Skip to main content

ٱلَّذِينَ
எவர்கள்
طَغَوْا۟
வரம்பு மீறினார்கள்
فِى ٱلْبِلَٰدِ
நகரங்களில்

Allazeena taghaw fil bilaad

இவர்களெல்லாம் பூமியில் வரம்பு மீறியே நடந்தார்கள்.

Tafseer

فَأَكْثَرُوا۟
இன்னும் அதிகப்படுத்தினர்
فِيهَا
அவற்றில்
ٱلْفَسَادَ
விஷமத்தை

Fa aksaroo feehal fasaad

(பூமியில்) அவர்கள் மிக்க அதிகமாகவே விஷமம் செய்து கொண்டிருந்தனர்.

Tafseer

فَصَبَّ
எனவே சுழற்றினான்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
رَبُّكَ
உம் இறைவன்
سَوْطَ
சாட்டையை
عَذَابٍ
வேதனையின்

Fasabba 'alaihim Rabbuka sawta 'azaab

ஆதலால், உங்களது இறைவன் அவர்கள் மீது வேதனையின் சாட்டையைக் கொண்டு (அடி மேல் அடி) அடித்தான்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
رَبَّكَ
உம் இறைவன்
لَبِٱلْمِرْصَادِ
எதிர்பார்க்குமிடத்தில்

Inna Rabbaka labil mirsaad

நிச்சயமாக உங்களது இறைவன் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்த வண்ணமாக இருக்கின்றான்.

Tafseer

فَأَمَّا
ஆக
ٱلْإِنسَٰنُ
மனிதன்
إِذَا مَا
அவனைச் சோதித்த போது
رَبُّهُۥ
அவனுடைய இறைவன்
فَأَكْرَمَهُۥ
இன்னும் அவனைக் கண்ணியப்படுத்தினான்
وَنَعَّمَهُۥ
இன்னும் அவனுக்கு அருட்கொடை புரிந்தான்
فَيَقُولُ
கூறுகிறான்
رَبِّىٓ
என் இறைவன்
أَكْرَمَنِ
என்னைக் கண்ணியப்படுத்தினான்

Fa ammal insaanu izaa mab talaahu Rabbuhoo fa akramahoo wa na' 'amahoo fa yaqoolu Rabbeee akraman

ஆகவே, இறைவன் மனிதனைச் சோதித்து அவனுக்கு அருள்புரிந்து அவனை மேன்மையாக்கினால், என்னுடைய இறைவன் என்னை மகிமைப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகின்றான்.

Tafseer

وَأَمَّآ
ஆக
إِذَا مَا
அவனைச் சோதித்த போது
فَقَدَرَ
இன்னும் சுருக்கினான்
عَلَيْهِ
அவன் மீது
رِزْقَهُۥ
அவனுடைய வாழ்வாதாரத்தை
فَيَقُولُ
கூறுகிறான்
رَبِّىٓ
என் இறைவன்
أَهَٰنَنِ
என்னை இழிவுபடுத்திவிட்டான்

Wa ammaaa izaa mabtalaahu faqadara 'alaihi rizqahoo fa yaqoolu Rabbeee ahaanan

ஆயினும், (இறைவன்) அவனைச் சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்துவிட்டால், எனது இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று (குறை) கூறுகின்றான்.

Tafseer

كَلَّاۖ بَل
அவ்வாறல்ல/மாறாக
لَّا تُكْرِمُونَ
நீங்கள் கண்ணியப்படுத்துவதில்லை
ٱلْيَتِيمَ
அநாதையை

Kalla bal laa tukrimooo nal yateem

(விஷயம்) அவ்வாறன்று. நீங்கள் அநாதைகளைக் கண்ணியப்படுத்துவதில்லை.

Tafseer

وَلَا تَحَٰٓضُّونَ
இன்னும் தூண்டுவதில்லை
عَلَىٰ طَعَامِ
உணவிற்கு
ٱلْمِسْكِينِ
ஏழையின்

Wa laa tahaaaddoona 'alaata'aamil miskeen

ஏழைகளுக்கு உணவு (நீங்கள் அளிக்காததுடன் மற்ற எவரையும்) அளிக்கும்படி தூண்டுவதில்லை.

Tafseer

وَتَأْكُلُونَ
இன்னும் புசிக்கிறீர்கள்
ٱلتُّرَاثَ
பிறருடைய சொத்தை
أَكْلًا لَّمًّا
புசித்தல்/சேர்த்து

Wa taakuloonat turaasa aklal lammaa

(பிறருடைய) அனந்தரப் பொருளை(யும் சேர்த்துப்) புசித்து விடுகின்றீர்கள்.

Tafseer

وَتُحِبُّونَ
இன்னும் நேசிக்கிறீர்கள்
ٱلْمَالَ
செல்வத்தை
حُبًّا
நேசித்தல்
جَمًّا
கடுமையாக

Wa tuhibboonal maala hubban jammaa

மிக்க அளவு கடந்து பொருளை நேசிக்கின்றீர்கள்.

Tafseer