Skip to main content

وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
يَصِلُونَ
சேர்ப்பார்கள்
مَآ أَمَرَ
எதை/ஏவினான்
ٱللَّهُ
அல்லாஹ்
بِهِۦٓ أَن
அதை/சேர்க்கப்பட வேண்டும்
وَيَخْشَوْنَ
இன்னும் அச்சம் கொள்வார்கள்
رَبَّهُمْ
தங்கள் இறைவனை
وَيَخَافُونَ
இன்னும் பயப்படுவார்கள்
سُوٓءَ
கடினமான
ٱلْحِسَابِ
விசாரணையை

Wallazeena yasiloona maaa amaral laahu bihee an yoosala wa yakhshawna Rabbahum wa yakhaafoona sooo'al hisaab

மேலும், அவர்கள் அல்லாஹ் சேர்த்து வைக்கும்படி கட்டளையிட்டதைச் சேர்த்தும் வைப்பார்கள்; தங்கள் இறைவனுக்கு பயந்தும் நடப்பார்கள்; (மறுமையில்) கேட்கப்படும் கொடிய கேள்விகளைப் பற்றி (எந்நேரமும்) பயந்துகொண்டும் இருப்பார்கள்.

Tafseer

وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
صَبَرُوا۟
பொறுத்தனர்
ٱبْتِغَآءَ
நாடி
وَجْهِ
முகத்தை
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
وَأَقَامُوا۟
இன்னும் நிலைநிறுத்தினர்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَأَنفَقُوا۟
இன்னும் தர்மம் புரிந்தனர்
مِمَّا رَزَقْنَٰهُمْ
நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து
سِرًّا
இரகசியமாக
وَعَلَانِيَةً
இன்னும் வெளிப்படையாக
وَيَدْرَءُونَ
இன்னும் தடுப்பார்கள்
بِٱلْحَسَنَةِ
நன்மையைக் கொண்டு
ٱلسَّيِّئَةَ
தீமையை
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
لَهُمْ
இவர்களுக்குத்தான்
عُقْبَى
முடிவு
ٱلدَّارِ
மறுமை

Wallazeena sabarub tighaaa'a Wajhi Rabbihim wa aqaamus Salaata wa anfaqoo mimmaa razaqnaahum sirranw wa 'alaaniyatanw wa yadra'oona bilhasanatis saiyi'ata ulaaa'ika lahum 'uqbad daar

இன்னும், அவர்கள் தங்கள் இறைவனின் திருப்பொருத்தத்தைக் கோரி (எத்தகைய கஷ்டத்தையும்) பொறுமையுடன் சகித்துக் கொள்வார்கள்; தொழுகையையும் கடைபிடிப்பார்கள்; நாம் அவர்களுக்கு அளித்தவற்றை ரகசியமாகவும் வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவு செய்வார்கள்; நன்மையைக் (கைக்) கொண்டே தீமையைத் தவிர்த்து விடுவார்கள். இத்தகையவர்களுக்கு (மறுமையில்) நல்ல முடிவு உண்டு. (அதாவது நிலையான சுவனபதி கூலியாகக் கிடைக்கும்.)

Tafseer

جَنَّٰتُ
சொர்க்கங்கள்
عَدْنٍ
அத்ன்
يَدْخُلُونَهَا
நுழைவார்கள்/அதில்
وَمَن
இன்னும் இன்னும் எவர்
صَلَحَ
நல்லவரானார்
مِنْ ءَابَآئِهِمْ
இவர்களுடைய மூதாதைகளில்
وَأَزْوَٰجِهِمْ
இன்னும் இவர்களுடைய மனைவிகளில்
وَذُرِّيَّٰتِهِمْۖ
இன்னும் இவர்களுடைய சந்ததிகளில்
وَٱلْمَلَٰٓئِكَةُ
இன்னும் வானவர்கள்
يَدْخُلُونَ
நுழைவார்கள்
عَلَيْهِم مِّن
இவர்களிடம்/இருந்து
كُلِّ بَابٍ
ஒவ்வொரு/வாசல்

jannaatu 'adiny yadkhu loonahaa wa man salaha min aabaaa'ihim wa man salaha min aabaaa'ihim wa azwaajihim wa zurriyyaatihim walmalaaa'i katu yadkhuloona 'alaihim min kulli baab

நிலையான சுவனபதிகளில் இவர்களும், நன்னடத்தையுடைய இவர்களுடைய தந்தைகளும், இவர்களுடைய மனைவிகளும், இவர்களின் சந்ததிகளும் நுழைந்து விடுவார்கள். ஒவ்வொரு வாசலிலிருந்தும் மலக்குகள் இவர்களிடம் வந்து,

Tafseer

سَلَٰمٌ
ஈடேற்றம் உண்டாகுக
عَلَيْكُم
உங்களுக்கு
بِمَا صَبَرْتُمْۚ
நீங்கள் பொறுமையாக இருந்த காரணத்தால்
فَنِعْمَ
மிக்க நல்லதாயிற்று
عُقْبَى
இறுதி
ٱلدَّارِ
வீடு

Salaamun 'alaikum bimaa sabartum; fani'ma 'uqbad daar

(இவர்களை நோக்கி) "நீங்கள் (உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களைப்) பொறுமையுடன் சகித்துக் கொண்டதன் காரணமாக உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! (உங்களுடைய இந்த) இறுதி வீடு மிக்க நல்லதாயிற்று" (என்று கூறுவார்கள்.)

Tafseer

وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
يَنقُضُونَ
முறிக்கிறார்கள்
عَهْدَ
வாக்குறுதியை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
مِنۢ بَعْدِ
பின்னர்
مِيثَٰقِهِۦ
அது உறுதியான
وَيَقْطَعُونَ
இன்னும் துண்டிக்கிறார்கள்
مَآ
எதை
أَمَرَ
ஏவினான்
ٱللَّهُ
அல்லாஹ்
بِهِۦٓ
அதை
أَن يُوصَلَ
சேர்க்கப்படும்
وَيُفْسِدُونَ
இன்னும் விஷமம் செய்வார்கள்
فِى ٱلْأَرْضِۙ
பூமியில்
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
لَهُمُ ٱللَّعْنَةُ
இவர்களுக்கு/சாபம்
وَلَهُمْ
இன்னும் இவர்களுக்கு
سُوٓءُ
மிகக் கெட்டது
ٱلدَّارِ
வீடு

Wallazeena yanqudoona 'Ahdal laahi mim ba'di meesaaqihee wa yaqta'oona maaa amaral laahu biheee ai yoosala wa yufsidoona fil ardi ulaaa'ika lahumul la'natu wa lahum sooo'ud daar

எவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை அதனை உறுதிப்படுத்திய பின்னரும் முறித்து விடுகிறார்களோ அவர் களுக்கும், எவர்கள் அல்லாஹ் சேர்த்து வைக்கும்படி ஏவியதைப் பிரித்து விடுகின்றார்களோ அவர்களுக்கும், எவர்கள் பூமியில் விஷமம் செய்துகொண்டு அலைகிறார்களோ அவர்களுக்கும் (இறைவனுடைய) சாபம்தான் கிடைக்கும். அன்றி, அவர்களுக்கு மிகக் கெட்ட வீடும் (தயார்படுத்தப்பட்டு) இருக்கிறது.

Tafseer

ٱللَّهُ
அல்லாஹ்
يَبْسُطُ
விரிவுபடுத்துகிறான்
ٱلرِّزْقَ
வாழ்க்கை வசதியை
لِمَن
எவருக்கு
يَشَآءُ
நாடுகின்றான்
وَيَقْدِرُۚ
இன்னும் சுருக்குகிறான்
وَفَرِحُوا۟
இன்னும் மகிழ்கின்றனர்
بِٱلْحَيَوٰةِ
வாழ்வைக் கொண்டு
ٱلدُّنْيَا وَمَا
உலகம்/இல்லை
ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا
உலக வாழ்க்கை
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
إِلَّا مَتَٰعٌ
தவிர/ஒரு சுகம்

Allaahu yabsutur rizqa limai yashaaa'u wa yaqdir; wa farihoo bilhayaatid dunyaa wa mal hayaatud dunya fil Aakhirati illaa mataa'

அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு ஏராளமாகக் கொடுக்கிறான்; (தான் விரும்பியவர்களுக்கு) குறைத்தும் கொடுக்கிறான். எனினும், (நிராகரிப்பவர்கள்) இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே சந்தோஷமடைகின்றனர். இவ்வுலக வாழ்க்கையோ மறுமையுடன் (ஒப்பிட்டுப் பார்த்தால்) மிக்க அற்பமேயன்றி வேறில்லை.

Tafseer

وَيَقُولُ
கூறுகிறார்(கள்)
ٱلَّذِينَ كَفَرُوا۟
எவர்கள்/நிராகரித்தனர்
لَوْلَآ أُنزِلَ
இறக்கப்பட வேண்டாமா?
عَلَيْهِ
இவர் மீது
ءَايَةٌ
ஓர் அத்தாட்சி
مِّن رَّبِّهِۦۗ
இவருடைய இறைவனிடமிருந்து
قُلْ
கூறுவீராக
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
يُضِلُّ
வழிகெடுக்கிறான்
مَن يَشَآءُ
தான் நாடுகின்றவர்களை
وَيَهْدِىٓ
இன்னும் நேர்வழி செலுத்துகிறான்
إِلَيْهِ
தன் பக்கம்
مَنْ أَنَابَ
எவர்/திரும்பினார்

Wa yaqoolul lazeena kafaroo law laaa unzila 'alaihi Aayatum mir Rabbih; qul innal laaha yudillu mai yashaa'u wa yahdeee ilaihi man anaab

(நபியே!) இந்நிராகரிப்பவர்கள், (நம் தூதராகிய உங்களைக் குறிப்பிட்டு) "இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பியவாறு) ஏதேனுமோர் அத்தாட்சி அருளப்பட வேண்டாமா?" என்று கூறுகின்றனர். அதற்கு நீங்கள் கூறுங்கள்: நிச்சயமாக அல்லாஹ் (தண்டிக்க) நாடியவர்களைத் தவறான வழியில் விட்டுவிடுகிறான். முற்றிலும் அவனையே நோக்கி நிற்பவர்களைத்தான் நேரான வழியில் செலுத்துகிறான்.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَتَطْمَئِنُّ
இன்னும் நிம்மதியடைகின்றன
قُلُوبُهُم
உள்ளங்கள்/அவர்களுடைய
بِذِكْرِ
நினைவால்
ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
أَلَا
அறிந்துகொள்ளுங்கள்!
بِذِكْرِ
நினைவைக் கொண்டே
ٱللَّهِ
அல்லாஹ்வின்
تَطْمَئِنُّ
நிம்மதியடைகின்றன
ٱلْقُلُوبُ
உள்ளங்கள்

Allazeena aamanoo wa tatma'innu quloobuhum bizikril laah; alaa bizikril laahi tatma'innul quloob

மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தாம்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாகத் நிம்மதி அடையும் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள்.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டு
وَعَمِلُوا۟
செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நற்செயல்களை
طُوبَىٰ
நற்பாக்கியம்
لَهُمْ
அவர்களுக்கு
وَحُسْنُ
அழகிய
مَـَٔابٍ
மீளுமிடம்

Allazeena aamanoo w a'amilus saalihaati toobaa lahum wa husnu ma aab

எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதுடன், நற்காரியங்களையும் செய்து வருகிறார்களோ அவர்களுக்கே நற்பாக்கியமும், நல்ல இருப்பிடமும் உண்டு.

Tafseer

كَذَٰلِكَ
இவ்வாறே
أَرْسَلْنَٰكَ
அனுப்பினோம்/உம்மை
فِىٓ أُمَّةٍ
ஒரு சமுதாயத்திடம்
قَدْ خَلَتْ
சென்றிருக்கின்றன
مِن قَبْلِهَآ
இவர்களுக்கு முன்னரும்
أُمَمٌ
பல சமுதாயங்கள்
لِّتَتْلُوَا۟
நீர் ஓதுவதற்காக
عَلَيْهِمُ
இவர்கள் முன்
ٱلَّذِىٓ أَوْحَيْنَآ
எது/நாம் வஹீ அறிவித்தோம்
إِلَيْكَ
உமக்கு
وَهُمْ
இவர்களோ
يَكْفُرُونَ
நிராகரிக்கின்றனர்
بِٱلرَّحْمَٰنِۚ
ரஹ்மானை
قُلْ
கூறுவீராக
هُوَ
அவன்தான்
رَبِّى
என் இறைவன்
لَآ
அறவே இல்லை
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
إِلَّا
தவிர
هُوَ
அவனை
عَلَيْهِ
அவன் மீது
تَوَكَّلْتُ
நம்பிக்கை வைத்தேன்
وَإِلَيْهِ
இன்னும் அவனிடமே
مَتَابِ
என் பாவ மீட்சி

Kazaalika arsalnaaka feee ummatin qad khalat min qablihaaa umamul litatluwa 'alaihimul lazeee awhainaaa ilaika wa hum yakfuroona bir Rahmaaan; qul Huwa Rabbee laaa ilaaha illaa Huwa Rabbee laaa ilaaha illaa Huwa 'alaihi tawakkaltu wa ilaihi mataab

(நபியே! இதற்கு முன்னர் நாம் தூதர்கள் பலரை அனுப்பிய) இவ்வாறே உங்களையும் நாம் (நம்முடைய தூதராக) ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம். இவர்களுக்கு முன்னரும் (இவர்களில்) பல வகுப்பினர் சென்றிருக்கின்றனர். (நீண்ட காலமாக அவர்களிடம் யாதொரு தூதரும் வரவில்லை.) ஆகவே, நாம் உங்களுக்கு வஹீ மூலம் அறிவிப்பவற்றை இவர்களுக்கு நீங்கள் ஓதிக் காண்பித்து வாருங்கள். எனினும், இவர்களோ (உங்களை நிராகரிப்பது மட்டுமல்ல; தங்கள் மீது பல அருள்கள் புரிந்திருக்கும் அளவற்ற அருளாளனாகிய) ரஹ்மானையுமே நிராகரிக்கின்றனர். நீங்கள் (அவர்களை நோக்கிக்) கூறுங்கள்: "அவன்தான் என்னுடைய இறைவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் ஒருவரு மில்லை. அவனையே நான் நம்புகிறேன்; அவனிடமே நான் மீளுவேன்."

Tafseer