Skip to main content
bismillah

قَدْ
திட்டமாக
سَمِعَ
செவியுற்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
قَوْلَ
பேச்சை
ٱلَّتِى تُجَٰدِلُكَ
உம்மிடம் விவாதிக்கின்றவளின்
فِى زَوْجِهَا
தனது கணவரின் விஷயத்தில்
وَتَشْتَكِىٓ
முறையிடுகிறாள்
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்விடம்
وَٱللَّهُ
அல்லாஹ்
يَسْمَعُ
செவியுறுகின்றான்
تَحَاوُرَكُمَآۚ
உரையாடலை உங்கள் இருவரின்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
سَمِيعٌۢ
நன்கு செவியுறுபவன்
بَصِيرٌ
உற்று நோக்குபவன்

Qad sami'al laahu qawlal latee tujaadiluka fee zawjihaa wa tashtakeee ilal laahi wallaahu yasma'u tahaawurakumaa; innal laaha samee'um baseer

(நபியே!) எவள் தன் கணவரைப் பற்றி உங்களிடம் தர்க்கித்து (அவரைப் பற்றி) அல்லாஹ்விடமும் முறையிட்டாளோ, அவளுடைய முறையீட்டை அல்லாஹ் நிச்சயமாகக் கேட்டுக் கொண்டான். (அதைப்பற்றி) உங்கள் இருவரின் தர்க்க வாதத்தையும் அல்லாஹ் செவியுற்றான். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும், (ஒவ்வொருவரின் செயலையும்) உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

ٱلَّذِينَ يُظَٰهِرُونَ
எவர்கள்/ளிஹார் செய்கின்றார்களோ
مِنكُم
உங்களில்
مِّن نِّسَآئِهِم
தங்கள் பெண்கள் இடம்
مَّا هُنَّ
அவர்கள் ஆகமுடியாது
أُمَّهَٰتِهِمْۖ
அவர்களின் தாய்மார்களாக
إِنْ أُمَّهَٰتُهُمْ
அவர்களின் தாய்மார்கள் இல்லை
إِلَّا ٱلَّٰٓـِٔى
தவிர/எவர்கள்
وَلَدْنَهُمْۚ
அவர்களை பெற்றெடுத்தார்கள்
وَإِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
لَيَقُولُونَ
கூறுகின்றனர்
مُنكَرًا
மிகத் தீயதை
مِّنَ ٱلْقَوْلِ
பேச்சில்
وَزُورًاۚ
இன்னும் பொய்யானதை
وَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَعَفُوٌّ
மிகவும் பிழை பொறுப்பவன்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்

Allazeena yuzaahiroona minkum min nisaaa'ihim maa hunnaa ummahaatihim in ummahaatuhum illal laaa'ee waladnahum; wa innaahum la yaqooloona munkaram minal qawli wa zooraa; wa innal laaha la'afuwwun ghafoor

உங்களில் எவரேனும் தம் மனைவிகளில் எவளையும், தன்னுடைய தாயென்று கூறிவிடுவதனால், அவள் அவர்களுடைய (உண்மைத்) தாயாகி விடமாட்டாள். அவர்களைப் பெற்றெடுத் தவர்கள்தாம் (உண்மைத்) தாயாவார்கள். (இதற்கு மாறாக எவளையும் எவரும் தாயென்று கூறினால் கூறுகின்ற) அவர்கள் நிச்சயமாகத் தகாததும், பொய்யானதுமான ஒரு வார்த்தையையே கூறுகின்றனர். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் (குற்றங்களைப்) பொறுப்பவனுமாக இருக்கின்றான். (ஆகவே, இத்தகைய குற்றம் செய்தவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோரவும்.)

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
يُظَٰهِرُونَ
ளிஹார்செய்கிறார்கள்
مِن نِّسَآئِهِمْ
தங்கள் பெண்களிடம்
ثُمَّ
பிறகு
يَعُودُونَ
மீளுகின்றார்களோ
لِمَا قَالُوا۟
தாங்கள் கூறியதற்கு
فَتَحْرِيرُ
உரிமையிடவேண்டும்
رَقَبَةٍ
ஓர் அடிமையை
مِّن قَبْلِ
முன்னர்
أَن يَتَمَآسَّاۚ
அவர்கள் இருவரும் இணைவதற்கு
ذَٰلِكُمْ
இதுதான்
تُوعَظُونَ
உபதேசிக் கப்படுகிறீர்கள்
بِهِۦۚ وَٱللَّهُ
இதற்கு/அல்லாஹ்
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை
خَبِيرٌ
ஆழ்ந்தறிபவன்

Wallazeena yuzaahiroona min nisaaa'ihim summa ya'oodoona limaa qaaloo fatabreeru raqabatim min qabli any-yatamaaassaa; zaalikum too'azoona bih; wallaahu bimaa ta'maloona khabeer

ஆகவே, எவரேனும் தங்கள் மனைவிகளை(த் தன்) தாய்க்கு ஒப்பிட்டுக் கூறிய பின்னர், அவர்களிடம் திரும்ப (சேர்ந்துகொள்ள) விரும்பினால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்னதாகவே (இவ்வாறு ஒப்பிட்டுக் கூறிய குற்றத்திற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதனை (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசம் செய்கின்றான். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கறிபவனாக இருக்கின்றான்.

Tafseer

فَمَن
எவர்
لَّمْ يَجِدْ
வசதி பெறவில்லையோ
فَصِيَامُ
நோன்பிருக்க வேண்டும்
شَهْرَيْنِ
இரண்டு மாதங்கள்
مُتَتَابِعَيْنِ
தொடர்ந்து
مِن قَبْلِ
முன்னர்
أَن يَتَمَآسَّاۖ
இருவரும் இணைவதற்கு
فَمَن
எவர்
لَّمْ يَسْتَطِعْ
சக்தி பெறவில்லையோ
فَإِطْعَامُ
உணவளிக்கட்டும்
سِتِّينَ
அறுபது
مِسْكِينًاۚ
ஏழைகளுக்கு
ذَٰلِكَ
இது
لِتُؤْمِنُوا۟
ஏனெனில்/நம்பிக்கை கொள்கின்றீர்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்வையும்
وَرَسُولِهِۦۚ
அவனது தூதரையும்
وَتِلْكَ
இவை
حُدُودُ
சட்டங்களாகும்
ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
وَلِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
عَذَابٌ
தண்டனை
أَلِيمٌ
வலி தரக்கூடிய(து)

Famal lam yajid fa siyaamu shahraini mutataabi'ayni min qabli any-yatamaaassaa famal lam yastati' fa-it'aamu sitteena miskeena; zaalika litu'minoo billaahi wa rasoolih'wa tilka hudoodul laah; wa lilkaafireena 'azaabun aleem

(விடுதலை செய்யக்கூடிய அடிமையை) எவரேனும் பெற்றிருக்காவிடில், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்னதாகவே, (அவன்) இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்கவும். (இவ்வாறு நோன்பு நோற்க) சக்தி பெறாதவன். அறுபது ஏழைகளுக்கு (மத்திய தரமான) உணவளிக்கவும். அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நீங்கள் (மெய்யாகவே) நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்கள் என்பதற்காக (இந்த கட்டளையை இவ்வாறு இலேசாக்கி வைத்தான்). இவைகள் அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். (இதனை) மீறுபவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
يُحَآدُّونَ
முரண்படுகிறார்கள்
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு(ம்)
وَرَسُولَهُۥ
அவனது தூதருக்கும்
كُبِتُوا۟
இழிவு படுத்தப்படுவார்கள்
كَمَا
போன்று
كُبِتَ
இழிவுபடுத்தப்பட்டது
ٱلَّذِينَ مِن
இவர்களுக்கு முன்னுள்ளவர்கள்
وَقَدْ
திட்டமாக
أَنزَلْنَآ
நாம் இறக்கினோம்
ءَايَٰتٍۭ
அத்தாட்சிகளை
بَيِّنَٰتٍۚ
தெளிவான(வை)
وَلِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
عَذَابٌ مُّهِينٌ
இழிவுதரும்தண்டனை

Innal lazeena yuhaaaddoonal laaha wa Rasoolahoo kubitoo kamaa kubital lazeena min qablihim; wa qad anzalnaaa aayaatim baiyinaat; wa lilkaa fireena 'azaabum muheen

எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றார்களோ அவர்கள், நிச்சயமாக அவர்களுக்கு முன்னுள்ளோர் இழிவுபடுத்தப்பட்டபடியே இழிவுபடுத்தப்படுவார்கள். நிச்சயமாக (இதைப் பற்றி)த் தெளிவான வசனங்களையே நாம் இறக்கி இருக்கின்றோம். (அதற்கு) மாறு செய்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.

Tafseer

يَوْمَ
நாளில்
يَبْعَثُهُمُ
எழுப்புவான்/ அவர்களை
ٱللَّهُ
அல்லாஹ்
جَمِيعًا
அனைவரையும்
فَيُنَبِّئُهُم
அவர்களுக்கு அறிவிப்பான்
بِمَا عَمِلُوٓا۟ۚ
அவர்கள் செய்தவற்றை
أَحْصَىٰهُ ٱللَّهُ
அவற்றை கணக்கிட்டு வைத்துள்ளான்/அல்லாஹ்
وَنَسُوهُۚ
அவற்றை மறந்துவிட்டார்கள்
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلَىٰ كُلِّ
எல்லாவற்றையும்
شَهِيدٌ
கண்காணிப்பவன்

Yawma yab'asuhumul laahu jamee'an fayunabbi'uhum bimaa 'amiloo; ahsaahul laahu wa nasooh; wallaahu 'alaa kulli shai'in shaheed

அவர்கள் அனைவரையும் அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்பும் நாளில், அவர்கள் செய்தவைகளைப் பற்றி அவர்களுக்கு அறிவிப்பான். அதனை அவர்கள் மறந்துவிட்டபோதிலும், அவைகளை அல்லாஹ் சேகரித்து வைக்கின்றான். (அவர்கள் செய்யும்) அனைத்தையும் அல்லாஹ் தெரிந்தவனாகவே இருக்கின்றான்.

Tafseer

أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
أَنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يَعْلَمُ
நன்கறிவான்
مَا فِى
வானங்களில் உள்ளவற்றை(யும்)
وَمَا فِى
பூமியில் உள்ளவற்றையும்
مَا يَكُونُ
இருக்காது
مِن نَّجْوَىٰ
உரையாடல்
ثَلَٰثَةٍ
மூன்று நபர்களின்
إِلَّا هُوَ
தவிர/அவன்
رَابِعُهُمْ
அவர்களில் நான்காமவனாக
وَلَا خَمْسَةٍ
இருக்காது/ஐந்து நபர்களின்
إِلَّا هُوَ
தவிர/அவன்
سَادِسُهُمْ
அவர்களில் ஆறாவதாக
وَلَآ أَدْنَىٰ
இன்னும் இருக்காது/குறைவாக
مِن ذَٰلِكَ
அதை விட
وَلَآ أَكْثَرَ
இன்னும் அதிகமாக இருக்காது
إِلَّا هُوَ
தவிர/அவன்
مَعَهُمْ
அவர்களுடன்
أَيْنَ مَا
அவர்கள் எங்கிருந்தாலும் சரியே
ثُمَّ
பிறகு
يُنَبِّئُهُم
அவர்களுக்கு அறிவிப்பான்
بِمَا عَمِلُوا۟
அவர்கள் செய்தவற்றை
يَوْمَ ٱلْقِيَٰمَةِۚ
மறுமை நாளில்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Alam tara annal laaha ya'lamu maa fis samaawaati wa maa fil ardi maa yakoonu min najwaa salaasatin illaa Huwa raabi'uhum wa laa khamsatin illaa huwa saadisuhum wa laaa adnaa min zaalika wa laaa aksara illaa huwa ma'ahum ayna, maa kaanoo summa yunabbi'uhum bimaa 'amiloo yawmal qiyaamah; innal laaha bikulli shai'in aleem

(நபியே!) வானங்களிலும், பூமியிலுமுள்ளவை அனைத்தையும் நிச்சயமாக அல்லாஹ் அறிகின்றான் என்பதை நீங்கள் கவனிக்க வில்லையா? அவர்களில் மூன்று பேர்கள் (கூடிப் பேசும்) ரகசியத்தில் அவன் நான்காவதாக இல்லாமல் இல்லை. ஐந்து பேர்கள் (கூடிப் பேசும்) இரகசியத்தில் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை. இதைவிட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உள்ளவர்கள் (கூடிப் பேசும்) இரகசியத்திலும், அவன் அவர்களுடன் இல்லாமல் இல்லை. இவ்வாறு அவர்கள் எங்கிருந்த போதிலும் (ரகசியம் பேசினால் அவன் அவர்களுடைய ரகசியங்களை அறிந்து கொள்கின்றான்.) பின்னர், அவர்கள் செய்தவைகளைப் பற்றி அவர்களுக்கு மறுமை நாளில் அறிவித்து (அதற்குரிய கூலியைக் கொடுக்கின்றான்.) நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

Tafseer

أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
إِلَى ٱلَّذِينَ
தடுக்கப்பட்டவர்களை
عَنِ ٱلنَّجْوَىٰ
கூடிப் பேசுவதை விட்டும்
ثُمَّ
பிறகு
يَعُودُونَ
திரும்புகிறார்கள்
لِمَا نُهُوا۟
எதிலிருந்து தடுக்கப்பட்டார்களோ
عَنْهُ
அதிலிருந்து
وَيَتَنَٰجَوْنَ
கூடிப் பேசுகிறார்கள்
بِٱلْإِثْمِ
பாவத்தையும்
وَٱلْعُدْوَٰنِ
வரம்புமீறுவதையும்
وَمَعْصِيَتِ
மாறுசெய்வதையும்
ٱلرَّسُولِ وَإِذَا
தூதருக்கு/அவர்கள் உம்மிடம் வந்தால்
حَيَّوْكَ
உமக்கு முகமன் கூறுகிறார்கள்
بِمَا لَمْ
உமக்கு எதை முகமன் கூறவில்லையோ
بِهِ
அதை
ٱللَّهُ
அல்லாஹ்
وَيَقُولُونَ
கூறுகிறார்கள்
فِىٓ أَنفُسِهِمْ
தங்கள் மனதிற்குள்
لَوْلَا يُعَذِّبُنَا
நம்மை வேதனை செய்யாமல் இருக்க வேண்டுமே
ٱللَّهُ بِمَا
அல்லாஹ்/நாம் சொல்வதைக் கொண்டு
حَسْبُهُمْ
அவர்களுக்கு போதும்
جَهَنَّمُ
நரகமே
يَصْلَوْنَهَاۖ
அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள்
فَبِئْسَ ٱلْمَصِيرُ
அது மீளுமிடங்களில் மிகக் கெட்டதாகும்

Alam tara ilal lazeena nuhoo 'anin najwaa summa ya'oodoona limaa nuhoo 'anhu wa yatanaajawna bil ismi wal'udwaani wa ma'siyatir rasooli wa izaa jaaa'ooka haiyawka bimaa lam yuhai yika bihil laahu wa yaqooloona fee anfusihim law laa yu'azzibunal laahu bimaa naqool; hasbuhum jahannnamu yaslawnahaa fabi'sal maseer

(நபியே!) ரகசியமே கூடாதென்று தடுக்கப்பட்டிருந்தும், தடுக்கப்பட்டதை நோக்கியே செல்லும் அவர்களை நீங்கள் கவனித் தீர்களா? பாவத்திற்கும், வரம்பு மீறுவதற்கும், (நம்முடைய) தூதருக்கு மாறு செய்வதற்குமே, அவர்கள் ரகசியமாகச் சதி ஆலோசனை செய்கின்றனர். பின்னர் அவர்கள் உங்களிடம் வந்தாலோ, அல்லாஹ் உங்களுக்குக் கூறாத வார்த்தையைக் (கொண்டு, அதாவது: "அஸ்ஸலாமு அலைக்க" உங்கள்மீது சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக! என்று கூறுவதற்குப் பதிலாக, "அஸ்ஸாமு அலைக்க" உங்களுக்கு மரணம் உண்டாவதாக! என்று) கூறிவிட்டு, அவர்கள் தங்களுக்குள் (இவர் உண்மையான தூதராக இருந்தால் "பரிகாசமாக) நாம் கூறியதைப் பற்றி, அல்லாஹ் நம்மை வேதனை செய்யமாட்டானா?" என்றும் கூறுகின்றனர். நரகமே அவர்களுக்குப் போதுமானதாகும். அதனை அவர்கள் அடைந்தே தீருவார்கள். அது செல்லுமிடங்களில் மகா கெட்டது.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
إِذَا تَنَٰجَيْتُمْ
நீங்கள் கூடிப்பேசினால்
فَلَا تَتَنَٰجَوْا۟
கூடிப்பேசாதீர்கள்
بِٱلْإِثْمِ
பாவமானதையும்
وَٱلْعُدْوَٰنِ
வரம்புமீறும் காரியத்தையும்
وَمَعْصِيَتِ
மாறுசெய்வதையும்
ٱلرَّسُولِ
தூதருக்கு
وَتَنَٰجَوْا۟
கூடிப்பேசுங்கள்!
بِٱلْبِرِّ
நன்மையான விஷயத்தையும்
وَٱلتَّقْوَىٰۖ
இறையச்சம் மிகுந்த விஷயத்தையும்
وَٱتَّقُوا۟
அஞ்சிக் கொள்ளுங்கள்!
ٱللَّهَ
அல்லாஹ்வை
ٱلَّذِىٓ إِلَيْهِ
எவன்/அவனிடம்தான்
تُحْشَرُونَ
நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்

Yaaa ayyuhal lazeena aamanoo izaa tanaajaytum falaa tatanaajaw bil ismi wal 'udwaani wa ma'siyatir rasooli wa tanaajaw bil birri wattaqwaa wattaqul laahal lazeee ilaihi tuhsharoon

நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் நீங்கள் ரகசியம் பேசினால் பாவம் செய்வதற்காகவும், வரம்பு மீறுவதற்காகவும், (நம்முடைய) தூதருக்கு மாறு செய்வதற்காகவும், ரகசியம் பேசாதீர்கள். ஆயினும், நன்மை செய்வதற்காகவும் பரிசுத்தத் தன்மைக்காகவும் இரகசியம் பேசலாம். (அனைத்தையும் அறிந்த) அல்லாஹ்வின் சமூகத்திற்கு நீங்கள் கொண்டு போகப்படுவீர்கள். ஆகவே, அவனுக்கு நீங்கள் பயந்து நடந்துகொள்ளுங்கள்.

Tafseer

إِنَّمَا ٱلنَّجْوَىٰ
கூடிப்பேசுவது
مِنَ ٱلشَّيْطَٰنِ
ஷைத்தான் புறத்திலிருந்து தூண்டப்படுகிறது
لِيَحْزُنَ
கவலைப்படுத்து வதற்காக
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களை
وَلَيْسَ
அது இல்லை
بِضَآرِّهِمْ
அவர்களுக்கு தீங்கு செய்வதாக
شَيْـًٔا
அறவே
إِلَّا بِإِذْنِ
அனுமதி இல்லாமல்
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
وَعَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீதே
فَلْيَتَوَكَّلِ
நம்பிக்கை வைக்கட்டும்
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்

Innaman najwaa minash shaitaani liyahzunal lazeena aamanoo wa laisa bidaaarrihim shai'an illaa bi-iznil laah; wa 'alal laahi falyatawakkalil mu'minoon

(அவர்களை) ஷைத்தான் இரகசியமாகப் பேசும்படி செய்வதெல்லாம், நம்பிக்கை கொண்டவர்களுக்குக் கவலையை உண்டுபண்ணுவதற்காகவே. அல்லாஹ்வுடைய நாட்டமின்றி, அவர்களுக்கு அவர்களால் யாதொன்றும் தீங்கிழைத்துவிட முடியாது. ஆகவே, நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வையே நம்பியிருக்கவும்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் முஜாதலா
القرآن الكريم:المجادلة
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Mujadalah
ஸூரா:58
வசனம்:22
Total Words:473
Total Characters:1792
Number of Rukūʿs:3
Classification
(Revelation Location):
மதனீ
Revelation Order:105
Starting from verse:5104