராக
رَّبِّىٓ
என் இறைவன்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِعِدَّتِهِم
அவர்களின் எண்ணிக்கையை
مَّا يَعْلَمُهُمْ
அறியமாட்டார்கள்/அவர்களை
إِلَّا
தவிர
قَلِيلٌۗ
குறைவானவர்(கள்)
فَلَا تُمَارِ
ஆகவே விவாதிக்காதீர்
فِيهِمْ
அவர்களைப் பற்றி
إِلَّا مِرَآءً
தவிர/விவாதமாகவே
ظَٰهِرًا
வெளிப்படையான
وَلَا تَسْتَفْتِ
இன்னும் விளக்கம் கேட்காதீர்
فِيهِم
இவர்களைப் பற்றி
مِّنْهُمْ
அவர்களில்
أَحَدًا
ஒருவரிடமும்

Sa yaqooloona salaasatur raabi'uhum kalbuhum wa yaqooloona khamsatun saadisuhum kalbuhum rajmam bilghaib; wa yaqooloona sab'atunw wa saaminuhum kalbuhum; qur Rabbeee a'lamu bi'iddatihim maa ya'lamuhum illaa qaleel; falaa tumaari feehim illaa miraaa'an zaahiranw wa laa tastafti feehim minhum ahadaa

(குகையிலிருந்த அவர்கள்) மூன்று பேர்தாம்; நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலரு)ம்; (அவர்கள்) ஐந்து பேர், அவர்களுடைய நாய் ஆறாவதாகும் என்று (வேறு சிலரு)ம்; மறைவான விஷயங்களைத் தாங்கள் கண்டுபிடித்து விட்டவர்களைப் போல் (மிக்க உறுதியாகக்) கூறுகின்றனர். மற்றும் சிலரோ அவர்கள் ஏழு பேர், எட்டாவது அவர்களுடைய நாய் என்றும் கூறுகின்றனர். எனினும் (நபியே!) "அவர்களுடைய எண்ணிக்கையை சிலரைத் தவிர மற்றவர்கள் அறிய மாட்டார்கள். அவர்களுடைய தொகையை என் இறைவன்தான் நன்கறிவான்" என்று கூறுங்கள். தவிர, அவர்களைப் பற்றி மேலெழுந்த வாரியாகவன்றி நீங்கள் தர்க்கிக்காதீர்கள். அவர்களைப் பற்றி இவர்களில் ஒருவனிடமும் (ஒன்றுமே) கேட்காதீர்கள்."

Tafseer

وَلَا تَقُولَنَّ
அறவே கூறாதீர்
لِشَا۟ىْءٍ
ஒன்றைப் பற்றி
إِنِّى
நிச்சயம் நான்
فَاعِلٌ
செய்பவன்
ذَٰلِكَ
அதை
غَدًا
நாளை

Wa laa taqoolanna lishai'in innee faa'ilun zaalika ghadaa

(நபியே!) எந்த விஷயத்தைப் பற்றியும் "நிச்சயமாக நான் அதனை நாளைக்குச் செய்துவிடுவேன்" என்று நீங்கள் கூறாதீர்கள்.

Tafseer

إِلَّآ
தவிர
أَن يَشَآءَ
நாடினால்
ٱللَّهُۚ
அல்லாஹ்
وَٱذْكُر
நினைவு கூருவீராக
رَّبَّكَ
உம் இறைவனை
إِذَا نَسِيتَ
நீர் மறந்து விட்டால்
وَقُلْ
இன்னும் கூறுவீராக
عَسَىٰٓ
கூடும்
أَن يَهْدِيَنِ
அவன் நேர்வழி காட்ட/எனக்கு
رَبِّى
என் இறைவன்
لِأَقْرَبَ
மிக நெருக்கமானதன் பக்கம்
مِنْ هَٰذَا
இதைவிட
رَشَدًا
தெளிவான அறிவிற்கு

Illaaa any yashaaa'al laah; wazkur Rabbaka izaa naseeta wa qul 'asaaa any yahdiyani Rabbee li aqraba min haazaa rashadaa

ஆயினும், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால் நாளைக்குச் செய்வேன்) என்று கூறுங்கள். நீங்கள் இதனை மறந்து விட்டால் (ஞாபகம் வந்ததும் இவ்வாறு) உங்கள் இறைவனின் பெயரைக் கூறுங்கள். தவிர, (நன்மைக்கு) இதைவிட இன்னும் நெருங்கிய பல விஷயங்களையும் என் இறைவன் எனக்கு அறிவிக்கக் கூடும்" என்றும் கூறுங்கள்.

Tafseer

وَلَبِثُوا۟
தங்கினர்
فِى كَهْفِهِمْ
தங்கள் குகையில்
ثَلَٰثَ مِا۟ئَةٍ
முன்னூறு
سِنِينَ
ஆண்டுகள்
وَٱزْدَادُوا۟
இன்னும் அதிகப்படுத்தினர்
تِسْعًا
ஒன்பதை

Wa labisoo fee kahfihim salaasa mi'atin sineena wazdaadoo tis'aa

அன்றி, அவர்கள் குகையில் முன்னூறு வருடங்கள் இருந்தனர் என்று (சிலரு)ம், அதற்கு அதிகமாக ஒன்பது வருடங்கள் இருந்தனர் (என்று வேறு சிலரும் கூறுகின்றனர்).

Tafseer

قُلِ
கூறுவீராக
ٱللَّهُ
அல்லாஹ்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِمَا لَبِثُوا۟ۖ
அவர்கள் தங்கியதை
لَهُۥ
அவனுக்கே
غَيْبُ
மறைவானவை
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமி
أَبْصِرْ بِهِۦ
அவன் துள்ளியமாகப் பார்ப்பவன்
وَأَسْمِعْۚ
இன்னும் துள்ளியமாகக் கேட்பவன்
مَا لَهُم
அவர்களுக்கு இல்லை
مِّن دُونِهِۦ
அவனையன்றி
مِن وَلِىٍّ
நிர்வகிக்கும் பாதுகாவலன்
وَلَا يُشْرِكُ
இன்னும் கூட்டாக்க மாட்டான்
فِى حُكْمِهِۦٓ
தனது அதிகாரத்தில்
أَحَدًا
ஒருவரை

Qulil laahu a'lamu bimaa labisoo lahoo ghaibus samaawaati wal ardi absir bihee wa asmi'; maa lahum min doonihee minw waliyyinw wa laa yushriku fee hukmihee ahadaa

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: அவர்கள் அதில் இருந்த காலத்தை அல்லாஹ்தான் நன்கறிவான். வானங்களிலும், பூமியிலும் மறைவாயிருப்பவை அனைத்தும் அவனுக்கு உரியவையே! இவைகளை அவன் எவ்வளவோ நன்றாகப் பார்ப்பவன்; எவ்வளவோ நன்றாகக் கேட்பவன். அவனைத் தவிர இவைகளை நிர்வகிப்பவன் யாருமில்லை. அவன் தன்னுடைய அதிகாரத்தில் ஒருவரையும் துணையாகக் கொள்ளவில்லை.

Tafseer

وَٱتْلُ
இன்னும் ஓதுவீராக
مَآ أُوحِىَ
எது/வஹீ அறிவிக்கப்பட்டது
إِلَيْكَ
உமக்கு
مِن كِتَابِ
வேதத்தில்
رَبِّكَۖ
உம் இறைவனின்
لَا مُبَدِّلَ
அறவே இல்லை/மாற்றுபவர்
لِكَلِمَٰتِهِۦ
அவனுடைய வாக்கியங்களை
وَلَن تَجِدَ
காணமாட்டீர்
مِن دُونِهِۦ
அவனையன்றி
مُلْتَحَدًا
அடைக்கலம் பெறுமிடத்தை

Watlu maaa oohiya ilaika min Kitaabi Rabbika laa mubaddila li Kalimaatihee wa lan tajida min doonihee multahadaa

(நபியே!) வஹீ மூலம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட உங்கள் இறைவனின் வேதத்தை நீங்கள் (தொடர்ந்து) ஓதிக் கொண்டே இருங்கள்! அவனுடைய கட்டளைகளை எவராலும் மாற்றிவிட முடியாது. அவனையன்றி உங்களுக்கு பாதுகாக்கும் எந்த ஒரு இடத்தையும் நீங்கள் காணமாட்டீர்கள்.

Tafseer

وَٱصْبِرْ
தடுப்பீராக
نَفْسَكَ
உம்மை
مَعَ
உடன்
ٱلَّذِينَ
எவர்கள்
يَدْعُونَ
பிரார்த்திக்கிறார்கள்
رَبَّهُم
தங்கள் இறைவனை
بِٱلْغَدَوٰةِ
காலையில்
وَٱلْعَشِىِّ
இன்னும் மாலையில்
يُرِيدُونَ
நாடியவர்களாக
وَجْهَهُۥۖ
அவனுடைய முகத்தை
وَلَا تَعْدُ
அகன்றிடவேண்டாம்
عَيْنَاكَ
உம் இரு கண்கள்
عَنْهُمْ
அவர்களை விட்டு
تُرِيدُ
நாடுகிறீர்
زِينَةَ
அலங்காரத்தை
ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையின்
ٱلدُّنْيَاۖ
உலகம்
وَلَا تُطِعْ
கீழ்ப்படியாதீர்
مَنْ
எவனுக்கு
أَغْفَلْنَا
கவனமற்றதாக ஆக்கினோம்
قَلْبَهُۥ
அவனுடைய உள்ளத்தை
عَن ذِكْرِنَا
நம் நினைவை விட்டு
وَٱتَّبَعَ
இன்னும் பின்பற்றினான்
هَوَىٰهُ
தனது மன இச்சையை
وَكَانَ
இன்னும் ஆகிவிட்டது
أَمْرُهُۥ
அவனுடைய காரியம்
فُرُطًا
எல்லை மீறியதாக

Wasbir nafsaka ma'al lazeena yad'oona Rabbahum bilghadaati wal'ashiyyi yureedoona Wajhahoo wa laa ta'du 'aynaaka 'anhum tureedu zeenatal hayaatid dunyaa wa laa tuti' man aghfalnaa qalbahoo 'an zikrinaa wattaba'a hawaahu wa kaana amruhoo furutaa

(நபியே!) எவர்கள் கஷ்டங்களைச் சகித்துத் தங்கள் இறைவனின் திருமுகத்தையே நாடி அவனையே காலையிலும், மாலையிலும் (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருக் கிறார்களோ அவர்களுடன் உங்களையும் நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள். இவ்வுலக அலங்காரத்தை நீங்கள் விரும்பி அத்தகைய (நல்ல)வர்களை விட்டு உங்கள் கண்களைத் திருப்பி விடாதீர்கள். அன்றி, தன் சரீர இச்சையைப் பின்பற்றியதன் காரணமாக எவனுடைய உள்ளத்தை நம்மைத் தியானிப்பதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனுக்கும் நீங்கள் கட்டுப்படாதீர்கள். அவனுடைய காரியம் எல்லை கடந்துவிட்டது.

Tafseer

وَقُلِ
இன்னும் கூறுவீராக
ٱلْحَقُّ
உண்மை
مِن رَّبِّكُمْۖ
உங்கள் இறைவனிடமிருந்து
فَمَن شَآءَ
எவர்/விரும்பினார்
فَلْيُؤْمِن
நம்பிக்கை கொள்ளலாம்
وَمَن
இன்னும் எவர்
شَآءَ
விரும்பினார்
فَلْيَكْفُرْۚ
நிராகரித்து விடலாம்
إِنَّآ
நிச்சயமாக நாம்
أَعْتَدْنَا
ஏற்படுத்தியுள்ளோம்
لِلظَّٰلِمِينَ
தீயவர்களுக்கு
نَارًا
நரக நெருப்பை
أَحَاطَ
சூழ்ந்துள்ளது
بِهِمْ
அவர்களை
سُرَادِقُهَاۚ
அதன் சுவர்
وَإِن يَسْتَغِيثُوا۟
அவர்கள் உதவி தேடினால்
يُغَاثُوا۟
உதவப்படுவார்கள்
بِمَآءٍ
நீரைக் கொண்டு
كَٱلْمُهْلِ
முற்றிலும் சூடேறி உருகிப்போன உலோக திராவத்தைப் போன்ற
يَشْوِى
பொசுக்கக் கூடியது
ٱلْوُجُوهَۚ
முகங்களை
بِئْسَ
மகா கெட்டது
ٱلشَّرَابُ
பானம்
وَسَآءَتْ
இன்னும் அது தீயது
مُرْتَفَقًا
ஓய்விடம்

Wa qulil haqqu mir Rabbikum faman shaaa'a falyu minw wa man shaaa'a falyakfur; innaaa a'tadnaa lizzaalimeena Naaran ahaata bihim suraadiquhaa; wa iny yastagheesoo yaghaasoo bimaaa'in kalmuhli yashwil wujooh' bi'sash-sharaab; wa saaa'at murtafaqaa

(நபியே!) உங்கள் இறைவனால் அருளப்பட்ட (இவ்வேதமான)து முற்றிலும் உண்மையானது. விரும்பியவர் (இதை) நம்பிக்கை கொள்ளலாம்; விரும்பியவர் (இதை) நிராகரித்துவிடலாம். (அதனால்) நமக்கொன்றும் நஷ்டமில்லை. (ஆனால் இதை நிராகரிக்கும்) அநியாயக்காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தைத் தான் தயார்படுத்தி உள்ளோம். அந்நரகத்தின் ஜுவாலைகள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) அபயமிட்டால் காய்ந்து உருகிய செம்பைப் போலுள்ள நீரே அவர்களுக்குக் கொடுக்கப்படும். (அவர் அதனைக் குடிப்பதற்கு முன்னதாகவே) அது அவர்களுடைய முகத்தைச் சுட்டுக் கருக்கிவிடும். அன்றி அது மிக்க (அருவருப்பான) கெட்ட குடிபானமாகும். அவர்கள் இளைப்பாறும் இடம் மிகக் கெட்டது.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
إِنَّا
நிச்சயமாக நாம்
لَا نُضِيعُ
வீணாக்கமாட்டோம்
أَجْرَ
கூலியை
مَنْ
எவர்(கள்)
أَحْسَنَ
மிக அழகியதை செய்தார்(கள்)
عَمَلًا
செயல்

Innal lazeena aamanoo wa 'amilus saalihaati innaa laa nudee'u ajra man ahsana 'amalaa

(எனினும்,) நிச்சயமாக எவர்கள் (இக்குர்ஆனை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ (அத்தகைய) நன்மை செய்பவர்களின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்கி விடுவதில்லை.

Tafseer