Skip to main content

أَمْ لَهُمْ
இவர்களுக்கு உண்டா?
شُرَكَٰٓؤُا۟
இணைதெய்வங்களும்
شَرَعُوا۟
சட்டமாக்(கு)கி(ன்ற)னர்
لَهُم
இவர்களுக்கு
مِّنَ ٱلدِّينِ
மார்க்கத்தில்
مَا لَمْ
எதை/அனுமதிக்கவில்லையோ
بِهِ
அதை
ٱللَّهُۚ
அல்லாஹ்
وَلَوْلَا كَلِمَةُ
தீர்ப்பின் வாக்கு மட்டும்/இல்லை என்றால்
لَقُضِىَ
தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்
بَيْنَهُمْۗ
அவர்களுக்கு மத்தியில்
وَإِنَّ
நிச்சயமாக
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
لَهُمْ
அவர்களுக்கு உண்டு
عَذَابٌ
வேதனை
أَلِيمٌ
வலி தரக்கூடியது

Am lahum shurakaaa'u shara'oo lahum minad deeni maa lam yaazam bihil laah; wa law laa kalimatul fasli laqudiya bainahum; wa innaz zaalimeena lahum 'azaabun aleem

அல்லாஹ் அனுமதிக்காத எதனையும் அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கக்கூடிய தெய்வங்களும் அவர்களுக்கு இருக்கின்றனவா? (ஒவ்வொரு செயலுக்கும் தக்க) கூலி கொடுப்பது மறுமையில்தான் என்று இறைவனுடைய தீர்மானம் ஏற்பட்டிருக்கா விடில், (இதுவரையில்) அவர்களுடைய காரியம் முடிவு பெற்றேயிருக்கும். நிச்சயமாக (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு.

Tafseer

تَرَى
நீர் பார்ப்பீர்!
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களை
مُشْفِقِينَ
பயந்தவர்களாக
مِمَّا كَسَبُوا۟
அவர்கள் செய்தவற்றின் காரணமாக
وَهُوَ وَاقِعٌۢ
அது நிகழ்ந்தே தீரும்
بِهِمْۗ
அவர்களுக்கு
وَٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
فِى رَوْضَاتِ
சோலைகளில்
ٱلْجَنَّاتِۖ
சொர்க்கங்களின்
لَهُم
அவர்களுக்கு உண்டு
مَّا يَشَآءُونَ
அவர்கள் நாடுகின்றவை
عِندَ رَبِّهِمْۚ
அவர்களின் இறைவனிடம்
ذَٰلِكَ هُوَ
இதுதான்
ٱلْفَضْلُ
சிறப்பாகும்
ٱلْكَبِيرُ
மிகப் பெரிய

Taraz zaalimeena mushfiqeena mimmaa kasaboo wa huwa waaqi'um bihim; wallazeena aamanoo wa 'amilus saalihaati fee rawdaatil jannaati lahum maa yashaaa'oona 'inda Rabbihim; zaalika huwal fadlul kabeer

(நபியே!) வரம்பு மீறிய இவர்கள், தங்கள் செயலின் காரணமாக(த் தங்களுக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என்று) பயந்து கொண்டிருப்பதை (அந்நாளில்) நீங்கள் காண்பீர்கள். அது அவர்களுக்குக் கிடைத்தே தீரும். எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ அவர்கள், சுவனபதிகளில் உள்ள பூங்காவனங்களில் இருப்பார்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் அவர்கள் இறைவனிடம் அவர்களுக்குக் கிடைக்கும். இதுதான் மிகப் பெரும் சிறப்பாகும்.

Tafseer

ذَٰلِكَ
இது
ٱلَّذِى يُبَشِّرُ
எது/நற்செய்தி கூறுகின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
عِبَادَهُ
தன் அடியார்களுக்கு
ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِۗ
நன்மைகளை
قُل
கூறுவீராக!
لَّآ أَسْـَٔلُكُمْ
நான் உங்களிடத்தில் கேட்கவில்லை
عَلَيْهِ
இதற்காக
أَجْرًا
எந்த கூலியையும்
إِلَّا ٱلْمَوَدَّةَ
அன்பைத் தவிர
فِى ٱلْقُرْبَىٰۗ
உறவினால் உள்ள
وَمَن يَقْتَرِفْ
யார் செய்வாரோ
حَسَنَةً
அழகிய அமலை
نَّزِدْ
அதிகப்படுத்துவோம்
لَهُۥ فِيهَا
அவருக்கு/அதில்
حُسْنًاۚ
அழகை
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
شَكُورٌ
நன்றியறிபவன்

Zaalikal lazee yubash shirul laahu 'ibaadahul lazeena aamanoo wa 'amilus saalihaat; qul laaa as'alukum 'alaihi ajran illal mawaddata fil qurbaa; wa mai yaqtarif hasanatan nazid lahoo feehaa husnaa; innal laaha Ghafoorun Shakoor

நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்த தன்னுடைய (நல்) அடியார்களுக்கு அல்லாஹ் நற்செய்தி கூறுவதும் இதுவே. (நபியே!) நீங்கள் கூறுங்கள்: இதற்காக நான் யாதொரு கூலியும் கேட்கவில்லை (என்று). "உறவினர்களை நேசிப்பதைத் தவிர, எவர் நற்செயல்களைத் தேடிக் கொள்கின்றாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் நன்மையை அதிகரிக்கச் செய்கின்றோம். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், நன்றியை(யும்) அங்கீகரிப்ப வனாகவும் இருக்கின்றான்.

Tafseer

أَمْ يَقُولُونَ
கூறுகிறார்களா?
ٱفْتَرَىٰ
இட்டுக்கட்டினார்
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
كَذِبًاۖ
பொய்யை
فَإِن يَشَإِ
நாடினால்
ٱللَّهُ
அல்லாஹ்
يَخْتِمْ
முத்திரையிட்டு விடுவான்
عَلَىٰ قَلْبِكَۗ
உமது உள்ளத்தின் மீது
وَيَمْحُ
இன்னும் அழித்துவிடுவான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْبَٰطِلَ
பொய்யை
وَيُحِقُّ
இன்னும் உறுதிப்படுத்துவான்
ٱلْحَقَّ
சத்தியத்தை
بِكَلِمَٰتِهِۦٓۚ
தனது கட்டளைகளைக் கொண்டு
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
بِذَاتِ ٱلصُّدُورِ
நெஞ்சங்களில் உள்ளதை

Am yaqooloonaf tara 'alal laahi kaziban fa-iny yasha il laahu yakhtim 'alaa qalbik; wa yamhul laahul baatila wa yuhiqqul haqqa bi Kalimaatih; innahoo 'Aleemum bizaatis sudoor

(நபியே!) அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்யைக் கற்பனை செய்து கூறுவதாக அவர்கள் (உங்களைப் பற்றிக்) கூறுகின்றனரா? (அவ்வாறாயின், நம்முடைய இவ்வேதத்தை அவர்களுக்கு நீங்கள் ஓதிக் காண்பிக்க முடியாதவாறு) அல்லாஹ் நாடினால், உங்களது உள்ளத்தின் மீது முத்திரையிட்டு இருப்பான். (ஆகவே, அவர் களுடைய இக்கூற்று முற்றிலும் தவறானதாகும்.) அல்லாஹ்வோ, பொய்யை அழித்துத் தன் வசனங்களைக் கொண்டே உண்மையை உறுதிப்படுத்துபவனாக இருக்கின்றான். நிச்சயமாக அவன், உள்ளங்களில் (ரகசியமாக) உள்ளவைகளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

Tafseer

وَهُوَ ٱلَّذِى
அவன்/ எப்படிப்பட்டவன்
يَقْبَلُ
ஏற்றுக்கொள்கிறான்
ٱلتَّوْبَةَ
திருந்துவதை
عَنْ عِبَادِهِۦ
தனது அடியார்களிடமிருந்து
وَيَعْفُوا۟
இன்னும் மன்னிக்கிறான்
عَنِ ٱلسَّيِّـَٔاتِ
பாவங்களை
وَيَعْلَمُ
இன்னும் நன்கறிகின்றான்
مَا تَفْعَلُونَ
நீங்கள் செய்வதை

Wa Huwal lazee yaqbalut tawbata 'an 'ibaadihee wa ya'foo 'anis saiyiaati wa ya'lamu maa taf'aloon

அவன்தான் தன் அடியார்களின் மன்னிப்புக்கோரலை அங்கீகரித்து(க் குற்றங்களையும்) மன்னித்து விடுகின்றான். நீங்கள் செய்பவைகளையும் அவன் நன்கறிகின்றான்.

Tafseer

وَيَسْتَجِيبُ
இன்னும் பதில் அளிக்கின்றான்
ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
وَيَزِيدُهُم
இன்னும் அதிகம் கொடுப்பான் அவர்களுக்கு
مِّن فَضْلِهِۦۚ
தனது அருளால்
وَٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்கள்
لَهُمْ
அவர்களுக்கு உண்டு
عَذَابٌ
வேதனை
شَدِيدٌ
கடுமையான(து)

Wa yastajeebul lazeena aamanoo wa 'amilu saalihaati wa yazeeduhum min fadlih; wal kaafiroona lahum 'azaabun shadeed

அன்றி, நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களின் பிரார்த்தனைகளையும் அங்கீகரித்து, அவர்களுக்குத் தன்னுடைய அருளைப் பின்னும் (பின்னும்) அதிகப்படுத்துகின்றான். நிராகரிப்பவர்களுக்குக் கடினமான வேதனைதான் கிடைக்கும்.

Tafseer

وَلَوْ بَسَطَ
விசாலமாக்கினால்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلرِّزْقَ
வாழ்வாதாரத்தை
لِعِبَادِهِۦ
தனது அடியார்களுக்கு
لَبَغَوْا۟
அவர்கள் எல்லை மீறி விடுவார்கள்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَلَٰكِن
என்றாலும்
يُنَزِّلُ
இறக்குகின்றான்
بِقَدَرٍ
அளவுடன்
مَّا يَشَآءُۚ
தான் நாடியதை
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
بِعِبَادِهِۦ
தன் அடியார்களை
خَبِيرٌۢ
ஆழ்ந்தறிபவன்
بَصِيرٌ
உற்று நோக்குபவன்

Wa law basatal laahur rizqa li'ibaadihee labaghaw fil ardi wa laakiny yunazzilu biqadarim maa yashaaa'; innahoo bi'ibaadihee Khabeerum Baseer

அல்லாஹ் தன் அடியார்களுக்கு (கூடுதல் குறைவின்றி) பொருளை விரித்து(க் கொடுத்து) விட்டால், அவர்கள் பூமியில் அநியாயம் செய்யத் தலைப்பட்டு விடுவார்கள். ஆகவே, (அவர்களின் தகுதிக்குத் தக்கவாறு)தான் விரும்பிய அளவே (அவர்களுக்குக்) கொடுத்து வருகின்றான். நிச்சயமாக அவன் தன் அடியார்களின் தன்மையை நன்கறிந்தவனும், (அவர்களுடைய செயலை) உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَهُوَ
அவன்தான்
ٱلَّذِى
எப்படிப்பட்டவன்
يُنَزِّلُ
இறக்குகின்றான்
ٱلْغَيْثَ
மழையை
مِنۢ بَعْدِ
அவர்கள் நிராசை அடைந்த பின்னர்
وَيَنشُرُ
இன்னும் பரப்புகின்றான்
رَحْمَتَهُۥۚ
தனது அருளை
وَهُوَ
அவன்தான்
ٱلْوَلِىُّ
பாதுகாவலன்
ٱلْحَمِيدُ
மகா புகழாளன்

Wa Huwal lazee yunazzilul ghaisa mim ba'di maa qanatoo wa yanshuru rahmatah; wa Huwal Waliyyul Hameed

(மனிதர்கள்) நம்பிக்கையிழந்ததன் பின்னரும், அவன்தான் மழையை இறக்கி வைத்துத் தன்னுடைய அருளை பொழிகின்றான். அவனே பாதுகாவலன்; புகழுக்குரியவன்.

Tafseer

وَمِنْ ءَايَٰتِهِۦ
அவனது அத்தாட்சிகளில்
خَلْقُ
படைத்திருப்பது
ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ
வானங்களையும் பூமியையும்
وَمَا بَثَّ
இன்னும் எவற்றை/பரத்தி இருக்கின்றானோ
فِيهِمَا
அவ்விரண்டில்
مِن دَآبَّةٍۚ
உயிரினங்களில் இருந்து
وَهُوَ عَلَىٰ
அவன் அவர்களை ஒன்று சேர்ப்பதற்கு
إِذَا يَشَآءُ
அவன் நாடுகின்றபோது
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Wa min Aayaatihee khalqus samaawaati wal ardi wa maa bassa feehimaa min daaabbah; wa Huwa 'alaa jam'ihim izaa yashaaa'u Qadeer

வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், அவைகளில் கால்நடை (முதலிய பல உயிரினங்)களை (ஆங்காங்கு) பரப்பி வைத்திருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைகளாகும். ஆகவே, அவன் விரும்பியபோது (மரணித்த பின்னரும்) அவைகளை ஒன்று சேர்க்க ஆற்றுலுடையவனாக இருக்கின்றான்.

Tafseer

وَمَآ أَصَٰبَكُم
எது/உங்களுக்கு ஏற்பட்டதோ
مِّن مُّصِيبَةٍ
சோதனைகளில்
فَبِمَا كَسَبَتْ
செய்தவற்றினால்தான்
أَيْدِيكُمْ
உங்கள் கரங்கள்
وَيَعْفُوا۟
இன்னும் மன்னித்துவிடுகிறான்
عَن كَثِيرٍ
அதிகமான தவறுகளை

Wa maaa asaabakum mim museebatin fabimaa kasabat aydeekum wa ya'foo 'an kaseer

யாதொரு தீங்கு உங்களை வந்தடைவதெல்லாம், உங்கள் கரங்கள் தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாகவேதான். ஆயினும், அவைகளில்) அனேகவற்றை அவன் மன்னித்து விடுகின்றான்.

Tafseer