Skip to main content

أَوْ
அல்லது
يُصْبِحَ
ஆகிவிடக் கூடும்
مَآؤُهَا
அதன் தண்ணீர்
غَوْرًا
ஆழத்தில்
فَلَن تَسْتَطِيعَ
ஆகவே, அறவே நீ இயலமாட்டாய்
لَهُۥ
அதை
طَلَبًا
தேட

Aw yusbiha maaa'uhaaa ghawran falan tastatee'a lahoo talabaa

அல்லது அதன் நீர் முழுதும் பூமிக்குள் வற்றி(யிருப்பதை) நீ தேடிக் காண முடியாமலும் (ஆக்கிவிடக் கூடும்" என்றும் கூறினார்.)

Tafseer

وَأُحِيطَ
அழிந்தன
بِثَمَرِهِۦ
அவனுடைய கனிகள்
فَأَصْبَحَ
ஆரம்பித்தான்
يُقَلِّبُ
புரட்ட
كَفَّيْهِ
தன் இரு கைகளை
عَلَىٰ مَآ
செலவழித்ததின் மீது
فِيهَا
அதில்
وَهِىَ
அது
خَاوِيَةٌ
வெறுமையாகிவிட்டது
عَلَىٰ
விட்டு
عُرُوشِهَا
அதன் செடி கொடிகளை
وَيَقُولُ
இன்னும் கூறுவான்
يَٰلَيْتَنِى
நான் இருந்திருக்க வேண்டுமே
لَمْ أُشْرِكْ
நான்இணையாக்காமல்
بِرَبِّىٓ
என் இறைவனுக்கு
أَحَدًا
ஒருவரை

Wa uheeta bisamarihee faasbaha yuqallibu kaffaihi 'alaa maaa anfaqa feehaa wa hiya khaawiyatun 'alaa 'urooshihaa wa yaqoolu yaalaitanee lam ushrik bi Rabbeee ahadaa

(அந்நண்பர் கூறியவாறே) அவனுடைய விளைபொருள் அனைத்தும் அழிந்து அதற்காக அவன் செலவு செய்ததைப் பற்றி தன் இரு கைகளைப் பிசைந்துகொண்டு அத்தோட்டத்தின் மரங்கள், செடிகள் (ஆகிய அனைத்தும்) அடியுடன் சாய்ந்துவிட்டதைப் பற்றி (துக்கித்துக் கவலைகொண்டு) "என் இறைவனுக்கு நான் எவரையும் இணையாக்காமல் இருந்திருக்க வேண்டுமே?" என்று அவனே சொல்லும்படியும் நேர்ந்தது.

Tafseer

وَلَمْ تَكُن
இருக்கவில்லை
لَّهُۥ
அவனுக்கு
فِئَةٌ
கூட்டம்
يَنصُرُونَهُۥ
அவனுக்கு உதவுவார்கள்
مِن دُونِ
அன்றி
ٱللَّهِ
அல்லாஹ்வை
وَمَا كَانَ
இன்னும் இருக்கவில்லை
مُنتَصِرًا
பாதுகாப்பவனாக

Wa lam takul lahoo fi'atuny yansuroonahoo min doonil laahi wa maa kaana muntasiraa

அச்சமயம் அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யக்கூடிய யாதொரு சேனையும் அவனுக்கு இருக்கவில்லை. அவனும் (இதற்காக அல்லாஹ்விடம்) பழிவாங்க முடியாது போயிற்று.

Tafseer

هُنَالِكَ
அந்நேரத்தில்
ٱلْوَلَٰيَةُ
உதவி
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
ٱلْحَقِّۚ
உண்மையானவன்
هُوَ خَيْرٌ
அவன் சிறந்தவன்
ثَوَابًا
நன்மையாலும்
وَخَيْرٌ
இன்னும் சிறந்தவன்
عُقْبًا
முடிவாலும்

Hunaalikal walaayatu lillaahil haqq; huwa khairun sawaabanw wa khairun 'uqbaa

அத்தகைய நிலைமையில் எல்லா அதிகாரங்களும் உண்மையான அல்லாஹ்வுக்கு உரியனவே. அவனே கூலி கொடுப்பவர்களில் மிக்க மேலானவன்; முடிவு செய்வதிலும் மிக்க மேலானவன் (என்பதையும் அவன் அறிந்து கொண்டான்).

Tafseer

وَٱضْرِبْ
விவரிப்பீராக
لَهُم
அவர்களுக்கு
مَّثَلَ
தன்மையை
ٱلْحَيَوٰةِ
வாழ்க்கை
ٱلدُّنْيَا
உலகம்
كَمَآءٍ
மழை நீரைப்போன்று
أَنزَلْنَٰهُ
அதை இறக்கினோம்
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
فَٱخْتَلَطَ
அது கலந்தது
بِهِۦ
அதனுடன்
نَبَاتُ
தாவரம்
ٱلْأَرْضِ
பூமியின்
فَأَصْبَحَ
அது ஆகிவிட்டது
هَشِيمًا
காய்ந்த சருகாக
تَذْرُوهُ
அடித்து வீசும்படியான/அதை
ٱلرِّيَٰحُۗ
காற்றுகள்
وَكَانَ
இருக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَىٰ كُلِّ
எல்லாவற்றின் மீது
مُّقْتَدِرًا
பேராற்றலுடையவனாக

Wadrib lahum masalal hayaatid dunyaa kamaaa'in anzalnaahu minas samaaa'i fakhtalata bihee nabaatul ardi fa asbaha hasheeman tazroo hur riyaah; wa kaanal laahu 'alaa kulli shai'im muqtadiraa

(நபியே!) இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணத்தை அவர்களுக்குக் கூறுங்கள்: அது மேகத்திலிருந்து நாம் இறக்கி வைக்கும் (மழை) நீருக்கு ஒப்பாக இருக்கிறது. பூமியிலுள்ள புற்பூண்டுகள் (அதைக் குடித்து) அதனுடன் கலந்து (நல்ல பயிராயிற்று. எனினும், அது பலன் தருவதற்குப் பதிலாக) காற்றடித்துக் கொண்டு போகக்கூடிய காய்ந்த சருகாகிவிட்டது. (இதுவே இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணமாகும்.) அனைத்தின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.

Tafseer

ٱلْمَالُ
செல்வம்
وَٱلْبَنُونَ
இன்னும் ஆண்பிள்ளைகள்
زِينَةُ
அலங்காரமாகும்
ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَاۖ
உலக வாழ்க்கையின்
وَٱلْبَٰقِيَٰتُ
இன்னும் நிலையாக இருப்பவை
ٱلصَّٰلِحَٰتُ
நற்செயல்கள்
خَيْرٌ
சிறந்தவை
عِندَ رَبِّكَ
உம் இறைவனிடம்
ثَوَابًا
நன்மையிலும்
وَخَيْرٌ
சிறந்தவை
أَمَلًا
ஆசையிலும்

Almaalu walbanoona zeenatul hayaatid dunya wal baaqiyaatus saalihaatu khairun 'inda Rabbika sawaabanw wa khairun amalaa

(ஆகவே) பொருளும் மக்களும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய அலங்காரங்களே (அன்றி நிலையானவையல்ல.) என்றுமே நிலையான நற்செயல்கள் தாம் உங்கள் இறைவனிடத்தில் நற்கூலி கிடைப்பதற்கு மிக சிறந்ததும், நல்ஆதரவு வைப்பதற்கு மிக சிறந்ததும் ஆகும்.

Tafseer

وَيَوْمَ
இன்னும் நாளில்
نُسَيِّرُ
பெயர்த்துவிடுவோம்
ٱلْجِبَالَ
மலைகளை
وَتَرَى
இன்னும் பார்ப்பீர்
ٱلْأَرْضَ
பூமியை
بَارِزَةً
வெளிப்பட்டதாக
وَحَشَرْنَٰهُمْ
ஒன்று திரட்டுவோம்/ அவர்களை
فَلَمْ نُغَادِرْ
விடமாட்டோம்
مِنْهُمْ
அவர்களில்
أَحَدًا
ஒருவரை

Wa yawma nusaiyirul jibaala wa taral arda baariza tanw wa hasharnaahum falam nughaadir minhum ahadaa

(நபியே!) நாம் மலைகள் (மரங்கள், செடிகள், போன்ற பூமியிலுள்ள) அனைத்தையும் அகற்றிவிடும் நாளில், நீங்கள் பூமியைச் சமமான வெட்ட வெளியாகக் காண்பீர்கள். (அந்நாளில்) மனிதர்களில் ஒருவரையுமே விட்டு விடாது அனைவரையும் ஒன்று சேர்ப்போம்.

Tafseer

وَعُرِضُوا۟
இன்னும் சமர்ப்பிக்கப்படுவார்கள்
عَلَىٰ رَبِّكَ
உம் இறைவன் முன்
صَفًّا
வரிசையாக
لَّقَدْ جِئْتُمُونَا
எங்களிடம் வந்துவிட்டீர்கள்
كَمَا خَلَقْنَٰكُمْ
நாம் படைத்தவாறே/உங்களை
أَوَّلَ
முதல்
مَرَّةٍۭۚ
முறை
بَلْ
மாறாக
زَعَمْتُمْ
பிதற்றினீர்கள்
أَلَّن نَّجْعَلَ
ஆக்கவே மாட்டோம்
لَكُم
உங்களுக்கு
مَّوْعِدًا
வாக்களிக்கப்பட்ட நேரத்தை

Wa 'uridoo 'alaa Rabbika saffaa, laqad ji'tumoonaa kamaa khalaqnaakum awala marrah; bal za'amtum allannaj'ala lakum maw'idaa

உங்கள் இறைவன் முன் அவர்கள் கொண்டு வரப்பட்டு, அணி அணியாக நிறுத்தப்பட்டு "நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே இப்பொழுதும் (உங்களுக்கு நாம் உயிர் கொடுத்து) நீங்கள் நம்மிடம் வந்திருக்கிறீர்கள். (எனினும், நீங்களோ நம்மிடம் வரக்கூடிய) இந்நாளை உங்களுக்கு ஏற்படுத்தவே இல்லை என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்" (என்று கூறப்படுவார்கள்).

Tafseer

وَوُضِعَ
வைக்கப்படும்
ٱلْكِتَٰبُ
புத்தகம்
فَتَرَى
பார்ப்பீர்
ٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகளை
مُشْفِقِينَ
பயந்தவர்களாக
مِمَّا
எவற்றினால்
فِيهِ
அதில்
وَيَقُولُونَ
இன்னும் கூறுவார்கள்
يَٰوَيْلَتَنَا
எங்கள் நாசமே
مَالِ
என்ன?/க்கு
هَٰذَا
இந்த
ٱلْكِتَٰبِ
புத்தகம்
لَا يُغَادِرُ
அது விடவில்லை
صَغِيرَةً
சிறியதை
وَلَا كَبِيرَةً
இன்னும் பெரியதை
إِلَّآ
தவிர
أَحْصَىٰهَاۚ
கணக்கிட்டது/ அவற்றின்
وَوَجَدُوا۟
இன்னும் காண்பார்கள்
مَا عَمِلُوا۟
எதை/செய்தார்கள்
حَاضِرًاۗ
முன்னால்
وَلَا يَظْلِمُ
இன்னும் தீங்கிழைக்க மாட்டான்
رَبُّكَ
உம் இறைவன்
أَحَدًا
ஒருவருக்கும்

Wa wudi'al kitaabu fataral mujrimeena mushfiqeena mimmaa feehi wa yaqooloona yaa wailatanaa maa lihaazal kitaabi laa yughaadiru saghee ratanw wa laa kabeeratan illaaa ahsaahaa; wa wajadoo maa 'amiloo haadiraa; wa laa yazlimu Rabbuka ahadaa

(அவர்களுடைய தினசரிக் குறிப்புப் புத்தகம் அவர்கள் முன் வைக்கப்பட்டால் குற்றவாளிகள் (தாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் அதில் இருப்பதைக் கண்டு) பயந்து "எங்களுடைய கேடே! இதென்ன புத்தகம்! (எங்களுடைய பாவங்கள்) சிறிதோ பெரிதோ ஒன்றையும்விடாது இதில் வரையப்பட்டிருக்கின்றதே" என்று அவர்கள் (புலம்பிக்) கூறுவதை நீங்கள் காண்பீர்கள். (நன்மையோ தீமையோ) அவர்கள் செய்த அனைத்தும் (அதில்) இருக்கக் காண்பார்கள். உங்கள் இறைவன் எவனுக்கும் (அவனுடைய தண்டனையைக் கூட்டியோ, நன்மையைக் குறைத்தோ) அநியாயம் செய்ய மாட்டான்.

Tafseer

وَإِذْ قُلْنَا
நாம் கூறிய சமயம்
لِلْمَلَٰٓئِكَةِ
வானவர்களுக்கு
ٱسْجُدُوا۟
சிரம் பணியுங்கள்
لِءَادَمَ
ஆதமுக்கு
فَسَجَدُوٓا۟
ஆகவே சிரம் பணிந்தனர்
إِلَّآ
தவிர
إِبْلِيسَ
இப்லீஸ்
كَانَ
இருந்தான்
مِنَ ٱلْجِنِّ
ஜின்களில் ஒருவனாக
فَفَسَقَ
மீறினான்
عَنْ أَمْرِ
கட்டளையை
رَبِّهِۦٓۗ
தன் இறைவனின்
أَفَتَتَّخِذُونَهُۥ
எடுத்துக் கொள்கிறீர்களா?/அவனை
وَذُرِّيَّتَهُۥٓ
இன்னும் அவனது சந்ததியை
أَوْلِيَآءَ
நண்பர்களாக
مِن دُونِى
என்னையன்றி
وَهُمْ
அவர்களோ
لَكُمْ
உங்களுக்கு
عَدُوٌّۢۚ
எதிரிகள்
بِئْسَ
மிக கெட்டவன்
لِلظَّٰلِمِينَ
தீயவர்களுக்கு
بَدَلًا
மாற்றம்

Wa iz qulnaa lilma laaa'ikatis judoo li Aadama fasajadooo illaaa Ibleesa kaana minal jinni fafasaqa 'an amri Rabbih; afatattakhizoonahoo wa zurriyatahooo awliyaaa'a min doonee wa hum lakum 'aduww; bi'sa lizzaalimeena badalaa

மலக்குகளை நோக்கி "ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்" என்று நாம் கூறிய சமயத்தில், இப்லீஸைத் தவிர அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள். அவனோ ஜின்களின் இனத்தைச் சார்ந்தவன். அவன் தன் இறைவனுடைய கட்டளைக்கு மாறு செய்து பாவியானான். ஆகவே (மனிதர்களே!) நீங்கள் என்னையன்றி அவனையும், அவனுடைய சந்ததிகளையும் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குக் கொடிய எதிரிகளாக இருக்கிறார்கள். அநியாயக்காரர்கள் (என்னை விட்டு விட்டு அவர்களைத் தங்களுக்குப் பாதுகாவலர்களாக) மாற்றிக் கொண்டது மகா கெட்டது.

Tafseer