Skip to main content

وَلَمَنِ
யார்
ٱنتَصَرَ
பழிவாங்குவாரோ
بَعْدَ ظُلْمِهِۦ
தனக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர்
فَأُو۟لَٰٓئِكَ مَا
அவர்கள் மீது இல்லை
مِّن سَبِيلٍ
எவ்வித குற்றமும்

Wa lamanin tasara ba'da zulmihee fa ulaaa'ika maa 'alaihim min sabeel

எவரேனும் (தனக்கிழைக்கப்பட்ட) அநியாயத்திற்கு (அதே அளவு) பழிவாங்கினால், அதனால் அவர் மீது யாதொரு குற்றமுமில்லை.

Tafseer

إِنَّمَا ٱلسَّبِيلُ
குற்றமெல்லாம்
عَلَى ٱلَّذِينَ
அநியாயம் செய்பவர்கள் மீதும்
ٱلنَّاسَ
மக்களுக்கு
وَيَبْغُونَ
இன்னும் வரம்பு மீறுகிறார்கள்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
بِغَيْرِ ٱلْحَقِّۚ
அநியாயமாக
أُو۟لَٰٓئِكَ لَهُمْ
அவர்களுக்கு உண்டு
عَذَابٌ
வேதனை
أَلِيمٌ
வலிதரக்கூடியது

Innamas sabeelu 'alal lazeena yazlimoonan naasa wa yabghoona fil ardi bighairil haqq; ulaaa'ika lahum 'azaabun aleem

குற்றமெல்லாம் அளவு மீறி மனிதர்கள் மீது அநியாயம் செய்து, நியாயமின்றிப் பூமியில் கொடுமை செய்பவர்கள் மீதுதான். இத்தகையவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு.

Tafseer

وَلَمَن صَبَرَ
யார் பொறுமையாக இருப்பாரோ
وَغَفَرَ
இன்னும் மன்னிப்பாரோ
إِنَّ ذَٰلِكَ
நிச்சயமாக அது
لَمِنْ عَزْمِ
மிக வீரமான காரியங்களில் உள்ளதாகும்

Wa laman sabara wa ghafara inna zaalika lamin 'azmil umoor

எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக்கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக இது வீரமிக்க செயலாகும்.

Tafseer

وَمَن
யாரை
يُضْلِلِ
வழிகெடுத்தானோ
ٱللَّهُ
அல்லாஹ்
فَمَا
இல்லை
لَهُۥ
அவனுக்கு
مِن وَلِىٍّ
எந்தப் பாதுகாவலரும்
مِّنۢ بَعْدِهِۦۗ
அவனுக்குப் பிறகு
وَتَرَى
நீர் காண்பீர்!
ٱلظَّٰلِمِينَ
பாவிகளை
لَمَّا رَأَوُا۟
அவர்கள் பார்க்கும் போது
ٱلْعَذَابَ
வேதனையை
يَقُولُونَ
அவர்கள் கூறுவார்கள்
هَلْ إِلَىٰ
திரும்புவதற்கு உண்டா?
مِّن سَبِيلٍ
ஏதேனும் வழி

Wa mai yudlilil laahu famaa lahoo minw waliyyim mim ba'dih; wa taraz zaalimeena lammaa ra awul 'azaaba yaqooloona hal ilaa maraddim min sabeel

எவர்களையேனும் (அவர்களின் பாவத்தின் காரணமாக) அல்லாஹ் அவர்களைத் தவறான வழியில் விட்டுவிட்டால், அதற்குப் பின்னர் அவர்களை பாதுகாப்பவர் ஒருவரும் இருக்க மாட்டார். (நபியே!) வரம்பு மீறி அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் கண்ணால் கண்ட சமயத்தில் "இதிலிருந்து தப்ப ஏதேனும் வழி உண்டா?" என்று அவர்கள் கூறுவதை நீங்கள் காண்பீர்கள்.

Tafseer

وَتَرَىٰهُمْ
நீர் காண்பீர்/அவர்களை
يُعْرَضُونَ
சமர்ப்பிக்கப்படுவர்களாக
عَلَيْهَا
அதன் முன்
خَٰشِعِينَ
தலைகுனிந்தவர்களாக
مِنَ ٱلذُّلِّ
இழிவினால்
يَنظُرُونَ
அவர்கள் பார்ப்பார்கள்
مِن طَرْفٍ
பார்வையால்
خَفِىٍّۗ
திருட்டு
وَقَالَ
இன்னும் கூறுவார்கள்
ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்கள்
إِنَّ
நிச்சயமாக
ٱلْخَٰسِرِينَ
நஷ்டவாளிகள்
ٱلَّذِينَ خَسِرُوٓا۟
நஷ்டமிழைத்தவர்கள்தான்
أَنفُسَهُمْ
தங்களுக்கு(ம்)
وَأَهْلِيهِمْ
தங்கள்குடும்பத்திற்கும்
يَوْمَ ٱلْقِيَٰمَةِۗ
மறுமை நாளில்
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
إِنَّ
நிச்சயமாக
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
فِى عَذَابٍ
வேதனையில்
مُّقِيمٍ
நிலையான

Wa taraahum yu'radoona 'alaihaa khaashi'eena minazzulli yanzuroona min tarfin khaifiyy; wa qaalal lazeena aamanooo innal khaasireenal lazeena khasiroon anfusahum wa ahleehim Yawmal Qiyaamah; alaaa innaz zaalimeena fee'azaabim muqeem

அன்றி, சிறுமைப்பட்டுத் தலை கவிழ்ந்தவர்களாகவும், (வேதனையைக்) கடைக்கண்ணால் பார்த்தவண்ணம் அவர்களை நரகத்தின் முன் கொண்டு வரப்படுவதையும் நீங்கள் காண்பீர்கள். அன்றி, நம்பிக்கை கொண்டவர் (அவர்களை நோக்கி) "எவர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் (இம்மையில்) நஷ்டத்தைத் தேடிக்கொண்டார்களோ அவர்கள் மறுமையில் நிச்சயமாக முற்றிலும் நஷ்டத்தை அடைந்தவர்கள்தாம்" என்று கூறுவார்கள். நிச்சயமாக (இத்தகைய) அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் தங்கிவிடுவார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

Tafseer

وَمَا كَانَ
இருக்க மாட்டார்கள்
لَهُم
அவர்களுக்கு
مِّنْ أَوْلِيَآءَ
பாதுகாவலர்கள் யாரும்
يَنصُرُونَهُم
அவர்களுக்கு உதவுகின்ற(னர்)
مِّن دُونِ
அல்லாஹ்வையன்றி
وَمَن
யாரை
يُضْلِلِ
வழிகெடுப்பானோ
ٱللَّهُ
அல்லாஹ்
فَمَا لَهُۥ
அவருக்கு இல்லை
مِن سَبِيلٍ
எந்த வழியும்

Wa maa kaana lahum min awliyaaa'a yansuroonahum min doonil laah; wa mai yudlilil laahu famaa lahoo min sabeel

அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய யாதொரு நண்பரும் (அந்நாளில்) அவர்களுக்கு இருக்கமாட்டார். எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிடுகின்றானோ, அவர்களுக்கு(த் தப்ப) யாதொரு வழியுமில்லை.

Tafseer

ٱسْتَجِيبُوا۟
நீங்கள்பதில் அளியுங்கள்!
لِرَبِّكُم
உங்கள் இறைவனுக்கு
مِّن قَبْلِ
முன்
أَن يَأْتِىَ
வருவதற்கு
يَوْمٌ
ஒரு நாள்
لَّا مَرَدَّ
அறவே தடுத்துவிட முடியாது
لَهُۥ
அதை
مِنَ ٱللَّهِۚ
அல்லாஹ்விடமிருந்து
مَا لَكُم
உங்களுக்கு இருக்காது
مِّن مَّلْجَإٍ
ஒதுங்குமிடம் எதுவும்
يَوْمَئِذٍ
அந்நாளில்
وَمَا لَكُم
இன்னும் உங்களுக்கு இருக்க மாட்டார்
مِّن نَّكِيرٍ
தடுப்பவர் யாரும்

Istajeeboo li Rabbikum min qabli any yaatiya Yawmul laa maradda lahoo minal laah; maa lakum mim malja iny yawma'izinw wa maa lakum min nakeer

அல்லாஹ்விடமிருந்து தட்டிக்கழிக்க முடியாத ஒரு நாள் வருவதற்கு முன்னதாகவே, உங்கள் இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள். அந்நாளில் உங்களுக்குத் தப்புமிடம் கிடைக்காது. (உங்கள் குற்றத்தை) நீங்கள் மறுக்கவும் முடியாது.

Tafseer

فَإِنْ أَعْرَضُوا۟
அவர்கள் புறக்கணித்தால்
فَمَآ أَرْسَلْنَٰكَ
நாம் உம்மை அனுப்பவில்லை
عَلَيْهِمْ
அவர்கள் மீது
حَفِيظًاۖ
கண்காணிப்பவராக
إِنْ عَلَيْكَ
உம்மீது கடமை இல்லை
إِلَّا
தவிர
ٱلْبَلَٰغُۗ
எடுத்துரைப்பதை
وَإِنَّآ
நிச்சயமாக நாம்
إِذَآ أَذَقْنَا
சுவைக்க வைத்தால்
ٱلْإِنسَٰنَ
மனிதர்களுக்கு
مِنَّا
நம்மிடமிருந்து
رَحْمَةً
ஓர் அருளை
فَرِحَ
அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்(கள்)
بِهَاۖ
அதனால்
وَإِن تُصِبْهُمْ
அவர்களுக்கு ஏற்பட்டால்
سَيِّئَةٌۢ
ஒரு தீங்கு
بِمَا قَدَّمَتْ
முற்படுத்தியதால்
أَيْدِيهِمْ
அவர்களின் கரங்கள்
فَإِنَّ ٱلْإِنسَٰنَ
நிச்சயமாக மனிதன்
كَفُورٌ
மிகப்பெரிய நிராகரிப்பாளன்

Fa-in a'radoo famaaa arsalnaaka 'alaihim hafeezan in 'alaika illal balaagh; wa innaaa izaaa azaqnal insaana minnaa rahmatan fariha bihaa wa in tusibhum saiyi'atum bimaa qaddamat aydeehim fa innal insaana kafoor

(நபியே! இவ்வளவு விவரித்துக் கூறிய பின்னரும்) அவர்கள் (உங்களைப்) புறக்கணித்துவிட்டால், (அதைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். ஏனென்றால்,) அவர்களைப் பாதுகாப்பவராக நாம் உங்களை அனுப்பவில்லை. (அவர்களுக்கு நம்முடைய தூதை) எடுத்துரைப்பதைத் தவிர (வேறொன்றும்) உங்கள்மீது கடமை அல்ல. நம்முடைய அருளை மனிதன் சுவைக்கும்படி செய்தால், அதைப்பற்றி அவன் சந்தோஷப்படுகின்றான். அவனுடைய கரங்களே தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக அவனுக்கு யாதேனுமொரு தீங்கு ஏற்படும் பட்சத்தில், நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாகி (இறைவனையே நிராகரிக்கவும் தலைப்பட்டு) விடுகின்றான்.

Tafseer

لِّلَّهِ
அல்லாஹ்விற்கே
مُلْكُ
ஆட்சி
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِۚ
இன்னும் பூமி(யின்)
يَخْلُقُ
படைக்கின்றான்
مَا يَشَآءُۚ
தான் நாடுவதை
يَهَبُ
வழங்குகின்றான்
لِمَن يَشَآءُ
தான் நாடியவர்களுக்கு
إِنَٰثًا
பெண் பிள்ளைகளை
وَيَهَبُ
இன்னும் வழங்குகின்றான்
لِمَن يَشَآءُ
தான் நாடியவர்களுக்கு
ٱلذُّكُورَ
ஆண் பிள்ளைகளை

Lillaahi mulkus samaawaati wal ard; yakhluqu maa yashaaa'; yahabu limai yashaaa'u inaasanw wa yahabu limai yashaaa'uz zukoor

வானம், பூமி ஆகியவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக் குரியதே. இவற்றைத் தவிர, அவன் விரும்பியதையும் படைக்கின்றான். ஆகவே, அவன் விரும்பியவர்களுக்குப் பெண் சந்ததியை மட்டும் கொடுக்கின்றான். அவன் விரும்பியவர்களுக்கு ஆண் சந்ததியை மட்டும் கொடுக்கின்றான்.

Tafseer

أَوْ
அல்லது
يُزَوِّجُهُمْ
அவர்களுக்கு கலந்து கொடுக்கின்றான்
ذُكْرَانًا
ஆண் பிள்ளைகளை
وَإِنَٰثًاۖ
இன்னும் பெண் பிள்ளைகளை
وَيَجْعَلُ
இன்னும் ஆக்குகின்றான்
مَن يَشَآءُ
தான் நாடுகின்றவர்களை
عَقِيمًاۚ
மலடுகளாக
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
عَلِيمٌ
நன்கறிந்தவன்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Aw yuzawwijuhum zukraananw wa inaasanw wa yaj'alu mai yashaaa'u 'aqeemaa; innahoo 'Aleemun Qadeer

அல்லது ஆணையும் பெண்ணையும் கலந்தே கொடுக்கின்றான். அன்றி, அவன் விரும்பியவர்களை (சந்ததியற்ற) மலடாகவும் ஆக்கிவிடுகின்றான். நிச்சயமாக அவன் (அவரவர்களின் தகுதியை) நன்கறிந்தவனும், (தான் விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer