Skip to main content

وَلَقَدْ
திட்டவட்டமாக
ءَاتَيْنَا
நாம் கொடுத்தோம்
مُوسَىٰ
மூஸாவிற்கு
تِسْعَ
ஒன்பது
ءَايَٰتٍۭ
அத்தாட்சிகள்
بَيِّنَٰتٍۖ
தெளிவானவை
فَسْـَٔلْ
ஆகவே கேட்பீராக
بَنِىٓ
சந்ததிகளை
إِسْرَٰٓءِيلَ
இஸ்ராயீலின்
إِذْ
அவர் வந்த போது
جَآءَهُمْ
அவர்களிடம்
فَقَالَ
கூறினான்
لَهُۥ
அவரைக் நோக்கி
فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன்
إِنِّى
நிச்சயமாக நான்
لَأَظُنُّكَ
எண்ணுகிறேன்/உம்மை
يَٰمُوسَىٰ
மூஸாவே!
مَسْحُورًا
சூனியக்காரராக

Wa laqad aatainaa Moosaa tis'a Aayaatim baiyinaatin fas'al Baneee Israaa'eela iz jaaa'ahum faqaala lahoo Fir'awnu inee la azunnuka yaa Moosaa mas hooraa

நிச்சயமாக நாம் மூஸாவுக்கு தெளிவான ஒன்பது அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம். (நபியே! இதைப்பற்றி) நீங்கள் இஸ்ராயீலின் சந்ததிகளைக் கே(ட்டறிந்து கொள்)ளுங்கள். (மூஸா) அவர்களிடம் வந்தபொழுது, ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி "மூஸாவே! நிச்சயமாக நீங்கள் சூனியத்தால் புத்தி மாறியவர் என நான் உங்களை எண்ணுகிறேன்" என்று கூறினான்.

Tafseer

قَالَ
கூறினார்
لَقَدْ
திட்டவட்டமாக
عَلِمْتَ
நீ அறிந்தாய்
مَآ أَنزَلَ
இறக்கிவைக்கவில்லை
هَٰٓؤُلَآءِ
இவற்றை
إِلَّا
தவிர
رَبُّ
இறைவன்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களின்
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
بَصَآئِرَ
தெளிவான அத்தாட்சிகளாக
وَإِنِّى
இன்னும் நிச்சயமாக நான்
لَأَظُنُّكَ
எண்ணுகிறேன்/உன்னை
يَٰفِرْعَوْنُ
ஃபிர்அவ்னே
مَثْبُورًا
அழிந்துவிடுபவனாக

Qaala laqad 'alimta maaa anzala haaa'ulaaa'i illaa Rabbus samaawaati wal ardi basaaa'ira wa innee la azun nuka yaa Fir'awnu masbooraa

அதற்கு மூஸா (அவனை நோக்கி) "வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனே இவ்வத்தாட்சிகளை மனிதர்களுக்குப் படிப்பினையாக இறக்கி வைத்தான் என்பதை நிச்சயமாக நீ அறிவாய். ஃபிர்அவ்னே! உன்னை நிச்சயமாக அழிவு காலம் பிடித்துக்கொண்டது என நான் எண்ணுகிறேன்" என்று கூறினார்.

Tafseer

فَأَرَادَ
நாடினான்
أَن
அவன் விரட்டிவிட
يَسْتَفِزَّهُم
அவன் விரட்டிவிட இவர்களை
مِّنَ ٱلْأَرْضِ
பூமியிலிருந்து
فَأَغْرَقْنَٰهُ
ஆகவே மூழ்கடித்தோம்/ அவனை
وَمَن
இன்னும் எவர்கள்
مَّعَهُۥ
அவனுடன்
جَمِيعًا
அனைவரையும்

Fa araada any yastafizzahum minal ardi fa aghraqnaahu wa mam ma'ahoo jamee'aa

(அதற்கு அவன் மூஸாவையும் அவருடைய மக்கள்) அனைவரையும் அவன் தன் நாட்டிலிருந்து விரட்டி விடவே எண்ணினான். எனினும், (அதற்குள்ளாக) அவனையும் அவனுடன் இருந்த (அவனுடைய மக்கள்) அனைவரையும் நாம் மூழ்கடித்து விட்டோம்.

Tafseer

وَقُلْنَا
இன்னும் நாம் கூறினோம்
مِنۢ بَعْدِهِۦ
இதன் பின்னர்
لِبَنِىٓ
சந்ததிகளுக்கு
إِسْرَٰٓءِيلَ
இஸ்ராயீலின்
ٱسْكُنُوا۟
நீங்கள் வசியுங்கள்
ٱلْأَرْضَ
பூமியில்
فَإِذَا جَآءَ
வந்தால்
وَعْدُ ٱلْءَاخِرَةِ
வாக்குறுதி/மறுமையின்
جِئْنَا بِكُمْ
உங்களை வரவைப்போம்
لَفِيفًا
அனைவரையும், ஒன்றோடு ஒன்று கலந்தவர்களாக

Wa qulnaa mim ba'dihee li Baneee Israaa'eelas kunul arda faizaa jaaa'a wa'dulaakhirati ji'naa bikum lafeefaa

இதன் பின்னர் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நாம் கூறினோம்: "நீங்கள் இப்பூமியில் வசித்திருங்கள். மறுமையின் வாக்குறுதி வந்தால், உங்கள் அனைவரையும் (விசாரணைக்காக) நம்மிடம் கொண்டு வந்து ஒன்று சேர்ப்போம்.

Tafseer

وَبِٱلْحَقِّ
இன்னும் உண்மையைக் கொண்டே
أَنزَلْنَٰهُ
இதை இறக்கினோம்
وَبِٱلْحَقِّ
இன்னும் உண்மையைக் கொண்டே
نَزَلَۗ
இது இறங்கியது
وَمَآ أَرْسَلْنَٰكَ
நாம் அனுப்பவில்லை/உம்மை/தவிர
مُبَشِّرًا
நற்செய்தி கூறுபவராக
وَنَذِيرًا
இன்னும் எச்சரிப்பவராக

Wa bilhaqqi anzalnaahu wa bilhaqqi nazal; wa maaa arsalnaaka illaa mubash shiranw wa nazeeraa

முற்றிலும் உண்மையைக் கொண்டே இவ்வேதத்தை நாம் இறக்கினோம். அதுவும் உண்மையைக் கொண்டே இறங்கியது. (நபியே!) உங்களை நாம் (நன்மை செய்தவர்களுக்கு) நற்செய்தி கூறுபவராகவும் (பாவம் செய்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அன்றி அனுப்பவில்லை.

Tafseer

وَقُرْءَانًا
இன்னும் குர்ஆனாக
فَرَقْنَٰهُ
நாம் தெளிவு படுத்தினோம்/இதை
لِتَقْرَأَهُۥ
நீர் ஓதுவதற்காக/இதை
عَلَى ٱلنَّاسِ
மக்களுக்கு
عَلَىٰ مُكْثٍ
கவனத்துடன்
وَنَزَّلْنَٰهُ
இன்னும் இறக்கினோம்/இதை
تَنزِيلًا
கொஞ்சம் கொஞ்சமாக இறக்குதல்

Wa quraanan faraqnaahu litaqra ahoo 'alan naasi 'alaa muksinw wa nazzalnaahu tanzeelaa

(நபியே!) மனிதர்களுக்கு நீங்கள் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிக்கும் பொருட்டு இந்தக் குர்ஆனை பல பாகங்களாக நாம் பிரித்தோம். அதற்காகவே நாம் இதனைச் சிறுகச் சிறுகவும் இறக்கி வைக்கிறோம்.

Tafseer

قُلْ
கூறுவீராக
ءَامِنُوا۟
நம்பிக்கை கொள்ளுங்கள்
بِهِۦٓ أَوْ
இதை/அல்லது
لَا تُؤْمِنُوٓا۟ۚ
நம்பிக்கை கொள்ளாதீர்கள்
إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
أُوتُوا۟
கொடுக்கப்பட்டனர்
ٱلْعِلْمَ
கல்வி
مِن قَبْلِهِۦٓ
இதற்கு முன்னர்
إِذَا يُتْلَىٰ
ஓதப்பட்டால்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
يَخِرُّونَ
விழுவார்கள்
لِلْأَذْقَانِ
தாடைகள் மீது
سُجَّدًا
சிரம்பணிந்தவர்களாக

Qul aaaniminoo biheee aw laa tu'minoo; innal lazeena ootul 'ilma min qabliheee izaa yutlaa 'alaihim yakhirroona lil azqaani sujjadaa

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் (இந்தக் குர்ஆனை) நம்பிக்கை கொள்ளுங்கள் அல்லது நம்பிக்கை கொள்ளாதிருங்கள். (அதைப் பற்றி நமக்கு ஒன்றும் குறைவில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னுள்ள (வேதங்களின்) மெய்யான ஞானம் எவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றதோ அவர்களிடம் (இவ்வேதம்) ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் (இதனை நம்பிக்கை கொண்டு) முகங்குப்புற விழுந்து (எனக்கு) சிரம் பணிவார்கள்.

Tafseer

وَيَقُولُونَ
இன்னும் கூறுவார்கள்
سُبْحَٰنَ
மிகப் பரிசுத்தமானவன்
رَبِّنَآ
எங்கள் இறைவன்
إِن كَانَ
நிச்சயமாக/இருக்கிறது
وَعْدُ
வாக்கு
رَبِّنَا
எங்கள் இறைவனின்
لَمَفْعُولًا
நிறைவேற்றப்பட்டதாகவே

Wa yaqooloona Subhaana Rabbinaaa in kaana wa'du Rabbinaa lamaf'oolaa

அன்றி, (அவர்கள்) "எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். எங்கள் இறைவனின் வாக்குறுதி நிச்சயமாக நிறைவேறி விட்டது" என்றும் கூறுவார்கள்.

Tafseer

وَيَخِرُّونَ
இன்னும் விழுவார்கள்
لِلْأَذْقَانِ
தாடைகள் மீது
يَبْكُونَ
அழுவார்கள் (அழுதவர்களாக)
وَيَزِيدُهُمْ
இன்னும் அதிகப்படுத்தும் அவர்களுக்கு
خُشُوعًا۩
அச்சத்தை, பணிவை

Wa yakhirroona lil azqaani yabkoona wa yazeeduhum khushoo'aa

அன்றி, அவர்கள் முகங்குப்புற விழுந்து அழுவார்கள். அவர்களுடைய உள்ளச்சமும் அதிகரிக்கும்.

Tafseer

قُلِ
கூறுவீராக
ٱدْعُوا۟
அழையுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்
أَوِ
அல்லது
ٱدْعُوا۟
அழையுங்கள்
ٱلرَّحْمَٰنَۖ
பேரருளாளன்
أَيًّا مَّا
எப்படி, எதை
تَدْعُوا۟
அழைத்தாலும்
فَلَهُ ٱلْأَسْمَآءُ
அவனுக்கு/பெயர்கள்
ٱلْحُسْنَىٰۚ
மிக அழகியவை
وَلَا تَجْهَرْ
மிக சப்தமிட்டு ஓதாதீர்
بِصَلَاتِكَ
உமது தொழுகையில்
وَلَا تُخَافِتْ
மிக மெதுவாகவும் ஓதாதீர்
بِهَا
அதில்
وَٱبْتَغِ
தேடுவீராக
بَيْنَ
இடையில்
ذَٰلِكَ
அது
سَبِيلًا
ஒரு வழியை

Qulid'ul laaha awid'ur Rahmaana ayyam maa tad'oo falahul asmaaa'ul Husnaa; wa laa tajhar bi Salaatika wa laa tukhaafit bihaa wabtaghi baina zaalika sabeela

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் அல்லாஹ் என்றழையுங்கள் அல்லது ரஹ்மான் என்றழையுங்கள்; (இவ்விரண்டில்) எப்பெயர் கொண்டு நீங்கள் அவனை அழைத்த போதிலும் (அழையுங்கள்.) அவனுக்கு அழகான (இன்னும்) பல திருப் பெயர்கள் இருக்கின்றன." (நபியே!) உங்களுடைய தொழுகையில் நீங்கள் மிக சப்தமிட்டு ஓதாதீர்கள்! அதிக மெதுவாகவும் ஓதாதீர்கள்! இதற்கு மத்திய வழியைக் கடைப்பிடியுங்கள்.

Tafseer