Skip to main content

قُلْ
கூறுவீராக
أَنَدْعُوا۟
அழைப்போமா?
مِن دُونِ
அல்லாஹ்வைத் தவிர
مَا
எவற்றை
لَا يَنفَعُنَا
பலனளிக்காது/நமக்கு
وَلَا يَضُرُّنَا
இன்னும் தீங்கிழைக்காது/நமக்கு
وَنُرَدُّ
இன்னும் திருப்பப்படுவோம்
عَلَىٰٓ
மேல்
أَعْقَابِنَا
எங்கள் குதிங்கால்கள்
بَعْدَ إِذْ
பின்னர்/நேர்வழிப்படுத்தினான்/எங்களை
ٱللَّهُ
அல்லாஹ்
كَٱلَّذِى
ஒருவனைப்போன்று
ٱسْتَهْوَتْهُ
வழிதவறச் செய்தன/ அவனை
ٱلشَّيَٰطِينُ
ஷைத்தான்கள்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
حَيْرَانَ
திகைத்தவனாக
لَهُۥٓ
அவனுக்கு
أَصْحَٰبٌ
நண்பர்கள்
يَدْعُونَهُۥٓ
அழைக்கிறார்கள்/அவனை
إِلَى ٱلْهُدَى
பக்கம்/நேர்வழி
ٱئْتِنَاۗ
எங்களிடம் வா
قُلْ
கூறுவீராக
إِنَّ
நிச்சயமாக
هُدَى
நேர்வழி
ٱللَّهِ
அல்லாஹ்வின்
هُوَ
அதுதான்
ٱلْهُدَىٰۖ
நேர்வழி
وَأُمِرْنَا
கட்டளையிடப்பட்டோம்
لِنُسْلِمَ
நாங்கள் பணிந்துவிட
لِرَبِّ
இறைவனுக்கே
ٱلْعَٰلَمِينَ
அகிலத்தார்களின்

Qul anad'oo min doonil laahi maa laa yanfa'unaa wa laa yadurrunaa wa nuraddu 'alaaa a'qaabina ba'da iz hadaanal laahu kallazis tahwat hush Shayaateenu fil ardi hairaana lahooo ashaabuny yad'oo nahooo ilal huda' tinaa; qul inna hudal laahi huwal hudaa wa umirnaa linuslima li Rabbil 'aalameen

(நபியே!) நீங்கள் கேளுங்கள்: "அல்லாஹ்வை விட்டுவிட்டு நமக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய சக்தி அற்றவைகளையா நாம் அழைப்போம்? அல்லாஹ் நம்மை நேரான வழியில் செலுத்திய பின்னரும் (நாம்) நம் பின்புறமே திரும்பி விடுவோமா? (அவ்வாறாயின்) ஒருவனுக்கு நேரான வழியில் அழைக்கக்கூடிய நண்பர்கள் இருந்து அவனை அவர்கள் "தம்மிடம் வா" என அழைத்துக் கொண்டிருக்க, அவன் (அவ்வழியில் செல்லாது) ஷைத்தானுடைய ஏமாற்றத்தில் சிக்கி, பூமியில் தட்டழிந்து திரிபவனாக ஆகிவிட்டானோ அவனுக்கு ஒப்பானவர்களாகி விடுவோம்." (மேலும்) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக அல்லாஹ்வின் வழிதான் நேரான வழி. உலகத்தார் அனைவரின் இறைவனாகிய அவனுக்கே முற்றிலும் தலைசாய்க்க வேண்டும் என நாங்கள் கட்டளையிடப்பட்டுள்ளோம்."

Tafseer

وَأَنْ أَقِيمُوا۟
இன்னும் நிலைநிறுத்துங்கள்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَٱتَّقُوهُۚ
இன்னும் அவனைஅஞ்சுங்கள்
وَهُوَ
அவன்
ٱلَّذِىٓ
எவன்
إِلَيْهِ
அவன் பக்கம் தான்
تُحْشَرُونَ
ஒன்று திரட்டப்படுவீர்கள்

Wa an aqeemus Salaata wattaqooh; wa Hual lazeee ilaihi tuhsharoon

"(அன்றி) தொழுகையைக் கடைப்பிடித்தொழுகும்படியும், அவனுக்கே பயப்படும்படியும் (ஏவப்பட்டுள்ளோம்.) அவனிடம்தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்" (என்றும் கூறுங்கள்.)

Tafseer

وَهُوَ
அவன்தான்
ٱلَّذِى
எவன்
خَلَقَ
படைத்தான்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
وَٱلْأَرْضَ
இன்னும் பூமியை
بِٱلْحَقِّۖ
உண்மையில்
وَيَوْمَ
இன்னும் நாள்
يَقُولُ
கூறுவான்
كُن
ஆகுக!
فَيَكُونُۚ
உடனே ஆகிவிடும்
قَوْلُهُ
அவனுடைய சொல்தான்
ٱلْحَقُّۚ
உண்மை
وَلَهُ
இன்னும் அவனுக்கே
ٱلْمُلْكُ
ஆட்சி
يَوْمَ
நாளில்
يُنفَخُ
ஊதப்படும்
فِى ٱلصُّورِۚ
சூரில்
عَٰلِمُ
அறிந்தவன்
ٱلْغَيْبِ
மறைவானதை
وَٱلشَّهَٰدَةِۚ
வெளிப்படையானதை
وَهُوَ
அவன்தான்
ٱلْحَكِيمُ
ஞானவான்
ٱلْخَبِيرُ
ஆழ்ந்தறிபவன்

Wa an Huwal lazee khalaqas samaawaati wal arda bilhaqq; wa Yawma yaqoolu kun fa yakoon; Qawluhul haqq; wa lahul mulku Yawma yunfakhu fis Soor; 'Aalimul Ghaibi wash shahaadah; wa Huwal Hakeemul Khabeer

வானங்களையும், பூமியையும் படைத்தவன் உண்மையாகவே அவன்தான். (அவன் யாதொன்றை படைக்கக் கருதும்போது) "ஆகுக!" என அவன் கூறுவதுதான் (தாமதம்.) உடனே (அது) ஆகிவிடும். அவனுடைய சொல்தான் உண்மை. சூர் (எக்காளம்) ஊதப்படும் நாளில், அதிகாரம் அவன் ஒருவனுடையதாகவே இருக்கும். மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானமுடையவனாகவும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَإِذْ قَالَ
கூறிய சமயத்தை
إِبْرَٰهِيمُ
இப்றாஹீம்
لِأَبِيهِ
தன் தந்தைக்கு
ءَازَرَ
ஆஸர்
أَتَتَّخِذُ
எடுத்துக்கொள்கிறீரா?
أَصْنَامًا
சிலைகளை
ءَالِهَةًۖ
வணங்கப்படும் தெய்வங்களாக
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَرَىٰكَ
காண்கிறேன்/உம்மை
وَقَوْمَكَ
இன்னும் உம் சமுதாயம்
فِى ضَلَٰلٍ
வழிகேட்டில்
مُّبِينٍ
தெளிவானது

Wa iz qaala Ibraaheemu li abeehi Aazara a-tattakhizu asnaaman aalihatan inneee araaka wa qawmaka fee dalaalim mmubeen

இப்ராஹீம் தன் தந்தையாகிய ஆஜரை நோக்கி "நீங்கள் சிலைகளைத் தெய்வங்களாக எடுத்துக் கொண்டீர்களா?" என்று கேட்டு "நிச்சயமாக நீங்களும் உங்களுடைய மக்களும் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை நான் காண்கிறேன்" என்று கூறினார்.

Tafseer

وَكَذَٰلِكَ
இவ்வாறுதான்
نُرِىٓ
காண்பித்தோம்
إِبْرَٰهِيمَ
இப்றாஹீமுக்கு
مَلَكُوتَ
பேராட்சியை
ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ
வானங்கள்/இன்னும் பூமியின்
وَلِيَكُونَ
இன்னும் அவர்ஆவதற்காக
مِنَ ٱلْمُوقِنِينَ
உறுதியான நம்பிக்கை உடையவர்களில்

Wa kazaalika nureee Ibraaheema malakootas samaawaati wal ardi wa liyakoona minal mooqineen

இப்ராஹீம் உறுதியான நம்பிக்கையுடையவர்களில் ஆவதற்காக வானங்களிலும், பூமியிலுமுள்ள (நம்முடைய) ஆட்சிகளை நாம் அவருக்கு இவ்வாறு காண்பித்து வந்தோம்.

Tafseer

فَلَمَّا
போது
جَنَّ
சூழ்ந்தது
عَلَيْهِ
அவர் மீது
ٱلَّيْلُ
இரவு
رَءَا
கண்டார்
كَوْكَبًاۖ
ஒரு நட்சத்திரத்தை
قَالَ
கூறினார்
هَٰذَا
இது
رَبِّىۖ
என் இறைவன்
فَلَمَّآ
போது
أَفَلَ
மறைந்தது
قَالَ
கூறினார்
لَآ أُحِبُّ
விரும்ப மாட்டேன்
ٱلْءَافِلِينَ
மறையக் கூடியவற்றை

Falammaa janna 'alaihil lailu ra aa kawkabaan qaala haaza Rabbee falammaaa afala qaala laaa uhibbul aafileen

(ஒரு நாள்) இருள் சூழ்ந்த இரவில் அவர் (மின்னிக் கொண்டிருந்த) ஒரு நட்சத்திரத்தைக் கண்டு "இது என்னுடைய இறைவன் (ஆகுமா?)" என (தம் மக்களைக்) கேட்டு அது மறையவே, "மறையக்கூடியவற்றை (இறைவனாக எடுத்துக்கொள்ள) நான் விரும்பமாட்டேன்" எனக் கூறிவிட்டார்.

Tafseer

فَلَمَّا
போது
رَءَا
கண்டார்
ٱلْقَمَرَ
சந்திரனை
بَازِغًا
உதயமாகிய
قَالَ
கூறினார்
هَٰذَا
இது
رَبِّىۖ
என் இறைவன்
فَلَمَّآ
போது
أَفَلَ
மறைந்தது
قَالَ
கூறினார்
لَئِن لَّمْ
நேர் வழிபடுத்தாவிட்டால்/என்னை
رَبِّى
என் இறைவன்
لَأَكُونَنَّ
நிச்சயமாக ஆகிவிடுவேன்
مِنَ ٱلْقَوْمِ
சமுதாயத்தில்
ٱلضَّآلِّينَ
வழிகெட்டவர்கள்

Falammmaa ra al qamara baazighan qaala haazaa Rabbee falammmmaaa afala qaala la'il lam yahdinee Rabbee la akoonanna minal qawmid daaalleen

பின்னர் உதயமான சந்திரனைக் காணவே "இது என்னுடைய இறைவன் (ஆகுமா?)" எனக் கேட்டு, அதுவும் அஸ்தமித்து மறையவே (அதனையும் நிராகரித்துவிட்டு) "எனது இறைவன் எனக்கு நேரான வழியை அறிவிக்காவிட்டால் வழி தவறிய மக்களில் நிச்சயமாக நானும் ஒருவனாகிவிடுவேன்" என்று கூறினார்.

Tafseer

فَلَمَّا
போது
رَءَا
கண்டார்
ٱلشَّمْسَ
சூரியனை
بَازِغَةً
உதயமாகிய
قَالَ
கூறினார்
هَٰذَا رَبِّى
இது/என் இறைவன்
هَٰذَآ
இது
أَكْبَرُۖ
மிகப் பெரியது
فَلَمَّآ
போது
أَفَلَتْ
மறைந்தது
قَالَ
கூறினார்
يَٰقَوْمِ
என் சமுதாயமே
إِنِّى
நிச்சயமாக நான்
بَرِىٓءٌ
விலகியவன்
مِّمَّا تُشْرِكُونَ
எவற்றிலிருந்து/இணைவைக்கிறீர்கள்

Falammmaa ra ashshamsa baazighatan qaala haazaa Rabbee haazaaa akbaru falammaaa afalat qaala yaa qawmi innee bareee'um mimmaa tushrikoon

பின்னர் உதயமான (பளிச்சென்று நன்கு ஒளிரும்) சூரியனைக் கண்டபொழுது "இது மிகப்பெரியதாயிருக்கிறது. இது என்னுடைய இறைவன் (ஆகுமா?)" எனக் கேட்டு, அதுவும் அஸ்தமித்து மறையவே அவர் (தம் மக்களை நோக்கி) "என் மக்களே! நீங்கள் (இறைவனுக்கு) இணையாக்கும் (இவை) ஒவ்வொன்றிலிருந்தும் நிச்சயமாக நான் விலகிக்கொண்டேன்" என்று கூறிவிட்டு,

Tafseer

إِنِّى
நிச்சயமாக நான்
وَجَّهْتُ
முன்னோக்க வைத்தேன்
وَجْهِىَ
என் முகத்தை
لِلَّذِى
எவன் பக்கம்
فَطَرَ
படைத்தான்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
وَٱلْأَرْضَ
இன்னும் பூமியை
حَنِيفًاۖ
உறுதியுடையவனாக
وَمَآ
இல்லை
أَنَا۠
நான்
مِنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்

Innnee wajjahtu wajhiya lillazee fataras samaawaati wal arda haneefanw wa maaa ana minal mushrikeen

"வானங்களையும் பூமியையும் எவன் படைத்தானோ அ(ந்த ஒரு)வனின் பக்கமே நிச்சயமாக நான் முற்றிலும் நோக்குகிறேன். நான் (அவனுக்கு எதனையும்) இணை வைப்பவன் அல்ல" (என்று கூறினார்.)

Tafseer

وَحَآجَّهُۥ
தர்க்கித்தனர்/அவருடன்
قَوْمُهُۥۚ
சமுதாயத்தினர்/அவருடைய
قَالَ
கூறினார்
أَتُحَٰٓجُّوٓنِّى
தர்க்கிக்கிறீர்கள்/என்னுடன்
فِى ٱللَّهِ
அல்லாஹ்வை பற்றி
وَقَدْ هَدَىٰنِۚ
நேர்வழி காட்டிவிட்டான்/எனக்கு
وَلَآ أَخَافُ
இன்னும் பயப்பட மாட்டேன்
مَا
எதை
تُشْرِكُونَ
இணைவைக்கிறீர்கள்
بِهِۦٓ
அவனுக்கு
إِلَّآ أَن
தவிர/நாடினால்
رَبِّى
என் இறைவன்
شَيْـًٔاۗ
எதையும்
وَسِعَ
விசாலமானது
رَبِّى
என் இறைவ(னி)ன்
كُلَّ شَىْءٍ
எல்லாவற்றையும்
عِلْمًاۗ
அறிவு
أَفَلَا تَتَذَكَّرُونَ
நீங்கள் நல்லுபதேசம் பெறவேண்டாமா?

Wa haaajjahoo qawmuh; qaala a-tuh aaajjooonnnee fillaahi wa qad hadaan; wa laaa akhaafu mmaa tushrikoona bihee illaaa ai yashaaa'a Rabbee shai'anw wasi'a Rabbee kulla shai'in 'ilman afalaa tatazakkaroon

(இதைப் பற்றி) அவருடன் அவருடைய மக்கள் தர்க்கித்தார்கள். அதற்கு அவர் (அவர்களை நோக்கிக்) கூறினார்: "நீங்கள் (படைப்பவனாகிய) அல்லாஹ்வைப் பற்றியா என்னுடன் தர்க்கிக்கின்றீர்கள்? நிச்சயமாக அவன் எனக்கு நேரான வழியை அறிவித்து விட்டான். என் இறைவன் யாதொன்றை விரும்பினாலன்றி நீங்கள் இணைவைத்து வணங்குபவை(கள் எனக்கு யாதொரு தீங்கும் செய்துவிட முடியாது. ஆகவே அவை)களுக்கு நான் பயப்பட மாட்டேன். என் இறைவன் அனைவரையும் விட கல்வியில் மிக்க விசாலமானவன். (இவ்வளவுகூட) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

Tafseer