Skip to main content

كَلَّآ
அவ்வாறல்ல
إِذَا دُكَّتِ
தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது
ٱلْأَرْضُ
பூமி
دَكًّا دَكًّا
தூள் தூளாகத் தகர்க்கப்படுதல்

Kallaaa izaaa dukkatil ardu dakkan dakka

ஆகவே, பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் சமயத்தில்,

Tafseer

وَجَآءَ
இன்னும் வருவான்
رَبُّكَ
உம் இறைவன்
وَٱلْمَلَكُ
இன்னும் மலக்கு
صَفًّا صَفًّا
அணி அணியாக

Wa jaaa'a Rabbuka wal malaku saffan saffaa

உங்களது இறைவனும் வருவான். மலக்குகளும் அணி அணியாக வருவார்கள்.

Tafseer

وَجِا۟ىٓءَ
இன்னும் வரப்படும்
يَوْمَئِذٍۭ
அந்நாளில்
بِجَهَنَّمَۚ
நரகத்தைக்கொண்டு
يَوْمَئِذٍ
அந்நாளில்
يَتَذَكَّرُ
நல்லறிவு பெறுவான்
ٱلْإِنسَٰنُ وَأَنَّىٰ
மனிதன்/இன்னும் எப்படி
لَهُ
அவனுக்கு
ٱلذِّكْرَىٰ
நல்லறிவு

Wa jeee'a yawma'izim bi jahannnam; Yawma 'iziny yatazakkarul insaanu wa annaa lahuz zikraa

அந்நாளில் (பாவிகளுக்காக) நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் மனிதனுக்கு நல்லறிவு உதயமாகும். எனினும், அச்சமயம் (உதயமாகும்) அறிவால் அவனுக்கு என்ன பயன்?

Tafseer

يَقُولُ
கூறுவான்
يَٰلَيْتَنِى قَدَّمْتُ
நான் முற்படுத்தி இருக்க வேண்டுமே
لِحَيَاتِى
என் வாழ்வுக்காக

Yaqoolu yaa laitanee qaddamtu lihayaatee

"என்னுடைய வாழ்க்கையில் நான் (யாதொரு) நன்மையைச் செய்து வைத்திருக்க வேண்டாமா" என்று புலம்புவான்.

Tafseer

فَيَوْمَئِذٍ
ஆகவே அந்நாளில்
لَّا يُعَذِّبُ
வேதனை செய்ய மாட்டான்
عَذَابَهُۥٓ
அவனுடைய வேதனையை
أَحَدٌ
ஒருவனும்

Fa Yawma izil laa yu'azzibu 'azaabahooo ahad

அந்நாளில் (பாவிகளை) அவன் செய்யும் வேதனையைப் போல் மற்றெவனும் (எவரையும்) செய்யமாட்டான். (அவ்வளவு கடினமாக அவன் வேதனை செய்வான்.)

Tafseer

وَلَا يُوثِقُ
இன்னும் கட்டமாட்டான்
وَثَاقَهُۥٓ
அவனுடைய கட்டுதலை
أَحَدٌ
ஒருவனும்

Wa laa yoosiqu wasaaqa hooo ahad

(பாவிகளை) அவன் கட்டுவதைப்போல் பலமாக மற்ற எவனுமே கட்டமாட்டான். (அவ்வளவு பலமாக அவன் கட்டுவான்.)

Tafseer

يَٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ
ஆன்மாவே!
ٱلْمُطْمَئِنَّةُ
நிம்மதியடைந்த

Yaaa ayyatuhan nafsul mutma 'innah

(எனினும், அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே!

Tafseer

ٱرْجِعِىٓ
திரும்பு
إِلَىٰ
பக்கம்
رَبِّكِ
உன் இறைவன்
رَاضِيَةً
திருப்தி பெற்றதாக
مَّرْضِيَّةً
திருப்தி கொள்ளப்பட்டதாக

Irji'eee ilaa Rabbiki raadiyatam mardiyyah

நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்)

Tafseer

فَٱدْخُلِى
இன்னும் சேர்ந்து விடு
فِى عِبَٰدِى
என் அடியார்களில்

Fadkhulee fee 'ibaadee

"நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து,

Tafseer

وَٱدْخُلِى
இன்னும் நுழைந்து விடு
جَنَّتِى
என் சொர்க்கத்தில்

Wadkhulee jannatee

என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

Tafseer