Skip to main content

فَلَمَّا بَلَغَا
அவ்விருவரும் அடைந்தபோது
مَجْمَعَ
இணையும் இடத்தை
بَيْنِهِمَا
அவ்விரண்டும்
نَسِيَا
இருவரும் மறந்தனர்
حُوتَهُمَا
தங்கள் மீனை
فَٱتَّخَذَ
ஆக்கிக்கொண்டது
سَبِيلَهُۥ فِى
தன் வழியை/கடலில்
سَرَبًا
சுரங்கம் போல்

Falammaa balaghaa majma'a bainihimaa nasiyaa hootahumaa fattakhaza sabeelahoo fil bahri sarabaa

அவர்கள் இருவரும் இரு கடல்களும் சந்திக்கும் இடத்தை அடைந்தபொழுது தங்களுடைய மீனை அவர்கள் மறந்துவிட்டனர். அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக்கொண்டு (சென்று) விட்டது.

Tafseer

فَلَمَّا جَاوَزَا
அவ்விருவரும் கடந்தபோது
قَالَ
கூறினார்
لِفَتَىٰهُ
தன் வாலிபரை நோக்கி
ءَاتِنَا
கொண்டுவா/நம்மிடம்
غَدَآءَنَا
உணவை/நம்
لَقَدْ
திட்டவட்டமாக
لَقِينَا
சந்தித்தோம்
مِن سَفَرِنَا
பயணத்தில்/நம்
هَٰذَا
இந்த
نَصَبًا
களைப்பை

Falammaa jaawazaa qaala lifataahu aatinaa ghadaaa'anaa laqad laqeena min safarinaa haazaa nasabaa

(தாங்கள் விரும்பிச் சென்ற அவ்விடத்தை அறியாது) அவ்விருவரும் அதைக் கடந்த பின், மூஸா தன் வாலிபனை நோக்கி "நம்முடைய காலை உணவை நீங்கள் கொண்டு வாருங்கள். நிச்சயமாக நாம் இந்த பயணத்தில் மிகவும் களைப்படைந்து விட்டோம்" என்று கூறினார்.

Tafseer

قَالَ
கூறினார்
أَرَءَيْتَ
நீர் பார்த்தீரா?
إِذْ أَوَيْنَآ
நாம் ஒதுங்கியபோது
إِلَى
அருகில்
ٱلصَّخْرَةِ
அந்த கற்பாறை
فَإِنِّى
நிச்சயமாக நான்
نَسِيتُ
மறந்தேன்
ٱلْحُوتَ
மீனை
وَمَآ أَنسَىٰنِيهُ
மறக்கடிக்கவில்லை/எனக்கு
إِلَّا ٱلشَّيْطَٰنُ
ஷைத்தானைத் தவிர
أَنْ أَذْكُرَهُۥۚ
நான்கூறுவதை/அதை
وَٱتَّخَذَ
இன்னும் ஆக்கிக் கொண்டது
سَبِيلَهُۥ
தன் வழியை
فِى ٱلْبَحْرِ
கடலில்
عَجَبًا
ஆச்சரியமான

Qaala ara'ayta iz awainaaa ilas sakhrati fa innee naseetul hoota wa maaa ansaaneehu illash Shaitaanu an azkurah; wattakhaza sabeelahoo fil bahri'ajabaa

அதற்கு (அந்த வாலிபன் மூஸாவை நோக்கி) "அந்த கற்பாறையில் நாம் தங்கிய சமயத்தில் (நிகழ்ந்த ஆச்சரியத்தை) நீங்கள் பார்த்தீர்களா? நிச்சயமாக நான் (நம்முடன் கொண்டுவந்த) மீனை மறந்துவிட்டேன். அதனை நான் (உங்களுக்குக்) கூறுவதை ஷைத்தானையன்றி (வேறொருவரும்) எனக்கு மறக்கடிக்கவில்லை. (அவ்விடத்தில்) கடலில் (செல்ல) ஆச்சரியமான விதத்தில் அது தனக்கு வழி செய்துகொண்டு (சென்று) விட்டது" என்று கூறினார்.

Tafseer

قَالَ
கூறினார்
ذَٰلِكَ
அதுதான்
مَا كُنَّا
எது/இருந்தோம்/தேடுவோம்
فَٱرْتَدَّا
அவ்விருவரும் திரும்பினார்கள்
عَلَىٰٓ ءَاثَارِهِمَا
தங்கள் சுவடுகள் மீதே
قَصَصًا
பின்பற்றி

Qaala zaalika maa kunnaa nabgh; fartaddaa 'alaa aasaari him maa qasasaa

அதற்கு மூஸா "நாம் தேடிவந்த இடம் அதுதான்" என்று கூறி இவ்விருவரும் (அவ்விடத்தைத் தேடி) தங்கள் காலடியைப் பின்பற்றி வந்த வழியே சென்றார்கள்.

Tafseer

فَوَجَدَا
அவ்விருவரும் கண்டார்கள்
عَبْدًا
ஓர் அடியாரை
مِّنْ عِبَادِنَآ
நமது அடியார்களில்
ءَاتَيْنَٰهُ
கொடுத்திருந்தோம்/அவருக்கு
رَحْمَةً
கருணையை
مِّنْ عِندِنَا
நம்மிடமிருந்து
وَعَلَّمْنَٰهُ
இன்னும் /கற்பித்திருந்தோம்/அவருக்கு
مِن لَّدُنَّا
நம் புறத்திலிருந்து
عِلْمًا
ஞானத்தை

Fa wajadaa 'abdam min 'ibaadinaaa aatainaahu Rahmatam min 'indinaa wa 'allamnaahu mil ladunnaa 'ilmaa

இவ்விருவரும் அங்கு வந்தபோது (அவ்விடத்தில்) நம் அடியாரில் ஒருவரைக் கண்டார்கள். அவர் மீது நாம் அருள்புரிந்து நமக்குச் சொந்தமானதொரு ஞானத்தையும் நாம் அவருக்குக் கற்பித்திருந்தோம்.

Tafseer

قَالَ
கூறினார்
لَهُۥ
அவரை நோக்கி
مُوسَىٰ
மூஸா
هَلْ
?
أَتَّبِعُكَ
பின்தொடர்வேன்/உம்மை
عَلَىٰٓ أَن
நீர் எனக்கு கற்பிப்பதற்காக
مِمَّا عُلِّمْتَ
நீர் கற்பிக்கப்பட்டதிலிருந்து
رُشْدًا
நல்லறிவை

Qaala lahoo Moosaa hal attabi'uka 'alaaa an tu'allimani mimmaa 'ullimta rushdaa

மூஸா அவரை நோக்கி "உங்களுக்குக் கற்பிக்கப்பட்ட கல்வியில் பயனளிக்கக் கூடியதை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் நிபந்தனை மீது நான் உங்களைப் பின்பற்றலாமா?" என்று கேட்டார்.

Tafseer

قَالَ إِنَّكَ
கூறினார்/நிச்சயமாக நீர்
لَن تَسْتَطِيعَ
இயலவே மாட்டீர்
مَعِىَ
என்னுடன்
صَبْرًا
பொறுத்திருக்க

Qaalaa innaka lan tastatee'a ma'iya sabraa

அதற்கவர் "என்னுடன் இருக்க நிச்சயமாக நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள்.

Tafseer

وَكَيْفَ
எப்படி
تَصْبِرُ
பொறு(த்திரு)ப்பீர்
عَلَىٰ
மீது
مَا
எதை
لَمْ تُحِطْ
நீர் சூழ்ந்தறியவில்லையோ
بِهِۦ
அதை
خُبْرًا
ஆழமாக அறிதல்

Wa kaifa tasbiru 'alaa maa lam tuhit bihee khubraa

அவ்வாறிருக்க உங்களுடைய அறிவுக்கு அப்பாற் பட்டவைகளை (நான் செய்யும்போது பார்த்துக் கொண்டு) நீங்கள் எவ்வாறு சகித்துக் கொண்டு இருப்பீர்கள்" என்று கூறினார்.

Tafseer

قَالَ
கூறினார்
سَتَجِدُنِىٓ
காண்பீர்/என்னை
إِن شَآءَ
நாடினால்
ٱللَّهُ
அல்லாஹ்
صَابِرًا
பொறுமையாளனாக
وَلَآ أَعْصِى
இன்னும் மாறுசெய்யமாட்டேன்
لَكَ
உமக்கு
أَمْرًا
எந்த ஒரு காரியத்திலும்

Qaala satajiduneee in shaa 'al laahu saabiranw wa laaa a'see laka amraa

அதற்கு மூஸா "இறைவன் அருளால் (எந்த விஷயத்தையும்) சகித்திருப்பவனாகவே நீங்கள் என்னைக் காண்பீர்கள். எந்த விஷயத்திலும் நான் உங்களுக்கு மாறுசெய்ய மாட்டேன்" என்று கூறினார்.

Tafseer

قَالَ
கூறினார்
فَإِنِ ٱتَّبَعْتَنِى
நீர் பின்தொடர்ந்தால்/என்னை
فَلَا تَسْـَٔلْنِى
கேட்காதீர்/என்னிடம்
عَن شَىْءٍ
எந்த ஒரு விஷயத்தைப் பற்றி
حَتَّىٰٓ أُحْدِثَ
வரை/ஆரம்பிக்கும்
لَكَ مِنْهُ
உமக்கு/அதில்
ذِكْرًا
விளக்கத்தை

Qaala fa init taba'tanee falaa tas'alnee 'an shai'in hattaaa uhdisa laka minhu zikraa

அதற்கு அவர் "நீங்கள் என்னைப் பின்பற்றுவதாயின் (நான் செய்யும்) எவ்விஷயத்தைப் பற்றியும் நானாகவே உங்களுக்கு அறிவிக்கும் வரையில் நீங்கள் என்னிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள்" என்று சொன்னார்.

Tafseer