Skip to main content

يَوْمَ
நாளில்
تَأْتِى
வரும்
كُلُّ
ஒவ்வொரு
نَفْسٍ
ஆன்மா
تُجَٰدِلُ
தர்க்கித்ததாக
عَن نَّفْسِهَا
தன்னைப் பற்றி
وَتُوَفَّىٰ
இன்னும் முழு கூலி கொடுக்கப்படும்
كُلُّ نَفْسٍ
ஒவ்வொரு/ஆன்மா
مَّا عَمِلَتْ
எதற்கு/செய்தது
وَهُمْ لَا
இன்னும் அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்

Yawma taatee kullu nafsin tujaadilu 'an nafsihaa wa tuwaffaa kullu nafsim maa 'amilat wa hum laa yuzlamoon

ஒவ்வொரு ஆத்மாவும் (எவரையும் கவனியாது) தன்னைப் பற்றி (மட்டும்) பேசுவதற்காக வரும் (நாளை நபியே! நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். அந்)நாளில் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அதன் செயலுக்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். (அதனைக் கூட்டியோ குறைத்தோ எவ்வகையிலும்) அவர்கள் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.

Tafseer

وَضَرَبَ
விவரிக்கிறான், கூறுகிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
مَثَلًا
உதாரணமாக
قَرْيَةً
ஓர் ஊரை
كَانَتْ
இருந்தது
ءَامِنَةً
அச்சமற்றதாக
مُّطْمَئِنَّةً
நிம்மதி பெற்றதாக
يَأْتِيهَا
வந்தது/அதற்கு
رِزْقُهَا
வாழ்வாதாரம்
رَغَدًا
தாராளமாக
مِّن كُلِّ
இருந்து/எல்லாம்
مَكَانٍ
இடம்
فَكَفَرَتْ
ஆகஅதுநிராகரித்தது
بِأَنْعُمِ
அருட்கொடைகளை
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
فَأَذَٰقَهَا
சுவைக்கச் செய்தான்/அதற்கு
ٱللَّهُ
அல்லாஹ்
لِبَاسَ ٱلْجُوعِ
ஆடையை/பசியின்
وَٱلْخَوْفِ
இன்னும் பயம்
بِمَا كَانُوا۟
அவர்கள் இருந்ததின்காரணமாக
يَصْنَعُونَ
செய்வார்கள்

Wa darabal laahu masalan qaryatan kaanat aaminatam mutma'innatany yaaateehaa rizquhaa rghadam min kulli makaanin fakafarat bi an'umil laahi fa azaaqahal laahu libaasal joo'i walkhawfi bimaa kaanoo yasna'oon

ஓர் ஊராரை அல்லாஹ் (அவர்களுக்கு) உதாரணமாகக் கூறுகிறான். அவ்வூர் (மிக்க செழிப்பாகவும், அதிலிருந்தவர்கள்) திருப்தியோடும் அச்சமற்றும் இருந்தனர். அவர்களுக்கு வேண்டிய பொருள்கள் அனைத்தும் ஒவ்வொரு திசையிலிருந்தும் தடையின்றி வந்து கொண்டிருந்தன. இந்நிலைமையில் (அவ்வூர்வாசிகள் அல்லாஹ்வை நிராகரித்து) அல்லாஹ்வுடைய அருட்கொடை களுக்கு(ம் நன்றி செலுத்தாமல்) மாறுசெய்தனர். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களின் காரணமாக அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு உடையாக (அணிவித்து) அவர்கள் அதனைச் சுவைக்கும்படிச் செய்தான்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
جَآءَهُمْ
வந்தார் அவர்களிடம்
رَسُولٌ
ஒரு தூதர்
مِّنْهُمْ
அவர்களிலிருந்தே
فَكَذَّبُوهُ
அவர்கள் பொய்ப்பித்தனர்/அவரை
فَأَخَذَهُمُ
பிடித்தது அவர்களை
ٱلْعَذَابُ
வேதனை
وَهُمْ
அவர்கள் இருக்கின்ற நிலையில்
ظَٰلِمُونَ
அநியாயக்காரர்களாக

Wa laqad jaaa'ahum Rasoolum minhum fakazzaboohu fa akhazahumul 'azaabu wa hum zaalimoon

(நபியே!) அவர்களிலிருந்தே (நாம் அனுப்பிய நம்முடைய) தூதரும் அவர்களிடம் வந்தார். எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி விட்டார்கள். ஆகவே, (இவ்வாறு) அவர்கள் அநியாயக்காரர்களாக இருக்கும் நிலைமையில் அவர்களை வேதனைப் பிடித்துக் கொண்டது.

Tafseer

فَكُلُوا۟
புசியுங்கள்
مِمَّا
எவற்றிலிருந்து
رَزَقَكُمُ
அளித்தான்/ உங்களுக்கு
ٱللَّهُ
அல்லாஹ்
حَلَٰلًا
ஆகுமானதை
طَيِّبًا
நல்லதை
وَٱشْكُرُوا۟
இன்னும் நன்றி செலுத்துங்கள்
نِعْمَتَ
அருட் கொடைகளுக்கு
ٱللَّهِ
அல்லாஹ்வின்
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
إِيَّاهُ
அவனையே
تَعْبُدُونَ
வணங்குவீர்கள்

Fakuloo mimmaa razaqa kumul laahu halaalan taiyibanw washkuroo ni'matal laahi in kuntum iyyaahu ta'budoon

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்தவைகளில் ஆகுமான நல்லவைகளையே புசியுங்கள். நீங்கள் அல்லாஹ்வை வணங்குபவர்களாக இருந்தால், அவனுடைய அருட்கொடைகளுக்கு நீங்கள் நன்றி செலுத்தி வாருங்கள்.

Tafseer

إِنَّمَا حَرَّمَ
அவன் தடுத்ததெல்லாம்
عَلَيْكُمُ
உங்கள் மீது
ٱلْمَيْتَةَ
செத்ததை
وَٱلدَّمَ
இன்னும் இரத்தம்
وَلَحْمَ
இன்னும் மாமிசம்
ٱلْخِنزِيرِ
பன்றியின்
وَمَآ أُهِلَّ
இன்னும் பெயர் கூறப்பட்டவை
لِغَيْرِ
அல்லாதவற்றின்
ٱللَّهِ بِهِۦۖ
அல்லாஹ்/அதை
فَمَنِ ٱضْطُرَّ
எவர்/நிர்பந்தத்திற்குள்ளானார்
غَيْرَ بَاغٍ
நாடியவராக அல்லாமல்
وَلَا عَادٍ
மீறியவராகஅல்லாமல்
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
மிகக் கருணையாளன்

Innamaa harrma 'alai kumul maitata waddama wa lahmal khinzeeri wa maaa uhilla lighairil laahi bihee famanid turra ghaira baaghinw wa laa 'aadin fa innal laaha Ghafoorur Raheem

(புசிக்கக் கூடாதென்று) உங்களுக்கு விலக்கப் பட்டிருப்பவையெல்லாம் செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாதவைகளின் பெயர் கூறப் பட்டவையுமாகும். எவரேனும் பாவம் செய்யும் எண்ணமின்றி, (எவராலும்) நிர்ப்பந்திக்கப்பட்டு (அல்லது பசியின் கொடுமையால் அவசியத்திற்கு அதிகப்படாமல் இவைகளைப் புசித்து) விட்டால் (அவர் மீது குற்றமாகாது. ஆகவே, இத்தகைய நிலைமையில் அவரை) நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனும் கிருபை செய்பவனுமாக இருக்கின்றான்.

Tafseer

وَلَا تَقُولُوا۟
கூறாதீர்கள்
لِمَا تَصِفُ
எதற்கு/வருணிக்கும்
أَلْسِنَتُكُمُ
உங்கள் நாவுகள்
ٱلْكَذِبَ
பொய்யை
هَٰذَا
இது
حَلَٰلٌ
(ஹலால்) ஆகுமானது
وَهَٰذَا
இன்னும் இது
حَرَامٌ
(ஹராம்) ஆகாதது
لِّتَفْتَرُوا۟
நீங்கள் இட்டுக்கட்டுவதற்காக
عَلَى
மீது
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ٱلْكَذِبَۚ
பொய்யை
إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
يَفْتَرُونَ
இட்டுக்கட்டுகிறார்கள்
عَلَى
மீது
ٱللَّهِ
அல்லாஹ்
ٱلْكَذِبَ
பொய்யை
لَا يُفْلِحُونَ
அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்

Wa laa taqooloo limaa tasifu alsinatukumul kaziba haaza halaalunw wa haazaa haraamul litaftaroo 'alal laahil kazib; innal lazeena yaftaroona 'alal laahil kaziba laa yuflihoon

உங்கள் நாவில் வந்தவாறெல்லாம் பொய் கூறுவதைப்போல் (எதைப் பற்றியும் மார்க்கத்தில்) இது ஆகும்; இது ஆகாது என்று கூறாதீர்கள். (அவ்வாறு கூறினால் அல்லாஹ்வின் மீது அபாண்டமாகப் பொய் கூறுவது போலாகும்.) எவர்கள் அல்லாஹ்வின் மீதே பொய்யைக் கற்பனை செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக வெற்றி அடையவே மாட்டார்கள்.

Tafseer

مَتَٰعٌ قَلِيلٌ
சுகம்/சொற்பமானது
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
عَذَابٌ
வேதனை
أَلِيمٌ
துன்புறுத்தக் கூடியது

Mata'un qaleelunw wa lahum 'azaabun aleem

(இத்தகையவர்கள் இவ்வுலகில் அனுபவிப்பதெல்லாம்) சொற்ப இன்பம்தான். (மறுமையில்) அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு.

Tafseer

وَعَلَى ٱلَّذِينَ
மீது / யூதர்களாக இருப்பவர்கள்
حَرَّمْنَا
தடுத்தோம்
مَا قَصَصْنَا
எவற்றை/விவரித்தோம்
عَلَيْكَ
உமக்கு
مِن قَبْلُۖ
(இதற்கு) முன்னர்
وَمَا ظَلَمْنَٰهُمْ
நாம் தீங்கிழைக்கவில்லை/அவர்களுக்கு
وَلَٰكِن
எனினும்
كَانُوٓا۟
இருந்தனர்
أَنفُسَهُمْ
தங்களுக்கே
يَظْلِمُونَ
தீங்கிழைப்பவர்களாக

Wa 'alal lazeena haadoo harramnaa ma qasasnaa 'alaika min qablu wa maa zalamanaahum wa laakin kaanoo anfusahum wa laakin kaanoo anfusahum yazlimoon

(நபியே!) இதற்கு முன்னர் (6ம் அத்தியாயம் 146ம் வசனத்தில்) நாம் உங்களுக்கு விவரித்தவைகளை யூதர்களுக்குத் தடுத்துவிட்டோம். (எனினும்) நாமாகவே (அதனைத் தடுத்து) அவர்களுக்குத் தீங்கிழைத்து விடவில்லை. எனினும், அவர்கள் (தாமாகவே அவைகளைத் தடுத்துக் கொண்டு) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.

Tafseer

ثُمَّ
பிறகு
إِنَّ
நிச்சயமாக
رَبَّكَ
உம் இறைவன்
لِلَّذِينَ
எவர்களுக்கு
عَمِلُوا۟
செய்தனர்
ٱلسُّوٓءَ
கெட்டதை
بِجَهَٰلَةٍ
அறியாமையின் காரணமாக
ثُمَّ
பிறகு
تَابُوا۟
திருந்தி விலகி மன்னிப்புக் கேட்டனர்
مِنۢ بَعْدِ
அதற்கு பின்னர்
وَأَصْلَحُوٓا۟
இன்னும் சீர்படுத்தினார்கள்
إِنَّ
நிச்சயமாக
رَبَّكَ
உம் இறைவன்
مِنۢ بَعْدِهَا
அதற்குப் பின்பு
لَغَفُورٌ
மகா மன்னிப்பாளன்தான்
رَّحِيمٌ
மிகக் கருணையாளன்

Summma inna Rabbaka lillazeena 'amilus sooo'a bijahaalatin summa taaboo mim ba'di zaaalika wa aslahoo inna Rabbaka mim ba'dihaa la Ghafoorur Raheem

(நபியே!) எவர்கள் தங்கள் அறியாமையினால் பாவத்தைச் செய்துவிட்டு, அறிந்த பின்னர் அதிலிருந்து விலகி நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை; (அவர்கள் பாவத்திலிருந்து விலகி நற்செயல்களைச் செய்த) பின்னர் நிச்சயமாக உங்களது இறைவன் மிக்க மன்னிப்பவனும், கிருபை புரிபவனுமாக இருக்கிறான்.

Tafseer

إِنَّ إِبْرَٰهِيمَ
நிச்சயமாக இப்றாஹீம்
كَانَ
இருந்தார்
أُمَّةً
நன்மையை போதிப்பவராக
قَانِتًا
மிக பணிந்தவராக
لِّلَّهِ
அல்லாஹ்வுக்கு
حَنِيفًا
கொள்கை உறுதியுடையவராக
وَلَمْ يَكُ
அவர் இருக்கவில்லை
مِنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்

Inna Ibraaheema kaana ummatan qaanital lillaahi Haneefanw wa lam yakuminal mushrikeen

நிச்சயமாக இப்ராஹீம் அல்லாஹ்வுக்கு மிக்க பயந்து நடக்கும் நேரானதொரு வழிகாட்டியாக இருந்தாரேயன்றி (இறைவனுக்கு) இணை வைத்து வணங்குபவர்களில் அவரும் (ஒருவராக) இருக்கவில்லை.

Tafseer