Skip to main content
bismillah

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
நபியே!
لِمَ تُحَرِّمُ
நீர் ஏன் விலக்கிக் கொள்கிறீர்
مَآ أَحَلَّ
ஆகுமாக்கியதை
ٱللَّهُ
அல்லாஹ்
لَكَۖ
உமக்கு
تَبْتَغِى
நாடுகிறீர்
مَرْضَاتَ
பொருத்தத்தை
أَزْوَٰجِكَۚ
உமது மனைவிகளின்
وَٱللَّهُ
அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
மகா கருணையாளன்

Yaaa ayyuhan nabiyyu lima tuharrimu maaa ahallal laahu laka tabtaghee mardaata azwaajik; wallaahu ghafoorur raheem

நபியே! நீங்கள் உங்களுடைய மனைவிகளின் திருப்தியைக் கருதி, அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்த பொருள்களை (உபயோகிப்பது இல்லை என்று) நீங்கள் ஏன் (சத்தியம் செய்து அதனை ஹராம் என்று) விலக்கிக்கொண்டீர்கள்? அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

قَدْ
திட்டமாக
فَرَضَ
கடமையாக்கியுள்ளான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَكُمْ
உங்களுக்கு
تَحِلَّةَ
முறிப்பதை
أَيْمَٰنِكُمْۚ
உங்கள் சத்தியங்களை
وَٱللَّهُ
அல்லாஹ்தான்
مَوْلَىٰكُمْۖ
உங்கள் எஜமானன்
وَهُوَ
அவன்தான்
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்

Qad faradal laahu lakum tahillata aymaanikum; wallaahu mawlaakum wa huwal'aleemul hakeem

ஆகவே, உங்களுடைய அந்தச் சத்தியத்திற்கு (நீங்கள் பரிகாரம் கொடுத்து) அதனை நீக்கிவிடுமாறு நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகின்றான். அல்லாஹ்தான் உங்களது எஜமானன். அவன் (அனைவரையும்) நன்கறிந்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَإِذْ أَسَرَّ
இரகசியமாக பேசியபோது/நபி
إِلَىٰ بَعْضِ
சிலரிடம்
أَزْوَٰجِهِۦ
தனது மனைவிமார்களில்
حَدِيثًا
ஒரு பேச்சை
فَلَمَّا نَبَّأَتْ
அவள் அறிவித்து விட்டபோது/அதை
وَأَظْهَرَهُ
இன்னும் அதை வெளிப்படுத்தினான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَيْهِ
அவருக்கு
عَرَّفَ
அவர் அறிவித்தார்
بَعْضَهُۥ
அதில் சிலவற்றை
وَأَعْرَضَ
இன்னும் புறக்கணித்து விட்டார்
عَنۢ بَعْضٍۖ
சிலவற்றை
فَلَمَّا نَبَّأَهَا
அவர் அவளுக்கு அறிவித்த போது/அதை
قَالَتْ
அவள் கூறினாள்
مَنْ
யார்
أَنۢبَأَكَ
உமக்கு அறிவித்தார்
هَٰذَاۖ
இதை
قَالَ
அவர் கூறினார்
نَبَّأَنِىَ
எனக்கு அறிவித்தான்
ٱلْعَلِيمُ
நன்கறிபவன்
ٱلْخَبِيرُ
ஆழ்ந்தறிபவன்

Wa iz asarran nabiyyu ilaa ba'di azwaajihee hadeesan falammaa nabba at bihee wa azharahul laahu 'alaihi 'arrafa ba'dahoo wa a'rada 'am ba'din falammaa nabba ahaa bihee qaalat man amba aka haaza qaala nabba aniyal 'aleemul khabeer

(நமது) நபி தன்னுடைய மனைவிகளில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகக் கூறிய சமயத்தில், அப்பெண் அதனை (மற்றொரு மனைவிக்கு) அறிவித்துவிட்டார். அதனை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கித் தந்தான். நபி (அதில்) சிலவற்றை (அம்மனைவிக்கு) அறிவித்துச் சிலவற்றை (அறிவிக்காது) புறக்கணித்து விட்டார். (இவ்வாறு) நபி தன் மனைவிக்கு அறிவிக்கவே, அம்மனைவி "இதனை உங்களுக்கு அறிவித்தவர் யார்?" எனக் கேட்டார். அதற்கு அவர் "(அனைத்தையும்) நன்கறிந்து தெரிந்தவனே அதனை எனக்கு அறிவித்தான்" என்று கூறினார்கள்.

Tafseer

إِن تَتُوبَآ
நீங்கள் இருவரும் திரும்பிவிட்டால்
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்
فَقَدْ
ஏனெனில், திட்டமாக
صَغَتْ
சாய்ந்து விட்டன
قُلُوبُكُمَاۖ
உங்கள் இருவரின் உள்ளங்களும்
وَإِن تَظَٰهَرَا
நீங்கள் இருவரும் உதவினால்
عَلَيْهِ
அவருக்கு எதிராக
فَإِنَّ ٱللَّهَ
ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான்
مَوْلَىٰهُ
அவருக்குப் பாதுகாவலன்
وَجِبْرِيلُ
இன்னும் ஜிப்ரீலும்
وَصَٰلِحُ ٱلْمُؤْمِنِينَۖ
இன்னும் நல்ல முஃமின்களும்
وَٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்களும்
بَعْدَ ذَٰلِكَ
இதற்குப் பின்னர்
ظَهِيرٌ
உதவியாளர்கள்

In tatoobaaa ilal laahi faqad saghat quloobukumaa wa in tazaaharaa 'alihi fa innal laaha huwa mawlaahu wa jibreelu wa saalihul mu'mineen; walma laaa'ikatu ba'dazaalika zaheer

(நபியுடைய அவ்விரு மனைவிகளே!) நீங்கள் இருவரும் (உங்கள் குற்றங்களைப் பற்றி) அல்லாஹ்வின் பக்கம் கைசேதப்பட்டு மன்னிப்புக் கோரி மீண்டுவிட்டால் (அது உங்களுக்கே நன்று. ஏனென்றால்,) உங்கள் இருவரின் உள்ளங்கள் (நேரான வழியில் இருந்து) சாய்ந்துவிட்டன. ஆகவே, நீங்கள் இருவரும் அவருக்கு விரோதமாக ஒன்று சேர்ந்தால், நிச்சயமாக அல்லாஹ் அவரை பாதுகாப்பவனாக இருக்கின்றான். அன்றி, ஜிப்ரயீலும், நம்பிக்கை யாளர்களிலுள்ள நல்லடியார்களும், இவர்களுடன் (மற்ற) மலக்குகளும் (அவருக்கு) உதவியாக இருப்பார்கள்.

Tafseer

عَسَىٰ رَبُّهُۥٓ
கூடும்/அவருடைய இறைவன்
إِن طَلَّقَكُنَّ
அவர் உங்களை விவாகரத்து செய்து விட்டால்
أَن يُبْدِلَهُۥٓ
அவருக்கு பகரமாக வழங்குவான்
أَزْوَٰجًا
மனைவிகளை
خَيْرًا
சிறந்தவர்களான
مِّنكُنَّ
உங்களை விட
مُسْلِمَٰتٍ
முற்றிலும் பணியக்கூடிய
مُّؤْمِنَٰتٍ
நம்பிக்கை கொள்ளக்கூடிய
قَٰنِتَٰتٍ
கீழ்ப்படியக்கூடிய
تَٰٓئِبَٰتٍ
வணக்க வழிபாடு செய்யக்கூடிய
عَٰبِدَٰتٍ
வணக்க வழிபாடு செய்யக்கூடிய
سَٰٓئِحَٰتٍ
நோன்பு நோற்கக்கூடிய
ثَيِّبَٰتٍ
கன்னி கழிந்தவர்களும்
وَأَبْكَارًا
கன்னிகளும்

'Asaa rabbuhooo in tallaqakunna anyyubdilahooo azwaajan khairam mnkunna muslimaatim mu'minaatin qaanitaatin taaa'ibaatin 'aabidaatin saaa'ihaatin saiyibaatinw wa abkaaraa

நபி உங்களை "தலாக்" கூறி (விலக்கி) விட்டால், உங்களைவிட மேலான பெண்கள் பலரை அவருடைய இறைவன் அவருக்கு மனைவியாக்கி வைக்க முடியும். (மனைவியாக வரக்கூடிய அப்பெண்களோ) முஸ்லிமானவர்களாகவும், நம்பிக்கைக் கொண்டவர்களாகவும், (இறைவனுக்குப்) பயந்து (நமது நபிக்கு கட்டுப்பட்டு) நடக்கக் கூடியவர்களாகவும், (பாவத்தைவிட்டு) விலகியவர்களாகவும், (இறைவனை) வணங்குபவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், கன்னியர்களாகவும், கன்னியர் அல்லாதவர்களாகவும் இருப்பார்கள். (இதனால் உங்களுக்குத்தான் நஷ்டம்.)

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
قُوٓا۟
பாதுகாத்துக் கொள்ளுங்கள்
أَنفُسَكُمْ
உங்களையும்
وَأَهْلِيكُمْ
உங்கள் குடும்பத்தாரையும்
نَارًا
நரகத்தைவிட்டு
وَقُودُهَا
அதன் எரிபொருள்
ٱلنَّاسُ وَٱلْحِجَارَةُ
மக்களும்/கற்களும்
عَلَيْهَا
அவற்றின் மீது
مَلَٰٓئِكَةٌ
வானவர்கள்
غِلَاظٌ
முரடர்களாக
شِدَادٌ
கடுமையானவர்களான
لَّا يَعْصُونَ
மாறு செய்யமாட்டார்கள்
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
مَآ أَمَرَهُمْ
அவன் அவர்களுக்கு ஏவியதில்/இன்னும் செய்வார்கள்
مَا يُؤْمَرُونَ
அவர்கள் எதற்கு ஏவப்பட்டார்களோ

Yaaa ayyuhal lazeena samanoo qooo anfusakum wa ahleekum naaranw waqoodu han naasu wal hijaaratu 'alaihaa malaaa'ikatun ghilaazun shidaadul laa ya'soonal laaha maa amarahum wa yaf'aloona maa yu'maroon

நம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதனுடைய எரிகட்டை, மனிதர்களும் கற்களுமாகும். அதில் கடின சித்தமுடைய பலசாலிகளான மலக்குகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு ஏவியதில் ஒரு சிறிதும் மாறுசெய்ய மாட்டார்கள். அவர்கள் (வேதனை செய்யுமாறு) தங்களுக்கிடப்பட்ட கட்டளைகளையே செய்து வருவார்கள்..

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நிராகரித்தவர்களே!
لَا تَعْتَذِرُوا۟
நீங்கள் காரணம் கூறாதீர்கள்
ٱلْيَوْمَۖ
இன்று
إِنَّمَا تُجْزَوْنَ
நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம்
مَا كُنتُمْ
நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குத்தான்

Yaaa ayyuhal lazeena kafaroo la ta'tazinul yawma innamaa tujzawna maa kuntum ta'maloon

(அந்நாளில் நிராகரிப்பவர்களை நோக்கி) "நிராகரிப்பவர்களே! இன்றைய தினம் நீங்கள் (வீண்) புகல் கூறாதீர்கள். நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம், நீங்கள் செய்தவைகளுக்குத்தான். (நீங்கள் செய்யாதவைகளுக்கு அன்று" என்று கூறப்படும்)

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
تُوبُوٓا۟
திரும்புங்கள்
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்
تَوْبَةً
பாவமன்னிப்புக் கேட்டு
نَّصُوحًا
உண்மையாக
عَسَىٰ رَبُّكُمْ
கூடும்/உங்கள் இறைவன்
أَن يُكَفِّرَ
போக்குவதற்கு
عَنكُمْ
உங்களை விட்டும்
سَيِّـَٔاتِكُمْ
உங்கள் பாவங்களை
وَيُدْخِلَكُمْ
இன்னும் உங்களை பிரவேசிக்க வைப்பான்
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
تَجْرِى
ஓடும்
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
يَوْمَ
அந்நாளில்
لَا يُخْزِى
கேவலப்படுத்த மாட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلنَّبِىَّ
நபியையும்
وَٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களையும்/அவருடன்
نُورُهُمْ
அவர்களின் ஒளி
يَسْعَىٰ
விரைந்து வரும்
بَيْنَ أَيْدِيهِمْ
அவர்களுக்கு முன்னும்
وَبِأَيْمَٰنِهِمْ
அவர்களின் வலப்பக்கங்களிலும்
يَقُولُونَ
கூறுவார்கள்
رَبَّنَآ
எங்கள் இறைவா!
أَتْمِمْ
முழுமையாக்கு!
لَنَا
எங்களுக்கு
نُورَنَا
எங்கள் ஒளியை
وَٱغْفِرْ لَنَآۖ
இன்னும் எங்களை மன்னிப்பாயாக!
إِنَّكَ
நிச்சயமாக நீ
عَلَىٰ كُلِّ
எல்லாப் பொருள்கள் மீதும்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Yaaa ayyuhal lazeena aammano toobooo ilal laahi tawbatan nasoohan 'asaa rabbukum any-yukaffira 'ankum sayyi aatikum wa yudkhilakum jannaatin tajree min tahtihal anhaaru yawma laa yukhzil laahun nabiyya wallazeena aamanoo ma'ahoo nooruhum yas'aa baina aydeehim wa bi aymaanihim yaqooloona rabbanaaa atmim lanaa nooranaa waghfir lana innaka 'alaa kulli shai'in qadeer

நம்பிக்கையாளர்களே! நீங்கள் கலப்பற்ற மனதுடன் (பாவத்தி லிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். உங்கள் இறைவனோ உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி, (மன்னித்து) சுவனபதியிலும் உங்களைப் புகுத்திவிடுவான். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும். (தன்னுடைய) நபியையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். அந்நாளில், இவர்களுடைய பிரகாசம் இவர்களுக்கு முன்னும், இவர்களுடைய வலது பக்கத்திலும் ஊடுருவிச் சென்று கொண்டிருக்கும். இவர்கள் "எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை (அணையாது) நீ பரிபூரணமாக்கி வை. எங்களுடைய குற்றங்களையும் நீ மன்னித்து அருள்புரி. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன்" என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
நபியே!
جَٰهِدِ
ஜிஹாது செய்வீராக
ٱلْكُفَّارَ
நிராகரிப்பாளர்களிடமும்
وَٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகர்களிடமும்
وَٱغْلُظْ
இன்னும் கடுமை காட்டுவீராக
عَلَيْهِمْۚ
அவர்களிடம்
وَمَأْوَىٰهُمْ
அவர்களின் தங்குமிடம்
جَهَنَّمُۖ
நரகம்தான்
وَبِئْسَ
மிகக் கெட்டதாகும்
ٱلْمَصِيرُ
மீளுமிடங்களில்

yaaa ayyuuhan nabiyyu jaahidil kuffaara walmunaa-fiqeena waghluz 'alaihim; wa maawaahum jahannamu wa bi'sal maseer

நபியே! (இந்த) நிராகரிப்பவர்களுடன் (வாளைக் கொண்டும், இந்த) நயவஞ்சகர்களுடன் (தர்க்கத்தைக் கொண்டும்) போர் புரியுங்கள். அவர்களுக்கு நீங்கள் (தாட்சண்யம் காட்டாது) கடுமையாகவே இருங்கள். அவர்கள் செல்லுமிடம் நரகம்தான்; அது மகாகெட்ட சேரும் இடம்.

Tafseer

ضَرَبَ
விவரிக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
مَثَلًا
ஓர் உதாரணமாக
لِّلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களுக்கு
ٱمْرَأَتَ
மனைவியையும்
نُوحٍ
நூஹூடைய
وَٱمْرَأَتَ
மனைவியையும்
لُوطٍۖ
லூத்துடைய
كَانَتَا
இருவரும் இருந்தனர்
تَحْتَ
கீழ்
عَبْدَيْنِ
இரு அடியார்களுக்கு
مِنْ عِبَادِنَا
நமது அடியார்களில்
صَٰلِحَيْنِ
நல்ல(வர்கள்)
فَخَانَتَاهُمَا
அவ்விருவரும் அவ்விருவருக்கும் மோசடி செய்தனர்
فَلَمْ يُغْنِيَا
ஆகவே, அவ்விருவரும் தடுக்கவில்லை
عَنْهُمَا
அவ்விருவரைவிட்டும்
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
شَيْـًٔا وَقِيلَ
எதையும்/கூறப்பட்டது
ٱدْخُلَا
நீங்கள் இருவரும் நுழையுங்கள்
ٱلنَّارَ
நரகத்தில்
مَعَ ٱلدَّٰخِلِينَ
நுழைபவர்களுடன்

Darabal laahu masalal lillazeena kafarum ra ata Noobinw wamra ata Loot, kaanataa tahta 'abdaini min 'ibaadinaa saalihaini fakhaanataahumaa falam yughniyaa 'anhumaa minal laahi shai anw-wa qeelad khulan naara ma'ad Daakhileen

நிராகரிக்கும் பெண்களுக்கு, நூஹ் நபியினுடைய மனைவியையும், லூத் நபியினுடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கின்றான். இவ்விரு பெண்களும், நம் அடியார்களில் இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர். எனினும், இவ்விரு பெண்களும் தங்கள் கணவன் மார்களுக்குத் துரோகம் செய்தனர். (ஆகவே, இவர்களிருவரும் நபிமார்களின் மனைவிகளாயிருந்தும்) அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து யாதொன்றையும் தடுத்துக்கொள்ள முடியவில்லை. (இவர்கள் துரோகம் செய்ததன் காரணமாக இவர்களை நோக்கி) "நரகத்தில் புகுபவர்களுடன் நீங்கள் இருவரும் புகுங்கள்" என்றே கூறப்பட்டது.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துத் தஹ்ரீம்
القرآن الكريم:التحريم
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):At-Tahrim
ஸூரா:66
வசனம்:12
Total Words:247
Total Characters:1060
Number of Rukūʿs:2
Classification
(Revelation Location):
மதனீ
Revelation Order:107
Starting from verse:5229