Skip to main content

تَبَارَكَ
மிக்க அருள் நிறைந்தவன்
ٱلَّذِى جَعَلَ
எவன்/அமைத்தான்
فِى ٱلسَّمَآءِ
வானங்களில்
بُرُوجًا
பெரும் கோட்டைகளை
وَجَعَلَ
இன்னும் அமைத்தான்
فِيهَا
அதில்
سِرَٰجًا
சூரியனையும்
وَقَمَرًا
சந்திரனையும்
مُّنِيرًا
ஒளிரும்

Tabaarakal lazee ja'ala fis samaaa'i buroojanw wa ja'ala feehaa siraajanw wa qamaram muneeraa

(அந்த ரஹ்மான்) மிக்க பாக்கியமுடையவன். அவன்தான் வானத்தில் நட்சத்திரங்களை அமைத்து, அதில் (சூரியனை) ஒளியாகவும், சந்திரனைப் பிரகாசம் தரக்கூடியதாகவும் அமைத்தான்.

Tafseer

وَهُوَ ٱلَّذِى
அவன்தான்
جَعَلَ
அமைத்தான்
ٱلَّيْلَ
இரவையும்
وَٱلنَّهَارَ
பகலையும்
خِلْفَةً
பகரமாக
لِّمَنْ أَرَادَ
நாடுபவருக்கு
أَن يَذَّكَّرَ
நல்லறிவு பெற
أَوْ
அல்லது
أَرَادَ
நாடினார்
شُكُورًا
நன்றிசெய்ய

Wa huwal lazee ja'alal laila wannahaara khilfatal liman araada ai yazzakkara aw araadaa shookooraa

அவன்தான் இரவையும், பகலையும் மாறி மாறி வரும்படி செய்திருக்கின்றான். (இதனைக் கொண்டு) எவர்கள் நல்லுணர்ச்சி பெற்று, அவனுக்கு நன்றி செலுத்த விரும்புகிறார்களோ அவர்களுக்காக (இதைக் கூறுகின்றான்).

Tafseer

وَعِبَادُ
அடியார்கள்
ٱلرَّحْمَٰنِ
பேரருளாளனுடைய
ٱلَّذِينَ
எவர்கள்
يَمْشُونَ
நடப்பார்கள்
عَلَى ٱلْأَرْضِ
பூமியில்
هَوْنًا
மென்மையாக
وَإِذَا خَاطَبَهُمُ
இன்னும் அவர்களிடம் பேசினால்
ٱلْجَٰهِلُونَ
அறிவீனர்கள்
قَالُوا۟
கூறி விடுவார்கள்
سَلَٰمًا
ஸலாம்

Wa 'ibaadur Rahmaanil lazeena yamshoona 'alal ardi hawnanw wa izaa khaata bahumul jaahiloona qaaloo salaamaa

இவர்கள்தாம், ரஹ்மானுடைய அடியார்கள்: பூமியில் (அடக்கமாகவும்) பணிவாகவும் நடப்பார்கள். மூடர்கள் அவர்களுடன் தர்க்கிக்க முற்பட்டால் "ஸலாமுன்" என்று கூறி (அவர்களை விட்டு விலகி) விடுவார்கள்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
يَبِيتُونَ
இரவு கழிப்பார்கள்
لِرَبِّهِمْ
தங்கள் இறைவனுக்கு
سُجَّدًا
சிரம் பணிந்தவர்களாக
وَقِيَٰمًا
நின்றவர்களாக

Wallazeena yabeetoona li Rabbihim sujjadanw wa qiyaamaa

அன்றி, அவர்கள் தங்கள் இறைவனை, நின்றவர்களாகவும் சிரம் பணிந்தவர்களாகவும் இரவெல்லாம் வணங்கிக் கொண்டு இருப்பார்கள்.

Tafseer

وَٱلَّذِينَ يَقُولُونَ
இன்னும் அவர்கள் கூறுவார்கள்
رَبَّنَا
எங்கள் இறைவா!
ٱصْرِفْ
திருப்பி விடு
عَنَّا
எங்களை விட்டு
عَذَابَ
தண்டனையை
جَهَنَّمَۖ
நரகமுடைய
إِنَّ
நிச்சயமாக
عَذَابَهَا
அதனுடைய தண்டனை
كَانَ
இருக்கிறது
غَرَامًا
நீங்காத ஒன்றாக

Wallazeena yaqooloona Rabbanas rif 'annnaa 'azaaba Jahannama inn 'azaabahaa kaana gharaamaa

தவிர, அவர்கள் "எங்கள் இறைவனே! நரகத்தின் வேதனையை எங்களை விட்டு நீ தடுத்துக் கொள்வாயாக! ஏனென்றால், அதன் வேதனையானது நிச்சயமாக நிலையான துன்பமாகும்" என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பார்கள்.

Tafseer

إِنَّهَا
நிச்சயமாக அது
سَآءَتْ
மிக கெட்டது
مُسْتَقَرًّا
நிரந்தரமானது
وَمُقَامًا
தற்காலிகமான தங்குமிடத்தாலும்

Innahaa saaa'at mustaqarranw wa muqaamaa

(அன்றி) "சிறிது நேரமோ அல்லது எப்பொழுதுமோ தங்குவதற்கும் அது மிகக் கெட்ட இடமாகும் (ஆகவே, அதில் இருந்து எங்களை நீ பாதுகாத்துக்கொள்" என்று பிரார்த்திப்பார்கள்).

Tafseer

وَٱلَّذِينَ إِذَآ
அவர்கள் செலவு செய்தால்
لَمْ يُسْرِفُوا۟
வரம்பு மீறமாட்டார்கள்
وَلَمْ يَقْتُرُوا۟
இன்னும் கருமித்தனமும் காட்ட மாட்டார்கள்
وَكَانَ
இருக்கும்
بَيْنَ
மத்தியில்
ذَٰلِكَ
அதற்கு
قَوَامًا
நடுநிலையாக

Wallazeena izaaa anfaqoo lam yusrifoo wa lam yaqturoo wa kaana baina zaalika qawaamaa

அன்றி, அவர்கள் தானம் கொடுத்தால் அளவு கடந்தும் கொடுத்துவிட மாட்டார்கள்; கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். இதற்கு மத்திய தரத்தில் கொடுப்பார்கள்.

Tafseer

وَٱلَّذِينَ لَا
அவர்கள் அழைக்க மாட்டார்கள்
مَعَ ٱللَّهِ
அல்லாஹ்வுடன்
إِلَٰهًا
ஒரு கடவுளை
ءَاخَرَ
வேறு
وَلَا يَقْتُلُونَ
இன்னும் கொல்ல மாட்டார்கள்
ٱلنَّفْسَ
உயிரை
ٱلَّتِى حَرَّمَ
எது/தடுத்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
إِلَّا
தவிர
بِٱلْحَقِّ
உரிமையைக் கொண்டே
وَلَا يَزْنُونَۚ
இன்னும் விபசாரம் செய்யமாட்டார்கள்
وَمَن يَفْعَلْ
யார் செய்வாரோ
ذَٰلِكَ
இவற்றை
يَلْقَ
அவர் சந்திப்பார்
أَثَامًا
தண்டனையை

Wallazeena laa yad'oona ma'al laahi ilaahan aakhara wa laa yaqtuloonan nafsal latee harramal laahu illaa bilhaqqi wa laa yaznoon; wa mai yaf'al zaalika yalqa asaamaa

தவிர, அவர்கள் அல்லாஹ்வுடன் வேறொருவரையும் வணக்கத்திற்குரியவனாக அழைக்க மாட்டார்கள். (கொலை செய்யக் கூடாதென்று) அல்லாஹ் தடுத்திருக்கும் எம்மனிதனையும் அவர்கள் நியாயமின்றிக் கொலை செய்ய மாட்டார்கள்; விபசாரமும் செய்ய மாட்டார்கள். ஆகவே, எவனேனும் இத்தகைய தீய காரியங்களைச் செய்ய முற்பட்டால், அவன் (அதற்குரிய) தண்டனையை அடைய வேண்டியதுதான்.

Tafseer

يُضَٰعَفْ
பன்மடங்காக ஆக்கப்படும்
لَهُ
அவருக்கு
ٱلْعَذَابُ
அந்த தண்டனை
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
وَيَخْلُدْ
நிரந்தரமாக தங்கி விடுவார்
فِيهِۦ
அதில்
مُهَانًا
இழிவுபடுத்தப்பட்டவராக

Yudaa'af lahul 'azaabu Yawmal Qiyaamati wa yakhlud feehee muhaanaa

மறுமை நாளிலோ அவனுடைய வேதனை இரட்டிப்பாக ஆக்கப்பட்டு இழிவுபட்டவனாக வேதனையில் என்றென்றும் தங்கி விடுவான்.

Tafseer

إِلَّا
எனினும்,
مَن
யார்
تَابَ
திருந்தினார்(கள்)
وَءَامَنَ
இன்னும் நம்பிக்கை கொண்டார்(கள்)
وَعَمِلَ
இன்னும் செய்தார்
عَمَلًا
செயலை
صَٰلِحًا
நன்மையான
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
يُبَدِّلُ
மாற்றி விடுவான்
ٱللَّهُ
அல்லாஹ்
سَيِّـَٔاتِهِمْ
அவர்களுடைய தீய செயல்களை
حَسَنَٰتٍۗ
நல்ல செயல்களாக
وَكَانَ
இருக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
رَّحِيمًا
பெரும் கருணையாளனாக

Illaa man taaba wa 'aamana wa 'amila 'amalan saalihan fa ulaaa'ika yubad dilul laahu saiyi aatihim hasanaat; wa kaanal laahu Ghafoorar Raheemaa

ஆயினும், (அவர்களில்) எவர்கள் பாவத்திலிருந்து விலகி (மன்னிப்பு கோரி) நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ, அத்தகையவர்கள் (முன்னர் செய்துவிட்ட) பாவங்களை அல்லாஹ் (மன்னிப்பது மட்டுமல்ல; அதனை) நன்மையாகவும் மாற்றி விடுகிறான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer