Skip to main content

فَاطِرُ
படைத்தவன்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
وَٱلْأَرْضِۚ
பூமியையும்
جَعَلَ
ஏற்படுத்தினான்
لَكُم
உங்களுக்கு
مِّنْ أَنفُسِكُمْ
உங்களிலிருந்தே
أَزْوَٰجًا
ஜோடிகளை(யும்)
وَمِنَ ٱلْأَنْعَٰمِ
இன்னும் கால்நடைகளில்
أَزْوَٰجًاۖ
ஜோடிகளை(யும்)
يَذْرَؤُكُمْ
படைக்கின்றான் உங்களை
فِيهِۚ لَيْسَ
அதில்/இல்லை
كَمِثْلِهِۦ
அவனைப் போன்று
شَىْءٌۖ وَهُوَ
எதுவும்/அவன்தான்
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
ٱلْبَصِيرُ
நன்கு பார்ப்பவன்

Faatirus samaawaati wal ard; ja'ala lakum min anfusikum azwaajanw wa minal an'aami azwaajany yazra'ukum feeh; laisa kamislihee shai'unw wa Huwas Samee'ul Baseer

அவனே வானங்களையும் பூமியையும் படைத்தவன். உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளையும் அவன் உங்களுக்காக படைக்கின்றான். (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளையும் ஜோடி ஜோடியாக படைத்து, உங்களைப் பூமியின் பல பாகங்களிலும் பரவிப் பெருகச் செய்கிறான். அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

لَهُۥ
அவனுக்கே உரியன
مَقَالِيدُ
சாவிகள்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமி
يَبْسُطُ
விரிவாக்குகின்றான்
ٱلرِّزْقَ
வாழ்வாதாரத்தை
لِمَن يَشَآءُ
தான் நாடியவர்களுக்கு
وَيَقْدِرُۚ
இன்னும் சுருக்குகின்றான்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
عَلِيمٌ
நன்கறிந்தவன் ஆவான்

Lahoo maqaaleedus samaawaati wal ardi yabsutur rizqa limany yashaaa'u wa yaqdir; innahoo bikulli shai'unw wa Huwas Samee'ul Baseer

வானங்கள், பூமியின் (பொக்கிஷங்களின்) சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவன் விரும்பியவர்களுக்கு உணவை விரிவாக்குகின்றான். (அவன் விரும்பியவர்களுக்குச்) சுருக்கி விடுகின்றான். நிச்சயமாக அவன் சகல வஸ்துக்களையும் (அனைவரின் தன்மையையும்) நன்கறிந்தவன். (ஆகவே, அவர்களின் தகுதிக்குத் தக்கவாறு கொடுக்கின்றான்.)

Tafseer

شَرَعَ
சட்டமாக்கினான்
لَكُم
உங்களுக்கு(ம்)
مِّنَ ٱلدِّينِ
மார்க்கத்தில்
مَا
எதை
وَصَّىٰ
உபதேசித்தானோ
بِهِۦ
அதையே
نُوحًا
நூஹூக்கு
وَٱلَّذِىٓ
இன்னும் எதை
أَوْحَيْنَآ إِلَيْكَ
நாம் வஹீ அறிவித்தோமோ/உமக்கு
وَمَا وَصَّيْنَا
இன்னும் எது/நாம் உபதேசித்தோமோ
بِهِۦٓ
அதை
إِبْرَٰهِيمَ
இப்ராஹீம்
وَمُوسَىٰ
இன்னும் மூஸா
وَعِيسَىٰٓۖ
இன்னும் ஈஸா(விற்கு)
أَنْ أَقِيمُوا۟
நிலை நிறுத்துங்கள்!
ٱلدِّينَ
இந்த மார்க்கத்தை
وَلَا تَتَفَرَّقُوا۟
நீங்கள் பிரிந்து விடாதீர்கள்!
فِيهِۚ كَبُرَ
அதில்/மிக பாரமாக ஆகிவிட்டது
عَلَى ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களுக்கு
مَا
எது/ அழைக்கின்றீரோ
تَدْعُوهُمْ
எது/ அழைக்கின்றீரோ அவர்களை
إِلَيْهِۚ
அதன் பக்கம்
ٱللَّهُ
அல்லாஹ்
يَجْتَبِىٓ
தேர்ந்தெடுக்கின்றான்
إِلَيْهِ
தன் பக்கம்
مَن يَشَآءُ
தான் நாடுகின்றவர்களை
وَيَهْدِىٓ
இன்னும் வழி காட்டுகின்றான்
إِلَيْهِ
தன் பக்கம்
مَن يُنِيبُ
திரும்புகின்றவர்களுக்கு

Shara'a lakum minad deeni maa wassaa bihee Noohanw wallazeee awhainaaa ilaika wa maa wassainaa biheee Ibraaheema wa Moosa wa 'Eesaaa an aqeemud adeena wa laa tatafarraqoo feeh; kabura 'alal mushrikeena maa tad'oohum ilaih; Allaahu yajtabee ilaihi many yashaaa'u wa yahdeee ilaihi mai yuneeb

(நம்பிக்கையாளர்களே!) நூஹ்வுக்கு எதனை அவன் உபதேசித்தானோ அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கி இருக்கின்றான். ஆகவே, (நபியே!) நாம் உங்களுக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீம், மூஸா, ஈஸா முதலியவர்களுக்கு நாம் உபதேசித்ததும் (என்னவென்றால், "நீங்கள் ஒருமித்து ஓரிறை கொள்கையுடைய உண்மையான) மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். அதில் (பல பிரிவுகளாகப்) பிரிவினை செய்து கொள்ளாதீர்கள் என்பதேயாகும். ஆகவே, அவர்களை நீங்கள் அழைக்கும் (ஓரிறை கொள்கையாகிய) இது, இணைவைத்து வணங்கும் அவர்களுக்குப் பெரும் பளுவாகத் தோன்றும். அல்லாஹ், தான் விரும்பியவர் களையே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். அவனை நோக்கியவர்களுக்கே தன்னிடம் வரும் வழியையும் அவன் அறிவிக்கின்றான்.

Tafseer

وَمَا تَفَرَّقُوٓا۟
அவர்கள் பல பிரிவுகளாக பிரியவில்லை
إِلَّا
தவிர
مِنۢ بَعْدِ
வந்ததன் பின்னரே
جَآءَهُمُ
தங்களிடம்
ٱلْعِلْمُ
கல்வி
بَغْيًۢا
பொறாமையினால்தான்
بَيْنَهُمْۚ
தங்களுக்கு மத்தியில்
وَلَوْلَا
இருக்கவில்லை என்றால்
كَلِمَةٌ
ஒரு வாக்கு
سَبَقَتْ
முந்தி(யது)
مِن رَّبِّكَ
உமது இறைவன் புறத்தில் இருந்து
إِلَىٰٓ أَجَلٍ
ஒரு தவணை வரை
مُّسَمًّى
குறிப்பிட்ட
لَّقُضِىَ
தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்
بَيْنَهُمْۚ
அவர்களுக்கு மத்தியில்
وَإِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ أُورِثُوا۟
கொடுக்கப்பட்டவர்கள்
ٱلْكِتَٰبَ
வேதம்
مِنۢ
பின்னர்
بَعْدِهِمْ
பின்னர் இவர்களுக்கு
لَفِى شَكٍّ
சந்தேகத்தில்
مِّنْهُ
அதில்
مُرِيبٍ
பெரிய

Wa maa tafarraqooo illaa mim ba'di maa jaaa'ahumul 'ilmu baghyam bainahum; wa law laa Kalimatun sabaqat mir Rabbika ilaaa ajalim musammal laqudiya bainahum; wa innal lazeena oorisul Kitaaba mim ba'dihim lafee shakkim minhu mureeb

அவர்கள் தங்களிடம் வேதம் வந்ததன் பின்னரும், தங்களுக்கு இடையிலுள்ள பொறாமையின் காரணமாகவேயன்றி (உண்மையிலிருந்து) அவர்கள் பிரிந்துவிடவில்லை. (அவர்களுக்குத் தீர்ப்பளிப்பது) ஒரு குறிப்பிட்ட தவணையில்தான் என்று உங்களது இறைவனுடைய வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களுடைய காரியம் (இதுவரையில்) முடிவுபெற்றே இருக்கும். தவிர, அவர்களுக்குப் பின்னர், அவ்வேதத்தை எவர்கள் அனந்தரம் கொண்டார்களோ அவர்களும், நிச்சயமாக இதில் பெரும் சந்தேகத்தில்தான் ஆழ்ந்து கிடக்கின்றனர்.

Tafseer

فَلِذَٰلِكَ
இதன் பக்கமே
فَٱدْعُۖ
நீர் அழைப்பீராக
وَٱسْتَقِمْ
இன்னும் நீர் நிலையாக நீடித்து இருப்பீராக
كَمَآ أُمِرْتَۖ
நீர் கட்டளையிடப்பட்டது போன்றே
وَلَا تَتَّبِعْ
நீர் பின்பற்றாதீர்
أَهْوَآءَهُمْۖ
மன விருப்பங்களை அவர்களின்
وَقُلْ
இன்னும் நீர் கூறுவிராக
ءَامَنتُ
நான் நம்பிக்கை கொண்டேன்
بِمَآ أَنزَلَ
இறக்கியதை
ٱللَّهُ
அல்லாஹ்
مِن كِتَٰبٍۖ
வேதங்களில் இருந்து
وَأُمِرْتُ
பணிக்கப்பட்டுள்ளேன்
لِأَعْدِلَ
நீதமாக நடக்க வேண்டும் என்று
بَيْنَكُمُۖ
உங்களுக்கு மத்தியில்
ٱللَّهُ
அல்லாஹ்தான்
رَبُّنَا
இன்னும் உங்களுக்கு
وَرَبُّكُمْۖ
இன்னும் உங்கள் அமல்கள்
لَنَآ
எங்களுக்கு
أَعْمَٰلُنَا
எங்கள் அமல்கள்
وَلَكُمْ
இன்னும் உங்களுக்கு
أَعْمَٰلُكُمْۖ
உங்கள் அமல்கள்
لَا حُجَّةَ
சண்டை வேண்டாம்
بَيْنَنَا
நமக்கு மத்தியிலும்
وَبَيْنَكُمُۖ
உங்களுக்கு மத்தியிலும்
ٱللَّهُ
அல்லாஹ்தான்
يَجْمَعُ
ஒன்று சேர்ப்பான்
بَيْنَنَاۖ
நமக்கு மத்தியில்
وَإِلَيْهِ
அவன் பக்கமே
ٱلْمَصِيرُ
மீளுமிடம்

Falizaalika fad'u wastaqim kamaaa umirta wa laa tattabi' ahwaaa'ahum wa qul aamantu bimaaa anzalal laahu min Kitaab, wa umirtu li a'dila bainakum Allaahu Rabbunaa wa Rabbukum lanaaa a'maa lunaa wa lakum a'maalukim laa hujjata bainanaa wa baina kumul laahu yajma'u bainanaa wa ilaihil maseer

ஆகவே, (நபியே!) அ(ந்)த (உண்மையான மார்க்கத்தி) னளவில் (அவர்களை) நீங்கள் அழையுங்கள். உங்களுக்கு ஏவப்பட்டபடி நீங்கள் உறுதியாக இருங்கள். அவர்களுடைய விருப்பங்களை நீங்கள் பின்பற்றாதீர்கள். பின்னும் (அவர்களை நோக்கிக்) கூறுங்கள்: அல்லாஹ் வேதமென்று எதனை இறக்கி வைத்தானோ அதனையே நான் நம்பிக்கை கொள்கின்றேன். உங்களுக்கிடையில் (உள்ள விவகாரங்களை) நீதமாகத் தீர்ப்பளிக்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ் தான் எங்கள் இறைவனும் உங்கள் இறைவனுமாவான். எங்கள் செயலுக்குரிய பலன் எங்களுக்குக் கிடைக்கும்; உங்கள் செயலுக்குரிய பலன் உங்களுக்குக் கிடைக்கும். எங்களுக்கும் உங்களுக்குமிடையில் யாதொரு தர்க்கமும் வேண்டாம். நம் அனைவரையும் (மறுமையில்) அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். அவனிடமே (நாம் அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கின்றது.

Tafseer

وَٱلَّذِينَ يُحَآجُّونَ
எவர்கள் தர்க்கம் செய்கின்றார்களோ
فِى ٱللَّهِ
அல்லாஹ்வின் விஷயத்தில்
مِنۢ بَعْدِ
பின்னர்
مَا ٱسْتُجِيبَ
ஏற்றுக்கொண்டதன்
لَهُۥ
அவனை
حُجَّتُهُمْ
அவர்களின்வாதங்கள்
دَاحِضَةٌ
வீணானதே!
عِندَ رَبِّهِمْ
அல்லாஹ்விடம்
وَعَلَيْهِمْ غَضَبٌ
இன்னும் அவர்கள் மீது இறங்கும்/கோபம்
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு உண்டு
عَذَابٌ
வேதனையும்
شَدِيدٌ
கடுமையான

Wallazeena yuhaaajjoona fil laahi mim ba'di mastujeeba lahoo hujjatuhum daahidatun 'inda Rabbihim wa 'alaihim ghadabunw wa lahum 'azaabun shadeed

எவர்கள் (நம்பிக்கை கொண்டு) அல்லாஹ்வுக்குப் பதில் கூறிய பின்னர், அவனைப் பற்றி (வீணாக)த் தர்க்கித்து(க் குழப்பத்தை உண்டு பண்ணி)க் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய தர்க்கம் அவர்களுடைய இறைவனிடத்தில் பயனற்றதாகும். அதனால், அவர்கள் மீது (அவனுடைய) கோபமும் ஏற்பட்டு கடினமான வேதனையும் அவர்களுக்குக் கிடைக்கும்.

Tafseer

ٱللَّهُ ٱلَّذِىٓ
அல்லாஹ்/ எப்படிப்பட்டவன்
أَنزَلَ
இறக்கினான்
ٱلْكِتَٰبَ
வேதத்தையும்
بِٱلْحَقِّ
சத்தியத்துடன்
وَٱلْمِيزَانَۗ
தராசையும்
وَمَا يُدْرِيكَ
உமக்கு எது அறிவிக்கும்?
لَعَلَّ ٱلسَّاعَةَ
மறுமை
قَرِيبٌ
மிக சமீபமானது

Allahul lazeee anzalal Kitaaba bilhaqqi wal Meezaan; wa ma yudreeka la'allas Saa'ata qareeb

அல்லாஹ்தான் முற்றிலும் உண்மையுடன் கூடியஇவ்வேதத்தை இறக்கி வைத்தான். மேலும், அவனே (நீங்கள் நீதமாக நடந்துகொள்ள) தராசையும் படைத்தான். (நபியே!) மறுமை நெருங்கிவிட்டதென்பதை நீங்கள் அறிவீர்களா!

Tafseer

يَسْتَعْجِلُ بِهَا
அவசரமாகத் தேடுகின்றனர்/அதை
ٱلَّذِينَ لَا
நம்பிக்கை கொள்ளாதவர்கள்/அதை
وَٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
مُشْفِقُونَ
பயப்படுகின்றனர்
مِنْهَا
அதை
وَيَعْلَمُونَ
இன்னும் அறிவார்கள்
أَنَّهَا
நிச்சயமாக அது
ٱلْحَقُّۗ
உண்மைதான்
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக தர்க்கிப்பவர்கள்
فِى ٱلسَّاعَةِ
மறுமை விஷயத்தில்
لَفِى ضَلَٰلٍۭ
வழிகேட்டில்தான்
بَعِيدٍ
வெகு தூரமான

Yasta'jilu bihal lazeena laa yu'minoona bihaa wallazeena aamanoo mushfiqoona minhaa wa ya'lamoona annahal haqq; alaaa innal lazeena yumaaroona fis Saa'ati lafee dalaalim ba'eed

மறுமையை நம்பாதவர்கள் அதனைப் பற்றி (எப்பொழுது வரும், எப்பொழுது வரும் என்று) அவசரப்படுகின்றனர். ஆயினும், எவர்கள் அதனை நம்பியிருக்கின்றார்களோ அவர்கள் அதனைப் பற்றிப் பயந்து கொண்டிருப்பதுடன், நிச்சயமாக அது (வருவது) உண்மைதான் என்றும் திட்டமாக அறிவார்கள். எவர்கள் மறுமையைப் பற்றிச் சந்தேகத்தில் இருக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக வெகு தூரமானதொரு வழிகேட்டில்தான் இருக்கின் றார்கள் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்து கொள்ளுங்கள்.

Tafseer

ٱللَّهُ
அல்லாஹ்தான்
لَطِيفٌۢ
மிக கருணையும் தயவும் உடையவன்
بِعِبَادِهِۦ
தன் அடியார்கள் மீது
يَرْزُقُ
உணவளிக்கின்றான்
مَن يَشَآءُۖ
தான் நாடுகின்றவர்களுக்கு
وَهُوَ
அவன்தான்
ٱلْقَوِىُّ
மிக வலிமை உள்ளவன்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்

Allahu lateefum bi'ibaadihee yarzuqu mai yashaaa'u wa Huwal Qawiyyul 'Azeez

அல்லாஹ் தன் அடியார்களை அன்பாகக் கவனித்து வருபவன். ஆகவே, அவன் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளித்து வருகின்றான். அவன் மிக பலமுள்ளவனும் (அனைவரையும்) மிகைத்தவனும் ஆவான்.

Tafseer

مَن
யார்
كَانَ
இருப்பாரோ
يُرِيدُ
நாடுகின்றவராக
حَرْثَ
விளைச்சலை
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
نَزِدْ
நாம் அதிகப்படுத்துவோம்
لَهُۥ
அவருக்கு
فِى حَرْثِهِۦۖ
அவருடைய விளைச்சலில்
وَمَن كَانَ
இன்னும் யார்/இருப்பாரோ
يُرِيدُ
நாடுகின்றவராக
حَرْثَ
விளைச்சலை
ٱلدُّنْيَا
உலகத்தின்
نُؤْتِهِۦ
அவருக்கு நாம் கொடுப்போம்
مِنْهَا
அதில் இருந்து
وَمَا لَهُۥ
இல்லை/அவருக்கு
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
مِن نَّصِيبٍ
எவ்வித பங்கும்

Man kaana yureedu harsal Aakhirati nazid lahoo fee harsihee wa man kaana yureedu harsad dunyaa nu'tihee mnhaa wa maa lahoo fil Aakhirati min naseeb

எவன் மறுமைக்காகப் பயிரிட விரும்புகின்றானோ, அவனுடைய பயிரின் விளைச்சலை நாம் அதிகப்படுத்துகிறோம். எவன் இம்மைக்காக (மட்டும்) பயிரிட விரும்புகின்றானோ, நாம் அவனுக்கும் அதிலிருந்து ஓரளவு கொடுக்கின்றோம். எனினும், அவனுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை.

Tafseer