Skip to main content

أَوَلَمْ يَسِيرُوا۟
அவர்கள் சுற்றுப் பயணம் செய்யவி்ல்லையா?
فِى ٱلْأَرْضِ
பூமியில்
فَيَنظُرُوا۟
பார்த்திருப்பார்களே!
كَيْفَ كَانَ
எப்படி இருந்தது
عَٰقِبَةُ
முடிவு
ٱلَّذِينَ كَانُوا۟
தங்களுக்கு முன்னுள்ளவர்களின்
كَانُوا۟
இருந்தார்கள்
هُمْ
அவர்கள்
أَشَدَّ
மிகபலசாலிகளாகவும்
مِنْهُمْ
இவர்களை விட
قُوَّةً
(உடல்) வலிமையால்
وَءَاثَارًا
இன்னும் அடையாளங்களால்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
فَأَخَذَهُمُ
தண்டித்தான் அவர்களை
ٱللَّهُ
அல்லாஹ்
بِذُنُوبِهِمْ
அவர்களின் பாவங்களினால்
وَمَا كَانَ
இருக்கவில்லை
لَهُم
அவர்களை
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
مِن وَاقٍ
பாதுகாப்பவர் எவரும்

Awalam yaseeroo fil ardi fa yanzuroo kaifa kaana 'aaqibatul lazeena kaanoo min qablihim; kaanoo hum ashadda minhum quwwatanw wa aasaaran fil ardi fa akhazahumul laahu bizunoobihim wa maa kaana lahum minal laahi minw waaq

(நபியே!) இவர்கள் பூமியில் சுற்றித் திரியவில்லையா? (திரிந்திருந்தால்) இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறு ஆயிற்று என்பதைக் கண்டுகொள்வார்கள். (முன்னிருந்த) அவர்களோ, பலத்தாலும், பூமியில் விட்டுச் சென்ற (பூர்வ) சின்னங்களாலும் இவர்களைவிட மிகைத்தவர்களாகவே இருந்தனர். (எனினும்,) அவர்களின் பாவத்தின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக்கொண்டான். அல்லாஹ்வின் பிடியிலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ள ஒருவரும் இருக்கவில்லை.

Tafseer

ذَٰلِكَ بِأَنَّهُمْ
அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்
كَانَت تَّأْتِيهِمْ
அவர்களிடம் வந்து கொண்டிருந்தார்கள்
رُسُلُهُم
அவர்களின் தூதர்கள்
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளுடன்
فَكَفَرُوا۟
ஆனால், அவர்கள் நிராகரித்தார்கள்
فَأَخَذَهُمُ
ஆகவே தண்டித்தான் அவர்களை
ٱللَّهُۚ
அல்லாஹ்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
قَوِىٌّ
வலிமை மிக்கவன்
شَدِيدُ ٱلْعِقَابِ
தண்டிப்பதில் கடுமையானவன்

Zaalika bi annahum kaanat taateehim Rusuluhum bilbaiyinaati fakafaroo fa akhazahumul laah; innahoo qawiyyun shadeedul 'iqaab

இதன் காரணமாவது: நிச்சயமாக இவர்களிடம், தெளிவான அத்தாட்சிகளுடன் நம்முடைய தூதர்கள் வந்து கொண்டிருந்தனர். (அவர்களை) இவர்கள் நிராகரித்துவிட்டனர். ஆகவே, அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான். நிச்சயமாக அவன் மிக பலமுடையவனும், (பாவிகளை) வேதனை செய்வதில் மிக கடினமானவனுமாவான்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
أَرْسَلْنَا
அனுப்பினோம்
مُوسَىٰ
மூஸாவை
بِـَٔايَٰتِنَا
நமது அத்தாட்சிகளுடன்
وَسُلْطَٰنٍ
இன்னும் ஆதாரத்துடன்
مُّبِينٍ
தெளிவான

Wa laqad arsalnaa Moosaa bi Aayaatinaa wa sultaanim mubeen

மெய்யாகவே நாம் மூஸாவுக்கு நம்முடைய வசனங்களையும் தெளிவான அத்தாட்சிகளையும் கொடுத்து அனுப்பி வைத்தோம்.

Tafseer

إِلَىٰ فِرْعَوْنَ
ஃபிர்அவ்னிடம்
وَهَٰمَٰنَ
இன்னும் ஹாமான்
وَقَٰرُونَ
இன்னும் காரூன்
فَقَالُوا۟
அவர்கள் கூறினார்கள்
سَٰحِرٌ
சூனியக்காரர்
كَذَّابٌ
பொய்யர்

Ilaa Fir'awna wa Haamaana qa Qaaroona faqaaloo saahirun kazzaab

ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியவர்களிடம் (அவரை அனுப்பி வைத்தோம்.) அதற்கவர்கள் (மூஸாவைப்) "பெரும் பொய் சொல்லும் சூனியக்காரன்" என்று கூறினார்கள்.

Tafseer

فَلَمَّا
அவர் வந்த போது
جَآءَهُم
அவர்களிடம்
بِٱلْحَقِّ
சத்தியத்தைக்கொண்டு
مِنْ عِندِنَا
நம்மிடமிருந்து
قَالُوا۟
அவர்கள் கூறினார்கள்
ٱقْتُلُوٓا۟
கொன்று விடுங்கள்!
أَبْنَآءَ
ஆண் பிள்ளைகளை
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களின்
مَعَهُۥ
இவருடன்
وَٱسْتَحْيُوا۟
இன்னும் வாழவிடுங்கள்!
نِسَآءَهُمْۚ
பெண்களை அவர்களின்
وَمَا كَيْدُ
சூழ்ச்சி இல்லை
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களின்
إِلَّا
தவிர
فِى ضَلَٰلٍ
வழிகேட்டில்

Falamuna jaaa'ahum bil haqqi min 'indinaa qaaluq tulooo abnaaa'al lazeena aamanoo ma'ahoo wastahyoo nisaaa'ahum; wa maa kaidul kaafireena illaa fee dalaal

அவர், அவர்களிடம் நம்முடைய உண்மையான அத்தாட்சிகளைக் கொண்டு சென்ற போதெல்லாம் அதற்கவர்கள், "எவர்கள் (மூஸாவை) நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ, அவர்களுடைய ஆண் மக்களை வதை செய்து, பெண் மக்களை உயிருடன் வாழ விடுங்கள்" என்று (தன் மக்களுக்குக்) கூறினார்கள். ஆகவே, இந்நிராகரிப்பவர்களின் சூழ்ச்சி வழிகேட்டிலன்றி செல்லவில்லை.

Tafseer

وَقَالَ
கூறினான்
فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன்
ذَرُونِىٓ
என்னை விடுங்கள்
أَقْتُلْ
கொன்று விடுகிறேன்
مُوسَىٰ
மூஸாவை
وَلْيَدْعُ
அவர் அழைக்கட்டும்
رَبَّهُۥٓۖ
தன் இறைவனை
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَخَافُ
பயப்படுகிறேன்
أَن يُبَدِّلَ
அவர் மாற்றிவிடுவார் என்று
دِينَكُمْ
உங்கள் மார்க்கத்தை
أَوْ
அல்லது
أَن يُظْهِرَ
உருவாக்கி விடுவார் என்று
فِى ٱلْأَرْضِ
இந்த பூமியில்
ٱلْفَسَادَ
குழப்பத்தை

Wa qaala Fir'awnu zarooneee aqtul Moosaa walyad'u Rabbahoo inneee akhaafu ai yubaddila deenakum aw ai yuzhira fil ardil fasaad

அன்றி, ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி,) "என்னை(த் தடை செய்யாது) விட்டுவிடுங்கள். நான் மூஸாவைக் கொலை செய்து விடுகிறேன். அவர் (தன்னை காத்துக்கொள்ள) தன் இறைவனை அழைக்கட்டும். நிச்சயமாக அவர் உங்களுடைய மார்க்கத்தையே மாற்றி விடக்கூடும்; அல்லது பூமியில் விஷமத்தைப் பரப்பிவிடக்கூடும் என்று நான் பயப்படுகிறேன்" என்றும் கூறினான்.

Tafseer

وَقَالَ
கூறினார்
مُوسَىٰٓ
மூஸா
إِنِّى
நிச்சயமாக நான்
عُذْتُ
பாதுகாவல் தேடுகிறேன்
بِرَبِّى
எனது இறைவனிடம்
وَرَبِّكُم
இன்னும் உங்கள் இறைவனிடம்
مِّن كُلِّ
எல்லோரை விட்டும்
مُتَكَبِّرٍ
பெருமை அடிக்கின்றவன்
لَّا يُؤْمِنُ
நம்பிக்கைகொள்ள மாட்டான்
بِيَوْمِ ٱلْحِسَابِ
விசாரணை நாளை

Wa qaala Moosaaaa innee 'uztu bi Rabbee wa Rabbikum min kulli mutakabbiril laayu'minu bi Yawmil Hisaab

அதற்கு மூஸா, (அவனை நோக்கி) "கேள்வி கணக்கு(க் கேட்கப்படும்) நாளை நம்பாது, கர்வம்கொண்ட (உங்கள்) அனைவருடைய தீங்கை விட்டும், என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அவன் என்னை பாதுகாத்துக் கொள்ளுமாறு கோருகின்றேன்" என்று கூறினார்கள்.

Tafseer

وَقَالَ
கூறினார்
رَجُلٌ
ஓர் ஆடவர்
مُّؤْمِنٌ
நம்பிக்கைகொண்டவர்
مِّنْ ءَالِ
குடும்பத்தாரில்
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னுடைய
يَكْتُمُ
மறைத்தவராக
إِيمَٰنَهُۥٓ
தனது நம்பிக்கையை
أَتَقْتُلُونَ
நீங்கள்கொல்கின்றீர்களா?
رَجُلًا
ஒரு மனிதரை
أَن يَقُولَ
கூறியதற்காக
رَبِّىَ
என் இறைவன் என்று
ٱللَّهُ
அல்லாஹ்தான்
وَقَدْ
திட்டமாக
جَآءَكُم
அவர் கொண்டு வந்திருக்கிறார் உங்களுக்கு
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளை
مِن رَّبِّكُمْۖ
உங்கள் இறைவனிடமிருந்து
وَإِن يَكُ
அவர் இருந்தால்
كَٰذِبًا
பொய்யராக
فَعَلَيْهِ
அவருக்குத்தான் கேடாக அமையும்
كَذِبُهُۥۖ
அவருடைய பொய்
وَإِن يَكُ
அவர் இருந்தால்
صَادِقًا
உண்மையாளராக
يُصِبْكُم
உங்களைவந்தடையும்
بَعْضُ
சில
ٱلَّذِى
அவர் எச்சரிப்பதில்
يَعِدُكُمْۖ
அவர் எச்சரிப்பதில் உங்களை
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَا يَهْدِى
நேர்வழி செலுத்தமாட்டான்/எவரை/அவர்
مُسْرِفٌ
வரம்புமீறுபவராக(வும்)
كَذَّابٌ
பெரும் பொய்யராக(வும்)

Wa qaala rajulum mu'minummin Aali Fir'awna yaktumu eemaanahooo ataqtuloona rajulan ai yaqoola Rabbi yal laahu wa qad jaaa'akum bil haiyinaati mir Rabbikum wa iny yaku kaaziban fa'alaihi kazi buhoo wa iny yaku saadiqany yasibkum ba'dul lazee ya'idukum innal laaha laa yahdee man huwa musrifun kaazaab

ஃபிர்அவ்னுடைய கூட்டத்திலுள்ள ஒரு மனிதர் நம்பிக்கை கொண்டு இருந்தார். அவர் தன்னுடைய நம்பிக்கையை மறைத்துக் கொண்டுமிருந்தார். அவர் (அச்சமயம் அவர்களை நோக்கி,) "அல்லாஹ்தான் என்னுடைய இறைவன் என்று ஒரு மனிதர் கூறியதற்காக அவரை நீங்கள் கொலை செய்துவிடலாமா? அவரோ, உங்கள் இறைவனிடமிருந்து பல தெளிவான அத்தாட்சிகளை மெய்யாகவே உங்களிடம் கொண்டு வந்திருக்கின்றார். அவர் பொய் சொல்பவராயிருந்தால், அவர் சொல்லும் பொய்யின் கேடு அவர் மீதே சாரும். (அதனால் உங்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை.) அவர் சொல்வது மெய்யாயிருந்து விட்டாலோ, அவர் பயமுறுத்தும் வேதனைகளில் பல உங்களை வந்தடைந்து விடுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறி பொய் சொல்பவர்களை நேரான வழியில் செலுத்த மாட்டான்" என்றார்.

Tafseer

يَٰقَوْمِ
எனது மக்களே!
لَكُمُ
உங்களுக்கு
ٱلْمُلْكُ
ஆட்சி
ٱلْيَوْمَ
இன்றைய தினம்
ظَٰهِرِينَ
நீங்கள் மிகைத்திருக்கிறீர்கள்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
فَمَن
யார்?
يَنصُرُنَا
நமக்கு உதவுவார்
مِنۢ بَأْسِ
தண்டனையில்இருந்து
ٱللَّهِ
அல்லாஹ்வின்
إِن جَآءَنَاۚ
நம்மிடம்அதுவந்தால்
قَالَ فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன் கூறினான்
مَآ أُرِيكُمْ
உங்களுக்கு நான் காண்பிக்க மாட்டேன்
إِلَّا
தவிர
مَآ أَرَىٰ
நான் கருதுவதையே
وَمَآ أَهْدِيكُمْ
உங்களுக்கு நான் வழிகாட்ட மாட்டேன்
إِلَّا سَبِيلَ
பாதையைத் தவிர
ٱلرَّشَادِ
நேரான

Yaa qawmi lakumul mulkul yawma zaahireena fil ardi famai yansurunaa mim baasil laahi in jaaa'anaa; qaala Fir'awnu maaa ureekum illaa maaa araa wa maaa ahdeekum illaa sabeelar Rashaad

(அன்றி) "என்னுடைய மக்களே! இன்றைய தினம் அதிகாரம் உங்கள் கையில்தான் இருக்கின்றது. இத்தேசத்தில் (நீங்களே) ஆதிக்கம் வகிக்கின்றீர்கள். ஆயினும், அல்லாஹ்வுடைய வேதனை நமக்கு வந்துவிட்டால், (அதனைத் தடுத்து) நமக்கு உதவி செய்பவன் யார்?" (என்றும் கூறினார்.) அதற்கு, ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி,) "நான் (சரி என்று) கண்டவைகளை தவிர (வேறொன் றையும்) நான் உங்களுக்கு அறிவிக்கவில்லை. நேரான வழியைத் தவிர மற்றெதனையும் நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை" என்றும் கூறினான்.

Tafseer

وَقَالَ
கூறினார்
ٱلَّذِىٓ ءَامَنَ
நம்பிக்கை கொண்டவர்
يَٰقَوْمِ
என் மக்களே!
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَخَافُ
பயப்படுகிறேன்
عَلَيْكُم
உங்கள் மீது
مِّثْلَ
போன்றதை
يَوْمِ
நாளை
ٱلْأَحْزَابِ
ராணுவங்களின்

Wa qaalal lazee aamana yaa qawmi inneee akhaafu 'alaikum misla yawmil Ahzaab

அதற்கு, நம்பிக்கைகொண்(டு தன்னுடைய நம்பிக்கையை மறைத்துக் கொண்)டிருந்த அவர் (அவர்களை நோக்கி,) "என்னுடைய மக்களே! (அழிந்துபோன) மற்ற கூட்டத்தினர்களின் (கெட்ட) நாள்களைப் போன்றவை, உங்கள் மீது வந்துவிடுமென்று நிச்சயமாக நான் பயப்படுகின்றேன்.

Tafseer