Skip to main content

وَلَا تَأْكُلُوا۟
புசிக்காதீர்கள்
مِمَّا
எதிலிருந்து
لَمْ يُذْكَرِ
கூறப்படவில்லை
ٱسْمُ
பெயர்
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
عَلَيْهِ
அதன் மீது
وَإِنَّهُۥ
நிச்சயமாக அது
لَفِسْقٌۗ
பாவம்தான்
وَإِنَّ
நிச்சயமாக
ٱلشَّيَٰطِينَ
ஷைத்தான்கள்
لَيُوحُونَ
அறிவிக்கின்றனர்
إِلَىٰٓ أَوْلِيَآئِهِمْ
தங்கள் நண்பர்களுக்கு
لِيُجَٰدِلُوكُمْۖ
அவர்கள் தர்க்கிப்பதற்காக/உங்களுடன்
وَإِنْ أَطَعْتُمُوهُمْ
நீங்கள் கீழ்ப்படிந்தால்/அவர்களுக்கு
إِنَّكُمْ لَمُشْرِكُونَ
நிச்சயமாக நீங்கள்/இணைவைப்பவர்கள்தான்

Wa laa taakuloo mimaa lam yuzkaris mullaahi 'alaihi wa innahoo lafisq; wa innash Shayaateena la yoohoona ilaaa awliyaaa'ihim liyujaadilookum wa in ata'tumoohum innnakum lamushrikoon

(நம்பிக்கையாளர்களே! அறுக்கும்போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாதவற்றை நீங்கள் புசிக்காதீர்கள். நிச்சயமாக அது பெரும் பாவமாகும். (இதில்) உங்களுடன் தர்க்கிக்குமாறு நிச்சயமாக ஷைத்தான்கள் தங்களுடைய நண்பர்களைத் தூண்டுகின்றனர். நீங்கள் அவர்களுக்கு வழிப்பட்டால் (கீழ்படிந்தால்) நிச்சயமாக நீங்கள் (அவர்களைப் போல்) இணைவைத்து வணங்குபவர்கள்தான்!

Tafseer

أَوَمَن كَانَ
ஒருவர்/இருந்தார்
مَيْتًا
மரணித்தவராக
فَأَحْيَيْنَٰهُ
உயிர்ப்பித்தோம்/அவரை
وَجَعَلْنَا
இன்னும் ஏற்படுத்தினோம்
لَهُۥ
அவருக்கு
نُورًا
ஓர் ஒளியை
يَمْشِى
நடமாடுவதற்கு
بِهِۦ
அதைக் கொண்டு
فِى ٱلنَّاسِ
மக்களுக்கு மத்தியில்
كَمَن
எவரைப்போல்
مَّثَلُهُۥ
அவருடைய உதாரணம்
فِى ٱلظُّلُمَٰتِ
இருள்களில்
لَيْسَ بِخَارِجٍ
வெறியேறாதவர்
مِّنْهَاۚ
அவற்றிலிருந்து
كَذَٰلِكَ
இவ்வாறே
زُيِّنَ
அழகாக்கப்பட்டன
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களுக்கு
مَا كَانُوا۟
எவை/இருந்தனர்
يَعْمَلُونَ
செய்வார்கள்

Awa man kaana maitan fa ahyainaahu wa ja'alnaa lahoo noorany yamshee bihee fin naasi kamamm masaluhoo fiz zulumaati laisa bikhaarijim minhaa; kazaalika zuyyina lilkaafireena maa kaanoo ya'maloon

(வீழ்ச்சி அடைந்து) மரணித்தவர்களாக இருந்தவர்களில் எவரை நாம் உயிர்ப்பித்து மனிதர்களுக்கிடையில் நடமாடுவதற்குரிய ஒளியையும் கொடுத்திருக்கின்றோமோ அவர், இருளில் சிக்கி அதிலிருந்து வெளியேற முடியாமலிருப்பவனுக்குச் சமமாவானா? இவ்வாறே நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயல்கள் அழகாக்கப்பட்டு விட்டன.

Tafseer

وَكَذَٰلِكَ
இவ்வாறே
جَعَلْنَا
ஏற்படுத்தினோம்
فِى كُلِّ
எல்லா ஊர்களிலும்
أَكَٰبِرَ
மிகப் பெரிய
مُجْرِمِيهَا
குற்றவாளிகளை/அவற்றில் உள்ள
لِيَمْكُرُوا۟
அவர்கள் சதிசெய்வதற்காக
فِيهَاۖ
அவற்றில்
وَمَا يَمْكُرُونَ
அவர்கள் சதி செய்ய முடியாது
إِلَّا بِأَنفُسِهِمْ
தங்களுக்கே தவிர
وَمَا يَشْعُرُونَ
உணர மாட்டார்கள்

Wa kazaalika ja'alnaa fee kulli qaryatin akaabira mujrimeehaa liyamkuroo feehaa wa maa yamkuroona illaa bi anfusihim wa maa yash'uroon

அன்றி, இவ்வாறே ஒவ்வொரு ஊரிலும் ஆங்காங்குள்ள பாவிகளை நாம் தலைவர்களாக்கி இருக்கின்றோம். அங்கு அவர்கள் விஷமம் (செய்ய சதி) செய்து கொண்டிருப்பார்கள். எனினும், அவர்கள் தங்களுக்கேயன்றி (மற்றெவருக்கும்) சதி செய்துவிட முடியாது. (இதனை) அவர்கள் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.

Tafseer

وَإِذَا جَآءَتْهُمْ
வந்தால்/அவர்களிடம்
ءَايَةٌ
ஒரு வசனம்
قَالُوا۟
கூறுகின்றனர்
لَن نُّؤْمِنَ
நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்
حَتَّىٰ
வரை
نُؤْتَىٰ
கொடுக்கப்படுவோம்
مِثْلَ
போன்று
مَآ
எது
أُوتِىَ
கொடுக்கப்பட்டார்கள்
رُسُلُ
தூதர்கள்
ٱللَّهِۘ
அல்லாஹ்வுடைய
ٱللَّهُ
அல்லாஹ்
أَعْلَمُ
மிகஅறிந்தவன்
حَيْثُ
எங்கு
يَجْعَلُ
ஏற்படுத்துவான்
رِسَالَتَهُۥۗ
தன் தூதுத்துவத்தை
سَيُصِيبُ
அடையும்
ٱلَّذِينَ أَجْرَمُوا۟
குற்றம் புரிந்தவர்களை
صَغَارٌ
கேவலம், சிறுமை
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
وَعَذَابٌ
இன்னும் வேதனை
شَدِيدٌۢ
கடுமையானது
بِمَا
எதன் காரணமாக
كَانُوا۟
இருந்தனர்
يَمْكُرُونَ
சூழ்ச்சி செய்வார்கள்

Wa izaa jaaa'athum Aayatun qaaloo lan nu'mina hatta nu'taa misla maaa ootiya Rusulul laah; Allahu a'almu haisu yaj'alu Risaalatah; sa yuseebul lazeena ajramoo saghaarun 'indal laahi wa 'azaabun shadeedum bimaa kaanoo yamkuroon

அவர்களிடம் யாதொரு வசனம் வந்தால் "அல்லாஹ்வுடைய தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்ற (நபித்துவத்)தை எங்களுக்கும் கொடுக்கப்படாத வரையில் நாங்கள் (அதனை) நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்" என்று கூறுகின்றனர். நபித்துவத்தை எங்கு (எவருக்கு) அளிப்பது என்பதை அல்லாஹ்தான் நன்கறிவான். குற்றம் செய்யும் இவர்களை இவர்கள் செய்யும் சதியின் காரணமாக அல்லாஹ்விடமிருந்து சிறுமையும், கொடிய வேதனையும் அதிசீக்கிரத்தில் வந்தடையும்.

Tafseer

فَمَن يُرِدِ
எவர்/நாடுவான்
ٱللَّهُ
அல்லாஹ்
أَن يَهْدِيَهُۥ
நேர்வழி செலுத்த/அவரை
يَشْرَحْ
விரிவாக்குகிறான்
صَدْرَهُۥ
நெஞ்சை/அவருடைய
لِلْإِسْلَٰمِۖ
இஸ்லாமிற்கு
وَمَن
எவர்
يُرِدْ
நாடுவான்
أَن يُضِلَّهُۥ
வழிகெடுக்க/அவரை
يَجْعَلْ
ஆக்குவான்
صَدْرَهُۥ
நெஞ்சை/அவருடைய
ضَيِّقًا
இருக்கமானதாக
حَرَجًا
சிரமமானதாக
كَأَنَّمَا
போல்
يَصَّعَّدُ
ஏறுவான்
فِى ٱلسَّمَآءِۚ
வானத்தில்
كَذَٰلِكَ
இவ்வாறே
يَجْعَلُ
ஆக்குவான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلرِّجْسَ
தண்டனை
عَلَى
மீது
ٱلَّذِينَ لَا
எவர்கள்/நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Famai yuridil laahu ai yahdiyahoo yashrah sadrahoo lil islaami wa mai yurid ai yudillaho yaj'al sadrahoo daiyiqan harajan ka annamaa yassa' 'adu fis samaaa'; kazaalika yaj'alul laahur rijsa 'alal lazeena la yu'minoon

அல்லாஹ் எவர்களுக்கு நேர்வழி காண்பிக்க விரும்புகின்றானோ அவர்களுடைய உள்ளத்தை இஸ்லாமின் பக்கம் (செல்ல) விரிவாக்குகிறான். எவர்களை, அவர்களுடைய வழிகேட்டிலேயே விட்டுவிட விரும்புகின்றானோ அவர்களுடைய உள்ளத்தை (நிர்ப்பந்தத்தால்) வானத்தில் ஏறுபவ(னி)ன் (உள்ளம்) போல் கஷ்டப்பட்டு சுருங்கும்படியாக்கி விடுகிறான். இவ்வாறே நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனை கொடுக்கின்றான்.

Tafseer

وَهَٰذَا صِرَٰطُ
இது/பாதை
رَبِّكَ
உம் இறைவனின்
مُسْتَقِيمًاۗ
நேரானது
قَدْ فَصَّلْنَا
விவரித்துவிட்டோம்
ٱلْءَايَٰتِ
வசனங்களை
لِقَوْمٍ
மக்களுக்கு
يَذَّكَّرُونَ
நல்லுபதேசம் பெறுவார்கள்

Wa haazaa siraatu Rabbika Mustaqeemaa; qad fassalnal Aayaati liqawminy yazzakkaroon

(நபியே!) இதுவே உங்களது இறைவனின் நேரான வழியாகும். நல்லுணர்ச்சி பெறும் மக்களுக்கு நாம் (நம்முடைய) வசனங்களை நிச்சயமாக விவரித்திருக்கின்றோம்.

Tafseer

لَهُمْ
அவர்களுக்கு
دَارُ
இல்லம்
ٱلسَّلَٰمِ
ஈடேற்றம்
عِندَ
இடம்
رَبِّهِمْۖ
அவர்களுடைய இறைவன்
وَهُوَ وَلِيُّهُم
இன்னும் அவன்/அவர்களுடைய நேசன்
بِمَا
எவற்றின் காரணமாக
كَانُوا۟
இருந்தனர்
يَعْمَلُونَ
செய்வார்கள்

Lahum daarus salaami 'inda Rabbihim wa huwa waliyyuhum bimaa kaanoo ya'maloon

அவர்களுக்கு அவர்கள் இறைவனிடத்தில் சாந்தியும் சமாதானமும் உள்ள சொர்க்கமுண்டு. அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் காரணமாக அவன் அவர்களை நேசிப்பவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَيَوْمَ
நாள்
يَحْشُرُهُمْ
ஒன்று சேர்ப்பான் அவர்கள்
جَمِيعًا
அனைவரையும்
يَٰمَعْشَرَ
கூட்டமே
ٱلْجِنِّ
ஜின்களின்
قَدِ ٱسْتَكْثَرْتُم
அதிகப்படுத்தி விட்டீர்கள்
مِّنَ ٱلْإِنسِۖ
மனிதர்களில்
وَقَالَ
இன்னும் கூறுவார்(கள்)
أَوْلِيَآؤُهُم
அவர்களின் நண்பர்கள்
مِّنَ ٱلْإِنسِ
மனிதர்களில்
رَبَّنَا
எங்கள் இறைவா
ٱسْتَمْتَعَ
பயனடைந்தனர்
بَعْضُنَا
எங்களில் சிலர்
بِبَعْضٍ
சிலரைக்கொண்டு
وَبَلَغْنَآ
இன்னும் அடைந்தோம்
أَجَلَنَا
தவணை/எங்கள்
ٱلَّذِىٓ
எதை
أَجَّلْتَ
நீ தவணையளித்த
لَنَاۚ
எங்களுக்கு
قَالَ
கூறுவான்
ٱلنَّارُ
நரகம்தான்
مَثْوَىٰكُمْ
தங்குமிடம்/உங்கள்
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்களாக
فِيهَآ
அதில்
إِلَّا
தவிர
مَا شَآءَ
அல்லாஹ் நாடினால்
إِنَّ رَبَّكَ
நிச்சயமாக உம் இறைவன்
حَكِيمٌ
ஞானவான்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Wa yamwa yahshuruhum jamee'ai yaa ma'sharal jinni qadistaksartum minal insi wa qaala awliyaaa'uhy minal insi Rabbanas tamta'a ba'dunaa biba'dinw wa balaghnaaa ajalannal lazeee ajjalta lanaa; qaalan Naaru maswaakum khaalideena feehaaa illaa maa shaaa'allaah; inna Rabbaka Hakeemun 'Aleem

(இறைவன்) அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளில், (ஜின் இனத்தாரை நோக்கி) "ஜின் இனத்தோரே! நீங்கள் மனிதர்களில் பலரை(க் கெடுத்து) உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்கள் (அல்லவா)" என்(று கேட்)பான். அதற்கு மனிதர்களில் உள்ள அவர்களின் நண்பர்கள் "எங்கள் இறைவனே! எங்களில் சிலர் (மாறு செய்த) சிலரைக்கொண்டு பயனடைந்து இருக்கின்றனர். எங்களுக்கு நீ ஏற்படுத்திய காலத்தை நாங்கள் அடைந்து விட்டோம். (எங்களுக்கு என்ன கட்டளை?)" என்று கேட்பார்கள். (அதற்கு இறைவன்) "நரகம்தான் உங்கள் தங்குமிடம். (உங்களில்) அல்லாஹ் (மன்னிக்க) நாடியவர்களைத் தவிர (மற்ற அனைவரும் என்றென்றுமே) அதில் தங்கி விடுவீர்கள்" என்று கூறுவான். (நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன், மிக்க ஞானமுடையவனும் நன்கறிந்தவனுமாக இருக்கின்றான்.

Tafseer

وَكَذَٰلِكَ
இவ்வாறு
نُوَلِّى
நண்பர்களாக ஆக்குவோம்
بَعْضَ
சிலரை
ٱلظَّٰلِمِينَ
அக்கிரமக்காரர்களில்
بَعْضًۢا
சிலருக்கு
بِمَا كَانُوا۟
எதன் காரணமாக/இருந்தனர்/செய்வார்கள்

Wa kazaalika nuwallee ba'daz zaalimeena ba'dam bimaa kaanoo yaksiboon

இவ்வாறு இவ்வக்கிரமக்காரர்கள் செய்த (தீய) செயலின் காரணமாக அவர்களில் ஒவ்வொருவரையும் (அநியாயக் காரர்களாகிய) மற்றோருடன் (நரகத்தில்) ஒன்று சேர்த்துவிடுவோம்.

Tafseer

يَٰمَعْشَرَ
கூட்டமே
ٱلْجِنِّ
ஜின்களின்
وَٱلْإِنسِ
மற்றும் மனிதர்கள்
أَلَمْ يَأْتِكُمْ
உங்களிடம் வரவில்லையா?
رُسُلٌ
தூதர்கள்
مِّنكُمْ
உங்களிலிருந்து
يَقُصُّونَ
விவரிப்பவர்களாக
عَلَيْكُمْ
உங்களுக்கு
ءَايَٰتِى
என் வசனங்களை
وَيُنذِرُونَكُمْ
இன்னும் எச்சரிப்பவர்களாக/உங்களுக்கு
لِقَآءَ
சந்திப்பை
يَوْمِكُمْ
உங்கள் நாள்
هَٰذَاۚ
இது
قَالُوا۟
கூறுவார்கள்
شَهِدْنَا
சாட்சியளித்தோம்
عَلَىٰٓ
எதிராக
أَنفُسِنَاۖ
எங்களுக்கு
وَغَرَّتْهُمُ
மயக்கி விட்டது/அவர்களை
ٱلْحَيَوٰةُ
வாழ்வு
ٱلدُّنْيَا
உலகம்
وَشَهِدُوا۟
இன்னும் சாட்சி கூறுவார்கள்
عَلَىٰٓ أَنفُسِهِمْ
எதிராக/அவர்களுக்கு
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
كَانُوا۟
இருந்தார்கள்
كَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களாக

Yaa ma'sharal jinni wal insi alam yaatikum Rusulum minkum yaqussoona 'alaikum Aayaatee wa yunziroonakum liqaaa'a Yawmikum haazaa; qaaloo shahidnaa 'alaaa anfusinaa wa gharrat humul hayaatud dunyaa wa shahidooo 'alaa anfusihim annahum kaanoo kaafireen

(இறைவன் மறுமையில் மனிதர்களையும் ஜின்களையும் நோக்கி) "மனித, ஜின் கூட்டத்தார்களே! உங்களில் தோன்றிய (நம்முடைய) தூதர்கள் உங்களிடம் வந்து நம்முடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பித்து நீங்கள் நம்மைச் சந்திக்கும் இந்நாளைப் பற்றியும் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவில்லையா?" என்(று கேட்)பான். அதற்கவர்கள் "(எங்கள் இறைவனே! உண்மைதான்) இவ்வுலக வாழ்க்கை எங்களை மயக்கி விட்டது" என்று தங்களுக்கு எதிராக சாட்சியம் கூறுவதுடன், நிச்சயமாக தாங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததாகவும் தங்களுக்குத் தாமே எதிராக அவர்கள் சாட்சியம் கூறுவார்கள்.

Tafseer