Skip to main content

وَإِن مِّنكُمْ
உங்களில் (ஒவ்வொருவரும்) இல்லை
إِلَّا وَارِدُهَاۚ
தவிர/அதில் நுழையக்கூடியவராக
كَانَ
இருக்கிறது
عَلَىٰ رَبِّكَ
உமது இறைவன் மீது
حَتْمًا
தீர்ப்பாக
مَّقْضِيًّا
முடிவு செய்யப்பட்ட

Wa im minkum illaa waa riduhaa; kaana 'alaa Rabbika hatmam maqdiyyaa

அதனைக் கடக்காது உங்களில் எவருமே தப்பிவிட முடியாது. இது உங்களது இறைவனிடம் முடிவு கட்டப்பட்ட மாற்ற முடியாத தீர்மானமாகும்.

Tafseer

ثُمَّ
பிறகு
نُنَجِّى
பாதுகாப்போம்
ٱلَّذِينَ ٱتَّقَوا۟
இறையச்சமுடையவர்களை
وَّنَذَرُ
இன்னும் விட்டுவிடுவோம்
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களை
فِيهَا
அதில்
جِثِيًّا
முழந்தாளிட்ட வர்களாக

Summa nunajjil lazeenat taqaw wa nazaruz zaalimeena feehaa jisiyyaa

ஆனால், நாம் இறை அச்சத்துடன் வாழ்ந்தவர்களை பாதுகாத்துக் கொள்வோம். அநியாயக்காரர்களை (அவர்கள்) முழந்தாளிட்டவர்களாக (இருக்கும் நிலைமையில்) அதில் தள்ளிவிடுவோம்.

Tafseer

وَإِذَا تُتْلَىٰ
ஓதப்பட்டால்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
ءَايَٰتُنَا
நமது வசனங்கள்
بَيِّنَٰتٍ
தெளிவான
قَالَ
கூறுகின்றனர்
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
لِلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களுக்கு
أَىُّ
யார்?
ٱلْفَرِيقَيْنِ
இரு பிரிவினரில்
خَيْرٌ
சிறந்தவர்
مَّقَامًا
தங்குமிடத்தால்
وَأَحْسَنُ
மிக அழகானவர்
نَدِيًّا
சபையால்

Wa izaa tutlaa 'alaihim Aayaatunaa baiyinaatin qaalal lazeena kafaroo lillazeena aamanooo aiyul fareeqaini khairum maqaamanw wa ahsanu nadiyyaa

நிராகரிப்பவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் ஓரிறை நம்பிக்கையாளர்களை நோக்கி "நம் இரு வகுப்பாரில் எவர்களுடைய வீடு (தற்சமயம்) மேலானதாகவும் அழகான தோற்றத்துடனும் இருக்கிறது?" என்று கேட்கின்றனர்.

Tafseer

وَكَمْ
எத்தனையோ
أَهْلَكْنَا
நாம் அழித்தோம்
قَبْلَهُم
அவர்களுக்கு முன்
مِّن قَرْنٍ
தலைமுறையினரை
هُمْ
அவர்கள்
أَحْسَنُ
மிக அழகானவர்கள்
أَثَٰثًا
பொருட்களாலும்
وَرِءْيًا
தோற்றத்தாலும்

Wa kam ahlaknaa qablahum min qarnin hum ahsanu asaasanw wa ri'yaa

இவர்களைவிட அழகான தோற்றத்தையும், தட்டு முட்டு சாமான்களையும் கொண்ட எத்தனையோ கூட்டத்தாரை நாம் அழித்திருக்கின்றோம்.

Tafseer

قُلْ
கூறுவீராக
مَن
யார்
كَانَ
இருக்கின்றாரோ
فِى ٱلضَّلَٰلَةِ
வழிகேட்டில்
فَلْيَمْدُدْ
நீட்டிவிடட்டும்
لَهُ
அவருக்கு
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
مَدًّاۚ
நீட்டிவிடுதல்
حَتَّىٰٓ
இறுதியாக
إِذَا رَأَوْا۟
அவர்கள் பார்த்தால்
مَا يُوعَدُونَ
அவர்கள் வாக்களிக்கப்பட்டதை
إِمَّا
ஒன்று
ٱلْعَذَابَ
வேதனையை
وَإِمَّا
அல்லது
ٱلسَّاعَةَ
மறுமையை
فَسَيَعْلَمُونَ
அறிவார்கள்
مَنْ
யார்
هُوَ
என்பதை
شَرٌّ
மிகக் கெட்டவர்
مَّكَانًا
தங்குமிடத்தால்
وَأَضْعَفُ
மிகப் பலவீனமானவர்
جُندًا
படையால்

Qul man kaana fidda laalati falyamdud lahur Rahmaanu maddaa; hattaaa izaa ra aw maa yoo'adoona immal 'azaaba wa immas Saa'ata fasa ya'lamoona man huwa sharrum makaananw wa ad'afu jundaa

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: எவன் வழிகேட்டில் இருக்கிறானோ அவனுக்கு ஏற்பட்ட தண்டனையை அவன் கண்ணால் காணும் வரையில் ரஹ்மான் அவனுக்கு (இம்மையில்) தவணையளிக்கிறான். (அதை அவன் கண்டதன் பின்னரோ) அவனுக்கு வேதனை கிடைக்கும் அல்லது அவனுடைய காலம் முடிந்துவிடும். பின்னர், எவருடைய வீடு கெட்டது; எவருடைய கூட்டம் பலவீனமானது என்பதைத் திட்டமாக அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

Tafseer

وَيَزِيدُ
அதிகப்படுத்துவான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلَّذِينَ ٱهْتَدَوْا۟
நேர்வழி நடப்போருக்கு
هُدًىۗ
நேர்வழியை
وَٱلْبَٰقِيَٰتُ
நிரந்தரமான
ٱلصَّٰلِحَٰتُ
நன்மைகள்தான்
خَيْرٌ
மிகச் சிறந்தது
عِندَ رَبِّكَ
உங்கள் இறைவனிடம்
ثَوَابًا
நற்கூலியால்
وَخَيْرٌ
இன்னும் மிகச் சிறந்தது
مَّرَدًّا
முடிவால்

Wa yazeedul laahul lazeenah tadaw hudaa; wal baaqiyaatus saalihaatu khairun 'inda Rabbika sawaabanw wa khairum maraddaa

நேர்வழி பெற்றவர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் நேர்வழியை அதிகரித்து வழங்குகிறான். நிலையாக இருக்கக்கூடிய நற்செயல்கள்தாம் உங்கள் இறைவனிடத்தில் நற்கூலியை அடைவதற்கு சிறந்ததாகவும், நல்ல முடிவை தருவதற்கு சிறந்ததாகவும் இருக்கின்றன.

Tafseer

أَفَرَءَيْتَ
நீர் பார்த்தீரா?
ٱلَّذِى كَفَرَ
நிராகரித்தவனை
بِـَٔايَٰتِنَا
நமது வசனங்களை
وَقَالَ
கூறுகின்றான்
لَأُوتَيَنَّ
நிச்சயமாக நான் கொடுக்கப்படுவேன்
مَالًا
செல்வமும்
وَوَلَدًا
சந்ததியும்

Afara'aytal lazee kafara bi Aayaatinaa wa qaala la oota yanna maalanw wa waladaa

(நபியே!) நம்முடைய வசனங்களை நிராகரித்தவனை நீங்கள் பார்த்தீர்களா? அவன் ("மறுமையிலும்) எனக்கு நிச்சயமாக ஏராளமான பொருள்களும் சந்ததிகளும் கொடுக்கப்படுவேன்" என்று கூறுகிறான்.

Tafseer

أَطَّلَعَ
அறிந்துகொண்டானா
ٱلْغَيْبَ
மறைவானதை
أَمِ
அல்லது
ٱتَّخَذَ
ஏற்படுத்திக் கொண்டானா
عِندَ ٱلرَّحْمَٰنِ
ரஹ்மானிடம்
عَهْدًا
ஓர் ஒப்பந்தத்தை

Attala'al ghaiba amitta khaza'indar Rahmaani 'ahdaa

இவன் (மறுமையில் நடக்கக்கூடிய) மறைவான விஷயங்களை அறிந்துகொண்டானா? அல்லது ரஹ்மானிடத்தில் (இத்தகையதொரு) வாக்குறுதியைப் பெற்றிருக்கிறானா?

Tafseer

كَلَّاۚ
ஒருக்காலும் அவ்வாறல்ல
سَنَكْتُبُ
பதிவு செய்கிறோம்
مَا يَقُولُ
அவன் கூறுவதை
وَنَمُدُّ
இன்னும் அதிகப்படுத்துவோம்
لَهُۥ
அவனுக்கு
مِنَ ٱلْعَذَابِ
வேதனையில்
مَدًّا
அதிகப்படுத்துதல்

Kallaa; sanaktubu maa yaqoolu wa namuddu lahoo minal 'azaabi maddaa

(இவன் கூறுகிறபடி) அன்று! இவன் (பொய்யாகக்) கூறுகின்றவற்றை நாம் எழுதிக்கொண்டே வருகின்றோம். (அதற்குத் தக்கவாறு) அவனுடைய வேதனையையும் நாம் அதிகப்படுத்தி விடுவோம்.

Tafseer

وَنَرِثُهُۥ
இன்னும் வாரிசாகி விடுவோம்
مَا يَقُولُ
அவன் கூறியவற்றுக்கு
وَيَأْتِينَا
இன்னும் நம்மிடம் வருவான்
فَرْدًا
தனியாக

Wa narisuhoo maa yaqoolu wa yaateenaa fardaa

அவன் (தன்னுடையதென்று) கூறும் அனைத்துக்கும் நாமே வாரிசாகி விடுவோம். அவன் (இவைகளை விட்டுவிட்டு) நம்மிடம் தனியாகவே வருவான்.

Tafseer