Skip to main content

وَلَوْ أَنَّنَا
நிச்சயமாக நாம் இறக்கினாலும்
إِلَيْهِمُ
அவர்களிடம்
ٱلْمَلَٰٓئِكَةَ
வானவர்களை
وَكَلَّمَهُمُ
இன்னும் பேசினாலும்/அவர்களிடம்
ٱلْمَوْتَىٰ
இறந்தவர்கள்
وَحَشَرْنَا
இன்னும் ஒன்று திரட்டினாலும்
عَلَيْهِمْ
அவர்களுக்கு முன்னால்
كُلَّ شَىْءٍ
எல்லாவற்றையும்
قُبُلًا
கண்ணெதிரே
مَّا كَانُوا۟
அவர்கள் இல்லை
لِيُؤْمِنُوٓا۟
அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக
إِلَّآ أَن
தவிர/நாடுவது
ٱللَّهُ
அல்லாஹ்
وَلَٰكِنَّ
எனினும் நிச்சயமாக
أَكْثَرَهُمْ
அவர்களில் அதிகமானோர்
يَجْهَلُونَ
அறியமாட்டார்கள்

Wa law annanaa nazzal naaa ilaihimul malaaa'ikata wa kallamahumul mawtaa wa hasharnaa 'alaihim kulla shai'in qubulam maa kaanoo liyu'minooo illaaa ai yashaaa'al laahu wa laakinna aksarahum yajhaloon

(அவர்கள் விரும்புகின்றவாறு) மெய்யாகவே நாம் அவர்களிடம் (நேராக) மலக்குகளை இறக்கி வைத்தாலும், இறந்தவர்களை (எழுப்பி) அவர்களிடம் பேசும்படிச் செய்தாலும், (மறைவாயிருக்கும்) அனைத்தையும் அவர்கள் (கண்) முன் கொண்டு வந்து சேர்த்தாலும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள், ஆனால் அல்லாஹ் நாடினாலே தவிர. அவர்களில் பெரும் பான்மையினர் (அறிவில்லாத) மூடர்களாகவே இருக்கின்றனர்.

Tafseer

وَكَذَٰلِكَ
இவ்வாறே
جَعَلْنَا
ஆக்கினோம்
لِكُلِّ نَبِىٍّ
ஒவ்வொரு நபிக்கும்
عَدُوًّا
எதிரிகளாக
شَيَٰطِينَ
ஷைத்தான்களை
ٱلْإِنسِ
மனிதர்களில்
وَٱلْجِنِّ
இன்னும் ஜின்களில்
يُوحِى
அறிவிக்கிறார்
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
إِلَىٰ بَعْضٍ
சிலருக்கு
زُخْرُفَ ٱلْقَوْلِ
அலங்காரமான சொல்லாக
غُرُورًاۚ
ஏமாற்றுவதற்காக
وَلَوْ شَآءَ
நாடியிருந்தால்
رَبُّكَ
உம் இறைவன்
مَا فَعَلُوهُۖ
அவர்கள் செய்திருக்க மாட்டார்கள்/அதை
فَذَرْهُمْ
ஆகவே அவர்களை விட்டுவிடுவீராக!
وَمَا يَفْتَرُونَ
இன்னும் எதை/இட்டுக்கட்டுகின்றனர்

Wa kazaalika ja'alnaa likulli nabiyyin 'aduwwan Shayaateenal insi waljinni yoohee ba'duhum ilaa ba'din zukhrufal qawli ghurooraa; wa law shaaa'a Rabbuka maa fa'aloohu fazarhum wa maa yaftaroon

இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும் மனிதரிலும், ஜின்னிலுமுள்ள ஷைத்தான்களை நாம் எதிரிகளாக்கி இருந்தோம். அவர்களில் சிலர் சிலரை ஏமாற்றுவதற்காக அழகான வார்த்தைகளை (காதில்) இரகசியமாகக் கூறிக் (கலைத்துக்) கொண்டிருந்தார்கள். உங்களுடைய இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) நீங்கள் அவர்களையும் அவர்களுடைய பொய்க் கூற்றுகளையும் விட்டுவிடுங்கள்.

Tafseer

وَلِتَصْغَىٰٓ
இன்னும் செவிசாய்ப்பதற்காக
إِلَيْهِ
அதன் பக்கம்
أَفْـِٔدَةُ
உள்ளங்கள்
ٱلَّذِينَ
எவர்களுடைய
لَا يُؤْمِنُونَ
நம்ப மாட்டார்கள்
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
وَلِيَرْضَوْهُ
இன்னும் அவர்கள் திருப்தி கொள்வதற்காக/அதை
وَلِيَقْتَرِفُوا۟
இன்னும் அவர்கள் செய்வதற்காக
مَا هُم
எவற்றை/அவர்கள்
مُّقْتَرِفُونَ
செய்பவர்கள்

Wa litasghaaa ilaihi af'idatul lazeena laa yu'minoona bil Aakhirati wa liyardawhu wa liyaqtarifoo maa hum muqtarifoon

மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் (ஷைத்தானாகிய) அவர்களுக்கு செவிசாய்த்து அதனை அவர்கள் பொருந்திக் கொள்வதற்காகவும், அவர்கள் செய்யும் தீய செயல்களை இவர்களும் செய்வதற்காகவும் (இவ்வாறு இவர்களை அவர்கள் மயக்கி வந்தனர்.)

Tafseer

أَفَغَيْرَ
அல்லாதவரையா?
ٱللَّهِ
அல்லாஹ்
أَبْتَغِى
தேடுவேன்
حَكَمًا
தீர்ப்பாளனாக
وَهُوَ ٱلَّذِىٓ
அவன்தான்/எவன்
أَنزَلَ
இறக்கினான்
إِلَيْكُمُ
உங்களுக்கு
ٱلْكِتَٰبَ
வேதத்தை
مُفَصَّلًاۚ
நன்கு விவரிக்கப்பட்டதாக
وَٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ
எவர்கள்/கொடுத்தோம்/அவர்களுக்கு
ٱلْكِتَٰبَ
வேதத்தை
يَعْلَمُونَ
அறிவார்கள்
أَنَّهُۥ
நிச்சயமாக இது
مُنَزَّلٌ
இறக்கப்பட்டது
مِّن
உம் இறைவனிடமிருந்து
رَّبِّكَ بِٱلْحَقِّۖ
உண்மையைக் கொண்டே
فَلَا تَكُونَنَّ
ஆகவே நிச்சயம் ஆகிவிடாதீர்
مِنَ ٱلْمُمْتَرِينَ
சந்தேகிப்பவர்களில்

Afaghairal laahi abtaghee hakamanw wa Huwal lazee anzala ilaikumul Kitaaba mufassalaa; wallazeena atai naahumul Kitaaba ya'lamoona annahoo munazzalum mir Rabbika bilhaqqi falaa takoonanna minal mumtareen

"அல்லாஹ்வைத் தவிர மற்றவரையா (எங்களுக்கும் உங்களுக்கும் இடையில்) தீர்ப்பளிக்கும் அதிபதியாக நான் எடுத்துக் கொள்வேன்? அவன்தான் எல்லா விபரங்களுமுள்ள இவ்வேதத்தை உங்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்" (என்று நபியே! நீங்கள் கூறுங்கள். இதற்கு முன்னர்) எவர்களுக்கு நாம் வேதம் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள், இது மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டே அருளப்பட்டுள்ளது என்பதை உறுதியாக அறிவார்கள். ஆகவே, சந்தேகப்படுபவர்களில் நீங்களும் ஒருவராக ஒருபோதும் ஆகிவிடவேண்டாம்.

Tafseer

وَتَمَّتْ
முழுமையாகியது
كَلِمَتُ
வாக்கு
رَبِّكَ
உம் இறைவனின்
صِدْقًا
உண்மையால்
وَعَدْلًاۚ
இன்னும் நீதத்தால்
لَّا مُبَدِّلَ
அறவே இல்லை/மாற்றுபவன்
لِكَلِمَٰتِهِۦۚ
அவனுடைய வாக்குகளை
وَهُوَ
அவன்
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்

Wa tammat Kalimatu Rabbika sidqanw wa 'adlaa; laa mubaddila li Kalimaatih; wa Huwas Samee'ul 'Aleem

(நபியே!) உங்களது இறைவனின் வாக்கு உண்மையாகவும் நீதமாகவும் முழுமையாகிவிட்டது. அவனுடைய வாக்குகளை மாற்றுபவன் யாருமில்லை. அவன் (யாவையும்) செவியுறுபவ னாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَإِن تُطِعْ
நீர் கீழ்ப்படிந்தால்
أَكْثَرَ
அதிகமானோருக்கு
مَن فِى
இப்பூமியில் உள்ளவர்களில்
يُضِلُّوكَ
வழிகெடுப்பார்கள்/ உம்மை
عَن سَبِيلِ
பாதையிலிருந்து
ٱللَّهِۚ
அல்லாஹ்வுடைய
إِن يَتَّبِعُونَ
பின்பற்ற மாட்டார்கள்
إِلَّا ٱلظَّنَّ
தவிர/யூகம்
وَإِنْ هُمْ
இல்லை/அவர்கள்
إِلَّا يَخْرُصُونَ
தவிர/கற்பனை செய்பவர்களாக

Wa in tuti' aksara man fil ardi yudillooka 'an sabeelil laah; iny yattabi'oona illaz zanna wa in hum illaa yakhrusoon

இப்புவியிலிருப்பவர்களில் பலர் (இவ்வாறே) இருக்கின்றனர். நீங்கள் அவர்களைப் பின்பற்றுவீரானால் அவர்கள் உங்களை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து திருப்பி விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத் தவிர (உண்மையை) அவர்கள் பின்பற்றுவதில்லை. அன்றி, (வெறும் பொய்யான) கற்பனையில்தான் அவர்கள் மூழ்கியிருக்கின்றனர்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
رَبَّكَ هُوَ
உம் இறைவன்தான்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
مَن
எவரை
يَضِلُّ
வழிகெடுவார்
عَن
இருந்து
سَبِيلِهِۦۖ
அவனுடைய பாதையில்
وَهُوَ
அவன்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِٱلْمُهْتَدِينَ
நேர்வழி பெற்றவர்களை

Inna rabbaka Huwa a'lamu mai yadillu 'an sabeelihee wa Huwa a'lamu bilmuhtadeen

(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன், தன் வழியில் இருந்து தவறியவர்கள் யார்? என்பதை நன்கறிவான். (அவ்வாறே) நேரான வழியில் இருப்பவர்களையும் அவன் நன்கறிவான்.

Tafseer

فَكُلُوا۟
ஆகவே புசியுங்கள்
مِمَّا ذُكِرَ
கூறப்பட்டதிலிருந்து
ٱسْمُ
பெயர்
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
عَلَيْهِ
அதன் மீது
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
بِـَٔايَٰتِهِۦ
அவனுடைய வசனங்களை
مُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்டவர்களாக

Fakuloo mimmmaa zukirasmul laahi 'alaihi in kuntum bi Aayaatihee mu'mineen

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வுடைய வசனங்களை நம்பிக்கை கொள்பவர் களாயிருந்தால் அல்லாஹ்வுடைய பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்) டவற்றையே புசியுங்கள்.

Tafseer

وَمَا لَكُمْ
உங்களுக்கு என்ன
أَلَّا تَأْكُلُوا۟
நீங்கள் புசிக்காதிருக்க
مِمَّا ذُكِرَ
கூறப்பட்டதிலிருந்து
ٱسْمُ
பெயர்
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
عَلَيْهِ
அதன் மீது
وَقَدْ فَصَّلَ
விவரித்து விட்டான்
لَكُم
உங்களுக்கு
مَّا حَرَّمَ
எவற்றை/தடுத்தான்
عَلَيْكُمْ
உங்களுக்கு
إِلَّا
தவிர
مَا ٱضْطُرِرْتُمْ
எது/ நிர்பந்திக்கப்பட்டீர்கள்
إِلَيْهِۗ
அதன் பக்கம்
وَإِنَّ
நிச்சயமாக
كَثِيرًا
அதிகமானோர்
لَّيُضِلُّونَ
வழி கெடுக்கின்றனர்
بِأَهْوَآئِهِم
தங்கள் ஆசைகளைக் கொண்டு
بِغَيْرِ عِلْمٍۗ
கல்வியின்றி
إِنَّ
நிச்சயமாக
رَبَّكَ
உம் இறைவன்
هُوَ
அவன்
أَعْلَمُ
மிக அறிபவன்
بِٱلْمُعْتَدِينَ
வரம்பு மீறிகளை

Wa maa lakum allaa taakuloo mimmaa zukirasmul laahi 'alaihi wa qad fassala lakum maa harrama 'alaikum illaa mad turirtum ilaih; wa inna kaseeral la yudilloona bi ahwaaa'ihim bighairi 'ilm; inna Rabbaka Huwa a'lamu bilmu'tadeen

(உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவைகளில் அறுக்கும் பொழுது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவற்றை நீங்கள் புசிக்காதிருக்க உங்களுக்கு என்ன (தடை)? நீங்கள் நிர்பந்திக்கப் பட்டாலன்றி (புசிக்க) உங்களுக்குத் தடுக்கப்பட்டவை எவையென அவன் உங்களுக்கு விவரித்துக் கூறியே இருக்கின்றான். (அவற்றைத் தவிர உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட அனைத்தையும் நீங்கள் புசிக்கலாம்.) எனினும், பெரும்பான்மையினர் அறியாமையின் காரணமாக தங்கள் இஷ்டப்படி எல்லாம் (மக்களை) வழி கெடுக்கின்றனர். (நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன் வரம்பு மீறுபவர்களை நன்கறிவான்.

Tafseer

وَذَرُوا۟
விடுங்கள்
ظَٰهِرَ
வெளிப்படையானதை
ٱلْإِثْمِ
பாவத்தில்
وَبَاطِنَهُۥٓۚ
இன்னும் அதில் மறைவானதை
إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
يَكْسِبُونَ
சம்பாதிக்கிறார்கள்
ٱلْإِثْمَ
பாவத்தை
سَيُجْزَوْنَ
கூ லி கொடுக்கப்படுவார்கள்
بِمَا كَانُوا۟
எதற்கு/இருந்தனர்/செய்வார்கள்

Wa zaroo zaahiral ismi wa baatinah; innal lazeena yaksiboonal ismaa sa yujzawna bimaa kaanoo yaqtarifoon

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் பகிரங்கமான பாவத்தையும் ரகசியமான பாவத்தையும் விட்டுவிடுங்கள். ஏனென்றால், எவர்கள் பாவத்தை சம்பாதிக்கின்றனரோ அவர்கள் தாங்கள் செய்யும் தீய செயலுக்குத் தக்க பலனை (மறுமையில்) அடைந்தே தீருவார்கள்.

Tafseer