Skip to main content

وَإِذَا بَدَّلْنَآ
நாம் மாற்றினால்
ءَايَةً
ஒரு வசனத்தை
مَّكَانَ
இடத்தில்
ءَايَةٍۙ
மற்றொரு வசனத்தின்
وَٱللَّهُ
அல்லாஹ்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِمَا يُنَزِّلُ
தான் இறக்குவதை
قَالُوٓا۟
கூறுகின்றனர்
إِنَّمَآ أَنتَ
நீரெல்லாம்
مُفْتَرٍۭۚ بَلْ
இட்டுக்கட்டுபவர்/மாறாக
أَكْثَرُهُمْ
அதிகமானவர்(கள்)/ இவர்களில்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Wa izaa baddalnaaa Aayatam makaana Aayatinw wal laahu a'lamu bimaa yunazzilu qaalooo innamaa anta muftar; bal aksaruhum laa ya'lamoon

(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தைக் கொண்டு மாற்றினால் இவர்கள் (உங்களை நோக்கி) "நிச்சயமாக நீங்கள் பொய்யர்" என்று கூறுகின்றனர். எ(ந்ததெந்த நேரத்தில் எந்தெந்தக் கட்டளைகளை எந்தெந்த வசனத்)தை அருள வேண்டுமென்பதை அல்லாஹ் நன்கறிவான்; இவர்களில் பெரும்பாலானவர்கள் (இந்த உண்மையை) அறியமாட்டார்கள்.

Tafseer

قُلْ
கூறுவீராக
نَزَّلَهُۥ
இறக்கினார்/இதை
رُوحُ ٱلْقُدُسِ
ரூஹூல் குதுஸ்
مِن
இருந்து
رَّبِّكَ
உம் இறைவன்
بِٱلْحَقِّ
உண்மையைக் கொண்டு
لِيُثَبِّتَ
உறுதிப்படுத்துவதற்காக
ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَهُدًى
இன்னும் நேர்வழியாக
وَبُشْرَىٰ
இன்னும் நற்செய்தியாக
لِلْمُسْلِمِينَ
முஸ்லிம்களுக்கு

Qul nazzalahoo Roohul Qudusi mir Rabbika bilhaqqi liyusabbital lazeena aamanoo wa hudanw wa bushraa lilmuslimeen

மெய்யாகவே இதை உங்கள் இறைவனிடமிருந்து "ரூஹுல் குத்ஸ்" (என்னும் ஜிப்ரீல்) தான் இறக்கி வைத்தார் என்று நீங்கள் கூறுங்கள். (இந்தக் குர்ஆன் இறைவனுக்கு) நம்பிக்கைக் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், முற்றிலும் கட்டுப் பட்டவர்களுக்கு நேரான வழியாகவும் நற்செய்தியாகவும் இருக்கிறது.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
نَعْلَمُ
அறிவோம்
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
يَقُولُونَ
கூறுவர்
إِنَّمَا يُعَلِّمُهُۥ
கற்றுக் கொடுப்பதெல்லாம்/அவருக்கு
بَشَرٌۗ
மனிதர்தான்
لِّسَانُ
மொழி
ٱلَّذِى
எவருடைய
يُلْحِدُونَ
சேர்க்கிறார்கள்
إِلَيْهِ
அவர் பக்கம்
أَعْجَمِىٌّ
அரபியல்லாதவர்
وَهَٰذَا
இதுவோ
لِسَانٌ
மொழி
عَرَبِىٌّ
அரபி
مُّبِينٌ
தெளிவானது

Wa laqad na'lamu annahum yaqooloona innamaa yu'allimuhoo bashar; lisaanul lazee yulhidoona ilaihi a'ja miyyunw wa haaza lisaanun 'Arabiyyum mubeen

(நபியே! "இவ்வேத வசனங்களை ரோமிலிருந்து வந்திருக்கும்) ஒரு (கிறிஸ்தவ) மனிதன்தான் நிச்சயமாக உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறான்; (இறைவன் கற்றுக்கொடுக்க வில்லை)" என்று அவர்கள் கூறுவதை நிச்சயமாக நாம் அறிவோம். எவன் (உங்களுக்குக்) கற்றுக் கொடுப்பதாக அவர்கள் கூறுகிறார்களோ அ(ந்தக் கிறிஸ்த)வன் (அரபி மொழியை ஒரு சிறிதும் அறியாத) அஜமி. இவ்வேதமோ மிக (நாகரிகமான) தெளிவான அரபி மொழியில் இருக்கிறது. (ஆகவே, அவர்கள் கூறுவது சரியன்று.)

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
بِـَٔايَٰتِ
வசனங்களை
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
لَا يَهْدِيهِمُ
நேர்வழி செலுத்த மாட்டான்/அவர்களை
ٱللَّهُ
அல்லாஹ்
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
عَذَابٌ
வேதனை
أَلِيمٌ
துன்புறுத்தக் கூடியது

Innal lazeena laa yu'minoona bi Aayaatil laahi laa yahdehimul laahu wa lahum 'azaabun aleem

நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வினுடைய வசனங்களை (மனமுரண்டாக) நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்தமாட்டான். அன்றி, அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனைதான் உண்டு.

Tafseer

إِنَّمَا يَفْتَرِى
இட்டுக்கட்டுவ தெல்லாம்
ٱلْكَذِبَ
பொய்யை
ٱلَّذِينَ
எவர்கள்
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
بِـَٔايَٰتِ
வசனங்களை
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
இவர்கள்தான்
ٱلْكَٰذِبُونَ
பொய்யர்கள்

Innamaa yaftaril kazibal lazeena laa yu'minoona bi Aayaatil laahi wa ulaaa'ika humul kaaziboon

(இது) பொய் என்று கற்பனை செய்பவர்களெல்லாம் அல்லாஹ்வுடைய வசனங்களை நம்பாதவர்கள்தாம். (உண்மையில்) இவர்கள்தாம் பொய்யர்கள். (நபியே! நீங்கள் பொய்யரல்ல.)

Tafseer

مَن
எவர்
كَفَرَ
நிராகரித்தார்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
مِنۢ بَعْدِ
பின்னர்
إِيمَٰنِهِۦٓ
அவர் நம்பிக்கை கொண்ட
إِلَّا مَنْ
தவிர/எவர்
أُكْرِهَ
தான் நிர்பந்திக்கப்பட்டார்
وَقَلْبُهُۥ
தனது உள்ளமோ
مُطْمَئِنٌّۢ
திருப்தியடைந்தது
بِٱلْإِيمَٰنِ
நம்பிக்கையில்
وَلَٰكِن
எனினும்
مَّن
எவர்
شَرَحَ
திறந்தான், விவரித்தான், விரும்பினான்
بِٱلْكُفْرِ
நிராகரிப்பை
صَدْرًا
நெஞ்சத்தால்
فَعَلَيْهِمْ
அவர்கள் மீது
غَضَبٌ
கோபம்
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
عَذَابٌ
வேதனை
عَظِيمٌ
கடுமையானது

man kafara billaahi mim ba'di eemaanihee illaa man ukriha wa qalbuhoo mutmma'innum bil eemaani wa laakim man sharaha bilkufri sadran fa'alaihim ghadabum minal laahi wa lahum 'azaabun 'azeem

(ஆகவே,) எவரேனும் நம்பிக்கை கொண்டதன் பின்னர், அவன் அல்லாஹ்வை (நிராகரித்தால் அவனைப் பற்றி கவனிக்கப்படும்.) அவனுடைய உள்ளம் நம்பிக்கையை கொண்டு முற்றிலும் திருப்தியடைந்தே இருக்க, எவருடைய நிர்ப்பந்தத்தின் மீதும் அவன் (இவ்வாறு) நிராகரித்தால் (அவன்மீது யாதொரு குற்றமுமில்லை.) எனினும், அவனுடைய உள்ளத்தில் நிராகரிப்பே நிறைந்திருந்(து இவ்வாறு செய்)தால் அவன் மீது அல்லாஹ்வுடைய கோபம்தான் ஏற்படும். அவனுக்கு கடுமையான வேதனையுமுண்டு.

Tafseer

ذَٰلِكَ
அது
بِأَنَّهُمُ
காரணம்/நிச்சயமாகஅவர்கள்
ٱسْتَحَبُّوا۟
விரும்பினார்கள்
ٱلْحَيَوٰةَ
வாழ்வை
ٱلدُّنْيَا
உலகம்
عَلَى ٱلْءَاخِرَةِ
மறுமையை விட
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
ٱلْقَوْمَ
மக்களை
ٱلْكَٰفِرِينَ
நிராகரிக்கின்றவர்கள்

Zaalika bi annahumus tahabbul hayaatad dunyaa 'alal Aakhirati wa annal laaha laa yahdil qawmal kaafireen

ஏனென்றால், நிச்சயமாக இவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையின் மீதுதான் நேசம் கொண்டார்கள். நிச்சயமாக, நிராகரிக்கும் இத்தகைய மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்தமாட்டான்.

Tafseer

أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
طَبَعَ
முத்திரையிட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَىٰ قُلُوبِهِمْ
அவர்களின் உள்ளங்கள் மீது
وَسَمْعِهِمْ
இன்னும் செவிகள்/ அவர்களின்
وَأَبْصَٰرِهِمْۖ
இன்னும் பார்வைகள் அவர்களின்
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلْغَٰفِلُونَ
உணராதவர்கள், கவனமற்றவர்கள்

Ulaaa'ikal lazeena taba'al laahu 'alaa quloobihim wa sam'ihim wa absaarihim wa ulaaa'ika humul ghaafiloon

இத்தகையவர்களின் இதயங்களின் மீதும், காதுகள் மீதும், கண்கள் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான். இவர்கள்தாம் (தங்கள் தீய முடிவை) உணர்ந்து கொள்ளாதவர்கள்.

Tafseer

لَا جَرَمَ
சந்தேகமின்றி
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
هُمُ ٱلْخَٰسِرُونَ
நஷ்டவாளிகள்தான்

Laa jarama annnahum fil Aakhirati humul khassiroon

மறுமையில் முற்றிலும் நஷ்டமடைபவர்கள் இவர்கள்தாம் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.

Tafseer

ثُمَّ
பிறகு
إِنَّ
நிச்சயமாக
رَبَّكَ
உம் இறைவன்
لِلَّذِينَ
எவர்களுக்கு
هَاجَرُوا۟
நாடு துறந்தார்கள்
مِنۢ بَعْدِ
அவர்கள் துன்புறுத்தப்பட்ட பின்பு
ثُمَّ
பிறகு
جَٰهَدُوا۟
போர் புரிந்தனர்
وَصَبَرُوٓا۟
இன்னும் சகித்தனர்
إِنَّ
நிச்சயமாக
رَبَّكَ
உம் இறைவன்
مِنۢ
பின்பு
بَعْدِهَا
பின்பு இவற்றுக்கு
لَغَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
மிகக் கருணையாளன்

Summa inna Rabbaka lillazeena haajaroo mim ba'dimaa futinoo summma jaahadoo wa sabaroo inna Rabbaka mim ba'dihaa la Ghafoorur Raheem

(நபியே!) எவர்கள் (எதிரிகளால்) துன்புறுத்தப்பட்டு, பின்னர் (தங்கள் இல்லத்திலிருந்து) வெளிப்பட்டு, போரும் புரிந்து (பல கஷ்டங்களையும்) சகித்துக்கொண்டு உறுதியாக இருந்தார்களோ அவர்களுக்(கு அருள் புரிவதற்)காகவே நிச்சயமாக உங்களுடைய இறைவன் இருக்கிறான். நிச்சயமாக உங்களுடைய இறைவன் இதற்குப் பின்னரும் (அவர்களை) மன்னிப்பவனும் (அவர்கள் மீது) கிருபையுடையவனுமாக இருக்கின்றான்.

Tafseer