Skip to main content

ذَٰلِكَ
அதற்குக் காரணம்
أَن لَّمْ
என்பதாகும்/இல்லை
رَّبُّكَ
உமது இறைவன்
مُهْلِكَ
அழிப்பவனாக
ٱلْقُرَىٰ
நகரங்களை
بِظُلْمٍ
அநியாயத்தினால்
وَأَهْلُهَا
இருக்க /அங்கு வசிப்பவர்கள்
غَٰفِلُونَ
கவனமற்றவர்கள்

Zaalika al lam yakkur Rabbuka muhlikal quraa bizulminw wa ahluhaa ghaafiloon

(நபியே! இவ்வாறு நபிமார்களை அனுப்புவதன் காரணமெல்லாம்) அநியாயம் செய்த எவ்வூராரையும் அவர்கள் அஜாக்கிரதையாக இருக்கும் சமயத்தில் (எச்சரிக்கை செய்யாமல்) அவர்களை அழிப்பவனாக உங்களது இறைவன் இருக்கவில்லை என்பதுதான்.

Tafseer

وَلِكُلٍّ
எல்லோருக்கும்
دَرَجَٰتٌ
பதவிகள் உண்டு
مِّمَّا عَمِلُوا۟ۚ
எதிலிருந்து/செய்தார்கள்
وَمَا
இல்லை
رَبُّكَ
உம் இறைவன்
بِغَٰفِلٍ
கவனிக்காதவனாக
عَمَّا يَعْمَلُونَ
அவர்கள் செய்வதை

Wa likullin darajaatum mimmaa 'amiloo; wa maa Rabbuka bighaafilin 'ammaa ya'maloon

(நபியே! அவர்கள்) அனைவருக்கும் அவர்களின் செயல்களுக்குத் தக்க பதவிகள் உண்டு. அவர்கள் செயல்களைப் பற்றி உங்களுடைய இறைவன் பராமுகமாயில்லை.

Tafseer

وَرَبُّكَ
உம் இறைவன்
ٱلْغَنِىُّ
நிறைவானவன்
ذُو ٱلرَّحْمَةِۚ
கருணையுடையவன்
إِن يَشَأْ
அவன் நாடினால்
يُذْهِبْكُمْ
போக்கி விடுவான்/உங்களை
وَيَسْتَخْلِفْ
இன்னும் தோன்றச் செய்வான்
مِنۢ
பின்னர்
بَعْدِكُم
பின்னர் உங்களுக்கு
مَّا يَشَآءُ
எவர்களை/நாடுகிறான்
كَمَآ
போன்று
أَنشَأَكُم
உருவாக்கினான் உங்களை
مِّن ذُرِّيَّةِ
சந்ததியிலிருந்து
قَوْمٍ
சமுதாயத்தின்
ءَاخَرِينَ
மற்றவர்கள்

Wa Rabbukal ghaniyyu zur rahmah; iny yashaaa yuz hibkum wa yastakhlif mim ba'dikum wa yastakhlif mim ba'dikum maa yashaaa'u kamaaa ansha akum min zurriyyati qawmin aakhareen

(நபியே!) உங்களது இறைவன் (எத்தகைய) தேவையற்றவனாகவும் அன்புடையவனாகவும் இருக்கின்றான். (மனிதர்களே!) அவன் விரும்பினால் உங்களைப் போக்கி தான் நாடிய எவரையும் உங்களுடைய இடத்தில் அமர்த்தி விடுவான். இவ்வாறே (சென்று போன) மற்ற மக்களின் சந்ததிகளிலிருந்து உங்களை உற்பத்தி செய்திருக்கிறான்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
مَا
எது
تُوعَدُونَ
வாக்களிக்கப்படுகிறீர்கள்
لَءَاتٍۖ
வரக்கூடியதே
وَمَآ أَنتُم
நீங்கள் இல்லை
بِمُعْجِزِينَ
பலவீனப்படுத்துபவர்களாக

Inna maa too'adoona la aatinw wa maaa antum bimu'jizeen

உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட (அந்த இறுதி) நாள் நிச்சயமாக வந்தே தீரும். அதை நீங்கள் தடுத்துவிட முடியாது.

Tafseer

قُلْ
கூறுவீராக
يَٰقَوْمِ
என் சமுதாயமே
ٱعْمَلُوا۟
செய்யுங்கள்
عَلَىٰ مَكَانَتِكُمْ
உங்கள் போக்கில்
إِنِّى
நிச்சயமாக நான்
عَامِلٌۖ
செய்கிறேன்
فَسَوْفَ تَعْلَمُونَ
அறிவீர்கள்
مَن
எவர்
تَكُونُ
இருக்கும்
لَهُۥ
அவருக்கு
عَٰقِبَةُ
முடிவு
ٱلدَّارِۗ
மறுமையின்
إِنَّهُۥ
நிச்சயமாக செய்தி
لَا يُفْلِحُ
வெற்றி பெறமாட்டார்(கள்)
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்

Qul yaa qawmi' maloo 'alaa makaanatikum innee 'aamilun fasawfa ta'lamoona man takoonu lahoo 'aaqibatud daar; innahoo laa yuflihuz zaalimoon

(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "என்னுடைய மக்களே! நீங்கள் உங்கள் போக்கில் (உங்கள்) காரியங்களைச் செய்துகொண்டே இருங்கள். நிச்சயமாக நானும் (என் போக்கில் என்) காரியங்களைச் செய்து கொண்டிருப்பேன். இம்மையின் முடிவு எவருக்குச் சாதகமாக இருக்கின்றது என்பதை பின்னர் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்."

Tafseer

وَجَعَلُوا۟
ஆக்கினார்கள்
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
مِمَّا
எதிலிருந்து
ذَرَأَ
படைத்தான்
مِنَ
இருந்து
ٱلْحَرْثِ
விவசாயம்
وَٱلْأَنْعَٰمِ
இன்னும் கால்நடைகள்
نَصِيبًا
ஒரு பாகத்தை
فَقَالُوا۟
கூறினர்
هَٰذَا
இது
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
بِزَعْمِهِمْ
தங்கள் எண்ணப்படி
وَهَٰذَا
இது
لِشُرَكَآئِنَاۖ
எங்கள் தெய்வங்களுக்கு
فَمَا
எது
كَانَ
ஆகிவிட்டது
لِشُرَكَآئِهِمْ
அவர்களுடைய தெய்வங்களுக்கு
فَلَا يَصِلُ
சேராது
إِلَى ٱللَّهِۖ
அல்லாஹ்வின் பக்கம்
وَمَا
எது
كَانَ
ஆகிவிட்டது
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
فَهُوَ
அது
يَصِلُ
சேரும்
إِلَىٰ شُرَكَآئِهِمْۗ
அவர்களுடைய தெய்வங்களின் பக்கம்
سَآءَ
கெட்டு விட்டது
مَا يَحْكُمُونَ
எது/தீர்ப்புசெய்கிறார்கள்

Wa ja'aloo lillaahi mimmaa zara-a minal harsi walan'aami naseeban faqaaloo haazaa lillaahi biza'mihim wa haaza lishurakaa'inaa famaa kaana lishurakaaa'ihim falaa yasilu ilal laahi wa maa kaana lillaahi fahuwa yasilu ilaa shurakaaa'ihim; saaa'a maa yahkumoon

விவசாயம், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற அல்லாஹ் உற்பத்தி செய்பவற்றில் ஒரு பாகத்தை தங்கள் விருப்பப்படி குறிப்பிட்டு "இது அல்லாஹ்வுக்கு என்றும் (மற்றொரு பாகத்தை) இது எங்களுடைய தெய்வங்களுக்கு" என்றும் கூறுகின்றனர். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்கென குறிப்பிட்ட பாகத்தில் எதுவும் அல்லாஹ்வுக்குச் சேருவதில்லை. எனினும், அல்லாஹ்வுக்கென குறிப்பிட்டவை (நல்லவையாயிருந்தால்) அவர்களுடைய தெய்வங்களுக்கே சேர்ந்து விடுகின்றன! அவர்கள் செய்யும் இத்தீர்மானம் மிகக் கெட்டது.

Tafseer

وَكَذَٰلِكَ
இவ்வாறே
زَيَّنَ
அலங்கரித்தன
لِكَثِيرٍ
அதிகமானோருக்கு
مِّنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்
قَتْلَ
கொல்வதை
أَوْلَٰدِهِمْ
தங்கள்குழந்தைகளை
شُرَكَآؤُهُمْ
அவர்களுடைய ஷைத்தான்கள்
لِيُرْدُوهُمْ
அழிப்பதற்காக/அவர்களை
وَلِيَلْبِسُوا۟
குழப்புவதற்காக
عَلَيْهِمْ
அவர்கள் மீது
دِينَهُمْۖ وَلَوْ
அவர்களுடைய வழிபாட்டை/நாடியிருந்தால்
ٱللَّهُ
அல்லாஹ்
مَا فَعَلُوهُۖ
அவர்கள் செய்யவில்லை/அதை
فَذَرْهُمْ
விடுங்கள்/அவர்களை
وَمَا يَفْتَرُونَ
உடன்/எது/இட்டுக் கட்டுகிறார்கள்

Wa kazaalika zaiyana likaseerim minal mushrikeena qatla awlaadihim shurakaaa'uhum liyurdoohum wa liyalbisoo 'alaihim deenahum wa law shaaa'al laahu maa fa'aloohu fazarhum wa maa yaftaroon

இவ்வாறே, இணைவைத்து வணங்குபவர்களில் பலர் (தாங்களே) தங்கள் குழந்தைகளைக் கொலை செய்வதை அவர்கள் அழகாகக் காணும்படி அவர்களுடைய தெய்வங்கள் செய்து அவர்களைப் படுகுழியில் தள்ளி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பமாக்கிவிட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) நீங்கள் அவர்களையும் அவர்களுடைய பொய்க் கூற்றுகளையும் விட்டு விடுங்கள்.

Tafseer

وَقَالُوا۟
கூறினர்
هَٰذِهِۦٓ
இவை
أَنْعَٰمٌ
கால்நடைகள்
وَحَرْثٌ
இன்னும் விவசாயம்
حِجْرٌ
தடுக்கப்பட்டவை
لَّا يَطْعَمُهَآ
புசிக்கமாட்டார்/அவற்றை
إِلَّا
தவிர
مَن
எவர்
نَّشَآءُ
நாடுகிறோம்
بِزَعْمِهِمْ
தங்கள் எண்ணப்படி
وَأَنْعَٰمٌ
இன்னும் கால்நடைகள்
حُرِّمَتْ
தடுக்கப்பட்டன
ظُهُورُهَا
அவற்றின் முதுகுகள்
وَأَنْعَٰمٌ
இன்னும் கால்நடைகள்
لَّا يَذْكُرُونَ
கூறமாட்டார்கள்
ٱسْمَ ٱللَّهِ
அல்லாஹ்வின் பெயரை
عَلَيْهَا
அவற்றின் மீது
ٱفْتِرَآءً
இட்டுக்கட்டுகின்றனர்
عَلَيْهِۚ
அவன் மீது
سَيَجْزِيهِم
கூலி கொடுப்பான்/அவர்களுக்கு
بِمَا
எதன் காரணமாக
كَانُوا۟
இருந்தனர்
يَفْتَرُونَ
இட்டுக்கட்டுகின்றனர்

Wa qaaloo haaziheee an'aamunw wa harsun hijrun laa yat'amuhaaa illaa man nashaaa'u biza'mihim wa an'aamun hurrimat zuhooruhaa wa an'aamul laa yazkuroonas mal laahi 'alaihaf tiraaa'an 'alaih; sa yajzeehim bimaa kaanoo yaftaroon

(அன்றி அவர்கள் தங்கள்) ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றிலும், விவசாயத்திலும் (சிலவற்றைக் குறிப்பிட்டு) "இது தடுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கொள்கைப்படி நாங்கள் விரும்புகிற (புரோகிதர் ஆகிய)வர்களைத் தவிர (மற்றெவரும்) அதனைப் புசிக்கக்கூடாது" என்று (தங்கள் மூடக் கொள்கையின்படி) அவர்கள் கூறுகின்றனர். தவிர, அவ்வாறே வேறு சில) ஆடு, மாடு, ஒட்டகங்களின் முதுகுகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. (அவற்றின் மீது ஏறுவதும், சுமையேற்றுவதும் கூடாது) என்றும், (வேறு) சில ஆடு, மாடு, ஒட்டகங்களை(க் குறிப்பிட்டு அவற்றை அறுக்கும்பொழுது) அவற்றின் மீது அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறக்கூடாது என்றும் (அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதாக) அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர். அவர்களுடைய இப்பொய்க் கூற்றுக்குத் தக்க கூலியை (இறைவன்) பின்னர் அவர்களுக்குக் கொடுப்பான்.

Tafseer

وَقَالُوا۟
இன்னும் கூறினர்
مَا فِى
எவை/வயிறுகளில்
هَٰذِهِ ٱلْأَنْعَٰمِ
இந்த கால்நடைகளின்
خَالِصَةٌ
தூயது, மட்டும்
لِّذُكُورِنَا
எங்கள் ஆண்களுக்கு உரியது
وَمُحَرَّمٌ
இன்னும் தடுக்கப்பட்டது
عَلَىٰٓ أَزْوَٰجِنَاۖ
எங்கள்பெண்களுக்கு
وَإِن يَكُن
அது இருந்தால்
مَّيْتَةً
செத்ததாக
فَهُمْ فِيهِ
அவர்களும்/அதில்
شُرَكَآءُۚ
பங்காளிகள்
سَيَجْزِيهِمْ
கூலி கொடுப்பான்/அவர்களுக்கு
وَصْفَهُمْۚ
அவர்களுடைய வர்ணிப்பிற்கு
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
حَكِيمٌ
ஞானவான்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Wa qaaloo maa fee butooni haazihil an'aami khaalisatul lizukoorinaa wa muharramun 'alaaa azwaajinaa wa iny yakum maitatan fahum feehi shurakaaa'; sa yajzeehim wasfahum; innahoo Hakeemun 'Aleem

அன்றி, அவர்கள் (வேறு சிலவற்றைக் குறிப்பிட்டு) "இந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் வயிற்றிலிருப்பவை எங்களுடைய ஆண்களுக்கு (மட்டும்) சொந்தமானவை. எங்களுடைய பெண்களுக்கு அவை தடுக்கப்பட்டு இருக்கின்றன. அவை செத்துப் பிறந்தால் அவற்றில் அவர்களுக்கும் பங்குண்டு" (அப்போது பெண்களும் புசிக்கலாம்.) என்றும் கூறுகின்றனர். ஆகவே, அவர்களுடைய இக்கூற்றிற்குரிய தண்டனையை (அல்லாஹ்) அவர் களுக்குக் கொடுத்தே தீருவான். நிச்சயமாக அவன் மிக்க ஞானமுடையவனாகவும், (அனைவரையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

قَدْ خَسِرَ
நஷ்டமடைந்து விட்டனர்
ٱلَّذِينَ
எவர்கள்
قَتَلُوٓا۟
கொன்றார்கள்
أَوْلَٰدَهُمْ
தங்கள் பிள்ளைகளை
سَفَهًۢا
மூடத்தனமாக
بِغَيْرِ عِلْمٍ
அறிவின்றி
وَحَرَّمُوا۟
இன்னும் தடுத்தார்கள்
مَا رَزَقَهُمُ
எதை/கொடுத்தான்/அவர்களுக்கு
ٱللَّهُ
அல்லாஹ்
ٱفْتِرَآءً
இட்டுக்கட்டுகின்றனர்
عَلَى ٱللَّهِۚ
அல்லாஹ்வின் மீது
قَدْ ضَلُّوا۟
வழிகெட்டனர்
وَمَا كَانُوا۟
அவர்கள் இருக்கவில்லை/நேர்வழி பெற்றவர்களாக

Qad khasiral lazeena qatalooo awlaadahum safaham bighairi 'ilminw wa harramoo maa razaqahumul laahuf tiraaa'an 'alal laah; qad dalloo wa maa kaanoo muhtadeen

எவர்கள் அறிவின்றி மூடத்தனத்தால் தங்கள் மக்களைக் கொலை செய்தார்களோ அவர்களும், எவர்கள் அல்லாஹ் (புசிக்கக்) கொடுத்திருந்த (நல்ல)வற்றை (ஆகாதென) அல்லாஹ்வின் மீது பொய்கூறித் தடுத்துக் கொண்டார்களோ அவர்களும் நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டார்கள். ஆகவே, அவர்கள் நேர்வழி பெற்றவர் களன்று; நிச்சயமாக தீய வழியிலேயே சென்று விட்டனர்.

Tafseer