Skip to main content

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
إِذَا قِيلَ
கூறப்பட்டால்
لَكُمْ
உங்களுக்கு
تَفَسَّحُوا۟
இடம் கொடுங்கள்
فِى ٱلْمَجَٰلِسِ
சபைகளில்
فَٱفْسَحُوا۟
இடம் கொடுங்கள்!
يَفْسَحِ
விசாலப்படுத்துவான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَكُمْۖ
உங்களுக்கு
وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
ٱنشُزُوا۟
நீங்கள் புறப்படுங்கள்
فَٱنشُزُوا۟
நீங்கள் புறப்படுங்கள்
يَرْفَعِ
உயர்த்துவான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களை
مِنكُمْ
உங்களில்
وَٱلَّذِينَ أُوتُوا۟
இன்னும் கொடுக்கப்பட்டவர்களை
ٱلْعِلْمَ
கல்வி
دَرَجَٰتٍۚ
பல அந்தஸ்துகள்
وَٱللَّهُ
அல்லாஹ்
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை
خَبِيرٌ
ஆழ்ந்தறிபவன்

Yaaa ayyuhal lazeena aamanoo izaa qeela lakum tafassahoo fil majaalisi fafsahoo yafsahil laahu lakum wa izaa qeelan shuzoo fanshuzoo yarfa'il laahul lazeena aamanoo minkum wallazeena ootul 'ilma darajaat; wallaahu bimaa ta'maloona khabeer

நம்பிக்கையாளர்களே! (நீங்கள் யாதொரு சபையிலிருக்கும் பொழுது, எவரேனும்) உங்களை நோக்கிச் "சபையில் அகன்று இடம் கொடுங்கள்" என்று கூறினால், (அவ்வாறே) நீங்கள் அகன்று கொடுங்கள். இடத்தை அல்லாஹ் உங்களுக்கு விசாலமாக்கி கொடுப்பான். தவிர, (சபையில் யாதொரு காரணத்திற்காக உங்களை நோக்கி) "எழுந்து (சென்று) விடுங்கள்" என்று கூறப்பட்டால், அவ்வாறே நீங்கள் எழுந்து (சென்று) விடுங்கள். (இவ்வாறு நடந்து கொள்ளும்) உங்களிலுள்ள நம்பிக்கையாளர்களுக்கும், கல்வி ஞானம் உடையவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கறிவான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
إِذَا نَٰجَيْتُمُ
நீங்கள் கூடிப்பேசினால்
ٱلرَّسُولَ
தூதரிடம்
فَقَدِّمُوا۟
முற்படுத்துங்கள்
بَيْنَ يَدَىْ
நீங்கள் கூடிப்பேசுவதற்கு முன்னர்
صَدَقَةًۚ
தர்மத்தை
ذَٰلِكَ
அது
خَيْرٌ لَّكُمْ
உங்களுக்கு மிகச் சிறந்தது(ம்)
وَأَطْهَرُۚ
மிக பரிசுத்தமானதும்
فَإِن لَّمْ
நீங்கள் வசதி பெறவில்லை என்றால்
فَإِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
மகா கருணையாளன்

Yaaa ayyuhal lazeena aamanooo izaa naajitumur Rasoola faqaddimoo baina yadai najwaakum sadaqah; zaalika khairul lakum wa athar; fa il lam tajidoo fa innal laaha ghafoorur Raheem

நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்முடைய தூதருடன் இரகசியம் பேச விரும்பினால், உங்கள் இரகசியத்திற்கு முன்னதாகவே (ஏழைகளுக்கு) ஏதும் தானம் செய்துவிடுங்கள். இது உங்களுக்கு நன்மையும் பரிசுத்தத் தன்மையும் ஆகும். (தானம் கொடுப்பதற்கு எதனையும்) நீங்கள் அடைந்திராவிட்டால், (அதைப்பற்றி உங்கள் மீது குற்றமில்லை.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

ءَأَشْفَقْتُمْ
நீங்கள் பயப்படுகிறீர்களா?
أَن تُقَدِّمُوا۟
நீங்கள் முற்படுத்துவதற்கு
بَيْنَ يَدَىْ
முன்னர்
نَجْوَىٰكُمْ
உங்கள் உரையாடலுக்கு
صَدَقَٰتٍۚ
தர்மங்களை
فَإِذْ لَمْ
நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால்
وَتَابَ
மன்னித்துவிட்டதால்
ٱللَّهُ
அல்லாஹ்வும்
عَلَيْكُمْ
உங்களை
فَأَقِيمُوا۟
நிலை நிறுத்துங்கள்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَءَاتُوا۟
இன்னும் கொடுங்கள்!
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
وَأَطِيعُوا۟
இன்னும் கீழ்ப்படியுங்கள்!
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு(ம்)
وَرَسُولَهُۥۚ
அவனது தூதருக்கும்
وَٱللَّهُ
அல்லாஹ்
خَبِيرٌۢ
ஆழ்ந்தறிபவன்
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை

'A-ashfaqtum an tuqaddimoo baina yadai najwaakum sadaqaat; fa-iz lam taf'aloo wa taabal laahu 'alaikum fa aqeemus Salaata wa aatuz Zakaata wa atee'ul laaha wa rasoolah; wallaahu khabeerum bimaa ta'maloon

நீங்கள் உங்கள் இரகசியத்திற்கு முன்னர், நீங்கள் தானம் கொடுப்பதைப் பற்றிப் பயந்துவிட்டீர்களா? (மெய்யாகவே) உங்களால் (தானம்) செய்ய முடியாவிடில், அல்லாஹ் உங்களை மன்னித்து விடுவான். எனினும், தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (உண்மையாகவே) வழிப்பட்டு நடந்துகொள்ளுங்கள். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

Tafseer

أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
إِلَى ٱلَّذِينَ
நண்பர்களாக எடுத்துக் கொண்டவர்களை
قَوْمًا غَضِبَ
மக்களை/ கோபப்பட்டானோ
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَيْهِم
அவர்கள் மீது
مَّا هُم
அவர்கள் உங்களை சேர்ந்தவர்கள் இல்லை
وَلَا مِنْهُمْ
அவர்களை சேர்ந்தவர்களும் இல்லை
وَيَحْلِفُونَ
இன்னும் சத்தியம் செய்கின்றனர்
عَلَى ٱلْكَذِبِ
பொய்யான விஷயத்தின் மீது
وَهُمْ يَعْلَمُونَ
அவர்கள் அறிந்து கொண்டே

Alam tara ilal lazeena tawallaw qawman ghadibal laahu 'alaihim maa hum minkum wa laa minhum wa yahlifoona 'alal kazibi wa hum ya'lamoon

(நபியே!) அல்லாஹ் எவர்கள் மீது கோபமானானோ, அந்த மக்களுடன் உறவாடுகிறவர்களை நீங்கள் பார்த்தீர்களா? இவர்கள் உங்களிலும் உள்ளவர்களல்ல; அவர்களிலும் உள்ளவர்களல்ல. இவர்கள் நன்கறிந்திருந்தும் (உங்களுடன் இருப்பதாக) வேண்டு மென்றே பொய்ச் சத்தியம் செய்கின்றனர்.

Tafseer

أَعَدَّ
ஏற்படுத்தி இருக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَهُمْ
அவர்களுக்கு
عَذَابًا
வேதனையை
شَدِيدًاۖ
கடுமையான(து)
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
سَآءَ
மிகக் கெட்டவையாகும்
مَا كَانُوا۟
அவர்கள் செய்துகொண்டிருந்தவை

A'addal laahu lahum 'azaaban shadeedan innahum saaa'a maa kaanoo ya'maloon

இவர்களுக்காக அல்லாஹ், கடினமான வேதனையை தயார்படுத்தி வைத்திருக்கின்றான். நிச்சயமாக இவர்கள் செய்யும் காரியம் மகா கெட்டது.

Tafseer

ٱتَّخَذُوٓا۟
எடுத்துக் கொண்டனர்
أَيْمَٰنَهُمْ
தங்கள் சத்தியங்களை
جُنَّةً
ஒரு கேடயமாக
فَصَدُّوا۟
தடுக்கின்றனர்
عَن سَبِيلِ
மார்க்கத்தை விட்டும்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
فَلَهُمْ
ஆகவே, அவர்களுக்கு உண்டு
عَذَابٌ
தண்டனை
مُّهِينٌ
இழிவுதரக்கூடிய(து)

Ittakhazooo aymaanahum junnatan fasaddoo 'an sabeelil laahi falahum 'azaabum muheen

இவர்கள் தங்களுடைய (பொய்ச்) சத்தியங்களைக் கேடயமாக வைத்துக்கொண்டு (மக்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து தடுத்துவிட்டனர். ஆகவே, இவர்களுக்கு மிக்க இழிவு தரும் வேதனையுண்டு.

Tafseer

لَّن تُغْنِىَ
அறவே தடுக்க மாட்டார்கள்
عَنْهُمْ
அவர்களை விட்டும்
أَمْوَٰلُهُمْ
அவர்களின் செல்வங்களோ
وَلَآ أَوْلَٰدُهُم
அவர்களின் பிள்ளைகளோ
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
شَيْـًٔاۚ
எதையும்
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
أَصْحَٰبُ ٱلنَّارِۖ
நரகவாசிகள்
هُمْ فِيهَا
அவர்கள்/அதில்
خَٰلِدُونَ
நிரந்தரமாக

Lan tughniya 'anhum amwaaluhum wa laaa awladuhum minal laahi shai'aa; ulaaa 'ika As haabun Naari hum feehaa khaalidoon

இவர்களுடைய பொருள்களும், இவர்களுடைய சந்ததிகளும், அல்லாஹ்வி(ன் வேதனையி)லிருந்து யாதொன்றையும் இவர்களை விட்டும் தடுத்துவிடாது. இவர்கள் நரகவாசிகள்தாம்; அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.

Tafseer

يَوْمَ
நாளில்
يَبْعَثُهُمُ
எழுப்புவான்/ அவர்களை
ٱللَّهُ
அல்லாஹ்
جَمِيعًا
அனைவரையும்
فَيَحْلِفُونَ
அவர்கள் சத்தியம் செய்வார்கள்
لَهُۥ كَمَا
அவனுக்கு முன்/போன்று
يَحْلِفُونَ
அவர்கள் சத்தியம் செய்வது
لَكُمْۖ
உங்களுக்கு முன்
وَيَحْسَبُونَ
அவர்கள் எண்ணுவார்கள்
أَنَّهُمْ
நிச்சயமாக தாங்கள்
عَلَىٰ شَىْءٍۚ
ஒரு செயலின் மீது
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
إِنَّهُمْ هُمُ
நிச்சயமாக அவர்கள்தான்
ٱلْكَٰذِبُونَ
பொய்யர்கள்

Yawma yab'asuhumul laahujamee'an fa yahlifoona lahoo kamaa yahlifoona lakum wa yahsaboona annahum 'alaa shai'; alaaa innahum humul kaaziboon

அல்லாஹ் இவர்கள் அனைவரையும் (உயிர் கொடுத்து) எழுப்பும் நாளிலும் (இன்றைய தினம்) உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்ததைப் போன்று, அல்லாஹ்விடத்திலும் சத்தியம் செய்துவிட்டு, நிச்சயமாகத் தாங்கள் ஏதோ (தப்பித்துக் கொள்ளக்கூடிய ஒரு நல்ல) காரியத்தைச் செய்துவிட்டதாகவும் எண்ணிக்கொள்வார்கள். மெய்யாகவே இவர்கள் பொய்யர் களன்றோ!

Tafseer

ٱسْتَحْوَذَ
ஆதிக்கம் செலுத்துகின்றான்
عَلَيْهِمُ
அவர்கள் மீது
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
فَأَنسَىٰهُمْ
அவர்களுக்கு மறக்கவைத்து விட்டான்
ذِكْرَ
நினைவை
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
حِزْبُ
கட்சியினர்
ٱلشَّيْطَٰنِۚ
ஷைத்தானின்
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
إِنَّ حِزْبَ
நிச்சயமாக கட்சியினர்தான்
ٱلشَّيْطَٰنِ
ஷைத்தானின்
هُمُ
அவர்கள்தான்
ٱلْخَٰسِرُونَ
நஷ்டவாளிகள்

Istahwaza 'alaihimush shaitaanu fa ansaahum zikral laah; ulaaa'ika hizbush shaitaaan; alaaa innaa hizbash shaitaani humul khaasiroon

ஷைத்தான் இவர்களை ஜெயித்து, அல்லாஹ்வைப் பற்றிய எண்ணத்தையே இவர்களுக்கு மறக்கடித்து விட்டான். இவர்கள்தாம் ஷைத்தானுடைய கூட்டத்தினர். ஷைத்தானுடைய கூட்டத்தினர் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
يُحَآدُّونَ
முரண்படுகிறார்கள்
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு(ம்)
وَرَسُولَهُۥٓ
அவனது தூதருக்கும்
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
فِى ٱلْأَذَلِّينَ
மிக இழிவானவர்களில்

Innal lazeena yuhaaaddoonal laaha wa Rasoolahooo ulaaa'ika fil azalleen

எவர்கள், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றார்களோ, அவர்கள் இழிவுக்குள்ளாவார்கள்.

Tafseer