Skip to main content

أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
لَهُمْ
அவர்களுக்கு உண்டு
جَنَّٰتُ عَدْنٍ
சொர்க்கங்கள்/அத்ன்
تَجْرِى
ஓடும்
مِن تَحْتِهِمُ
அவர்களின் கீழ்
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
يُحَلَّوْنَ
அலங்காரம் செய்யப்படுவார்கள்
فِيهَا
அவற்றில்
مِنْ أَسَاوِرَ
வளையல்களினால்
مِن ذَهَبٍ
தங்கத்திலிருந்து
وَيَلْبَسُونَ
இன்னும் அணிவார்கள்
ثِيَابًا
ஆடைகளை
خُضْرًا
பச்சை நிற
مِّن سُندُسٍ
மென்மையான பட்டுகளிலிருந்து
وَإِسْتَبْرَقٍ
தடிப்பமான பட்டு
مُّتَّكِـِٔينَ
சாய்ந்தவர்களாக
فِيهَا
அவற்றில்
عَلَى ٱلْأَرَآئِكِۚ
கட்டில்கள் மீது
نِعْمَ
சிறந்த
ٱلثَّوَابُ
கூலி
وَحَسُنَتْ
இன்னும் அழகியது
مُرْتَفَقًا
ஓய்விடம்

Ulaaa'ika lahum Jannaatu 'Adnin tajree min tahtihimul anhaaru yuhallawna feehaa min asaawira min zahabinw wa yalbasoona siyaaban khudram min sundusinw wa istabraqim muttaki'eena feehaa 'alal araaa'ik; ni'mas sawaab; wa hasunat murtafaqaa

இவர்களுக்கு நிலையான சுவனபதிகள் உண்டு. அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். அவர்களுக்குப் (பரிசாகப்) பொற்கடகம் அணிவிக்கப்படும். மெல்லியதாகவோ அழுத்தமானதாகவோ (அவர்கள் விரும்பிய) பசுமையான பட்டாடைகளை அணிவார்கள். ஆசனங்களிலுள்ள தலையணைகள் மீது சாய்ந்து (மிக்க உல்லாசமாக) இருப்பார்கள். இவர்களுடைய கூலி மிக்க நன்றே! இவர்கள் இன்பம் சுவைக்கும் இடமும் மிக்க அழகானது.

Tafseer

وَٱضْرِبْ
இன்னும் விவரிப்பீராக
لَهُم
அவர்களுக்கு
مَّثَلًا
ஓர் உதாரணத்தை
رَّجُلَيْنِ
இரு ஆடவர்கள்
جَعَلْنَا
ஆக்கினோம்
لِأَحَدِهِمَا
அவ்விருவரில் ஒருவருக்கு
جَنَّتَيْنِ
இரு தோட்டங்களை
مِنْ أَعْنَٰبٍ
திராட்சைகளினால் (நிரம்பிய)
وَحَفَفْنَٰهُمَا
இன்னும் அவ்விரண்டையும் சுற்றினோம்
بِنَخْلٍ
பேரிட்ச மரங்களால்
وَجَعَلْنَا
இன்னும் ஆக்கினோம்
بَيْنَهُمَا
அவ்விரண்டுக்கும் இடையில்
زَرْعًا
விவசாயத்தை

Wadrib lahum masalar rajulaini ja'alnaa li ahadihimaa jannataini min a'naabinw wa hafafnaahumaa binakhilinw wa ja'alnaa bainahumaa zar'aa

(நபியே!) இரு மனிதர்களை நீங்கள் அவர்களுக்கு உதாரணமாகக் கூறுங்கள்: அவர்களில் ஒருவனுக்கு இரு திராட்சைத் தோட்டங்களைக் கொடுத்தோம். அவ்விரண்டைச் சூழவும் பேரீச்ச மரங்களை ஆக்கினோம். இவ்விரண்டிற்கும் மத்தியில் தானிய வயல்களை அமைத்தோம்.

Tafseer

كِلْتَا ٱلْجَنَّتَيْنِ
அவ்விரு தோட்டங்களும்
ءَاتَتْ
தந்தன
أُكُلَهَا
தத்தமது கனிகளை
وَلَمْ تَظْلِم
குறை(வை)க்கவில்லை
مِّنْهُ
அவற்றில்
شَيْـًٔاۚ
எதையும்
وَفَجَّرْنَا
இன்னும் பிளந்தோடச் செய்தோம்
خِلَٰلَهُمَا
அவ்விரண்டுக்கும் இடையில்
نَهَرًا
ஓர் ஆற்றை

Kiltal jannataini aatat ukulahaa wa lam tazlim minhu shai'anw wa fajjarnaa khi laalahumaa naharaa

அவ்விரு தோட்டங்களில் ஒவ்வொன்றும் அதன் பலனை யாதொரு குறைவுமின்றி கொடுத்துக் கொண்டிருந்தது. அவ்விரண்டிற்கும் மத்தியில் ஒரு நதியையும் ஓடச்செய்தோம்.

Tafseer

وَكَانَ
இன்னும் இருந்தன
لَهُۥ
அவனுக்கு
ثَمَرٌ
கனிகள்
فَقَالَ
கூறினான்
لِصَٰحِبِهِۦ
தன் தோழருக்கு
وَهُوَ
அவனோ
يُحَاوِرُهُۥٓ
அவரிடம் பேசியவனாக
أَنَا۠ أَكْثَرُ
நான் மிக அதிகமானவன்
مِنكَ
உன்னை விட
مَالًا
செல்வத்தால்
وَأَعَزُّ
இன்னும் மிக கண்ணியமுள்ளவன்
نَفَرًا
குடும்பத்தால்

Wa kaana lahoo samarun faqaala lisaahibihee wa huwa yuhaawiruhoo ana aksaru minka maalanw wa a'azzu nafaraa

அவனிடத்தில் (இவையன்றி) வேறு பல கனி (மரங்)களும் இருந்தன. (இத்தகைய நிலைமையில் ஒரு நாள்) அவன் தன்னுடன் பேசிக் கொண்டிருந்த தன் நண்பனை நோக்கி "நான் உன்னைவிட அதிகப் பொருளுடையவன்" மக்கள் தொகையிலும் நான் (உன்னை) மிகைத்தவன்" என்று (கர்வத்துடன்) கூறினான்.

Tafseer

وَدَخَلَ
இன்னும் நுழைந்தான்
جَنَّتَهُۥ
தனது தோட்டத்தில்
وَهُوَ
அவனோ
ظَالِمٌ
தீங்கிழைத்தவனாக
لِّنَفْسِهِۦ
தனக்குத் தானே
قَالَ
கூறினான்
مَآ أَظُنُّ
நான் எண்ணவில்லை
أَن تَبِيدَ
அழியும் என்று
هَٰذِهِۦٓ
இது
أَبَدًا
ஒருபோதும்

Wa dakhala jannatahoo wa huwa zaalimul linafsihee qaala maaa azunnu an tabeeda haaziheee abadaa

பின்னர், அவன் தன் தோப்புக்குள் நுழைந்து (அளவு மீறிய அக மகிழ்ச்சியின் காரணமாக) தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொண்டு "இவை ஒரு காலத்திலும் அழிந்து விடுமென நான் நினைக்கவில்லை" (என்றும்)

Tafseer

وَمَآ أَظُنُّ
இன்னும் நான்எண்ணவில்லை
ٱلسَّاعَةَ قَآئِمَةً
மறுமை/நிகழும்
وَلَئِن رُّدِدتُّ
நான் திரும்பக் கொண்டுவரப்பட்டாலும்
إِلَىٰ رَبِّى
என் இறைவனிடம்
لَأَجِدَنَّ
நிச்சயம் பெறுவேன்
خَيْرًا
சிறந்த ஒன்றை
مِّنْهَا
இதைவிட
مُنقَلَبًا
மீளுமிடமாக

Wa maaa azunnus Saa'ata qaaa'imatanw wa la'ir rudittu ilaa Rabbee la ajidanna khairam minhaa munqalabaa

"மறுமை ஏற்படும் என்றும் நான் நம்பவேயில்லை. ஒருகால் (மறுமை ஏற்பட்டு) நான் என் இறைவனிடம் கொண்டு போகப்பட்டாலும் இங்கிருப்பதைவிட அங்கு நான் மேலானவனாக இருப்பதையே காண்பேன்" என்றும் கூறினான்.

Tafseer

قَالَ
கூறினார்
لَهُۥ
அவனுக்கு
صَاحِبُهُۥ
அவரது தோழர்
وَهُوَ
அவர்
يُحَاوِرُهُۥٓ
அவனிடம் பேசியவராக
أَكَفَرْتَ
நீ நிராகரித்தாயா?
بِٱلَّذِى
எப்படிப்பட்டவனை
خَلَقَكَ
உன்னைப் படைத்தான்
مِن تُرَابٍ
மண்ணிலிருந்து
ثُمَّ
பிறகு
مِن نُّطْفَةٍ
இந்திரியத்திலிருந்து
ثُمَّ
பிறகு
سَوَّىٰكَ
சீரமைத்தான்
رَجُلًا
ஓர் ஆடவராக

Qaala lahoo saahibuhoo wa huwa yuhaawiruhooo akafarta billazee khalaqaka min turaabin summa min nutfatin summa sawwaaka rajulaa

அதற்கு அவனுடன் பேசிக் கொண்டிருந்த அவனுடைய நண்பன் அவனை நோக்கி "உன்னைப் படைத்தவனையே நீ நிராகரிக்கிறாயா? மண்ணிலிருந்து பின்னர் இந்திரியத்தின் ஒரு துளியிலிருந்து உன்னைப் படைத்த அவன், பின்னர் ஒரு முழு மனிதனாகவும் உன்னை அமைத்தான்.

Tafseer

لَّٰكِنَّا۠
எனினும் நான்
هُوَ
அவன்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
رَبِّى
என் இறைவன்
وَلَآ أُشْرِكُ
இணையாக்க மாட்டேன்
بِرَبِّىٓ
என் இறைவனுக்கு
أَحَدًا
ஒருவரையும்

Laakinaa Huwal laahu Rabbee wa laa ushriku bi Rabbeee ahadaa

நிச்சயமாக அந்த அல்லாஹ்தான் என்னையும் படைத்து வளர்ப்பவன் என்று நான் உறுதியாக நம்பியிருக்கிறேன். ஆகவே, நான் என்னுடைய இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்க மாட்டேன்.

Tafseer

وَلَوْلَآ
வேண்டாமா?
إِذْ دَخَلْتَ
நீ நுழைந்த போது
جَنَّتَكَ
உன் தோட்டத்தில்
قُلْتَ
நீ கூறியிருக்க
مَا شَآءَ
எது/நாடினான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَا قُوَّةَ
அறவே ஆற்றல் இல்லை
إِلَّا بِٱللَّهِۚ
தவிர/அல்லாஹ்வைக் கொண்டே
إِن تَرَنِ
என்னை நீ பார்த்தால்
أَنَا۠
நான்
أَقَلَّ
குறைவானவனாக
مِنكَ
உன்னைவிட
مَالًا
செல்வத்திலும்
وَوَلَدًا
சந்ததியிலும்

Wa law laaa iz dakhalta jannataka qulta maa shaaa'al laahu laa quwwata illaa billaah; in tarani ana aqalla minka maalanw wa waladaa

அன்றி, நீ உன் தோட்டத்தில் நுழைந்தபொழுது (இவை அனைத்தும்) அல்லாஹ் (தன் அருளால்) எனக்குத் தந்தவையே! அல்லாஹ்வின் உதவியின்றி (நாம்) ஒன்றும் (செய்து) விட முடியாது? என்று நீ கூறியிருக்க வேண்டாமா? பொருளிலும் சந்ததியிலும் நான் உனக்குக் குறைவாக இருப்பதை நீ கண்டபோதிலும்,

Tafseer

فَعَسَىٰ
கூடும்
رَبِّىٓ
என் இறைவன்
أَن يُؤْتِيَنِ
அவர்கள் எனக்குத் தந்து
خَيْرًا
சிறந்ததை
مِّن جَنَّتِكَ
உன்தோட்டத்தைவிட
وَيُرْسِلَ
இன்னும் அனுப்ப
عَلَيْهَا
அதன் மீது
حُسْبَانًا
வேதனையை,அழிவை
مِّنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
فَتُصْبِحَ
அது ஆகிவிடும்
صَعِيدًا
வழுவழுப்பான
زَلَقًا
வெறும் தரையாக

Fa'asaa Rabeee any yu'tiyani khairam min jannatika wa yursila 'alaihaa husbaanam minas samaaa'i fatusbiha sa'eedan zalaqaa

உன்னுடைய தோட்டத்தைவிட மிக்க மேலானதை என் இறைவன் எனக்குக் கொடுக்கவும் (உன் நன்றிகெட்ட தன்மையின் காரணமாக) உன் தோப்பின் மீது யாதொரு ஆபத்தை வானத்தில் இருந்து இறக்கி (அதிலுள்ள மரம், செடிகளையெல்லாம் அழித்து) அதனை வெட்டவெளியாக (என் இறைவன்) செய்து விடவும் கூடும்.

Tafseer